Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மது போதையில் வந்த பொலிஸாரால் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் - ரோஹினி குமாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மது போதையில் வந்த பொலிஸாரால் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் - ரோஹினி குமாரி

Published By: DIGITAL DESK 5

24 FEB, 2023 | 02:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக கல்வி அமைச்சில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர்கள் சிலர், மது போதையில் வந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி  உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

கல்வி அமைச்சில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான மேன்முறையீட்டு சபை கூடியிருந்தது. அமைச்சரினதும், செயலாளரினதும் பொறுப்பில் நடந்த அந்த கூட்டத்தின் போது மது போதையில் வந்த பொலிஸ் அதிகாரிகள் அங்கிருந்த அந்த சபையின் உறுப்பினர்களாக ஆசிரியர்கள் சிலரை கைது செய்துள்ளனர். 

அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இழுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்துள்ளனர். இது தொடர்பில் அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன? சபாநாயகர் மற்றும் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் எடுக்கும் நடவடிக்கை என்ன?

இப்போது ஆசிரியர்கள் பெரும் அதிருப்திக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை நீங்கள் உள்ளேயே தீர்த்துக்கொள்ளப் போகின்றீர்களா? அல்லது வீதியில் தீர்த்துக்கொள்ளப் போகின்றீர்களா? இது தொடர்பில் கல்வி அமைச்சர் பதிலளிக்க வேண்டும். 

அந்த பொலிஸ் அதிகாரிகள் மதுபோதையில் இருந்தனரா என்று பலூன் மூலம் பரிசோதிக்கப்படுவர் என்று அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார். இதனால் கல்வி அமைச்சரின் பதில் என்ன என்று கூற வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/149048

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் சுசில் உறுதி

Published By: DIGITAL DESK 5

24 FEB, 2023 | 02:07 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பௌத்த பாலி பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கையிலேயே வியாழக்கிழமை (23) பிக்கு மாணவர்கள் கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் வியாழக்கிழமை நடந்த சம்பவத்தின் போது ஆசிரியர்கள் சிலர் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,

பௌத்த பாலி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. அது பல்கலைக்கழக மானியத்தின் கீழான பல்கலைக்கழகம் அல்ல. உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள பல்கலைக்கழகமாகும்.

பௌத்த பாலி பல்கலைக்கழகத்திற்கு மற்றைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்ப்பது போன்று இசற் புள்ளி பார்ப்பதில்லை. அதற்கான முறை வேறானது. இது விசேட விடயங்களை கொண்டு தனியான சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்பட்டது.

இப்போது பௌத்த பாலி பல்கலைக்கழகம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. 

இவ்வாறு இருக்கையில் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் பிரச்சினையொன்று ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வியாழக்கிழமை இவர்கள் கல்வி அமைச்சுக்கு வந்தனர். இதில் சூழ்ச்சிக்கார சக்திகள் உள்ளன.

இதேவேளை இந்த சம்பவத்தின் போது ஆசிரியர் இடமாற்ற சபை கூட்டத்தில் கலந்துகொண்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதன்போது நான் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தேன். அமைச்சர் என்ற ரீதியில் எனது கடமையை செய்துள்ளேன். ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை தாெடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வோம் என்றார்.

https://www.virakesari.lk/article/149051

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண பிரச்சனையை தீர்க்கத்தெரியாமல், எல்லாவற்றுக்குள்ளும் இனப்பிரச்சினையை புகுத்தி பூசி மெழுகி அது இப்போ ஒவ்வொன்றாக எய்தவர் பக்கமே திரும்புகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.