Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சியம் நிகாய பௌத்த வழிபாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடையினை ஏற்படுத்தினால் கடும் தண்டனை வழங்க நேரிடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sarath-weerasekara.jpg

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள சியம் நிகாய பௌத்த வழிபாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடையினை ஏற்படுத்தினால் கடும் தண்டனை வழங்க நேரிடும் என்று ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையைக் காட்டி தூபி சின்னத்தை சுட்டிக்காட்டி, அந்த திணைக்களம் பௌத்த மதத்திற்காக மாத்திரமா செயற்படுகிறது என்று வினவியிருந்தார். அதற்கு பதிலளித்த சரத் வீரசேகர, தொல்பொருள் திணைக்களத்தின் தூபி சின்னத்தை மாற்ற முடியாது. ஏனெனில், இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்து, அதனை கோவிலாக திரிபுபடுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் நேற்று (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

திணைக்களத்தின் சின்னத்தை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையாக தூபி காணப்படுகிறது. ஏனெனில், இலங்கை ஒரு பௌத்த நாடு. ஆகவே, எக்காரணங்களுக்காகவும் தொல்பொருள் சின்னத்தை மாற்றியமைக்கப் போவதில்லை. புராதன தொல்பொருள்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல இனங்களுக்கும் உண்டு. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. ஆகவே, நாட்டு மக்கள் அனைவரும் புராதன தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை அமைத்து கோயிலை கட்டுவது முறையற்றது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் பேசும் மக்களை யுத்த பகடைக்காயாக பயன்படுத்தி செயற்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட தமிழ் பிரிவினை அரசியல்வாதிகள் கொழும்பில் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். தமிழ் மக்கள் தொடர்பில் அப்போது கரிசனை கொள்ளவில்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவர்கள் தமிழர்களின் நலன் விரும்பிகள் போல் கருத்துரைக்கிறார்கள்.

சுமந்திரன் உட்பட பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த சின்னங்களை அழிக்க ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, வெறுப்பு பேச்சுக்களை வடக்கில் குறிப்பிட்டுவிட்டு கொழும்பில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால் இவ்வாறானவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பிற நாடுகளில் இவ்வாறு செயற்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

பௌத்த மதத்தின் மேன்மை பொருந்திய சியம் நிகாயவின் 270ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பான மத அனுஷ்டானமாக இடம்பெறவுள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இது முறையற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத அனுஷ்டானத்துக்கு கூட்டமைப்பினர் தடை ஏற்படுத்தினால் பாரிய அழிவுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதை கூட்டமைப்பினர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/253311

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இங்குள்ள நிலைமை. அவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தமுண்டு. எந்தக் கட்சி வந்தாலும் எதிர்க்கட்சியில்  உள்ளவர்  மீது  பழியைபோட்டொவிட்டு  தப்பித்துக்கொள்வது. இனவாதிகளுக்கு சிங்கள மக்களின் ஆதரவு பெருமளவில் உண்டு. அதுதான் உண்மை. எனவே தமிழனுக்கு பெரிதாக எதுவும்கிடைத்துவிடப்போவதில்லை. தமிழ் தலைவர்கள்(?) பேச்சுவார்த்தைக்கு போனாலும் ஒன்றுதான் போகவிடடாலும் ஒன்றுதான். போனாலும் குறை சொல்லுவார்கள். போகாவிடடாலும் குறை சொல்லுவார்கள். இதுதான் யதார்த்தம்.  

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையைக் காட்டி தூபி சின்னத்தை சுட்டிக்காட்டி, அந்த திணைக்களம் பௌத்த மதத்திற்காக மாத்திரமா செயற்படுகிறது என்று வினவியிருந்தார்

 

14 hours ago, ஏராளன் said:

தொல்பொருள் திணைக்களத்தின் தூபி சின்னத்தை மாற்ற முடியாது. ஏனெனில், இலங்கை சிங்கள பௌத்த நாடு

சுமந்திரன் என்ன கேட்க்கிறார் இவர் என்ன சொல்கிறார்?

14 hours ago, ஏராளன் said:

பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை அமைத்து கோயிலை கட்டுவது முறையற்றது.

இது எப்போ நடந்தது? அப்போ, ஏன் அதை தடுக்க சரத் முன்வரவில்லை? சரத்துக்கு தன்னின வரலாறே தெரியவில்லை, இதில் தமிழர் வரலாறு எங்கே புரியப்போகிறது? அன்றிருந்த தமிழர், அசோகன் மகள் கொண்டுவந்த புத்தத்தை ஆதரித்து பின்பற்றினர், பின்னர் அதைகைவிட்டு தமது பாரம்பரிய சைவத்துக்கு மாறி அதை  பின்பற்றினர். அவர்களது பூர்வீக நிலத்தில் தாம் விரும்பியதை ஏற்கவும், கைவிடவும், இடிக்கவும் கட்டவும் அவர்களுக்கு உரிமை உண்டு. சிங்கள பவுத்தத்தில் அது இல்லாததற்கு நாம் என்ன செய்ய முடியும்?

14 hours ago, ஏராளன் said:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் பேசும் மக்களை யுத்த பகடைக்காயாக பயன்படுத்தி செயற்பட்டபோது

இது இந்த சர்வாதிகாரியின் நம்பிக்கை. ஒரு மதத்தை ஆக்கிரமிப்பாக குறிப்பிடும் இவர், விடுதலைபுலிகளைப்பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது?

14 hours ago, ஏராளன் said:

இலங்கை சிங்கள பௌத்த நாடு

இவரை இப்படிப்பேச வைத்த,எங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்ட பிரித்தானியாவே இவரின் இந்தக்கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவவேண்டாம் - உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக சுமந்திரனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

Published By: NANTHINI

14 MAY, 2023 | 12:36 PM
image

 

(நா.தனுஜா)

திருகோணமலையில் கோயில் அமைந்துள்ள மற்றும் இந்துக்கள் செறிந்து வாழும் பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

கண்டி, அஸ்கிரிய பீடத்தின் ஏற்பாட்டுக்கு அமைய தாய்லாந்திலிருந்து வரும் 40 பௌத்த தேரர்கள் அடங்கிய குழு திருகோணமலை நெல்சன் தியேட்டருக்கு முன்பாக இருக்கும் நிலத்தில் புத்தர் சிலையொன்றை கொண்டுவந்து வைத்து, பிரித் ஓதி, அங்கிருந்து கண்டிக்குப் பாத யாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இந்துக் கோயிலான வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்குச் சொந்தமான காணி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று சனிக்கிழமை (13) காலை இதுகுறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது குறித்த பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என்றும் வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் பிரித் ஓதும் நிகழ்வில் ஈடுபடவேண்டாம் என்றும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திருப்தியளிக்கிறதா என்று வினவியபோது அதற்கு பதிலளித்த சுமந்திரன், 

"காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வரவேற்கத்தக்கது எனும்போதிலும் அது உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை அடிப்படையாகக் கொண்டே இவ்விடயத்தில் இப்பேச்சுவார்த்தை பயனுள்ளதா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். 

ஏனெனில், கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட இதனையொத்த உத்தரவுகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதுடன், அவை உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை. எனவே, தற்போது காணி விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால், அவ்விடயத்தில் மாத்திரம் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதாக கருதமுடியும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், நாளைய தினம் (15) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையில், ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்படும் என்றும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த இரண்டாம் நாள் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ள நிலையில், அச்சந்திப்பு நாளைய தினம் (15)மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/155234

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்படும் என்றும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும்

இலங்கைத்தீவிலே தமிழினத்தினது சாபக்கேடே தொலைநோக்கும் பொதுநலநோக்கில் நிகழ்நிலைச்சூழலை கையாளமுடியாத தமிழர்தரப்புத் தலைமைகளே. வெறுமனே சிறீலங்காவையும் இந்திய அரசவிசுவாசத்தையும் பேணியவாறு தமினத்தைக் கரையேற்றநினைப்பது'மண்குதிரையை நம்பி ஆற்றில் இறக்(ங்)குவதற்கு ஒப்பானது' என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை நகர இறங்குதுறையில் வந்திறங்கிய தாய்லாந்து பௌத்த தேரர்கள்! 

Published By: NANTHINI

15 MAY, 2023 | 10:30 AM
image

 

தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருட பூர்த்தியை நினைவுகூரும் நோக்கில் திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பாத யாத்திரையை முன்னெடுக்கும் முகமாக தாய்லாந்தில் இருந்து வருகைதந்த பௌத்த தேரர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை இயந்திரப்படகுகள் மூலமாக திருகோணமலை நகர இறங்குதுறையில் வந்திறங்கினர். 

இதன்போது பெளத்த தேரர்களை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட நதில்லோ பஞ்ஞாலோகோ தேரர் மற்றும் குழுவினர் வரவேற்பதை படங்களில் காணலாம்.

IMG_9817.JPG

IMG_9829.JPG

IMG_9834.JPG

https://www.virakesari.lk/article/155282

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.