Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

கொழும்பில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கொழும்பில் நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அமைச்சரவை ஊடக பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் வகையில் இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

https://athavannews.com/2023/1332580

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் சுழி ? 

🎣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பிள்ளையார் சுழி ? 

🎣

பிள்ளையார் சுழி? என்று எப்படி, எதை... சொல்கிறீர்கள் கபிதன்.
மாவீரர் கல்லறையை  உடைத்தவர்கள், 
தமிழ்ப் பகுதிகளில் மாவீரர் நினைவை கொண்டாட, தடை ஏற்படுத்துபவர்கள்...
கொழும்பில் போராளிகளுக்கும் சேர்த்து, நினைவுச் சின்னம் அமைக்கின்றார்களாம்.
இதை நம்பச் சொல்கிறீர்களா.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

பிள்ளையார் சுழி? என்று எப்படி, எதை... சொல்கிறீர்கள் கபிதன்.
மாவீரர் கல்லறையை  உடைத்தவர்கள், 
தமிழ்ப் பகுதிகளில் மாவீரர் நினைவை கொண்டாட, தடை ஏற்படுத்துபவர்கள்...
கொழும்பில் போராளிகளுக்கும் சேர்த்து, நினைவுச் சின்னம் அமைக்கின்றார்களாம்.
இதை நம்பச் சொல்கிறீர்களா.

கீழே போடப்பட்டுள்ள தூண்டிலைக் கவனிக்கவில்லையோ 😀

அனாலும், இதையெல்லாம் தாண்டித்தான் போகவேண்டும் என்பதுதான் யதார்த்தம். ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

கீழே போடப்பட்டுள்ள தூண்டிலைக் கவனிக்கவில்லையோ 😀

அனாலும், இதையெல்லாம் தாண்டித்தான் போகவேண்டும் என்பதுதான் யதார்த்தம். ☹️

 animiertes-angeln-bild-0022.gif

ஆ... அது தூண்டிலா?
ரொம்ப சின்னனாக இருந்ததால் கவனிக்கவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பிள்ளையார் சுழி? என்று எப்படி, எதை... சொல்கிறீர்கள் கபிதன்.
மாவீரர் கல்லறையை  உடைத்தவர்கள், 
தமிழ்ப் பகுதிகளில் மாவீரர் நினைவை கொண்டாட, தடை ஏற்படுத்துபவர்கள்...
கொழும்பில் போராளிகளுக்கும் சேர்த்து, நினைவுச் சின்னம் அமைக்கின்றார்களாம்.
இதை நம்பச் சொல்கிறீர்களா.

 

11 hours ago, தமிழ் சிறி said:

இதன்படி, ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் வகையில் இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

எங்கள் போராளிகளை எங்கள் மண்ணில் நாங்கள் நினைவு கூரத்தடை, தாங்கள் நினைவுத்தூபி அமைப்பார்களாம். ஏன்? எதற்கு? வெற்றிவிழா கொண்டாடும்போது அவர்களை அவமதிப்பதற்கு. அதையே அடிக்கடி வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை வீரர் என்று காட்ட, அவர் வெற்றிகொண்டவரை அவர் காலடியில் விழுந்து கிடக்க வைப்பர். எங்களை நினைகூர விடாமல் தடுத்ததாகவும் இருக்கும், தாம் கொண்டாடியதாகவும் இருக்கும். புத்தியுள்ள ஜனாதிபதி! முன்னையோர் வெற்றித்தூபிகளை அமைத்தனர் கடன் வாங்கி, இவர் நினைவுத்தூபிகளை அமைக்கட்டும் பிச்சை எடுத்து. ஏற்கெனவே விகாரைகளாலும் ராணுவ முகாம்களாலும் வெற்றித்தூபிகளாலும் வறுமையாலும் ஊழலாலும் கடனாலும் நாடு நிறைந்திருக்கு இது வேறு, இதில தன்னிறைவு காணுவினமாமெல்லே. எதிலே என்று அவர்களுக்கே தெரியாது. இந்த நிலையிலும் நாட்டை கட்டியெழுப்ப தமிழர் வேண்டும் அவர்கள் நிலங்களில் விகாரைகளும் முகாம்களும் வெற்றித்தூபிகளும் அமைத்துக்கொண்டு.          

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

 

 ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் வகையில் இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

https://athavannews.com/2023/1332580

இனி இலங்கை மக்கள் (படையினர், போராளிகள், பொது மக்கள்)எல்லோரும் ஒரே இடத்தில கூடி நினைவு தினத்தை அனுஷ்ட்டிக்கலாம். எவருமே இதனை தடை செய்ய முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.