Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை - அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை - அரசாங்கம்

Published By: VISHNU

14 MAR, 2023 | 03:53 PM
image

 

(எம்.மனோசித்ரா)

அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடங்கும் துறைகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள துறைகளைச் சேர்ந்தோர் இன்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும் , மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (14) புதன்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,

கடந்த வாரமும் நாடு முற்றாக முடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்த போதிலும் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

அரசாங்கம் பெரும்பாடுபட்டு தடையின்றி மின் விநியோகத்தை வழங்கியுள்ளது. எரிபொருள், எரிவாயு என்பன தட்டுப்பாடின்றி வழங்கப்படுகின்றன. 

இதற்காக எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களால் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி இலங்கைக்கு நீடித்த கடன் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இடமளித்து விடக் கூடாது என்பதற்காக அரசாங்கத்தினால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமான போக்குவரத்து , துறைமுகம் , தபால் , மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய நாட்டின் பொது சட்டத்தை மீறினால் அது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எவை என்பது தொடர்பில் , சட்டம் மீறப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும். சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/150502

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி இலங்கைக்கு நீடித்த கடன் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் கடன், பதவியை இலக்காகக்கொண்டே இருபக்கமும் நகர்கிறது. கண்ணீர்ப்புகை, தடியடி வெளியில் கண்டனம். இது வெளியில் தெரியாத ஆனால் உடலை வதைக்கும் காயம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முழுவதும் வேலை நிறுத்தம் செய்த ஊழியர்கள் - என்ன காரணம்?

இலங்கை, போராட்டம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அசாதாரணமானவை என தெரிவித்து ஒரு நாள் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அசாதாரணமான முறையில் வரி அதிகரிக்கப்பட்டமை, மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமை, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறைக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களுக்கு எதிராகவே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினால் இந்த பணிப் பகிஷ்கரிப்பு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுமார் 40திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.

அரச மருத்துவர்கள், விசேட மருத்துவ நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலிய கூட்டுதாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், கல்வி, நில அளவை திணைக்களம், வருமான வரி, துறைமுகம், நீர் வழங்கல், ரயில்வே உள்ளிட்ட 40திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

 

அரசு மற்றும் தனியார் துறையினரும் இதற்கு ஆதரவு வழங்கினர்.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கடந்த காலங்களில் அடிக்கடி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டன.

நாட்டின் பல்வேறு துறைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் சேவை தொழிற்சங்கம் நேற்றிரவு முதல் பணி பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், இன்றைய தினம் குறிப்பிட்டளவு ரயில் சேவைகள் இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களத்தை மேற்கோள்காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழமை போன்று கடமைகளில் ஈடுபட்டு வருவதை காண முடிகின்றது.அத்துடன், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த இரு தினங்களாக பகுதி பகுதியாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் நாடு முழுவதும் பணி பகிஷ்கரிப்பை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்றது. தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காமையினாலேயே தாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், இணை ஊடகப் பேச்சாளருமான டொக்டர் வாசன் ரத்னசிங்கம் தெரிவிக்கின்றார்.

தமது போராட்டம் காரணமாக நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமையானது, தமக்கு கவலையளிக்கின்ற போதிலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரிக்கின்றமையினாலேயே இந்த தீர்மானத்தை எட்டியதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை, போராட்டம்
 
படக்குறிப்பு,

வாசன் ரத்னசிங்கம்

மக்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் டாக்டர் வாசன் ரத்னசிங்கம் தெரிவிக்கின்றார்.

இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், வரி வசூலிப்பு திருத்தம் தொடர்பான பிரேரணையொன்று தமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த பிரேரணையில் இதுவரை உள்வாங்கப்படாத பல்வேறு சாதகமான விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் இந்த பிரேரணையில் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த பிரேரணை தொடர்பில் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கவனம் செலுத்தவுள்ளதாகவும் டொக்டர் வாசன் ரத்னசிங்கம் தெரிவிக்கின்றார்.

வங்கி சேவைகள் பாதிப்பா?

இலங்கை, போராட்டம்
 
படக்குறிப்பு,

கார்த்திக்

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன வழமை போன்று தமது சேவையை மக்களுக்கு வழங்கி வருவதாக வங்கி முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு அரசு வங்கிகளின் கிளைகள் திறக்கப்பட்டு, மக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

எனினும், தமது பணி பகிஷ்கரிப்பு போராட்டம் வெற்றி பெற்றதாகவும் வங்கி சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உப செயலாளர் கார்த்திக் தெரிவிக்கின்றார்.

பாடசாலை கல்வி நடவடிக்கை?

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்பட்டதாக ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் இணைந்து கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தது.

இதேவேளை, சில பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினத்தில் பாதிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

எரிபொருள் விநியோகம்.

இலங்கை, போராட்டம்

பட மூலாதாரம்,KRISHANTHAN

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒத்துழைக்கும் நோக்கில் எந்த தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை என்று மின்சார சபை காசாளர் சங்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, சாதாரண செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லிட்டர் கொள்ளளவை கொண்ட 300க்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பவுசர்களை விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் எம்.யு. மொஹமட் உறுதிப்படுத்தினார்.

மேலும், இலங்கை காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக கவனயூர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள போதிலும், நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

https://www.bbc.com/tamil/articles/c0xq8pv3604o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடமைக்கு சமுகமளிக்காத அரச உத்தியோகத்தர்களுக்கு மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Published By: T. SARANYA

15 MAR, 2023 | 03:06 PM
image

(எம்.மனோசித்ரா)

 

முறைப்படி விடுமுறையை அறிவிக்காது புதன்கிழமை (15) பணிக்கு சமூகமளிக்காத அனைத்து அரச உத்தியோகத்தர்களினதும் விடுமுறை சம்பளமற்ற விடுமுறை நாளாகவே கருதப்படும் மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல பெர்னாண்டோவினால் அனைத்து அரச திணைக்களங்களின் பிரதானிகளுக்கும் நேற்று செவ்வாய்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் சகல உத்தியோகத்தர்களும் 15ஆம் திகதி பணிக்கு சமுகமளிக்க வேண்டும்.

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுடன் இணையவழி மெய்ந்நிகர் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன் போது ஒவ்வொரு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு சகல ஆணையாளர்களும் தமது நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு இந்த அறிவித்தலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் சகல வலய, மாவட்ட, துணை , பொறியியல் அலுவலகங்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொழில் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சின் கீழ் மாவட்டங்கள் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு உரித்தான சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களது களப்பணிகள் இரத்து செய்யப்படுவதோடு, அவர்கள் அனைவரும் தத்தமது அலுவலகங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/150584

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.