Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30 ஆயிரத்துக்கும் அதிக அரசாங்க ஊழியர்கள் ஓய்வு - அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆயிரத்துக்கும் அதிக அரசாங்க ஊழியர்கள் ஓய்வு - அரசாங்கம்

By VISHNU

29 DEC, 2022 | 07:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்று செலகின்றனர்.

இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என பொது நிர்வாக,மாகாண சபைகள், உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

60 வயது பூரணமான அதிகமான அரச ஊழியர்கள் ஒரே தடவையில் ஓய்வுபெற்றுச் செல்வதால் அந்த வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்று செலகின்றனர். இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

எவ்வாறெனினும்  ஒரே தடவையில் இந்தளவு அதிக எண்ணிக்கையிலான அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெற்று செல்வதால் அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் இடம்பெறாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை கடந்த அரசாங்கம் 65 என அறிவித்த போதும் தற்போதைய அரசாங்கம் அந்த வயதெல்லையை 60 ஆக அறிவித்துள்ள நிலையிலேயே இந்த வருடம் 31 ஆம் திகதியுடன் 30,000ற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.

கடந்த வருடத்தில் ஓய்வு பெற வேண்டிய  அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்லாமை காரணமாகவே இந்த வருடம் அரச ஊழியர்கள் இந்தளவு அதிக எண்ணிக்கையில் ஓய்வுபெற்றுச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/144483

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆரம்பம் மட்டுமே 😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

100 பொது சுகாதார பரிசோதகர்கள் ஓய்வு - இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

By DIGITAL DESK 5

31 DEC, 2022 | 07:19 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் புதிய தீர்மானத்திற்கமைய நேற்றைய தினம் 100 பொது சுகாதார பரிசோதகர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இது மக்களுக்கான பொது சுகாதார சேவைகளை வழங்குவதில் நேரடியாக தாக்கம் செலுத்தும்.

எனவே பொது சுகாதார பரிசோதகர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாடளாவிய ரீதியில் 3200 பொது சுகாதார பரிசோதகர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். இவர்களில் 100 பேர் ஓய்வு பெறுகின்றனர். பொது சுகாதார பரிசோதகர்களின் பணிகளில் இது நேரடியாக தாக்கம் செலுத்தும்.

புதிதாக பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு பயிற்சியளிப்பதற்கு இரு வருடங்களேனும் செல்லும். எனவே ஓய்வு பெற்றுள்ளவர்களுக்கான இடைவெளியை நிரப்பி , சேவையை வழங்குவதில் சிக்கல் காணப்படுகிறது.

எனவே சுகாதார துறையைப் போன்று பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கும் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது சிறந்த தீர்மானமாக அமையும். எதிர்பாராத வகையில் இடம்பெறும் இந்த ஓய்வு பெறல் காரணமாக எமக்கு சேவையை வழங்குவதில் பாரிய நெருக்கடி ஏற்படக் கூடும்.

சேவைகளில் மாத்திரமின்றி பயிற்சியளித்தல் உள்ளிட்ட விடயங்களில் இது தாக்கம் செலுத்தும். அனுபவம் மிக்க சிரேஷ்டத்துவமுடையவர்களே ஓய்வு பெறுகின்றனர். எனவே புதிதாக உள்வாங்கப்படுபவர்களுக்கு பயிற்சியளிப்பதில் இது தாக்கம் செலுத்தும் என்றார்.

https://www.virakesari.lk/article/144630

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச நியமனங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு

By DIGITAL DESK 5

31 DEC, 2022 | 04:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2022 ஆம் ஆண்டு 30 ஆயிரம் அரச சேவையாளர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்கள்.  அரச சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஆராய பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக  அரச சேவைகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரச சேவையாளர்களுக்கு உபகார கொடுப்பனவுகளை மட்டுப்படுத்துமாறு திறைச்சேரி சகல அமைச்சின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ள பின்னணியில்  அரச சேவையாளர்களுக்கு  4000 ரூபா உபகார கொடுப்பனவை வழங்க  அரச  சேவைகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரச  சேவையாளர்கள்  ஓய்வுப்  பெறும்  வயது  தொடர்பில் எழுந்த சிக்கல் நிலையால் அரச சேவையாளர்கள் ஓய்வு பெறுவது தாமதிக்கப்பட்டது. இதற்கமைய 2022 ஆம் ஆண்டு 30 ஆயிரம் அரச சேவையாளர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவைக்கு புதியவர்களை இணைத்துக் கொள்வதை மட்டுப்படுத்த இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.3000 ஆயிரம் பேர் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு சேவையில் உள்ளவர்களை கொண்டு சேவைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆராய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச சேவைகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு அரச சேவைக்கு புதிய நியமனங்களை வழங்குவது தொடர்பில் ஆராய பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாத மதிப்பீட்டுக்கமைய இந்த குழுவினர் தமது அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.

https://www.virakesari.lk/article/144625

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.