Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பௌத்த மரபுரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளை தடுக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும் - தேசிய சுதந்திர முன்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

04 MAY, 2023 | 05:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து உரையாடவுள்ளோம் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

எதுல் கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புராதன பௌத்த மரபுரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

இந்தியாவின் இந்துத்துவவாத கொள்கைக்கு ஈர்க்கப்பட்டவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த மரபுரிமைகள் அழிப்பு பணிகளை துரிதமாக முன்னெடுத்து செல்கிறார்கள்.

வவுனியா வெடுக்குநாறி மலையில் பௌத்த மரபுரிமைகளுக்கு முரணான வகையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் சுதேச தமிழர்கள் பௌத்த மதத்துக்கு எதிராக செயற்படவில்லை. தமிழ் அடிப்படைவாதிகளே இந்தியாவின் இந்துத்துவவாத கொள்கைக்கு  அடிபணிந்து  இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் பௌத்த மரபுரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு தரப்பினரை திருப்பதிப்படுத்துவதற்காக பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

பௌத்த மத உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை மக்கள் அனைவருக்கும் உண்டு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிரான முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து உரையாடவுள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/154514

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடு என்றுமே… உருப்படப் போவதில்லை.

முதலில் இந்தப் பிக்குகளுக்கு கடிவாளம் போட வேண்டும். 
அது லேசுப் பட்ட காரியமில்லை என்றாலும்…
சிங்களவர் மூலமாக நடக்க வேண்டும் என்ற நப்பாசை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

Published By: DIGITAL DESK 3

04 MAY, 2023 | 05:37 PM
 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் சுதேச தமிழர்கள் பௌத்த மதத்துக்கு எதிராக செயற்படவில்லை. தமிழ் அடிப்படைவாதிகளே இந்தியாவின் இந்துத்துவவாத கொள்கைக்கு  அடிபணிந்து  இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்.

 

சுதேச தமிழர்கள் யார் என்றும், அடிப்படைவாத தமிழர்கள் யார் என்றும் யாராவது விளக்கம் கொடுக்க முடியுமா? 
இந்தியாவின் இந்துத்வா கொள்கைக்கு அடி பணிந்து என்று சொன்னால் அங்கு சச்சி ஐயா இருந்திருக்க வேண்டுமே? 
இந்த காவாலி சிங்கள இனவாதி எப்படி எப்படி எல்லாமோ கதை கட்டுகிறான். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

நாட்டில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புராதன பௌத்த மரபுரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

ஓ.....இதை மறைக்கத்தான் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு விகாரைகள் எழும்புகின்றனவா? ஆமாம்... நாட்டில் பொருளாதாரம் நலிந்து, மக்கள் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள், வெளிநாடுகளில் பிச்சை எடுத்து வடக்கு கிழக்கு மக்களின் சொந்தக்காணிகளில் திட்டமிட்டு அவர்களின் மதங்களை அழித்து, விகாரை கட்டத்தேவையென்ன? எனது நடு வீட்டில் முற்றம் அமைத்து கட்டினார்கள்  நம் முன்னோர், இப்போ அது எனக்குத்தேவையில்லை, நான் அதை இடித்து எனக்கு விரும்பியவாறு கட்டியுள்ளேன், இது எனது முன்னோரின் காணி, எனக்கு மரபுவழியாக வந்தது, அதை தடுக்க மற்றவருக்கு உரிமையில்லை. இதைக்கூட புரிந்து கொள்ள முடியாதது, எனது காணியில் நான் என்ன செய்யவேண்டும் என கட்டளை போடுது, இதில இது ஜனநாயக நாடு என பிதற்றல் வேறு! எனது காணியில் எனது உரிமையை  மறுத்து இங்கே வந்து கோயில் கட்டுங்கள் என்று அழைப்பது வினோதம். அங்கு மட்டும் பவுத்தம் பாதிக்கப்படாதா? இதில் உள்ள உண்மைக்காரணி என்ன?       

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடமிருந்து மகஜர்

நாட்டில் இடம்பெற்று வரும் இனவாதம் மற்றும் மதவெறி சம்பவங்கள் அங்காங்கே இடம்பெற்று வர வாய்ப்புக்கள் அதிகம் எனவும், இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் வரகாகொட ஸ்ரீநாரதன நாயக்க தேரரினால் ஜனாதிபதியிடம் விசேட மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) கண்டி மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க ஹிமிகளை தரிசிக்க வந்த போதே அஸ்கிரி மகாநாயக்க தேரர் இந்த விசேட செய்தியை கையளித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் உள்ள தனித்துவமான வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரைகளை புனரமைப்பதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு அந்த பணிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மூன்று விடயங்கள் அடங்கிய குறிப்பாணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொல்பொருள் இடங்கள் தொடர்பான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், வெளி தரப்பினர் வழங்கும் உதவிகளை அதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/254861

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொல்பொருள் இடங்கள் தொடர்பான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், வெளி தரப்பினர் வழங்கும் உதவிகளை அதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

வெளிநாடு தருகின்ற காசை… விகாரை கட்ட பயன்படுத்தட்டாம் என்று
பெரிய மகாநாயக்க  தேரர் சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் தோற்றம் பெற்றது, மறைந்தது இந்தியாவில். இப்போ அது அங்கே கைவிடப்பட்டு வழக்கொழிந்து விட்டது. புனரமைக்கப்பட வேண்டிய  வரலாற்று சிறப்புமிக்க விகாரைகள் அங்கேதான் உள்ளன. தோற்றம் பெற்ற இடம் பாதுகாக்க வேண்டிய கடமையுங்கூட. அதை முதலில் தோண்டுங்கள், புனரமையுங்கள், பின்னர் பரவிய இடங்களை புனரமைக்கலாம். இந்தியாவுக்கு போனால் வழிபடுவது இந்து ஆலயங்களில், இங்கு புத்தர் வேணுமாம். அதுசரி இத்தனை நூற்றாண்டுகளா செய்யாத, செய்யத்தோன்றாத புனரமைப்பு இப்போ செய்யக்காரணம் என்ன? அவசரம் என்ன? புத்தரின் போதனையை மிதித்துக்கொண்டு, மக்களை விரட்டி தெருவில் விட்டு, அவர்களின் நிலத்தில் விகாரைகள் எழுப்பி செய்யப்படும் வழிபாடுகள், அந்த புத்தரையும் அவரின் போதனைகளையும் இழிவு படுத்தும் செயல், திருட்டு, அடாவடி. இதை கண்ணுறும் வெளிநாட்டினருக்கு புத்தரின்மேல் வெறுப்பும் அருவருப்புமே தோன்றும்! கடவுள் என்று சொல்வதற்கும் வழிபடுபவதற்கும் அருகதையற்றவர் சிங்கள  புத்தர்! 

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்கிரிய மகா நாயகர்களின் கோரிக்கையை மீறி எதுவுமே செய்யப்படாது. இதுதான் இலங்கையில் எழுதப்படாத சடடம். மீறி செய்தால் அரசியல்வாதிகளுக்கு அதோ கதிதான்.

அதட்காகத்தான் தங்கள் காரியத்தை சாதிப்பதட்காக  முதலில் அங்கெ ஓடிப்போய் காலில் விழுவார்கள். புத்தரின் போதனைகளெல்லாம் ரெண்டாம் பட்ச்சம்தான்.

அதனால்தான் தமிழனுக்கு எதாவது கொடுக்கப்போகிறர்கள் என்றவுடன் வீரவன்ச, கம்மன்பில , வீரசேகரா போன்றோர் முதலில் அங்கு ஓடுவது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2023 at 04:07, ஏராளன் said:

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொல்பொருள் இடங்கள் தொடர்பான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், வெளி தரப்பினர் வழங்கும் உதவிகளை அதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

உதவி வழங்கும் நாடுகள் இஸ்தாபனங்கள் அறியப்படட்டும். இவர்கள் வழங்கும் உதவி மக்களுக்கானதல்ல, இன மத வேற்றுமையை வளர்ப்பதோடு சிறுபான்மையினரை நடுத்தெருவில் விடும் நிகழ்ச்சி நிரலுக்கே பயன்படுகிறது, அதற்கான பொறுப்பை இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்டவர்கள் அறிவிக்கவேண்டும். உள்நாட்டில் கூப்பாடு போடுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.