Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலையான சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 இலங்கையர்கள் இன்னும் சிறப்பு முகாமில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையான சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 இலங்கையர்கள் இன்னும் சிறப்பு முகாமில்

14.jpg

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு நான்கு இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த போதிலும் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இலங்கைக்கு மீள திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த, சாந்தனின் ஆவணங்கள் மீதான பரிசீலனை தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1999ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இந்திய உயர் நீதிமன்றினால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஏழு பேரில் பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டார்.

நளினி, சாந்தன், முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் குறித்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு இலங்கையர்களும் இந்தியாவில் இருந்து வெளியேறுவது குறித்து அரசாங்கத்தின் முடிவு நிலுவையில் இருப்பதன் காரணமாக அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரில் மூவர், ஐரோப்பிய நாடுகளில் தங்களது உறவினர்கள் வசிப்பதால் அந்த நாடுகளுக்கு செல்வதற்கு இணக்கம் வெளியிட்டனர்.

எனினும், சாந்தன் மாத்திரம் இலங்கை திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது ஆவணங்கள் மீதான பரிசீலனையும் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளமையே அவர் நாடு திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமாகும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/242726

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ்காந்தி கொலை வழக்கு: விடுதலையான நான்கு இலங்கையர்களின் தற்போதைய நிலை!

ராஜிவ்காந்தி கொலை வழக்கு: விடுதலையான நான்கு இலங்கையர்களின் தற்போதைய நிலை!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கையர்களும், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு இலங்கையர்களும் இந்தியாவில் இருந்து வெளியேறுவது குறித்து அரசாங்கத்தின் முடிவு நிலுவையில் இருப்பதன் காரணமாக அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரில் மூவர், ஐரோப்பிய நாடுகளில் தங்களது உறவினர்கள் வசிப்பதால் அந்த நாடுகளுக்கு செல்வதற்கு இணக்கம் வெளியிட்டனர்.

எனினும், சாந்தன் மாத்திரம் இலங்கை திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது ஆவணங்கள் மீதான பரிசீலனையும் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளமையினால் அவர் நாடு திரும்புவது தாமதமாகியுள்ளது.

1991ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இந்திய உயர் நீதிமன்றினால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஏழு பேரில் பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, நளினி, சாந்தன், முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் குறித்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1326166

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் - 'முழுமையான விடுதலை' எப்போது கிடைக்கும்?

நளினி, முருகன், ராஜிவ் காந்தி கொலை வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த நளினி

20 மே 2023, 02:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 7 பேரும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

முதலில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து சிறையிலிருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் நளினி, ரவிச்சந்திரனை தவிர முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

சிறையிலிந்து விடுதலையான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நால்வர் காவல்துறையினர் பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

6 மாதங்களுக்கு மேலாகியும் இவர்கள் 4 பேரும் திருச்சியில் சிறப்பு முகாமில் ஏன் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்புகின்றனர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.

 

சிறப்பு முகாமில் வாழ்க்கை

நளினி, முருகன், ராஜிவ் காந்தி கொலை வழக்கு
 
படக்குறிப்பு,

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஏழு பேர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டாலும் இவர்கள் வெளிநாட்டினர் என்பதால் தற்போது வரை திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு மூகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சியில் இருக்கும் இந்தச் சிறப்பு மூகாம் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு முகாம் அல்ல. குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டு, பிணையில் இருக்கும் வெளிநாட்டினரை தங்க வைக்க இந்தச் சிறப்பு மூகாம் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற நாட்டினரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சொந்த நாட்டுக்கு செல்லவேண்டுமா அல்லது இந்தியாவிலே தங்கியிருக்க விருப்பமா என்பதைக் கேட்டு அவர்களைத் திருப்பியனுப்ப அரசு முடிவெடுக்கும் என விடுதலைக்குப் பிறகு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டபோது திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நால்வரும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

நளினி, முருகன், ராஜிவ் காந்தி கொலை வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், இலங்கை நாட்டவர் என்பதால் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக தமது மனைவி நளினியை சந்தித்தார். (நாள்: நவம்பர் 12, 2022)

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞரான புகழேந்தி, 31 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த இந்த 4 பேரும் ஏன் இத்தனை நாட்களாக சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

"கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலிருந்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையிலிருந்தும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் அங்கிருந்து திருச்சியிலுள்ள வெளிநாட்டினர் தங்க வைக்கப்படும் சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் சிறப்பு முகாமிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.”

விடுதலை ஏன் தாமதம்

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இந்த நால்வரும் ராஜிவ் காந்தி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்பதால் அவர்களை மீண்டும் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்புவது தொடர்பாக சில நடைமுறைகள் உள்ளன.

குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பமிருந்தால் இலங்கை அரசுடன் பேசி அனுமதி பெறவேண்டும். இந்தியாவிலேயே தங்க விரும்பினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்குரிய நடைமுறை செய்யவேண்டும்.

இதுமட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்தவர்களைத் திருப்பியனுப்பும் விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் முருகன் உள்ளிட்ட 4 பேரும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு மூகாமில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

முருகனின் மனைவியான நளினி, சிறப்பு முகாமிலிருந்து தனது கணவர் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவரை அழைத்துக்கொண்டு லண்டனில் வசிக்கும் மகளைக் காணத் திட்டமிட்டுள்ள நிலையில் 6 மாதங்களுக்கு மேலாகியும் தனது கணவரை விடுதலை செய்யாமல் வைத்திருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய நளினி, "30 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தாலும் என் கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. சிறப்பு முகாமில் உள்ள என் கணவரை அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறேன்.

நான் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் நாம் எப்போது மகளுடன் இணைந்து ஒரே குடும்பமாக வாழப் போகிறோம் என்ற கேள்வியை மட்டுமே என்னிடம் கேட்கிறார். அவரை விரைவாக விடுதலை செய்ய அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று கூறினார்.

கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆர்வலர்கள்

பல ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்களை சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பளரான திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

நளினி, முருகன், ராஜிவ் காந்தி கொலை வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

"31 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்த நபர்களை சாதாரண நபர்களைப் போலக் கருதி, அரசு நடைமுறைகளை தாமதம் செய்யக்கூடாது. நீண்ட நாட்களாக தாமதம் ஏற்படுவதைப் பார்க்கும்போது பின்னணியில் அரசியல் அழுத்தம் ஏதுமுள்ளதா என்ற கேள்வி எனக்கு எழுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

ஏழு தமிழர் விடுதலை கூட்டியக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான முத்துகுமார் பிபிசி தமிழிடம் பேசும்போது, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை சிறப்பு முகாமில் நீண்ட நாள் வைத்திருப்பது அவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுதலையின் பயனை கேள்விக்குள்ளாக்குவதாகத் தெரிவித்தார்.

"இந்தியாவிலேயே மிக நீண்ட நாட்களாக சிறையிலிருந்த கைதிகளில் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த 7 பேரும் அடங்குவர்.

பெரிய அரசியல், சட்ட போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் விடுதலைக்குப் பிறகு குடும்பத்துடன் கழிக்கவேண்டிய நாட்களை என்னவென்று தெரியாத ஏதோவொரு காரணத்திற்காக மீண்டும் சிறப்பு முகாமில் கழிக்கும் வகையில் காவல்துறை கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டிருப்பது இந்த நால்வருக்கும் வழங்கப்பட்ட விடுதலைக்கு முரணானது," என்று அவர் தெரிவித்தார்.

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : விடுதலையான நால்வரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை !

news-02-8.jpg

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உட்பட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததையடுத்து, முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்தார்.

முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், நளினி 4 பேரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை கோரி கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதேவேளை, நளினி இந்திய பிரஜை என்பதுடன், அவரது கணவரான முருகன் இலங்கைப் பிரஜையாவார். இதையடுத்து நளினியின் சேர்ந்து வாழ அனுமதிக்கும் கோரிக்கைக்கு அமைய அவரையும் இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, விடுதலையான முருகன் தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன், இலங்கயிலுள்ள அவரது தாயாரும் தனது மகனை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/273224

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.