Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி குறித்த அறிவிப்பு இன்று?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் முன்னெடுப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி குறித்த அறிவிப்பு இன்று?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், தபால் மா அதிபர், அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1317749

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

By DIGITAL DESK 5

31 DEC, 2022 | 05:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 5ஆம் திகதி (வியாழக்கிழமை) வெளியிட உத்தேசித்துள்ளது.

இம்மாதத்தின் மூன்றாவது வார காலப்பகுதியில் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.கலப்பு மற்றும் விகிதாசார முறைக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம்  திகதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது.இம்முறை இரண்டு இலட்சம் பேர் புதிதாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளார்கள்.

நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த வேண்டிய உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை முன்னாள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அமைச்சின் விடயதான அதிகாரங்களுக்கு அமைய இவ்வருடம் மார்ச் மாதம் வரை பிற்போட்டார்.

அதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் பிற்போட முடியாது,தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி உரித்தாக்கப்பட்டது.தேர்தலை நடத்துவதற்கான தொழில்நுட்ப மட்ட நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான கடமைகளுக்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த மாதம் (டிசெம்பர்) தேர்தல் மாவட்டங்களுக்கான தெரிவத்தாட்சி உறுப்பினர்கள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி உறுப்பினர்களை ஆணைக்குழு நியமித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை எதிர்வரும் 5ஆம் திகதி வெளியிட ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கபபட்டு 14 அல்லது 17 நாட்களுக்குள் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவிக்கப்பட வேண்டும்.இதற்கமைய இம்மாதம் மூன்றாம் வார பகுதியில் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுத்தாக்கல் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டு,5 அல்லது 7 வார காலத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல், மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு ரிட் மனுக்கல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/144611

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேண்டாம் - தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றில் ரிட் மனு

By DIGITAL DESK 2

03 JAN, 2023 | 05:39 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் நடவடிக்கைகளை தடுத்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு உயர்  நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ  கேர்ணல் டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர, இந்த எழுத்தாணை மனுவை ( ரிட் மனு) செவ்வாய்க்கிழமை (டிச. 3) தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவில், பிரதிவாதிகளாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  நிமல் புஞ்சிஹேவா உள்ளிட்ட உறுப்பினர்கள், பிரதமர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர்  உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தான், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்கான செலவீனம் தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் விபரம் கோரியதாகவும்,  சுமார் 10 பில்லியன் ரூபா செலவாகும் என அவ்வாணைக் குழு தமக்கு பதிலளித்துள்ளதாகவும் மனுதாரர் இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்,  நாட்டில் பாரிய பொருளாதார  நெருக்கடி நிலை நிலவுவதாகவும்,  சர்வதேச நாணய நிதியம் மிக பாரதூரமான நிபந்தனைகளை விதித்துள்ள இச்சந்தர்ப்பத்தில், நாட்டில் தேர்தல் நடாத்துவது பொருத்தமற்றது என மக்களிடையே கருத்துக்கள் உலாவருவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும்,  உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 8,711 உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்படுவதாகவும் இந்த எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்கால் குறைக்க  வேண்டும் என கலந்துரையாடப்படுவதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இவ்வாறான பின்னணியில்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவன்  ஊடாக நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த நன்மையும் இல்லை என சுட்டிக்கடடும் மனுதாரர், அதனால்  அந்த தேர்தல் நடவடிக்கைகளை முனென்டுக்க  தடை விதித்து தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு எழுத்தாணை ஒன்றினைப் பிறப்பிக்குமாறு கோரியுள்ளார். 

https://www.virakesari.lk/article/144865

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.