Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சியில் பிரிட்டன் தூதரகம் ஈடுபடுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சியில் பிரிட்டன் தூதரகம் ஈடுபடுகிறது

வீரகேசரி நாளேடு

இன நெருக்கடிக்கு தீர்வு என்ற பெயரில் திட்டமொன்றினை தயாரித்துக் கொண்டு எமது நாட்டின் உள்விவகாரங்களில் பிரித்தானியா தலையிட்டுள்ளது. பலமிழந்து வரும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பலத்தினை வழங்கி நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சி திட்டத்தினை

இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் மேற்கொண்டுள்ளது என்று ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.

பிரித்தானியாவின் சூழ்ச்சியினை அறிந்தும் அரசாங்கம் கண் தெரியாத குருடனாக செயற்படுகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ இதனை பயன்படுத்தி ஆட்சிக்குவர முயற்சிக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பு தேசிய நூலக ஆவண வாக்கல் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது: ஐரோப்பிய யூனியன், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்புக்களென பல்வேறு வெளிநாட்டு அமைப்புக்கள் எமது உள்நாட்டுப் பிரச்சினையில் மனித உரிமைகள், சமாதானம் என்ற பெயர்களில் தலையீடுகளை அதிகரித்து வரும் சூழ்நிலையில் பிரித்தானியாவும் அதேபாணியில் திட்டமொன்றை தயாரித்துக் கொண்டு உள் விவகாரங்களில் தலையிட்டுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான பிரித்தானிய திணைக்களம், பொதுநலவாய நாடுகளின் தலைமையகம், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இம் மூன்று நிறுவனங்களும் அதாவது பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடனேயே இலங்கைக்கான சமாதானத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.

எமது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை கௌரவத்தை மதிக்காது அவர்களால், இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திலும் உலக மயமாக்கல் பிரச்சினைகளை தீர்ப்பது என்பது தொடர்பிலும் எமது நாட்டுப் பிரச்சினைகளை கையாளவும் இரண்டு மில்லியன் பவுன்கள் செலவழிக்கப்பட்டு அரசியல் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாகவும், போரியல் ரீதியாகவும் பலவீனமடைந்துள்ளனர். இதனால் பிரகாரனை பயன்படுத்தி மேற்குலகம் நோர்வேயை முன்னிறுத்தி இலங்கையை துண்டாட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பின்தள்ளப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி ஆட்கள் அரசாங்கம் அமைத்தால் இப்பிடியெல்லாம் கண்டபடி நாடுகளை விமர்சிப்பாங்களோ அல்லது ஹி ஹி யெண்டு தலையைச் சொறிவாங்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே பதியப்பட்ட செய்தியின்படி ஜேவிபியின் மீது நாம் கோபப்பட ஏதுமில்லை..அவங்கள் தங்களது மனதில் பட்டதை அப்படியே சொல்லுகிறாங்க இதில் எது உண்மை,பொய் என்று விமர்சிப்பது எனது நோக்கமல்ல.

இருந்தாலும் இந்த பிரிட்டிஸ் காரர்களை நாம் நம்பக்கூடாது.

நாட்டைப் பிரிக்க பிரிட்டன் சதித்திட்டம் என்கிறது ஜே.வி.பி

'இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் தந்திரோபாயம்" என்ற தலைப்பில் பிரிட்டன், புலிகளுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை இலங்கையில் முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இவ்வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் இலங்கை அரசு உடனடியாக அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அக்கட்சி அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசு அவ்வாறு செய்யத் தவறினால் நாட்டு மக்களை ஒன்றுதிரட்டி அம்மக்களின் போராட்டம் மூலம் இவ்வேலைத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் ஜே.வி.பி நேற்று அறிவித்தது.

இது தொடர்பாக விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஜே.வி.பி நேற்று கொழும்பில் நடத்தியது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ அங்கு கூறியவை வருமாறு :-

புலிகள் முற்றாக அழியும் இறுதிக்கட்டத்தில் இப்போது உள்ளனர். இந்த நிலையில் நாட்டை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்ற திட்டத்துடன் பிரிட்டன் செயல்பட்டு வருகின்றது.

'இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான தந்திரோபாயம்" என்ற தலைப்பில் இலங்கையில் வேலைத்திட்டம் ஒன்றைப் பிரிட்டன் மேற் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

புலிகளுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கும் உள்நோக்கத்துடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதை இலங்கை அரசு கண்டும், காணமலும் போல உள்ளது.

பிரிட்டனின் இவ்வாறான சதித்திட்டத்திறகெல்லாம் அரசு இடம் கொடுப்பதன் மூலம் பிரிட்டனுக்கு அடிமைபட்டு இலங்கை மீண்டும் ஒரு காலனித்துவ நாடாக மாறப்போகிறது.

அரசு இவ்வாறான நடவடிக்கைளை உடன் எதிர்க்க வேண்டும். இந் நாட்டில் இறைமையை வெளிநாட்டு சக்திகளிடம் அடகுவைக்காமல் நாட்டைக் காப்பற்ற வேண்டும்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு புலிகளுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுப்பதற்கான இலங்கையில் சதி நடவடிக்கையில் ஈடுபடப் போகும் பிரிட்டனின் செயற்பாட்டை அரசு உடனடியாகத் தடுதது நிறுத்த வேண்டும்.

பிரிட்டனின் இந்தச்சதி நடவடிக்கையைத் தடுதது நிறுத்த அரசு தவறினால், மக்களை ஒன்று திரட்டி அவர்ளின் பாரிய போராட்டத்தின் ஊடாக நாம் அச் சதித் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம். என்றார்.

நன்றி : சுடர் ஒளி

ஜே.வி.பியினரின் சாயமும் வெளுக்கத் தொடங்கி விட்டது. இப்படியாது பேசி கூட்டம் சேர்க்கலாம் என்ற நப்பாசை.

உண்மையை சொல்லபோனால் அதை செய்யும் கடப்பாடு பிரித்தானியாவுக்கு நிச்சயம் இருக்குது நாட்டினை ஒட்டு மொத்தமாக சிங்களவருக்கு தாரைவார்த்து விட்டு சென்றது அவர்கள் தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.