Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படகில் 49 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படகில் 49 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது

By VISHNU

26 JAN, 2023 | 04:05 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

படகொன்றின் மூலமாக 49 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை கடத்திச் செல்ல முற்பட்ட மூவர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சந்தேக நபர்கள் முவரும் கடந்த 25 ஆம் திகதி அதிகாலைவேளையில் நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் படகொன்றின் மூலமாக பயணித்துள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் கடமையிலிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களிடம் மேற்கொண்ட சோதனையிட்டுள்ளனர். 

இந்த சோதனையையடுத்து, அவர்கள் 49 கிலோ கிராமும் 906 கிராமும் நிறையுடைய கஞ்சாவை கடத்த முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் மருதங்கேனி மற்றும் மண்டைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த 25, 32, 42 ஆகிய வயதுகளையுடைவர்களாவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் மூவரும் இன்று (26) கைட்ஸ் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தற்கான நடவடிக்கைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்ருந்தனர்.

https://www.virakesari.lk/article/146752

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

இந்த சந்தேக நபர்கள் மூவரும் இன்று (26) கைட்ஸ் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தற்கான நடவடிக்கைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்ருந்தனர்.

ஊர்காவற்துறை என்ற அழகிய தமிழ்ப் பெயரை….
கைட்ஸ்… என்று எழுதுவது, 100 ஆண்டுகளுக்கு மேல் இலங்கையில் தமிழ் பத்திரிகை 
நடத்திய… வீரகேசரி.  
எல்லாப் பக்கத்தாலையும்… தமிழனை அழிக்கிறது என்றே முடிவு கட்டி விட்டார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஊர்காவற்துறை என்ற அழகிய தமிழ்ப் பெயரை….
கைட்ஸ்… என்று எழுதுவது, 100 ஆண்டுகளுக்கு மேல் இலங்கையில் தமிழ் பத்திரிகை 
நடத்திய… வீரகேசரி.  
எல்லாப் பக்கத்தாலையும்… தமிழனை அழிக்கிறது என்றே முடிவு கட்டி விட்டார்கள். 

தற்போதைய இளைய செய்தியாளர்களின் செய்தியிடும் முறை அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஊர்காவற்துறை என்ற அழகிய தமிழ்ப் பெயரை….
கைட்ஸ்… என்று எழுதுவது, 100 ஆண்டுகளுக்கு மேல் இலங்கையில் தமிழ் பத்திரிகை 
நடத்திய… வீரகேசரி.  
எல்லாப் பக்கத்தாலையும்… தமிழனை அழிக்கிறது என்றே முடிவு கட்டி விட்டார்கள். 

இது எல்லாம் ஒரு வித தொற்று வியாதி விடுங்கள்..இளைய சமுகத்தின் பேச்சு வார்த்தை அரைவாசி தமிழ் மிகுதி தங்கிலிசு தானே.👋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

கைட்ஸ் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில்

உலகத்திலேயே சொந்த மொழியுடன் ஆங்கிலத்தையும் சேர்த்து கதைப்பதில் இந்தியனும் சிறிலங்கனையும் அடிக்க  வேற நாட்டுக்காரர் ஒருத்தரும் இல்லை. அதிலையும் மேட்டுக்குடி யாழ்ப்பாணத்தான் இருக்கிறானே......கோபம் வந்தால் ஆங்கிலம் தூள் பறக்கும் :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கோபம் வந்தால் ஆங்கிலம் தூள் பறக்கும் :rolling_on_the_floor_laughing:

அது ஆங்கிலேயன் யாருக்கும் விளங்காத மொழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.