Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!

Published By: VISHNU

15 MAR, 2023 | 06:35 PM
image

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க  கல்முனை மேல்  நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

FAROOK_S__2_.jpg

 

இது குறித்த வழக்கு   கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று விசாரணைக்கு  வந்தபோதே  இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

FAROOK_S__3_.jpg

 

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணைகள் கடந்த 4 ஆண்டுகளாக இடம்பெற்று வந்துள்ளதுடன் குற்ற ஒப்புதல்  வாதப்பிரதிவாதங்கள் பிணை விண்ணப்பம் என தொடர்ச்சியாக  இடம்பெற்று வந்தன.

 

FAROOK_S__7_.jpg

இதன்படி வழக்கானது இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி ஸஹ்ரானின் மனைவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப்  தலைமையில்  சட்டத்தரணிகளான   றிஸ்வான் உவைஸ் அர்சாத் குழுவினர் ஆஜராகி இருந்தனர்.

FAROOK_S__5_.jpg

இன்றைய விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி லாபீர்  நெறிப்படுத்தலுடன்  ஸஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல்வாக்கு மூலம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டு பிரதிவாதியின் சட்டத்தரணிகளினால் நீண்ட நேர சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன.

FAROOK_S__6_.jpg

மேலும்    ஸஹ்ரானின் மனைவிக்கு எதிராக  சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட  வாக்குமூலங்களும் எவ்வாறு எடுக்கப்பட்டது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

தொடர்ந்து பிணைக் கோரிக்கை  மற்றும் ஏன் பிணை வழங்கப்பட வேண்டும் என பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பங்களை சுட்டி காட்டி  சமர்ப்பித்தனர்.

இதன்போது  சுமார் 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயத்தை விசேட காரணியாக ஏற்றுக்கொண்டும் இதர காரணங்களை முன்வைத்தும் பிணை வழங்கப்பட வேண்டும் என  விசேட கோரிக்கையை பிரதிவாதியின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியதை அடுத்து  பிணை கோரிக்கை மன்றில்  ஏற்றுக்கொள்ளப்பட்டு கடும் நிபந்தனைகளுடன் பிணை  வழங்கப்பட்டது.

இதன் போது 25 000 ருபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ருபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி பிரதிவாதி வெளிநாடு செல்லவும் பிணையாளர்கள் வெளிநாடு செல்லவும் தடை  உத்தரவு பிறப்பித்தார்.மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவு  அலுவலகத்தில் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி ஆஜராகி கையொப்பமிடல் வேண்டும் என உத்தரவிட்டார்.

சுமார் 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயத்தை விசேட காரணியாக ஏற்றுக்கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவல சட்டத்தரணி ஹிஜாப் இஸ்புல்லா விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பை மையப்படுத்தி கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி பிணை தொடர்பான அறிவிப்பை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

காலை முதல் மாலை வரை  இராணுவ மேஜர்  ( ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் பிள்ளையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தவர் ) ஒருவரிடம் சாட்சியங்கள்  குறுக்கு விசாரணைகள்  வாக்குமூலங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து  மீண்டும்   நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால்  எதிர்வரும் மே   மாதம் 17, 18 திகதிக்கு  குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது  பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/150630

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு பயம் வந்துவிட்டது...முசுலிம்களுக்குகூதல் விட்டுப் போய் விட்டது...சர்ச் தாக்குதலின் பின் சகரான் தமது இனமல்ல என்றுகூறி அடக்கம் செய்வதற்கே இடம் மறுத்தவர்கள் ...இப்போது வழக்குப்பேச வக்கீலையும் அமர்த்தி பிணையும் எடுக்கிறார்கள்... இனி சகரானுகு சிலையும் வைத்து பூசையும் பண்ணுவார்கள்.... அரசியல் ஆட்டம்தான்..

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியின் மனைவிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின் பிணை

ஈஸ்டர் தாக்குதல்
16 மார்ச் 2023, 05:19 GMT

கிறிஸ்தவர்களை இலங்கு வைத்து 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியா, நான்கு ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவரை, கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (15) பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

 

 

ஹாதியா தொடர்பான வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிணை வழங்கப்பட்டது.

 

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சஹ்ரான் ஹாசிமுடைய தந்தை, தாய், சகோதரர்கள் மற்றும் மனைவி ஹாதியா உள்ளிட்ட குழுவினர் மறைந்திருந்த போது, அவர்களை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றி வளைத்ததால், உயிரை மாய்துக் கொள்ளும் வகையில் அவர்கள் குண்டை வெடிக்கச் செய்தனர்.

26 ஏப்ரல் 2019 அன்று நடந்த அந்த தற்கொலை குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்த போதும், சஹ்ரானின் மனைவி ஹாதியாவும் (அப்போது அவருக்கு 28 வயது) அவரின் பெண் குழந்தை ருசைதா (அப்போது 04 வயது) உயிர் தப்பினர்.

இதனையடுத்து அவர்களை காப்பாற்றிய ராணுவத்தினர், அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் உடல் நிலை தேறிய பின்னர் - பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், சஹ்ரானின் மனைவி ஹாதியா கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் கைப்பட்டார். இந்த நிலையிலேயே ஹாதியாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஹாதியா சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணிகள் நேற்றைய தினம் ஆஜராகினர்.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை அரச சட்டவாதி லாபீர் நெறிப்படுத்தினார்.

ஹாதியா ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் நேற்று மன்றில் ஆட்சேபனைகளை முன்வைத்த அவரின் சட்டத்தரணிகள், நீண்ட நேர சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

மேலும் ஹாதியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் , அவை தொடர்பில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் போன்றவை தொடர்பிலும் அவரின் சட்டத்தரணிகள் கேள்வியெழுப்பினர்.

அதேவேளை இந்த வழக்கில் ஹாதியாவுக்கு பிணை வழங்குமாறு அவரின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் 25 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில், கடுமையான நிபந்தனைகளுடன் அவரை விடுவித்தது.

இருந்தபோதும் ஹாதியா மற்றும் அவருக்கான பிணையாளர்கள் வெளிநாடு செல்லவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன் குற்றப் புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு மாதமும் ஆஜராகி ஹாதியா கையொப்பமிட வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாய்ந்தமருதில் நடந்த தாக்குதல்

2019 ஏப்ரல் 21ஆம் தேதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து - சஹ்ரான் ஹாஸிம் தலைமையிலான பயங்கரவாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். அதனையடுத்து சஹ்ரானின் குடும்பத்தவர்களும் அவரின் குழுவினரும் சாய்ந்தமருது பொலிவேரியன் - சுனாமி வீட்டுத் திட்டத்திலுள்ள வீடொன்றில் ஒளிந்திருந்தனர்.

அப்போது அவர்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட அந்தப் பகுதி மக்கள், பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியமையினை அடுத்து, அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். அதன் காரணமாக அவர்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் வகையில் குண்டை வெடிக்கச் செய்தனர். ஆனாலும் அந்த வீட்டில் இருந்த சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா, சஹ்ரானின் பெண் குழந்தை ருசைதா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த குண்டு வெடிப்பில் சஹ்ரானின் ஆண் குழந்தை (வாசீட்) பலியானமை குறிப்பிடத்தக்கது.

சஹ்ரானின் தந்தை ஹயாத்து முகம்மது ஹாசிம், சஹ்ரானின் தாய் சித்தி உம்மா, சஹ்ரானின் சகோரர் றிழ்வான், அவரின் மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள், சஹ்ரானின் மற்றொரு சகோதரரான ஜெய்னி, அவரின் மனைவி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள், சஹ்ரானின் சகோதரி, அவரின் கணவர், மட்டக்களப்பு சியோன் தேவாலய தற்கொலைத் தாக்குதல்தாரி ஆஸாத் என்பவரின் மனைவி பெரோஸா, தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர் நியாஸ் ஆகியோரும் அடையாளம் காணப்படாத ஒருவரும் சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியாகினர்.

ஈஸ்டர் தாக்குதல்

அந்த சம்பவத்தில், நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி தேவாலய தற்கொலைத் தாக்குதல்தாரி முஹமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி மகேந்திரன் புலஸ்தினி அல்லது சாரா ஜெஸ்மி என்பவரும் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், பின்னர் அவர் அந்த அதன்போது மரணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி ஹாதியா குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயங்களுடன் உயிர் பிழைத்த சஹ்ரானின் பெண் குழந்தை - அவரின் மனைவி ஹாதியாவின் பெற்றோரிடம், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க 2019 செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cerz9z7mxn2o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.