Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – இந்தியா

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்;த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வேந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகளை சந்தித்துள்ளனர்.

புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அவ்விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைவரம் குறித்தும் இப்பிரதிநிதிகள் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்திருந்தனர்.

இந்த சந்திப்பின்போது உயர் ஸ்தானிகரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக்கூறினார் என இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1331035

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்

April 29, 2023

Gopal-Baglay.jpg?resize=800%2C533

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார்.  நேற்றையதினம் ;(28) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைச்   சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை , இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அந்த விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைமை குறித்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் ஆகியோர் இந்த சந்திப்பல்  கலந்து கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


http://globaltamilnews.net/2023/190198/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்

April 29, 2023

Gopal-Baglay.jpg?resize=800%2C533

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார்.  நேற்றையதினம் ;(28) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைச்   சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை , இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அந்த விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைமை குறித்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் ஆகியோர் இந்த சந்திப்பல்  கலந்து கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


http://globaltamilnews.net/2023/190198/

இன்னுமாடாநீங்கள் உயிரோடை இருக்கிறியள்

  • கருத்துக்கள உறவுகள்

முப்பத்தைந்து வருடங்களாக அலுக்காமல் வலியுறுத்துகிறார்களாம். நாம் யாரை நம்புகிறோமோ அவர்கள் எங்கள் எதிரியுடன் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து தங்கள் நலன்களை பெற்றுக்கொள்கிறார்களே தவிர நமது பிரச்சனைகளை நிலுவையில் வைத்துக்கொண்டே இருப்பார்கள். தங்களுக்குள் எங்கள் இயலாமையை, முட்டாள்தனத்தை சொல்லி சிரிப்பார்கள். இவர்களோ தங்களுக்கு தாங்களே ராஜதந்திரிகள் என்று புகழாரம் சூட்டி மகிழ்கிறார்கள் எல்லோரையும் நம்பி ஏமாந்தது போதும், எங்களை அழிக்க அவசரம் காட்டிய சர்வதேசம், எங்கள் பிரச்சனை என்னவென்று ஆராய முன்வரவில்லை, எங்களுக்கான தீர்வை வைக்க தவறியும் விட்டது. சிங்களம் நாங்கள் கள்ளத்தோணி என்று சொல்லிக்கொண்டு எங்கள் காணிகளை அபகரிக்கிறது. எங்கள் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கள் விடுதலை பற்றியோ, பாதுகாப்பு பற்றியோ கவலையற்றவர்களாய் எங்களை விலைபேசுவதிலேயே கவனமாய் இருக்கிறார்கள். ஐ .நா . நடக்கும் கொடுமைகளை தடுக்கவோ தண்டிக்கவோ லாயக்கற்று காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறது. புலம்பெயர் இளையோர் அந்நாடுகளில் உள்ள இளையோருக்கு நம் பிரச்சனைகளை, நிலஅபகரிப்பு, புத்தமதம் சார்ந்தவர்கள் இல்லாத இடத்தில மக்களின் காணிகளை அபகரித்து, அச்சுறுத்தி தேவையற்ற விகாரைகளை அமைத்து இடையூறுகளை ஏற்படுத்துவதை விளக்கி, அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கலாம், தனியார் அமைப்புகள், பொது அமைப்புகள், சட்ட வல்லுநர்கள் அவர்கள்  மூலம் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெறலாம். இலங்கைக்கு உதவி செய்யும் ஸ்தாபனங்களுக்கு உண்மை நிலையை விளக்கலாம், அவர்கள் அளிக்கும் உதவி ஏழை மக்களை சென்றடைவதில்லை மாறாக பொதுமக்களின் நிலங்களில் விகாரைகளை எழுப்பிக்கொண்டு அம்மக்களை அச்சுறுத்தி ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை தடுத்து இராணுவ ஆக்கிரமிப்பை செய்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு விளக்க வேண்டும். சும்மா ஒன்றும் செய்யாதவர்களை புகழ்ந்துகொண்டு, நம்பிக்கொண்டு இருப்பதில் பலனில்லை. காலங்கள் போவதும் நம் இயலாமையையும்,  பயனற்ற நம்பிக்கையையும் அவர்கள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்துவதை நிறுத்தி, நம் பாட்டில் நடக்க ஆரம்பித்தால் நமது ஏமாற்றம் குறையும், நம்மை வைத்து ஆடும் நாடகம் தடைபடும். நாம்  நன்மையடையாவிட்டாலும் கேடு நிகழாது. இதுவரை மற்றவர்களை நம்பி நாம் சாதித்தது என்ன? இழந்ததே அதிகம். எல்லாரையும் உதற வேண்டாம், நம்மால் இயன்றவரை நடக்க முயற்சிப்போம். உதவ விரும்புபவன் உதவுவான், விரும்பாதவன் விலகுவான். எமக்கு உதவாவிட்டால் பரவாயில்லை, எங்களை வைத்து எங்களை சுரண்டி தாம் பயன்பெறுவதையாவது தடுக்கலாம்.முப்பத்தைந்து வருடங்களாக படிக்கவில்லை, இன்னும் அவர்களை கெஞ்சிக்கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது? மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று இவர்கள் விரும்பியிருந்தால் புலிகளை ஏன் எதிர்த்தார்கள்? சரி, புலிகள் அழிக்கப்பட்ட பிற்பாடாவது எமது பிரச்சனையை, தேவையை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்தார்களா? இத்தனை விகாரைகள் எழுந்தனவே கேள்வி கேட்டார்களா? பாராளுமன்றத்தில் கூவி என்ன பிரயோசனம்? எல்லாம் அவர்கள் அறிந்தே செய்கிறார்கள், தங்கள் மொழியறிவை அவர்களுக்கு காட்டுவதால் தமிழனுக்கு என்ன பயன்? சிங்கள மக்களுக்கு சொல்லுங்கள், வெளியுலகுக்கு சொல்லுங்கள், அதை செய்ய மாட்டார்கள். தங்களை பிரபலப்படுத்துவதையும் சம்பாதிப்பதையுமே  செய்கிறார்கள், மக்களைப்பற்றியோ அவர்களது தேவைகள் கவலைகள் பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.