Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் போராளிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கம்!

Vhg மே 09, 2023
Photo_1683624944678.jpg

விசாரணைகள் என்ற பெயரில் முன்னாள் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், அவர்களின் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு எதிர்வரும் 15ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயமானது, ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளை அரசு இன்னும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டத்திலே பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதனையே காட்டுகின்றது.
Photo_1683624944125.jpg

 

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு ஜனநாயக வழியில் செயற்படுகின்ற அமைப்புகளை மீளவும் அச்சுறுத்தும் வகையிலே அமைந்துள்ளது.

இவ்வாறான இலங்கை அரசின் முடிவுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஒரு இனத்தின் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற நிலையில் ,யுத்தத்தின் பின்னர் பொது வெளிச் செயற்பாடுகளில் ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற போராளிகள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் தொடந்து இவ்வாறான விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்ற விடயம் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

அதிலும் முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியில் ஒரு அரசியற் கட்சியாக அமைக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்காக அழைப்பதென்பது புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் போராளிகள் அனைவரையும் அச்சத்திற்குள்ளாக்கும் விடயமாகும்.

அதிலும், தற்போதைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலப் பகுதியில் இவ்வாறான அநீதியான விசாரணைச் செயற்பாடு ஜனநாயகத்தைச் நேசிக்கும் பலரையும் கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கையாகும்.

யுத்தம் முடிவுற்ற காலப்பகுதியில் இருந்து ஜனநாயக வழியிலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தரப்புகளை இலங்கையின் பயங்கரவாதப் பிரிவு விசாரணைக்கு அழைப்பது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒன்று.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, சிறிலங்கா இராணுவம் ஏனைய புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக போராளிகளின் வீடுகளுக்குச் செல்வதும், விசாரணை என்ற பெயரில் அழைப்பதும் ஒரு சுமூகமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போராளிகள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்துகின்றது.

இந்த வகையில் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையிலும், அதிபரின் பொது மன்னிப்பின் அடிப்படையிலும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகளை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாட்டை ஜனநாயக ரீதியாக நாங்கள் வன்மையகக் கண்டிக்கின்றோம்.

இது போராளிகளின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது.

இவ்வாறான விசாரணைகள் மூலம் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், ஜனநாயக ரீதியில் அவர்களின் செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.

ஏனெனில் எமது மக்களுக்கானதும், போராளிகளுக்குமான ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்தே வருவோம்.

எனவே விசாரணைகள் என்ற பெயரில் இது போன்ற அச்சுறுத்தல்களை இலங்கை அரசு உடன் நிறுத்துக் கொள்ள வேண்டும்” - என்று தெரிவித்தார்.

 

https://www.battinatham.com/2023/05/blog-post_77.html

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் போராளிகள் குறித்து  தவறாக நான் குறிவாக எழுதுவதாக கருத வேண்டாம்.

இந்தப் போராளிகளைப் பயன் படுத்தி இந்தியா சில செயல்களை வடக்கில் செய்யக்கூடும் என்று ஒரு செய்தி ஒன்று சில மாதங்களின் முன் உலவியது அல்லவா? இலங்கை அரசு அவ்வாறு ஒன்று நடை பெற இருப்பதை அறிந்து கொண்டு விட்டதோ என்னவோ? 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு புலிகளுடனான யுத்தத்தில் தோற்றுவிட்டது என்பதே உண்மை. அது தோற்கடித்திருந்தால், உண்மையாகவே அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து இயல்பான வாழ்க்கைக்கு அவர்களை திரும்ப விட்டிருந்தால், தமிழருக்கு இங்கு ஒரு பிரச்சனையுமில்லை என்பது உண்மையானால், அவர்களை பின்தொடரவோ, அச்சுறுத்தவோ, கைது செய்யவோ, இராணுவத்தை நிலை நிறுத்தவோ தேவையில்லை. அதற்கு தெரியும், எதற்காக தமிழரை ஆயுதம் ஏந்த வற்புறுத்தியதோ அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை, ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பதோடு மட்டுமல்ல மீண்டும் தூண்டுகிறது. போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம், பிரச்சனைகளை தீர்த்துவிட்டோம் என்று சர்வதேசத்தை ஏமாற்றுவதோடு புலிகள்  உருவாகுகிறார்கள் என்றும் ஏமாற்றுகிறது. புலிகள் உருவாகுகிறார்கள் என்று குற்றம் சாட்டினால்; நீங்கள் தமிழரின் பிரச்சனைகளை தீர்க்கவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள், அதை நினைத்து பயப்படுகிறீர்கள் என்று எடுத்துச்சொல்ல யாருக்கும் முதுகெலும்பு இல்லை.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.