Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடன் மறுசீரமைப்பு என்பது ஒரு சத்திர சிகிச்சையை போன்றது; ஒரே முறையில் சரியாக செய்து முடிப்பது அவசியம் - பொருளியல் நிபுணர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

14 MAY, 2023 | 02:28 PM
image

 

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக தேசிய கடன்களை மறுசீரமைப்பது மிகக் கடினமான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள பொருளியல் நிபுணர்கள், இருப்பினும் கடன் மறுசீரமைப்பு என்பது ஒரு சத்திர சிகிச்சையை போன்றது என்றும், அதனை ஒரே முறையில் சரியாக செய்து முடிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்திட்டத்தின் கீழ், சுமார் 3 பில்லியன் டொலர் கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் எட்டப்பட்ட நிலையில், கடன் மறுசீரமைப்பு குறித்த செயற்றிட்டத்தை ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இருப்பினும், எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று அச்செயற்றிட்டம் கடந்த மாதம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் கடன் மறுசீரமைப்புச் செயற்றிட்டம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தேசிய கடன் மறுசீரமைப்பு என நோக்குகையில், மத்திய அரசாங்கத்தின் ஊடாக தேசிய சந்தையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களையே இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் தேசிய கடன்களாக கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன, இருப்பினும் மத்திய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் கடன்கள், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்கள், மத்திய வங்கி உள்ளடங்கலாக அரச வங்கிகள் பெற்ற கடன்கள், அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் சமூக பாதுகாப்பு நிதியங்களுக்காக பெறப்பட்ட கடன்கள் மற்றும் அரசாங்கத்தின் பரிந்துரைக்கு அமைய தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் என அனைத்தையும் அரச கடன்களாகவே கருதவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி, அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டுள்ள தேசிய வருமானத்துக்கும் உண்மையான வருமானத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாகவும், இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேசிய கடன்களை மறுசீரமைப்பது கடினமான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடன் மறுசீரமைப்பை ஒரு சத்திர சிகிச்சையுடன் ஒப்பிட்டுக் காண்பித்துள்ள அட்வகாட்டா அமைப்பின் பொருளியல் ஆய்வாளர் கனிஷ்க வேரவில, "உயிரை காப்பதற்கு சத்திர சிகிச்சை இன்றியமையாதது என்பதுடன் அதனை ஒரே தடவையில் சரியாகச் செய்துமுடிக்கலாம் எனும்போதுதான் நாம் அந்தத் தெரிவுக்குச் செல்வோம். அதேபோன்றுதான் கடன் மறுசீரமைப்பின்றி பொருளாதார ரீதியில் முன்நோக்கிப் பயணிக்க முடியாது என்பதுடன் அதனை ஒரே முறையில் சீராக செய்யமுடியும் எனும்போது அத்தெரிவுக்கு செல்லவேண்டும்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தற்போது நாம் தேசிய மற்றும் சர்வதேச கடன்களை மறுசீரமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில், அதனை மீண்டும் மீண்டும் பல முறை செய்யமுடியாது என்றும் ஒரே தடவையில் உரியவாறு மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

https://www.virakesari.lk/article/155244

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கடன் சீரமைப்பை விட மிக  அவசரம் ரணில் அரசின் இனவாத நாடகங்கள் முடிவுரை  சிங்கள அரசுக்கெதிரான சிங்கள மக்களின் எதிர்ப்பை மடைமாற்றம் செய்வதுக்கு வடகிழக்கு புத்தர் காணி பிடித்தல் என்று இனவாத விஷம் இருக்கும் வரையில் அந்த தீவுக்கு விமோசனம் கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கடன் சத்திர சிகிச்சையில் இங்குள்ள மக்கள் தப்பி பிழைப்பார்களோ தெரியவில்லை. சத்திர சிகிச்சை முடிவில்தான் நிலைமை தெரியும். 

ஆனால் தமிழனுக்கு உரிமை கொடுக்க கூடாது என்பதில் இவர்கள் (சிங்கள இனவாதிகள்) உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளத் தவறினால் உயர்வான பணவீக்கத்துக்கு முகங்கொடுக்க நேரிடும் - வெரிட்டே ரிசேர்ச்

Published By: NANTHINI

20 MAY, 2023 | 07:58 PM
image

 

(நா.தனுஜா)

லங்கை மிகவும் ஆழமான கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு தவறும் பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் எதிர்பாராத வகையில் மிகவும் உயர்வான பணவீக்க நிலைமைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். இது வட்டி வீதங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் கடன் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும் என்று வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு எச்சரித்துள்ளது.

நீடிக்கப்பட்ட நிதி உதவிச் செயற்றிட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அந்த நிதியை முழுமையாக பெற்றுக்கொள்வதற்குரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. 

இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மீள்செலுத்துகை நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஸ்திரத்தன்மை குறித்த மதிப்பீட்டின் பிரகாரம், கடந்த 2022ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128 சதவீதமாக காணப்பட்ட கடன்களின் அளவு 2028ஆம் ஆண்டில் 101.3 சதவீதத்தினால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதேபோன்று 2022 - 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வட்டிவீதமானது 2.5 அடிப்படைப் புள்ளிகளால் வீழ்ச்சியடையும் என்றும், இவ்வாண்டின் இறுதியில் வட்டி வீதப் பெறுமதி கடந்த 2019ஆம் ஆண்டில் காணப்பட்டதையொத்த நிலையை அடையும் என்றும் மேற்குறிப்பிட்ட மதிப்பீட்டில் எதிர்வுகூறப்பட்டிருப்பதாக வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போது இலங்கை 100 கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டியிருப்பதாகவும், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் 25 கடப்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும், அதன் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு, அவற்றில் 10 கடப்பாடுகள் குறித்த தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படாததன் காரணமாக அவற்றின் வெற்றிகரமானதன்மை குறித்து மதிப்பீடு செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஸ்திரத்தன்மை குறித்த மதிப்பீட்டின்படி, மூன்று வருடங்களுக்குள் நாட்டின் அரச கடன்களின் அளவு கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னர் காணப்பட்ட நிலையை அடையும் என்றும், கடந்த ஆண்டு 9.7 சதவீதமாக காணப்பட்ட பொதுக் கடன்களுக்கான வட்டிவீதம் 2028ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. 

அத்தோடு, இலங்கை மிகவும் ஆழமான கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு தவறும் பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் எதிர்பாராத வகையில் மிகவும் உயர்வான பணவீக்க நிலைமைகளுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படும் என்றும், இது வட்டி வீதங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் கடன் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும் என்றும் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு எச்சரித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/155750

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஒக்டோபருக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பு !

ranil-4.jpg

கடன் மறுசீரமைப்பு தொடர்பில், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுசெய்ய விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்த நாட்டின் ஊடகமொன்றுக்கு நேற்று கருத்து வெளியிட்டபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம், பாதீட்டை முன்வைப்பதற்கு முன்னர் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதில் அனைவரும் இணைய வேண்டும் எனத் தாங்கள் முன்மொழிவதாக ஜனாதிபதி கூறியுள்ளதுடன், சீனாவும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் ஜப்பானிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/255747

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

 

கடன் மறுசீரமைப்பு தொடர்பில், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுசெய்ய விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

அவர் விரும்புவது இருக்கட்டும். எப்படி என்பதுதான் இன்னும் பிரச்சினையாக இருக்கிறது. சீன இன்னும் முழுமையான பங்களிப்பை வழங்கவில்லை. உள்நாட்டு கடன் சீரமைப்பு இன்னும் முடிக்கப்படவில்லை. இப்படி இருக்கும்போது அவர் விரும்புவதால் மட்டும் இது நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

அவர் விரும்புவது இருக்கட்டும். எப்படி என்பதுதான் இன்னும் பிரச்சினையாக இருக்கிறது. சீன இன்னும் முழுமையான பங்களிப்பை வழங்கவில்லை. உள்நாட்டு கடன் சீரமைப்பு இன்னும் முடிக்கப்படவில்லை. இப்படி இருக்கும்போது அவர் விரும்புவதால் மட்டும் இது நடக்காது.

அவருக்கும்… இது, நடக்காது என்று தெரிந்திருக்கும். 😂
ஆனாலும், ஜனாதிபதி தேர்தல் வரையாவது… 
வாயால் வடை சுட்டுக் கொண்டு இருக்க வேணுமே. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்ச்சியை சந்திக்குமா இலங்கை ரூபாவின் பெறுமதி? வெளியான முக்கிய அறிவிப்பு! | Will The Value Of The Sri Lankan Rupee Fall

வீழ்ச்சியை சந்திக்குமா இலங்கை ரூபாவின் பெறுமதி? வெளியான முக்கிய அறிவிப்பு!

டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ரூபாயை வலுப்படுத்த நாட்டிலிருந்து டொலர்கள் வெளியேறுவதனை தடுப்பது மாத்திரம் தீர்வாகாதென குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்களை தடுத்து வைத்தே ரூபாயினை வலுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் இந்த நிலைமை மாற வேண்டும்.

டொலர் சம்பாதிப்பதற்காக வழியை கண்டுபிடித்து ரூபாயின் பெறமதியை வலுப்படுத்த வேண்டும். தற்போதைய நிலைமை காரணமாக எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகின்றது.

தற்போது ரூபாயின் பெறுமதி வலுவடைவதனை பார்த்து எவ்வித திருப்தியும் அடைய முடியாது. எதிர்வரும் நாட்களில் கடன் செலுத்தவுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இந்நிலையில் டொலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தேவைகள் அதிகமாக உள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் காலங்களில் கடும் நெருக்கடியான நிலைமை ஒன்றை சந்திக்க நேரிடும் அபாயங்கள் அதிகமாக உள்ளது.

இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் அந்தந்த துறைகளினால் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.