Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூ ஸிலாந்து வரலாற்றில் 3 ஆவது தடவையாக அவசரநிலை பிரகடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூ ஸிலாந்து வரலாற்றில் 3 ஆவது தடவையாக அவசரநிலை பிரகடனம்

Published By: SETHU

14 FEB, 2023 | 09:37 AM
image

 

நியூ ஸிலாந்தை நேற்று சூறாவளி தாக்கியதையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் இன்று நாடளாவிய ரீதியில் அவரசநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

 நியூ ஸிலாந்தின் மக்கள் தொகை மிகுந்த வட தீவில் நேற்று கப்ரியல் சூறாவளி தாக்கியது. இதனால், 46,000 இற்கும் அதிகமான வீடுகள் மின்சாரத்தை இழந்துதுடன்,  கட்டங்கள், வீதிகளும் சேதமடைந்தன. 

பெரும் எண்ணிக்iகான குடும்பங்கள் இம்பெயர்ந்துள்ளன. பெரும் எண்ணிக்கையான வீடுகள் மின்சாரத்தை இழநை;துள்ளன. நாடு முழுவதும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன' என பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார்.

நியூ ஸிலாந்தின் வரலாற்றில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டமை இது 3 ஆவது தடவையாகும்.

நியூ ஸிலாந்தில் இதற்குமுன் 2019 கிறைஸ்ட்சேர்ச் தாக்குதலையடுத்தும், கொவிட்19 பெருந்தொற்று காரணமாகவும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

மக்கள் உயிர் தப்புவதற்காக வீடுகளிலிருந்து நீந்திச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, குறைந்தபட்சம் 509 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டதால், எயார் நியூ ஸிலாந்து நிறுவனத்தின் 10,000 இற்கும் அதிகமான சர்வதேச வாடிக்கையாளர்கள் பாதிக்ப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/148145

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து இந்த நூற்றாண்டின் மிக மோசமான இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது- பிரதமர் கிறிஸ் கிப்ஹின்ஸ்

Published By: RAJEEBAN

14 FEB, 2023 | 01:07 PM
image

நியூசிலாந்தை தாக்கியுள்ள கப்பிரியல் சூறாவளியே தனது நாடு இந்த நூற்றாண்டில் அனுபவித்த மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் என அந்த நாட்டின் புதிய பிரதமர் கிறிஸ் கிப்ஹின்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே கிறிஸ் கிப்ஹின்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

கப்பிரியல் காரணமாக கடும் மழை வெள்ளம் கடும் காற்று போன்றவற்றை மக்கள் அனுபவித்துள்ள நிலையில் பல கடற்கரையோர நகரங்களில் இருந்து மக்கள் அகற்றப்பட்டுள்ளனர்.

நாங்கள் எதிர்கொண்டுள்ள சேதத்தின் அளவு இந்த தலைமுறை எதிர்கொள்ளாதது என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

ra9EKsdi.jpg

2500 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என அவசர முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள பகுதியில் பல வாரங்களிற்கு மக்கள் மின்சாரம் இன்றி வாழவேண்டியிருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நியூசிலாந்து பாதுகாப்பு படையை சேர்ந்த 200 பேர் உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் இன்னமும் கார்களில் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போன்ற நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, ஹெலிக்கொப்டர்கள் மூலம் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன ஆனால் கடும் காற்றினால் அந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மக்கள் கூரைகளில் சிக்குண்டுள்ளனர் எங்கள் தீயணைப்பு வீரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயல்கின்றோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/148175

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்தை புரட்டிப்போட்டுள்ள கப்பிரியல் சூறாவளி- 1500 பேர் காணாமல்போயுள்ளனர்.

Published By: Rajeeban

15 Feb, 2023 | 12:19 PM
image

நியுசிலாந்தை தாக்கியுள்ள கப்பிரியல் சூறாவளி காரணமாக பலர் காணாமல்போயுள்ள நிலையில் அவர்கள் குறித்த கரிசனைகள் அதிகரித்துள்ளன.

நியுசிலாந்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்தில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ள சூறாவளி அங்கிருந்து நகர்ந்துகொண்டுள்ள நிலையில் ஒரு குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1440 பேர் காணாமல்போயுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்- அவர்களில் பலர் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.

Fo65NJMagAE75WT.jpg

பலர் காணாமல்போயுள்ளனர் அவர்களின் நிலைமை குறித்து  காவல்துறையினர் கடும் கவலை கொண்டுள்ளனர் என நியுசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

Fo65NJIacAA5FJQ.jpg

ஹவ்க்ஸ்பே எஸ்க்டேல் பகுதியில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்த வெள்ளநீரில் சிக்கியே குழந்தை உயிரிழந்துள்ளது.

Fo65NJJaYAAuSqq.jpg

இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் துயரம் நினைத்துப்பார்க்க முடியாதது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நோர்த் ஜலண்டின் சில பகுதிகள் மின்சாரம் தொடர்பாடல்கள் முற்றாக துண்டிக்கப்பட்ட பகுதியில் காணப்படுகின்றன - இதனால் மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

Fo65NJIaUAASygG.jpg

வீதிகளும் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன மண்சரிவு வீதிகள் சேதமடைந்துள்ளதால் முக்கிய வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன,

 

 

https://www.virakesari.lk/article/148255

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.