Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷண்முகா அபாயா விவகாரம் : அதிபர் லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆஜரானார் - அதிபர் லிங்கேஸ்வரியைத்தான் பஹ்மிதா றமீஸ் அவர்கள் தாக்கினார்கள் எனவும் வாதிட்டார் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PicsArt_06-13-09.33.52.jpg

 

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை

 

அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமை ஏற்க விடாமல் தடுத்து பாடசாலையை விட்டு விரட்டி விட்டமை சம்பந்தமான விடயத்தில் பாடசாலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுமாறும் பெறாவிட்டால் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் கடுமையான இழப்பீடுகளை செலுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்தார்.

 

 

ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்கள் ஷண்முகா அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுத்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் கௌரவ. பயஸ் றஸ்ஸாக் முன்னிலையில் விளக்கத்திற்கு ஏலவே நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

ஆசிரியை பஹ்மிதா றமீஸ் சார்பாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான அப்துல் சுபையிர், சட்டத்தரணி றதீப் அகமட் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

 

எதிரி லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனோடு சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

 

ஆசிரியை பஹ்மிதா றமீஸை பதவி ஏற்க விடாமல் தடுத்த அதிபர் லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தன்னுடைய சமர்ப்பணத்தில் இவ்வழக்கு பொய்யாகப் புனையப்பட்ட ஒரு வழக்கென்றும் அதிபரைத்தான் பஹ்மிதா றமீஸ் அவர்கள் தாக்கினார்களே ஒழிய அதிபரால் பஹ்மிதா றமீஸுக்கு எந்த பங்கமும் விளைவிக்கப்ப்டவில்லை என்றும் இவ்வழக்கினை வாபஸ் பெறாவிட்டால் கனதியான நட்டஈடுகளை செலுத்த வேண்டி நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

 

இதற்கு பதிலளித்த சட்டத்தரணி றதீப் அகமட் அவர்கள், இந்தப் பிரச்சினையில் முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவினை அணிந்து செல்ல அனுமதிக்காமையானது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும் இவ்வாறான இன ரீதியான குற்ற அணுக்கங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

 

இருதரப்பினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வருவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கு அவகாசம் ஒன்றினை வழங்குவதற்காக எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒரு இந்துப் பாடசாலையில் ஒரு முஸ்லிம் ஆசிரியையால் தன்னுடைய கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு தனது அரச கடமையைச் செய்வதற்கு சாத்தியமே இல்லாத சூழ்நிலையில் வடகிழக்கு இணைக்கப்படும் பொழுது இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களின் கலாச்சார உரிமைக்கான உத்தரவாதம் எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழுவது நியாயமானது. 

111.jpg

https://www.madawalaenews.com/2023/03/i_82.html

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒரு இந்துப் பாடசாலையில் ஒரு முஸ்லிம் ஆசிரியையால் தன்னுடைய கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு தனது அரச கடமையைச் செய்வதற்கு சாத்தியமே இல்லாத சூழ்நிலையில் வடகிழக்கு இணைக்கப்படும் பொழுது இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களின் கலாச்சார உரிமைக்கான உத்தரவாதம் எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழுவது நியாயமானது. 

 

அதுதானே பார்த்தன் எப்படிச் சுற்றி வளைத்து எங்கை வந்து நிக்கினம்.....அவையை மாத்தேலாது...மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்...பள்ளிக்கூடப் பிரச்சினையை ..இப்ப தீர்விலை கொண்டுவந்து முடிக்கினம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குரோதத்தின் வெளிப்பாடு, காவலுக்குச் சென்றாரா சுமந்திரன்..? Subaideen Risan -

 

சுமந்திரன் ஐயா, நீங்கள் பஹ்மிதா ஆசிரியை எனும் தனிநபருக்கு எதிராக மாத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. 

 

ஷன்முகா பாடசாலை அதிபர் லிங்கேஷ்வரிக்கு சார்பாக மாத்திரம் வாதிடவுமில்லை.

 

ஒரே மொழிபேசும் மற்றொரு சக சிறுபான்மை இனத்தின் ஆடை முறைமை ஏற்க மறுக்கும் ஒரு குரோதத்தின் வெளிப்பாட்டுக்கு காவல்காக்க சென்றிருக்கிறீர்கள். 

 

இலங்கை தமிழ் முஸ்லிம் உறவின் வேர்களை வெட்ட நினைக்கும் இந்துத்துவாவின் ஊதுகுழலுக்கு நீங்கள் உரம் சேர்க்க சென்றிருக்குறீர்கள்.

 

சக கலாசாரத்தை சகிக்கவும், மதிக்கவும் மனமில்லாத ஒரு அதிபரை காப்பாற்ற முயற்சிக்கின்றீர்கள். 

 

உங்களைப் போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட தமிழ்த்தலைவர்களே, குறுகிய இனத்துவ வட்டத்திலிருந்து இன்னும் வெளிவரமுடியாத போது பாமரத் தமிழ் சகோதர மக்கள் எம்மாத்திரம்?. 

 

கலாசார ரீதியில் இலங்கைத் தமிழ் முஸ்லிம் இனங்கள் அதிகமான ஒற்றுமைத் தன்மைகளைக் கொண்டிருந்தும்,  ஒரு நாகரீகமான ஆடை விடையத்திலே சகிப்புத் தன்மை இல்லாத உங்கள் அதிகாரத்திற்குட்பட்டு வாழும் துரதிஷ்ட நிலை எங்களுக்கு வந்தால், நீங்கள் எவ்வாறு நடந்துகொள்வீர்கள் என்ற கேள்வி எம்மிடம் எழுவதும் இயல்பானதும் தவிர்க்க முடியாததும் அல்லவா?.

 

வடகிழக்கு இணைப்புக் குறித்தான முஸ்லிம் சமூகத்தின் அச்சத்தின் நியாயத்தன்மைக்கு உங்கள் இந்த செயற்பாடும் சாட்சியமாகும்.

 

ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் தோளோடு தோள் நின்ற முஸ்லிம்களை திட்டமிட்டு ஓரம்கட்டி, பிற்காலத்தில் அவர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த வரலாற்றின் அடிப்படை இதே சகிப்புத்தன்மையின்மைதான். 

 

ஷண்முகா பாடசாலையில் அரங்கேறியது போன்ற செயற்பாடு முஸ்லிம் பாடசாலை ஒன்றில் ஒரு தமிழ் ஆசிரியைக்கு எதிராக நடந்திருந்தால் நிச்சயமாக முழு முஸ்லிம் சமூகமும் அதனைத் தட்டிக்கேட்க தயங்கியிருக்காது. இங்கு நீதியே முதன்மைப் படுத்தப்படவேண்டியது இனச்சார்பு நிலைப்பாடல்ல.

 

ஐரோப்பாவில் அகதிகளாக குடியேறி வாழும் நம்மக்களுக்கு எதிராக அந்நாட்டவர்கள் அதிபர் லிங்கேஷ்வரியைப் போல நடக்க முற்பட்டால் எப்படியான விழைவை அது ஏற்படுத்தும்?.  

 

அதேபோல இங்கு முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகளை முஸ்லிம் கலாசார ஆடைமுறைக்கு நிர்ப்பந்தித்தால் இரு தரப்பு உறவும் எங்கு சென்று முடிவடையும்?. 

 

ஆக, 

 

ஒரு மதத்தை, கலாசார்த்தை பின்பற்றுவதற்கான அடிப்படை உரிமையை மறுத்து இன முறன்பாட்டை தோற்றுவித்த ஒரு அதிபருக்கு சார்பாக, தன் இனம் என்ற ஒரே காரணத்துக்காக காப்பாற்ற முயற்சிக்கின்றீர்கள். நீதி, நேர்மை என்பவை எல்லாம் இனவாதத்தின் முன்னால் தோற்றுப்போகாது. 

https://www.jaffnamuslim.com/2023/03/blog-post_424.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.