Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பெண்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பெண்கள் ஆர்ப்பாட்டம்

By DIGITAL DESK 5

10 DEC, 2022 | 05:45 PM
image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு 'விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்' எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை (10) காந்திபூங்காவிற்கு முன்னால் பெண்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இந்த கவனயீர்பு போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு 2023 ம் ஆண்டு முன்மொழியப்பட்ட தேசிய பாதீட்டில் விசேட தேவையுள்ள  நபர்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாகொடுப்பனவை குறைப்தாக எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறும்.

 

IMG_5864.JPG

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக விசேட தேவையுள்ள பெண்கள் இழந்துள்ளனர். எனவே  2023 ம் பாதீட்டில் பொருளாதார  அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்மொழிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

IMG_5850.JPG

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விசேட தேவையுடைய பெண்கள் பிள்ளைகள் மற்றம் அவர்களில் தங்கிவாழும் முதியவர்கள்  நாளாந்த உணவு தட்டுபாடு எதிர்கொள்வதுடன் போசாக்கு சுகாதார பிரச்சனைக்கு முகம் கொடுத்துவருகின்றனர். எனவே விசேட தேவையுடைய பெண்களது குடும்பங்களுக்கான புதிய தொரு மேம்பாட்டு உணவு பாதுகாப்பை அமுல்படுத்தவேண்டும்.

IMG_5867.JPG

அவ்வாறே மருந்து தட்டுப்பாடு இல்லாமல்  சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். 

விசேட தேவையுள்ள பெண்கள் இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கும் சமூகத்தில் கௌரவமான வாழ்கை முறையை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் இழப்புpட்டிற்கான ஆணைக்குழு முன்னெடுக்கவேண்டும் என்ற 5 கோரிக்கைகள்  உள்ளடங்கலாக  விசேட தேவையுள்ள பெண்களுக்கான மாதாந்த கொடுப்பனவை குறைக்காதே, விசேட தேவையுள்ள பெண்களுக்கு சர்வதேச ரீதியான இழப்பீடு தேவை, கைசாத்திட்டபடி இலங்கையில் ஜ.சி.ஆர்.பி.டி யை அமுல்படுத்துங்கள், சமூக நலன் திட்டம் தேவை.

IMG_5856.JPG

விசேட தேவையுள்ள பெண்களுக்கு உணவு பாதுகாப்பு திட்டம் தேவை, பொதுச்சேவை வழங்கிய விசேட தேவையுடைய பெண்களுக்கு பாரபட்சம் காட்டாதே, மாற்றுத்திறனாளிகளின் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் கைவைக்காதே, போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு காலை 9.30 மணிமுதல் 11 மணிவரை தமது கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் விழிப்புணர்வு தெரு நாடகம் ஒன்றை நடாத்திய பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

https://www.virakesari.lk/article/142758

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.