Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை : 13 சிறுவர்கள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

02 APR, 2023 | 03:50 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ். இருபாலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் இணைந்து முற்றுகையிட்டதில் 13 சிறுவர்கள் இன்று (2) முற்பகல் மீட்கப்பட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம், இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபையொன்றினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே முற்றுகையிடப்பட்டு, 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

அந்த சிறுவர்கள் இல்லத்தில் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு உரியவாறு உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சிறுவர்கள் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

https://www.virakesari.lk/article/151957

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இருபாலை சிறுவர் இல்ல விவகாரம் - மூவர் விளக்கமறியலில்!

Published By: VISHNU

04 APR, 2023 | 02:57 PM
image

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் சிறுவர் இல்லம் ஒன்றினை நடத்தியமை மற்றும் அங்கிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த சிறுவர் இல்லத்தில் துன்புறுத்தல்களை தாங்க முடியவில்லை என மூன்று சிறுமிகள் இல்லத்தில் இருந்து தப்பியோடி இருந்தனர். 

அது தொடர்பில் தகவல்கள் வெளியாகிய நிலையில் விசாரணைகளை சிறுவர் நன்னடத்தை பிரிவினர் கோப்பாய் பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்தனர். 

அதன் போது, குறித்த சிறுவர் இல்லமானது, சிறுவர் இல்லத்திற்கான அனுமதிகள் பெறப்படாது நடாத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டதுடன், அங்கு இருந்த 13 சிறுவர்களையும் மீட்டனர். 

மீட்கப்பட்ட சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , சிறுவர்களிடம் கடுமையான வேலைகளை வாங்கியமை, உடல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டமை, உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தியமை, கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளாக்கியமை உள்ளிட்ட விடயங்கள் தெரிய வந்துள்ளன. 

அதனை அடுத்து மீட்கப்பட்ட சிறுவர்கள் 13 பேர் மற்றும் ,சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் மீட்கப்பட்ட 03 சிறுவர்களாக 16 சிறுவர்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி வைத்திய அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை , சிறுவர் இல்ல, முகாமையாளர், இல்ல காப்பாளர் மற்றும் சமையலாளர்  ஆகிய மூவரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

அதேவேளை கடந்த வடமாகாண சபை ஆட்சி காலத்தின் போது , வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான தங்குமிடம் என பதிவு செய்யப்பட்டு, சிறுவர் இல்லமாக நடாத்தப்பட்டு வந்துள்ளது. சிறுவர் இல்லத்திற்கான அனுமதிகள் எவையும் பெறப்படவில்லை. 

இதேபோன்று மற்றுமொரு சிறுவர் இல்லம் குறித்த இல்லத்திற்கு அருகில் நடாத்தப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அத்துடன் குறித்த சபையின் கீழான இரு சிறுவர் இல்லம் கிளிநொச்சியில் நடாத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. 

குறித்த சிறுவர் இல்லங்களுக்கான அனுமதிகள் உரிய முறையில் பெறப்பட்டு உள்ளனவா? அங்குள்ள சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனரா ? போன்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/152086

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் இல்லத்தில் போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம் ; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

kugenApril 8, 2023
 
73aa750d-0e1bf36d-child-abuse-1_850x460_acf_cropped.jpg

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரினால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

இருபாலை பகுதியில் சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுவர்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த  மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்களிடம் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

விசாரணைகளின் போது , தாம் தவறு இழைத்தால் பிளாஸ்ரிக் பைப் ஒன்றில் மண்ணை நிரப்பி அதனால் அடிப்பார்கள் என சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தாம் இல்லத்தில் துன்புறுத்தப்படுவது தொடர்பில் கல்வி கற்கும் பாடசாலை ஆசிரியர்கள் பலரிடம் முறையிட்ட போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காது எமது இல்ல போதகரிடம் நாம் கூறியவற்றை கூறி விடுவார்கள். 

அதனால் நாம் ஆசிரியர்களிடம் முறையிட்டமைக்காக மீண்டும் இல்லத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோம் என சிறுவர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர் 

அதேவேளை சிறுவர் இல்லத்தில் இருந்த 80 வயதான தலைமை போதகர் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கியத்துடன் , பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளார். 

இதனையடுத்து தலைமை போதகரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சம்பவத்துடன் தொடர்புடைய போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

http://www.battinews.com/2023/04/80.html

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2023 at 06:03, ஏராளன் said:

அதேவேளை கடந்த வடமாகாண சபை ஆட்சி காலத்தின் போது , வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான தங்குமிடம் என பதிவு செய்யப்பட்டு, சிறுவர் இல்லமாக நடாத்தப்பட்டு வந்துள்ளது. சிறுவர் இல்லத்திற்கான அனுமதிகள் எவையும் பெறப்படவில்லை. 

 

பாடசாலை மாணவர்களுக்கான தங்குமிடங்கள் இப்போது பிரபலம் அடைந்து வருகின்றன.  பொருளாதார நெருக்கடி, குடும்ப பிரச்சனைகள் காரணமாக மாணவர்கள்; மிக இளம் வயதுடையோர் தொடக்கம் இங்கு வசிக்கின்றனர். மத மாற்றம் செய்யும் நோக்கிலோ, மூளையை கழுவும் நோக்கிலோ இப்படியான வசிப்பிடங்கள் நடத்தப்படலாம். மத நிறுவனங்கள், மதத்துடன் தொடர்புடைய அமைப்புக்கள் நடத்தும் இவ்வாறான வசிப்பிடங்கள் குறித்து அயலோர், கிராம சேவகர், சிறுவர் கண்காணிப்பு/நலன்புரி அமைப்புக்கள், போலிசார் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2023 at 04:58, ஏராளன் said:

யாழ். இருபாலையில்

என்ன இது நம்ம ஊரிலேயே நடந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தகைமை அற்றவர்கள் கைகளில் நிறுவனங்கள்   நடத்தப்படும்போது  இப்படியான குற்றங்கள் நடக்கின்றன. இதை நடத்த யார் அதிகாரம் 
கொடுத்தது  ? நடத்துபவர்கள் சமயம் அறிந்து தானே  மாற்று சமயத்தவர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். பாவம் சிறார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.