Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடிந்ததை கொடுங்கள்; இன்னும் 3 மாதங்களே உள்ளன - மைத்திரி மக்களிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்ததை கொடுங்கள்; இன்னும் 3 மாதங்களே உள்ளன -  மைத்திரி மக்களிடம் கோரிக்கை

Published By: NANTHINI

27 MAR, 2023 | 09:40 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 10 கோடி நஷ்ட ஈடு செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்ததன் பின்னர் நான் சிறை செல்ல நேரிடுமா என்பது எனக்குத் தெரியாது. 

எனவே, எனக்கான கால அவகாசம் நிறைவடையும் முன் இயன்ற நிதி உதவியை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சஹரானுடன் தொடர்புகளை பேணாமல், குண்டு தாக்குதல்களையும் மேற்கொள்ளாமல் பாரிய தொகையை நஷ்ட ஈடாக செலுத்தும் நிலைமைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் மோசடிகளில் ஈடுபட்டமையின் காரணமாக இலங்கை வங்குரோத்தடைந்த நாடாகியது. 

இவ்வாறு இடம்பெற்ற மோசடிகளின் பிரதிபலனாகவே மக்கள் இன்று துன்பப்படுகின்றனர். மருந்துகள், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றுக்கான பிரதான காரணியும் இதுவேயாகும்.

ஜனநாயகத்தை பாதுகாத்து நாட்டை சிறந்த முறையில் நிர்வகித்துச் சென்ற சந்தர்ப்பத்திலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால் எனக்கும் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இது குறித்த தீர்ப்பில் நான் தவறிழைத்ததாக குறிப்பிடப்படவில்லை. மாறாக, என்னால் நியமிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களால் இழைக்கப்பட்ட பாரதூரமான தவறாலேயே எனக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நான் மோசடி செய்யவில்லை. குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில்லை. நான் சஹரானுடன் தொடர்பினை பேணவும் இல்லை. ஆனால், உறவினர்களிடமும், நலன் விரும்பிகளிடமும் பணத்தை சேகரித்துக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் உங்களால் முடிந்த பணத்தொகையை எனக்கு வழங்குங்கள்.

எனக்கு வழங்கப்பட்ட 6 மாதங்களில் 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. 6 மாதங்கள் நிறைவடைந்ததன் பின்னர் சட்டத்துக்கமைய என்னை சிறையிலடைப்பார்களா? அல்லது நீதிமன்றத்தினால் வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுமா என்பது எனக்குத் தெரியாது. நான் சட்டம் தொடர்பான நிபுணர் அல்ல என்றார்.

https://www.virakesari.lk/article/151544

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.