Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாதும் ஊரே யாவரும் கேளிர்: விஜய் சேதுபதி ஈழத் தமிழ் அகதியாக நடித்திருக்கும் படம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

993523.jpg

யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரை விமர்சனம்.

இலங்கைத் தமிழரான புனிதன் (விஜய் சேதுபதி), லண்டனில் நடக்கும் இசைப் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இருக்கிறார். கொடைக்கானலில் இருக்கும் தேவாலயத்துக்கு வரும் அவர், தன் இசையால் அங்கிருப்பவர்களைக் கவர்கிறார். அங்குள்ள இசைக்குழுவைச் சேர்ந்த மெடில்டா, புனிதனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். இதற்கிடையே கேரட் தோட்டத்தில் வேலைபார்க்கும் இலங்கை அகதியான கனகவள்ளி (கனிகா)யின் தம்பி கிருபாநிதி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடுகிறான். அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி (மகிழ் திருமேனி) தன் தந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்ட கிருபாநிதியைத் தேடிப் பிடித்து கொல்ல முயல்கிறார். புனிதன் யார்? அவனுக்கும் கிருபாநிதிக்கும் என்ன தொடர்பு? லண்டன் இசைப் போட்டியில் பங்கேற்றாரா? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.

இலங்கையில் இருந்து தப்பித்து உடமைகளும் உரிமைகளுமின்றி தமிழகத்தில் தஞ்சமடையும் அகதிகள் எதிர்கொள்ளும் துயரங்களைப் பேச முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். காவல்துறை மற்றும் அரசின் கண்காணிப்பில் இருக்கும் அகதிகளின் இயல்பான நகர்வும் அடிப்படை உரிமைகளும் கூட மறுக்கப்படும் அவல நிலையையும் அவர்களின் அன்றாடப்பாடுகளையும் விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. தங்களுக்கான குடியுரிமை அங்கீகாரத்துக்காக நெடும் போராட்டம் நிகழ்த்த வேண்டியிருப்பதைப் பதிவு செய்திருப்பதும் இந்தப் படத்தின் முக்கிய அம்சம்.

அதே நேரம் மெதுவாக நகரும் காட்சிகளும் பொருத்தமில்லாத கிளைக்கதைகளும் திரைக்கதையைத் தடுமாற வைத்துள்ளன. புனிதனுக்கும் மெடில்டாவுக்குமான காதல், கதை நகர்வுக்குச் சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அக்காட்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நகர்கின்றன. காவல்துறை அதிகாரியின் துரத்தல்கள் பரபரப்பு கூட்டினாலும் இறுதியில் முடித்துவைக்கப்பட்ட விதம் சினிமாத்தனமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் புனிதன் தன் முன்கதையைச் சொல்லும் காட்சிகளும் கனகவள்ளியும் அவனும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன. பிறகு திரைக்கதை மீண்டும் தொய்வடைந்து விடுகிறது.

இறுதிக் காட்சியில், லண்டன் இசைப் போட்டி மேடையில் அகதிகளின் அவலம், அவர்களுக்கான குடியுரிமை, எல்லைகள் கடந்த மனித நேயம் குறித்து புனிதன் பேசும் வசனங்கள் முக்கியமானவை. ஆனால் படம் முடிந்துவிட்டதாகக் கருதி பார்வையாளர்கள் கிளம்ப ஆயத்தமாகும் நிலையில் அவ்வளவு முக்கியமான கருத்துகளைச் சொல்லி இருப்பது உரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

விஜய் சேதுபதி இலங்கைத் தமிழராக அடையாளமற்ற அகதியின் மனநிலையைக் கடத்தியிருக்கிறார். கனிகா உணர்வுபூர்வமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். மெடில்டாவாக மேகா ஆகாஷும் பாதிரியாராக வரும் ராஜேஷ், மறைந்த நடிகர் விவேக் இருவரும் மனதில் பதிகின்றனர். மகிழ் திருமேனி எதிர்மறை வேடத்தில் முத்திரைப் பதிக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை காட்சியின் தாக்கத்தை மேம்படுத்துகிறது. வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் குளுமையையும் அகதி முகாம்களின் நெருக்கடியையும் உணரவைக்கிறது.

இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்வைப் பதிவுசெய்த வகையில் முக்கியத்துவம் பெறும் இந்தப் படைப்பு திரைக்கதைக் கோளாறுகளால் உரிய தாக்கம் ஏற்படுத்தத் தவறுகிறது.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/993523-yaadhum-oore-yaavarum-kelir-movie-review-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாதும் ஊரே யாவரும் கேளிர் - விமர்சனம் {2.5/5} - Yaadhum oore yaavarum kelir  Cinema Movie Review : யாதும் ஊரே யாவரும் கேளிர் - அடையாளத்தைத் தேடி… |  Movie Reviews | Tamil movies| Tamil ...

May be an image of 3 people and text

யாதும் ஊரே யாவரும் கேளிர்
விஜய் சேதுபதி, ஈழத் தமிழ்  அகதியாக நடித்திருக்கும் படம்.
தமிழ்நாட்டில் ஈழ அகதிகளுக்கு உள்ள பிரச்சனைகள் பற்றி குறிப்பாக 
கியூ பிராஞ் பொலிசாரின் நெருக்கடிகள் பற்றி காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
அழுத்தமான கதையின்றி  பிரச்சார நெடி கொஞ்சம் தூக்கலாக உள்ளது.

தோழர் பாலன்

விமர்சன ரீதியிலும், வணிக ரீதியிலும் மிக மோசமாக இப் படம் உள்ளதாக பார்த்த தமிழக நண்பர்கள் சொன்னார்கள். ஒரு ஈழ அகதி, கேரளாவில் அடைக்கலம் இருந்து பல வருடங்களின் பின், தமிழகம் வருகின்றார் என்ற மாதிரி கதையை எழுதியுள்ளார்களாம். ஈழத்தமிழரின் பேச்சு நடை கூட இல்லை என்கின்றனர்.

OTT யில் வந்தபின் பார்க்கலாம் என இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாதும் ஊரே யாவரும் கேளீர் நடித்த பெண் ஜேர்மனியை சேர்ந்தவர். சென்ற கிழமை Frankfurt நகரில் உள்ள தியேட்டரில் உறவினர் மற்றும் தெரிந்தவர்களை அழைத்து இலவசமாக படம் காட்டினார்களாம்.நான் படம் பார்க்கவில்லை :512:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.