Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர்?

 

தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கோரியுள்ளதாகவும் சன்ன ஜயசுமண ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பதவியை மாற்றுவதற்கான நகர்வுகள் இருப்பதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த எங்கள் நண்பர்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். தினேஸ் குணவர்தனவை அப்பதவியில் இருந்து நீக்கி மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க உத்தேசித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்” என்றார்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசாங்கம் பதவி விலக நேரிடும் எனவும், பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.

“இதற்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்கமாட்டோம். மகிந்த ராஜபக்ஷ இப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தனது ஓய்வு காலத்தை வீட்டிலேயே அனுபவிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/242028

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பிரதமராகிறாரா மகிந்த..! உண்மை தகவலை வெளியிட்டார் பிரதமர் தினேஸ்

Screenshot-2023-02-26-at-11.36.06-AM.png

பிரதமர் பதவியை வகிப்பது குறித்து தினேஸ் குணவர்தன ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

தாம் பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகுவதாகவும், மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்பார் எனவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், பதவியில் இருந்து விலகுவதாக செய்வதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்திகள் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குழப்பும் நோக்கில் இவ்வாறான போலி வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 

 

https://akkinikkunchu.com/?p=239317

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் பிரதமராகிறாரா மஹிந்த ராஜபக்ஷ?

இலங்கையில் மீண்டும் பிரதமராகின்றாரா மஹிந்த ராஜபக்ஸ

பட மூலாதாரம்,DINESH GUNAWARDENA FACEBOOK

56 நிமிடங்களுக்கு முன்னர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் ஆசனத்தில் அமர்த்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

தினேஷ் குணவர்தனவை விலக்கி, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருகின்ற யோசனையொன்றை, அரசாங்கத்திலுள்ளவர்கள் முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்: மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது. அதில் உண்மை இருக்கின்றதா?

ஷன்ன ஜயசுமன: உண்மையிலேயே, பிரதமர் பதவியில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பிலுள்ள எமது நண்பர்கள் எம்மிடமும் அவ்வாறான யோசனையொன்று முன்வைத்திருந்தார்கள்.

தினேஷ் குணவர்தனவை விலக்கி, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டுமொரு முறை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதாக அவர்கள் கூறினார்கள். தலைவலிக்கு, தலையணையை மாற்றினால், தீர்வு கிடைக்கும் என நாம் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

அதைவிடுத்து, பிரதமரை மாற்றினால் மாத்திரம், இந்த நாட்டிலுள்ள பிரச்னைகள் தீரும் என நாம் நினைக்கவில்லை. அது மாத்திரமல்ல, பிரதமரை மாற்றும் இந்த யோசனைக்கு நாம் ஆதரவு வழங்க மாட்டோம்.

மஹிந்த ராஜபக்ஷ, அரசியலிலிருந்து ஓய்வுபெற்று, ஓய்வு பெறுவதே சிறந்ததாக அமையும். அப்படியென்றால், நாட்டிற்காக அவர் ஏதேனும் செய்திருந்தால், அந்த நற்பெயர் பாதுகாக்கப்படும் என்பதே எமது நம்பிக்கை.

மஹிந்த ராஜபக்ஸ

பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA'S MEDIA

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து, தற்போது அந்த கட்சியிலிருந்து விலகி சுயாதீன குழுவின் உறுப்பினராக பேராசிரியர் ஷன்ன ஜயசுமன தற்போது செயற்பட்டு வருகின்றார்.

ஷன்ன ஜயசுமனவின் இந்த கருத்தை அடுத்து, மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் பதவிக்கு கொண்டு வரும் முயற்சி தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த கருத்தை அடுத்து, மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் பதவிக்கு கொண்டு வரும் முயற்சி உண்மையிலேயே முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் பலரும் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை, மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருகின்றமை குறித்து, ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வினவியிருந்தார்கள்.

ஊடகவியலாளர்: மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் பிரதமராக போவதாக கூறப்படுகின்றது?

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க: (சிரிக்கின்றார்) இதற்கான பதில் இவ்வளவு தான்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, சிரித்து விட்டு, இதற்கான பதில் இவ்வளவு தான் என கூறி, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த இடத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

இலங்கையில் மீண்டும் பிரதமராகின்றாரா மஹிந்த ராஜபக்ஸ

பட மூலாதாரம்,DINESH GUNAWARDENA FACEBOOK

நாமல் ராஜபக்ஷவின் பதில்

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இதற்கு பதிலளித்தார்.

''ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையிலும், ஆளும் கட்சி என்ற வகையிலும் பிரதமர் ஒருவரை நாம் நியமித்துள்ளோம். பிரதமர் ஒருவர் இருக்கின்றார். பிரதமர் ஒருவர் இருக்கின்ற போது, மற்றுமொரு பிரதமரை தேடுவதற்கான எந்தவொரு தேவையும் கிடையாது" என நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ

பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA'S MEDIA

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம் இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரதமரின் ஊடகச் செயலாளர் லலித் ரோஹண லியனகேவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு பிரதமருக்கு எந்தவொரு தரப்பிலிருந்தும் கோரிக்கைகளோ அல்லது அழுத்தங்களோ பிரயோகிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை இல்லாதொழிக்கும் சூழ்ச்சியின் ஒரு அங்கமே இந்த கருத்து எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ceqvexg8lppo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.