Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலிய மீனவரின் உடல் முதலைக்குள்ளிருந்து மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய மீனவரின் உடல் முதலைக்குள்ளிருந்து மீட்பு

 

03 May, 2023 | 10:12 AM

Published By: Sethu

image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரின் உடல் ஒரு முதலைக்குள்ளிருந்து மீட்கப்பட் டுள்ளது.

65 வயதான கெவின் டார்மோடி எனும் இம்மீனவர் இறுதியாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட பகுதியிலுள்ள  கென்னடிஸ் பென்ட் எனும் இடத்தில் கடந்த சனிக்கிழமை காணப்பட்டார். உவர்நீர் முதலைகள் நிறைந்த பகுதி இது. 

இரு நாட்கள் தேடியும் அவர் கண்டுபிடிக்கப்படாத நிலையில், திங்கட்கிழமை (01) பொலிஸார் இரு பாரிய முதலைகளைக் கொன்று  சோதனையிட்டனர்.  அவற்றில் ஒரு முதலைக்குள் மனித உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த உடல் முறையாக அடையாளம் காணப்படவில்லை. எனினும், மீனவர் கெவின் டார்மோடியை தேடும் நடவடிக்கை சோகத்தில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இவ்விரு முதலைகளும் தலா 4.1 மீற்றர் (13.4அடி) நீளமானவை. கெவின் இறுதியாக காணப்பட்ட இடத்திலிருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில்  வைத்து அம்முதலைகள் சுட்டுக்கொல்லப்பட்டன. 

ஒரு முதலையின் உடலிலிருந்தே மனித உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இரு முதலைகளும் இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.
 

https://www.virakesari.lk/article/154349

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவரின் உடல் முதலையின் வயிற்றுக்குள் கண்டுபிடிப்பு - என்ன நடந்தது?

முதலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் முதலைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் இடத்தில் சனிக்கிழமையன்று மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் மாயமான நிலையில், அவரை ஒரு முதலை விழுங்கியது தெரியவந்துள்ளது.

கெவின் டார்மோடி என்ற அந்த மீனவர், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடபகுதியில் முதலைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் உப்பு நீர் பகுதியான கென்னடிஸ் பெண்டில் சனிக்கிழமையன்று மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர் மாயமான நிலையில் இரண்டு நாட்களாக அவரை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, இரண்டு பெரிய முதலைகளை சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொன்ற போலீசார், அதில் ஒரு முதலையின் வயிற்றுக்குள் மனித உடல் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

அந்த உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், 65 வயதான கெவின் டார்மோடியைத் தேடும் முயற்சிகள் சோகத்தில் முடிவடைந்ததாக போலீசார் அறிவித்துள்ளனர்.

 

கேப் யார்க்கில் வசித்து வந்த டார்மோடி, மிகவும் அனுபவம் வாய்ந்த மீனவர் என்பது மட்டுமல்லாமல், அந்த சமூகத்தினரிடையே நன்கு அறிமுகமான நபராகவும் இருந்தார்.

டார்மோடி காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் (0.9 மைல்) தொலைவில் 4.1 மீட்டர் (13.4 அடி), 2.8 மீட்டர் நீளமுள்ள அந்த முதலைகளை திங்கள் கிழமையன்று போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அவற்றில் ஒரு முதலையின் வயிற்றுக்குள் மட்டும் மனித உடல் இருந்தது என்றாலும், அவரைத் தாக்கும் முயற்சியில் இரண்டு முதலைகளும் கூட்டாக ஈடுபட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

டார்மோடியுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்கள் அவர் தாக்கப்பட்டதைப் பார்க்கவில்லை என்ற போதிலும், அவரது அலறல் சத்தம் கேட்டதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

முதலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"சத்தம் கேட்ட இடத்துக்கு உடனடியாக விரைந்தேன்... ஆனால் அவர் இருந்ததற்கான எந்த அடையாளமும் அங்கே இல்லை. அவரது பொருட்கள் மட்டும் அங்கே இருந்தன. வேறு எதுவும் இல்லை," என அவரது நண்பர் ஜான் பீட்டி, கேப் யார்க் என்ற வாராந்திர ஊடகத்திடம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் வெப்பமான வடபகுதியில் முதலைகள் சாதாரணமாக வசித்து வந்தாலும், மனிதர்களை அவை தாக்கும் சம்பவங்கள் எப்போதாவது தான் நடக்கும். முதலை தாக்குவது குறித்து 1985-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிகழ்வு வரை 13 பேர் மட்டுமே முதலை தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/c841p1gg48yo

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

ஆஸ்திரேலியாவின் வெப்பமான வடபகுதியில் முதலைகள் சாதாரணமாக வசித்து வந்தாலும், மனிதர்களை அவை தாக்கும் சம்பவங்கள் எப்போதாவது தான் நடக்கும்.

அண்மையில் நீலாவணையில் வலை வீசிய மீனவரை தொடைப்பகுதியால் கடித்து குதறியது  இரு நாட் களின் பின்னர் இற்ந்து போனார் , மற்றது சம்மாந்துறையில் ஆற்று ஓரத்த்தின் பொன்னாங்கண்ணி பிடுங்கியவரை பிடித்து இழுத்து சென்று விட்டது என் கண்ணால் கண்டது அந்த இடத்தில் நீர் வற்றுக்காலத்தில் சுமார் 500 முதலைகளுக்கும் மேல் உண்டு 
இவைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி  காசு பார்க்கலாம் அரச முதலைகள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அண்மையில் நீலாவணையில் வலை வீசிய மீனவரை தொடைப்பகுதியால் கடித்து குதறியது  இரு நாட் களின் பின்னர் இற்ந்து போனார் , மற்றது சம்மாந்துறையில் ஆற்று ஓரத்த்தின் பொன்னாங்கண்ணி பிடுங்கியவரை பிடித்து இழுத்து சென்று விட்டது என் கண்ணால் கண்டது அந்த இடத்தில் நீர் வற்றுக்காலத்தில் சுமார் 500 முதலைகளுக்கும் மேல் உண்டு 
இவைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி  காசு பார்க்கலாம் அரச முதலைகள்

குரங்குக்கிற்கு அடுத்து முதலையா? 
சீன தூதரகத்திற்கு தந்தியை போடவா?!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

குரங்குக்கிற்கு அடுத்து முதலையா? 
சீன தூதரகத்திற்கு தந்தியை போடவா?!

போடுங்கள் முதலை இறைச்ச்சி நல்லதாம் 

தற்போது விலங்குகள் அதிகமாகப் பெருகி உள்ளன ஒன்று வேட்டையாடவேண்டும் இல்லையென்றால் வேறு நாடுகளுக்கு வழங்க வேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.