Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான் 

09 MAR, 2023 | 04:30 PM
image

 

அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகின்றது.

 

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு மிக முக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு (WFP)மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்கயே இவ்வாறு ஜப்பான் வழங்குகின்றது.

இந்த நிதியுதவியின் மூலம் WFP குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய உணவுப் பொதிகளை வழங்கி, அவர்களின் மாதாந்த உணவுத் தேவைகளில் பாதியை இரண்டு மாதங்களுக்குப் பூர்த்தி செய்யும்.

மேலும் இந்த நன்கொடையானது நான்கு மாத காலத்திற்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கொள்வனவு மூலம் திரிபோஷா போன்ற வலுவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும், இது ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகளவு பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

“இந்த முக்கிய தருணத்தில் இலங்கைக்கு மேலதிக மனிதநேய உதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை அறிவிப்பதில் நாம் மகிழ்வு கொள்கின்றோம். கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து ஜப்பான் அரசாங்கத்தால் WFP மூலம் உணவு உதவியானது மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. 

நாடு முழுவதும் முடிந்த அளவு மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசிய உணவு வழங்கப்படும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.”என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மைதங்கிய மிகொசி ஹிதேகி தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பின்மை இன்னும் அதிக அளவில் இருப்பதாக WFP இன் அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

 ஒவ்வொரு 10 குடும்பங்களிலும் ஏழு பேர், புரதம் மற்றும் பால் போன்ற சத்தான உணவைக் குறைப்பது அல்லது உணவை முற்றிலுமாகத் தவிர்ப்பது போன்ற எதிர்மறையான சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதாக அது தெரிவிக்கின்றது.

“பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களும் குழந்தைகளுமே எங்களின் மிகப் பெரிய கவலையாகும்” என WFP இலங்கையின் பிரதிநிதியும் நாட்டுப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்திக்கி கூறினார்.

“ பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்தைப் பெறும் வகையில் எங்கள் முயற்சிகளை அளவிடுவதற்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.ரூஙரழவ் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜப்பான் நாடானது இலங்கை அரசாங்கத்திற்கும் றுகுPக்கும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீண்டகாலமாக நன்கொடை அளித்து வருகிறது, அவசரநிலைகளில் முக்கியமான உதவிகளை வழங்குகிறது. அதே நேரத்தில் நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால மீட்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. 

ஜப்பானின் சமீபத்திய நிதியுதவியானது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்காக இலங்கை மக்களுக்கு அதன் ஆதரவின் விரிவாக்கமாகும்.

WFPஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது அவசரச் செயல்பாட்டைத் தொடங்கியதில் இருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவி மூலம் 3.4 மில்லியன் மக்களை அடையும் இலக்கை நெருங்கி வருகிறது.

https://www.virakesari.lk/article/150107

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் 1.8 மில்லியன் டொலர் நன்கொடை !

 

japan-sri-lanka-flag.jpg

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறார்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக UNICEF நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ஆரம்பமான பொருளாதார நெருக்கடியின் முதற்கட்டத்திலிருந்து, இதுவரை 3.8 மில்லியன் டொலருக்கும் அதிகமான நன்கொடைகளை ஜப்பான் அரசாங்கம் UNICEF ஊடாக இலங்கைக்கு வழங்கியுள்ளது.

https://thinakkural.lk/article/245147

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.