Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனிதாபிமானத்தின் பேரில் வன்னி மீதும் படையெடுப்போம்: கேகலிய ரம்புக்வெல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானத்தின் பேரில் வன்னி மீதும் படையெடுப்போம்: கேகலிய ரம்புக்வெல

[திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 20:00 ஈழம்] [கொழும்பு நிருபர்]

மனிதாபிமான நடவடிக்கை என்ற பேரில் வன்னி மீதும் படையெடுத்து நாட்டின் அனைத்து இடங்களையும் இராணுவத்தினர் படையெடுப்பர் என்று சிறிலங்காவின் அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கேகலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் அவர் கூறியதாவது:

மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு முப்படைத்தளபதி என்ற வகையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு உள்ளது.

மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்றவகையில் வன்னிப்பகுதி இல்லை என்றால் அங்கும் எமது மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை தொடர்வோம். அதன்மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வன்னிப் பகுதியை மீட்டெடுப்போம்.

இரசாயன ஆயுதங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தவுள்ளனர் என்று புலனாய்வுத்தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து அனைத்துலகத்தின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளோம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பயங்கரவாத வழியில் சென்றால் நாமும் அதே வழியில் செல்வோம். அதன் மூலம் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிப்போம். அத்துடன் நாளை கூட பேச்சு மேசைக்கு விடுதலைப் புலிகள் வந்தால் அரசாங்கமும் பேச்சு மேசைக்கு வரும்.

எனவே பேசுவதற்கு தயாரா? தாக்குதலுக்கு முகம் கொடுக்க தயாரா? என்பதனை பிரபாகரனே முடிவு செய்யட்டும். அரசாங்கம் எதற்கும் தயாராகவே உள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்குரிய இடம் என்று எதுவுமே இல்லை. இங்கிருக்கும் அனைத்து இடங்களும் நாட்டு மக்களுக்கு சொந்தமானவை. அதனை விடுத்து விடுதலைப் புலிகள் தமது பயங்கரவாதத்தை நிலைநிறுத்த முயன்றால் அனைத்து இடங்களையும் மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இராணுவத்தினர் மீட்டெடுப்பர் என்றார் அவர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கு விரிச்ச வலை என்பதாகச் சித்தரிக்கிறார் போல..! :D

மனிதாபிமானத்தை பற்றியும், மக்கள் சுதந்திரத்தை பற்றியும் கதைக்கிற ஆளைப் பாருங்கோ,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதேபோன்று மனிதாபிமானத்தின் பேரில் புலிகளிடம் நீங்கள் அடிவாங்கி அழிவதையும் யாராலும் தடுக்கமுடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

மக்களைப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கும் தாக்குதல்கள் தொடருமாம்! வடக்கைக் கைப்பற்றும் நடவடிக்கை எதுவுமில்லை

பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து அப்பாவிப் பொதுமக்களை மீட்கும் மனிதாபிமான நோக்கம் கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளை அரசு தொடரும். அது அரசின் கடமையும் கூட. ஆனால் இதனை வடக்கை மீட்கும் நடவடிக்கை என்று விவரிக்கவோ விமர்சிக்கவோ முடியாது.

இவ்வாறு விளக்கத்துடன் கூடிய அறிவிப்பை விடுத்திருக்கின்றது இலங்கை அரசு.

அரசின் பாதுகாப்புத் துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இந்த அறிவிப்பை விடுத்தார்.

பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக நேற்று கொழும்பில் தாம் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டின் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:

வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் என்று எதுவும் அரசுக்குக் கிடையாது. இது விடயத்தில் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம மலேசியாவில் வைத்துக் கூறியவையே அரசின் நிலைப்பாடாகும். அதில் மாற்றம் ஏதும் இல்லை.

சிலாவத்துறையில் இடம்பெற்றது பயங்கரவாதிகளின் பயங் கரவாதப் பிடியிலிருந்து அப்பாவி மக்களை மீட்கும் மனிதாபி மான நடவடிக்கையே. அத்தகைய செயற்பாட்டுக்கு ஊடகவிய லாளர்கள் என்ன பெயர் கொடுத்தாலும் அடைமொழி கொடுத்தாலும் எமக்கு ஒன்றுமில்லை. அதை நீங்கள் தாக்குதல் நட வடிக்கை என்று கூறலாம். அல்லது ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றும் இராணுவச் செயற்பாடு என்று அர்த்தப்படுத்தலாம். ஆனால் அரசைப் பொறுத்தவரை அது மக்களைப் பயங்கர வாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே.

வடக்கைக் கைப்பற்றப் பெரும்

படை நடவடிக்கை என்பதை என்பதை

அரசு ஏற்றுக்கொள்ளவில்லை

வடக்கைப் பிடிக்க அரசுப் படைகள் பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம் பிக்கப் போகின்றன என்ற கூற்றை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏனெனில், இந்த நாட்டில் புலிகளின் பிரதேசம், அரசின் பிரதேசம் என்று இரு வெவ்வேறு பிரதேசங்கள் இருக்கின்றன என அரசு கருதவில்லை. முழு நாடுமே அரசின் கீழ் வருவதுதான்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்படி புலி களின் கட்டுப்பாட்டுப் பிரதேசம், அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றெல்லாம் குறிப்பிடப்படுவதை இந்த அரசு ஏற்றுக் கொள்வில்லை. அதைக் கணக்கெடுக் கவும் இல்லை.

முழு நாடுமே அரசின் கீழ்த்தான் உள் ளது என்ற நிலையில் வடக்கை கைப்பற்ற பெரும் படை நடவடிக்கையை அரசுப் படை கள் புதிதாக ஆரம்பிக்கப்போகின்றன என்று அர்த்தப்படுத்துவதை அல்லது கூறப் படுவதை அரசு ஏற்றுக் கொள்ள வேயில்லை.

சில சமயம், ஏதேனும் பிரதேசத்தில் இருந்து கொண்டு பயங்கரவாதிகள் மேசமான பயங்கரவாதச் செயல்களில் ஈடு படலாம். அதனை முறியடித்து, அப் பிரதேச மக்களைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் மனிதாபிமா னப் பணியை அரசு தொடரும் அது அர சின் கடமையும் கூட.

மக்களை மீட்கும் மனிதாபிமானப் பணி

கிழக்கு மாகாணத்திலும் அதுதான் நடந்தது. மூதூர், மாவிலாறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதச் செயல் கள் முடியடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்தே கிழக்கில் பயங்கரவாதிகளின் பிடியிலி ருந்து மக்களை விடுவிக்கும் மனிதாபிமானப் பணியை அரசு பொறுப்போடு முன் னெடுத்தது.

அதுவே சிலாவத்துறையிலும் இடம்பெற்றது. அத்தகைய நடவடிக்கைகள் தொடரும். அது தொடர்பான தனது கடப் பாட்டை பொறுப்பை அரசு தொடரும்.

பயங்கவரவாதச் செயல்களைக் கை விட்டு, அரசுடன் பேசுவதற்கு புலிகளின் தலைவர் இப்போது வருவராரானாலும், அடுத்த நிமிடம் பேச்சு நடத்த அரசு தயார். என்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.