Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் - பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் - பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்

Published By: VISHNU

15 FEB, 2023 | 03:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் எனது அனுமதி இல்லாமல் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் மின்கட்டணத்தை இன்று முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழவின் மூன்று உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் என இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் வருடாந்தம் 287 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் 65 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான பரிந்துரையை முன்வைத்தது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை 65 சதவீதத்தால் மீண்டும் அதிகரித்தால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள், அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும், ஆகவே வருடாந்தம் 142 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் 36 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்க பொதுபயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

36 சதவீத மின்கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆணைக்குழவின் உறுப்பினர்களுக்குள் முரண்பாடுகளை அரசியல் தரப்பினர் ஏற்படுத்தி, ஆணைக்குழுக்குள் இணக்கப்பாடற்ற தன்மையை தோற்றுவித்துள்ளார்கள்.

36 சதவீத மின்கட்டண அதிகரிப்பு அனுமதி தீர்மானத்தை புறக்கணித்து 65 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழவின் மூன்று உறுப்பினர்கள் அரசியல் அழுத்தங்களினால் எனது அனுமதி இல்லாமல் இணக்கம் தெரிவித்துள்ளார். இந்த மின்கட்டண அதிகரிப்பை இன்று முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

30,60 மற்றும் 90 மின்னலகு என்ற அடிப்படையில் மின்சாரத்தை பாவிக்கும் பாவனையாளர்களின் மின்கட்டணம் 400 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும்.

சுற்றுலாத்துறை சேவைக்கு ஒரு அலகிற்கு தற்போது அறவிடப்படும் 25 ரூபா 40 ரூபாவாகவும், கைத்தொழிற்சாலைகளிடமிருந்து அறவிடப்படும் ஒரு அலகுக்கான கட்டணம் 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் போராட்டம் மீண்டும் தோற்றம் பெறும்.

நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆணைக்குழுவின் சட்டத்திற்கு முரணாக செயற்படும் தரப்பினருக்கு எதிராகவும்,மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராகவும் நீதிமன்றம் செல்வேன் என்றார்.

https://www.virakesari.lk/article/148265

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவின் அலுவலகத்துக்கு சீல்!

Published By: VISHNU

16 FEB, 2023 | 03:02 PM
image

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரிலேயே அவரது அலுவலகத்துக்கு பொலிஸாரால் இன்று (பெப் 16) சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது அலுவகத்துக்கே இவ்வாறு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/148358

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான மனு தள்ளுபடி

justis.jpg

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யயுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.’

சோபித்த ராஜகருணா, மற்றும் தம்மிக்க கணேபொல, ஆகிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி மின் நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திரநிலையம் ஆகியன மனுவினை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பினால் அனைத்து துறைகளும் பாரிய சவாலை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, கடற்றொழில் துறையானது மின் கட்டண அதிகரிப்பினால் பாரிய சவாலை எதிர்கொள்வதாக அகில இலங்கை கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ரத்ன கமகே தெரிவித்தார்.

அதேபோன்று மின் கட்டண அதிகரிப்பினை தொடர்ந்து சுற்றுலா துறை பாரிய நட்டத்தினை எதிர்கொள்வதாக பொலநறுவை சுற்றுலா சேவை வழங்குனர்கள் சங்கத்தின் செயலாளர் கே பி ஆரியதாச தெரிவித்தார்.

மேலும் மின் கட்டண அதிகரிப்பினால் மரப்பணியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மொரட்டுவ மரப்பணி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://thinakkural.lk/article/240428

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.