Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடலட்டைப் பண்ணைக்கான அனுமதியை விரைவுபடுத்த வலியுறுத்தி பூநகரியில் அமைதிப் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலட்டைப் பண்ணைக்கான அனுமதியை விரைவுபடுத்த வலியுறுத்தி பூநகரியில் அமைதிப் பேரணி

14 DEC, 2022 | 07:43 PM
image

கடலட்டைப் பண்ணையை விரைவுபடுத்த வலியுறுத்தி பூநகரியில் அமைதிப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கற்றொழிலாளர்கள்  கலந்துகொண்ட இந்தப் பேரணி இன்று பூநகரி அன்னை மரியாள் தேவாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பூநகரி பிரதேச செயலகத்தினை சென்றடைந்ததுடன், பூநகரி பிரதேச செயலரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

WhatsApp_Image_2022-12-14_at_15.33.06.jp

கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போதைய நிலையில், பொருளாதார சுமைகளை எதிர்கொள்ளுமளவிற்கு போதுமானளவு வருமானத்தினை பெறமுடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால், நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கடலட்டைப் பண்ணையை அமைப்பதற்கு தீர்மானித்து, அதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு சமர்ப்பித்திருப்பதாக தெரிவித்துள்ள கிராஞ்சிக் கடற்றொழிலாளர்கள், தமக்கான அனுமதிகளை வழங்குவதற்கு தேவையற்ற கால இழுத்தடிப்பு மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டியதுடன்,  தமது ஆதங்கத்தினை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த அமைதி முறையான பேரணியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

WhatsApp_Image_2022-12-14_at_15.33.06__1

மேலும், கிராஞ்சிப் பகுதியைச் சேர்ந்த சுமார் 40 கடற்றொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் ஆய்வு அறிக்கைகளுக்கு அமைவாக, தாங்கள் பூர்வீகமாக கடற்றொழிலில் ஈடுபட்ட பகுதிகளில், அமைத்திருக்கும் கடலட்டைப் பண்ணைகளை, சட்டவிரோதப் பண்ணைகளாக காண்பித்து, குறுகிய நோக்கம் கொண்ட சிலர்  மேற்கொண்டு வருகின்ற போராட்டத்திற்கும், இன்றைய பேரணியில் கலந்து கொண்டோர் தமது கண்டனத்தினை வெளிப்படுத்தினர்.

WhatsApp_Image_2022-12-14_at_15.33.03.jp

கிராஞ்சியில் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோர், பினாமிகளின் பெயரில் கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளதாக தெரிவித்த கடற்றொழிலாளர்கள்,  கிராமத்தினை சேர்ந்த அனைவரும் கடலட்டைப் பண்ணைகளை அமைத்து பொருளாதார ரீதியில் வலுவடைந்தால், கிராஞ்சி கிராமத்தில் தமது ஆதிக்கம் கைநழுவிப் போய்விடும் என்று அஞ்சுகின்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த சிலரே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

WhatsApp_Image_2022-12-14_at_15.33.04__1

அத்துடன், அநீதியான முறையில் மேற்கொள்ளப்படுகின் போராட்டத்திற்கு, குறுகிய அரசில் நலன்களுக்காக ஆதரவு தெரிவித்த அரசியல்வாதிகளுக்கும், கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுக்கும் எதிரான பதாகைகளும் இனறைய பேரணியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/143122

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.