Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடா செல்ல முயன்ற பத்து இலங்கையர்கள் புதுடில்லியில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
 
 

இந்திய குடிவரவுகுடியகல்வு துறையினரைஏமாற்றிவிட்டு சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற பத்து இலங்கையர்கள் புதுடில்லி விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகளை ஏமாற்றி இலங்கையர்களை  புதுடில்லி விமானநிலையத்தின் ஊடாக கனடாவிற்கு  அனுப்ப முயன்ற முகவர்களுடன்தொடர்புவைத்திருந்த பத்து இலங்கையர்கள் புதுடில்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 சென்னையில் வசிக்கும் மகேந்திரராஜா என்ற இலங்கையை சேர்ந்த முகவரும்  கைதுசெய்யப்பட்டுள்ளார் என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எய்ரோ நகருக்கு அருகில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களால் தாங்கள் ஏன் புதுடில்லிவந்தோம் என்ற சரியான காரணத்தை தெரிவிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்கான ஆவணங்களை கையளிக்குமாறு கேட்டோம் ஆனால் அவர்களால் அவற்றை காண்பிக்க முடியவில்லை,இதன் பின்னர் சந்தேகம் காரணமாக மேலதிக விசாரணைகளிற்காக அவர்களை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டுவந்தோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் சென்னை விமானநிலையத்திற்கு வாருங்கள் அங்கு ஒருமுகவர்நீங்கள் கனடாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வார் என இலங்கையர்களிற்கு தெரிவிக்கப்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்கள் வெவ்வேறு தினங்களில் சென்னை விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்- மகேந்திரராஜா ஞாயிற்றுக்கிழமை விமானநிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்பின்னர் இவர்களை புதுடில்லியில் பஹர்ஹான்ஜ் பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்து வந்துள்ளனர் என தெரிவித்துள்ள புதுடில்லி பொலிஸார் அன்று ஏதோ பிரச்சினையால் கனடா செல்ல முடியாது உங்கள் ஹோட்டலிற்கு திரும்பி செல்லுங்;கள் என அவர்களிற்கு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

அனைவரும் இந்திய குடிவரவுகுடியகல்வு துறையை  ஏமாற்றி கனடாவிற்கு செல்ல முயன்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடா செல்ல முயன்ற பத்து இலங்கையர்கள் புதுடில்லியில் கைது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாக கைது செய்யப்பட்டும், போகும் வழியில் காணாமலாக்கப்பட்டும், கடலில் சங்கமித்து இருப்பவர்களை கணக்கிட்டால் அங்கு போய் சேர்ந்து இருப்பவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் போல கிடக்குது. களவாய்ப்போய் குடும்பத்தை பிரிந்தவர்கள், குடும்பத்தை இழந்தவர்கள் எதனை பேர். எனக்கு தெரிந்து நிறைய பேர் குடும்ப பிரச்சினைகளால் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஒரு தகுதியுடன் இங்கிருந்து முறைப்படி செல்லலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Cruso said:

இப்படியாக கைது செய்யப்பட்டும், போகும் வழியில் காணாமலாக்கப்பட்டும், கடலில் சங்கமித்து இருப்பவர்களை கணக்கிட்டால் அங்கு போய் சேர்ந்து இருப்பவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் போல கிடக்குது. களவாய்ப்போய் குடும்பத்தை பிரிந்தவர்கள், குடும்பத்தை இழந்தவர்கள் எதனை பேர். எனக்கு தெரிந்து நிறைய பேர் குடும்ப பிரச்சினைகளால் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஒரு தகுதியுடன் இங்கிருந்து முறைப்படி செல்லலாமே.

இந்த தடவை America Green card visa lottry அதிஷ்டத்தில் எங்க ஊரில 5பேருக்கு கிடைத்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

இந்த தடவை America Green card visa lottry அதிஷ்டத்தில் எங்க ஊரில 5பேருக்கு கிடைத்துள்ளது

நல்லது. வாழ்த்துக்கள். இங்கு யாருக்குமே பிரச்சினை இல்லை. குடும்பமாக சந்தோசமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

நல்லது. வாழ்த்துக்கள். இங்கு யாருக்குமே பிரச்சினை இல்லை. குடும்பமாக சந்தோசமாக இருக்கலாம்.

நீங்கள் அமெரிக்காவிலேயா வசிக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

நீங்கள் அமெரிக்காவிலேயா வசிக்கிறீர்கள்?

இல்லை, அமெரிக்காவுக்கு பக்கத்தில். எனக்கு ஒருவர் சொன்ன ஞாபகம் உண்டு, எங்கு வேண்டுமென்றாலும் போங்கள், அமெரிக்காவிட்க்கு மட்டும் போகாதீர்கள் என்று. எமது கலாச்சாரம், ஆன்மீகத்துக்கு ஒத்துவராத ஒரு நாடு,வன்முறைகள் நிறைந்த நாடு என்று  . மற்றயை நாடுகளிடம் ஒப்பிடும் பொது அங்கு நிலைமை அப்படி என்று கூறினார்.

உண்மையை கூறினால், என்னையை பொறுத்த மட்டில் இலங்கையை விட சிறந்த நாடு எதுவும் இருக்க முடியாது. இங்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். இன்னும் இருக்கத்தான் போகின்றது . நான் வெளிநாடு செல்வதாக இருந்தால் இலகுவாக முறைப்படி சென்றிருக்கலாம். இருந்தாலும் போக வில்லை. இது எனது தனிப்படட கருத்து. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.