Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் 65 பேர் கொண்ட குழு ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் 65 பேர் கொண்ட குழு ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 65 பேர் அடங்கிய பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இம்மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளவுள்ளது.

இதுகுறித்து முன்னேற்பாட்டுக் குழுவொன்று அடுத்தவார ஆரம்பத்தில் அமெரிக்கா செல்லவுள்ளது என ஆங்கில வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இக்குழுவினர் தங்குதவதற்காக த றிட்ஸ் கால்ட்டன் ஹோட்டலில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு அறைக்கு நாளொன்றுக்கு 2,75,000 வீதம் கட்டணம் செலுத்தப்படவுள்ளது.

இவ்வருடத்திற்கென பிரதிநிதிகள் குழுவானது, ஜனாதிபதி, முதல்ப் பெண்மணி, வெளிவிகார அமைச்சர் ஆகியோரின் தலைமையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாக விருக்கும் பொதுச்சபைக் கூட்டத் தொடரில் இலங்கை சார்பாகக் கலந்துகொள்ள இருப்போரின் மொத்த எண்ணிக்கை சுமார் 85 ஆக இருக்கலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் 50க்கும் அதிகமானோர் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர்களான ரோஹித்த போöகால்லாகம, டக்ளஸ் தேவானந்தா, அனுர பிரியதர்சனயாப்பா மற்றும் சி.பி. ரத்னாயக்க, சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் தலைமை

யிலான குழுவானது வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன மற்றும் லண்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஷேனுக செனவிரட்ன ஆகியோரை உள்ளடக்கவுள்ளது. இதனைவிட வெளிவிவகார அமைச்சின் மூன்று அதிகாரிகளும் இக்குழுவினருடன் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் பல்வேறு பாகங்களிலும் உள்ள சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றியபின் ஜனாதிபதி, நியூயோர்க்கிலுள்ள சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களை அங்குள்ள விகாரையில் சந்திக்கவுள்ளார்.

முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, உலக சமாதான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ""சமாதான செயற்பாடுகள்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள வேறுபட்ட நாடுகளின் தலைவர்கள் உட்பட்ட சில முக்கியஸ்தர்களுக்கு 5000 அமெரிக்க டொலர் கௌரவத் தொகையையும் உலக சமாதான நிறுவனம் வழங்கவுள்ளது. மேலும், ஜனாதிபதி தலைமையிலான இக்குழு ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் நாடு திரும்பும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை வெளிவிவகார அமைச்சர் போகல்லாகம மேலதிக இருவாரங்களுக்கு நியூயோர்க்கில் தங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

-வீரகேசரி

Edited by கந்தப்பு

நியுயோர்கில் விடுமுறைக்கு போகிறார்கள் போலும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாரம் ஜே.வி.பியின் சோமவன்சா அமரவன்சாவும் சிட்னி,மெல்பேர்னுக்கு வருகைதரவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தையொட்டி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் 85-க்கும் மேற்பட்டோர் அடங்கிய சிறிலங்கா குழு அமெரிக்கா செல்ல உள்ளது.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்:

ஐ.நா.விற்கு படையெடுக்கும் மகிந்த

-வேலவன்-

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் தீர்மானம் கொண்டுவர, ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி எடுக்கலாம் என்ற தகவல்களையடுத்து அதனைத் தடுத்து நிறுத்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளது.

ஏற்கனவே சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தலைமை யிலான குழு இது தொடர்பான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

அதேவேளை சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழு இம்மாத இறுதியில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இங்கிருந்து பயணமாகின்றது.

வழமைபோல இந்தக் குழுவிலும் பெருந்தொகையான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். அதாவது கடந்த வருடம் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள 50 பேர் மகிந்தவுடன் சென்றிருந்தனர்.

இம்முறை 65 பேர் அக்குழுவில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்குழு இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழு சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலும் மற்றைய குழு அவரது மனைவி சிராந்தி ராஜபக்ச தலைமையிலும் நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைவிட சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தலைமையில் சென்றுள்ள குழுவும் நியூயோர்க் ஐ.நா. கூட்டத் தொடரில் இணைந்து கொள்வதன் மூலம் அங்கு 85 வரையிலான பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.

முன்னதாக இந்தக் கூட்டத்தொடருக்கு மகிந்த ராஜபக்ச செல்வதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக

இந்த விடயங்களுக்கெல்லாம் காலக்கணிப்பு பதில் சொல்லிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் நல்ல முடிவுகள் எடுக்காமல் பூச்சாண்டி காட்டினால் தமிழ்ச் சமுதாயம் அதனைக்கடந்து செயற்படத் தொடங்கும். சிங்களவனுக்காகச் சாவதற்கு இவர்கள் பெரும்படையை அனுப்பப்போகிறார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.