Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்களை தொடங்கியது தேர்தல்கள் ஆணைக்குழு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்களை தொடங்கியது தேர்தல்கள் ஆணைக்குழு !

உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான தளவாட தேவைகளை வகுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேர்தலுகான தேவைகளை மதிப்பிடுவதற்காக வாகனங்கள் மற்றும் பொது ஊழியர்களைக் கணக்கிடுவதற்காக மாவட்ட வாரியாக உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு மற்றும் வேட்புமனுக்களை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மாசி மாதம் இறுதியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்ற நிலையில் அடுத்த வருடம் பங்குனி மாதம் 20 ஆம் திகதி புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்க்ள என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1317107

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்பு தேர்தல் திகதி அறிவிப்பு

எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. 

டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

எவ்வாறாயினும், சில காரணங்களினால் தேர்தல் குறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்புமனு கோரல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (a)

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஜனவரி-5-ஆம்-திகதிக்கு-முன்பு-தேர்தல்-திகதி-அறிவிப்பு/150-309577

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை பிற்போட  ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது அரசு - கிரியெல்ல

By DIGITAL DESK 2

26 DEC, 2022 | 08:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது.

தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் திங்கட்கிழமை (டிச. 26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்கல் எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்றத்தின் மீது முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது. வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று ஆகவே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் 2017 மற்றும் 2028ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீர்ப்பளித்துள்ளது.

நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவது கட்டாயமாகும். தேர்தலை பிற்போடுவதற்கான உரிய காரணம் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாத (டிசெம்பர்) இறுதியில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த மாதம் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வேட்புமனு தாக்கல் தொடர்பான உத்தியோகப்பூர்வமான தீர்மானம் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதி பகுதி,அடுத்தமாதம் முதல் வாரம் வரை பிற்போடப்பட்டுள்ளமைக்கான காரணத்தை இதுவரை ஆணைக்குழு அறிவிக்கவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/144179

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.