Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை ரூபாய்க்கு வரவிருக்கும் கடினமான காலங்கள்; ஆய்வாளர்களின் அதிர்ச்சி கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரூபாய்க்கு வரவிருக்கும் கடினமான காலங்கள்; ஆய்வாளர்களின் அதிர்ச்சி கணிப்பு | Tough Times Ahead For The Sri Lankan Rupee

இலங்கை ரூபாய்க்கு வரவிருக்கும் கடினமான காலங்கள்; ஆய்வாளர்களின் அதிர்ச்சி கணிப்பு

இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றமை மற்றும் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களாலே இம் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 290 ரூபாயாகக் காணப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி டிசெம்பர் மாத இறுதிக்குள் 350 ரூபாயாக உயர்ந்து இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதாலும், பிணை முறிச் சந்தையின் வரத்து ஆகியவற்றாலும் இலங்கை நாணயத்தின் ஆதாயம் உலகளவில் வருமானத்தைக் கண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட 2 பில்லியன் டொலர் நிதி வசதி காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதாரம் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் மோசமான நெருக்கடியிலிருந்து மெதுவாக வெளிவருகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://jvpnews.com/article/tough-times-ahead-for-the-sri-lankan-rupee-1685586712

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை ரூபாய்க்கு வரவிருக்கும் கடினமான காலங்கள்; ஆய்வாளர்களின் அதிர்ச்சி கணிப்பு | Tough Times Ahead For The Sri Lankan Rupee

இலங்கை ரூபாய்க்கு வரவிருக்கும் கடினமான காலங்கள்; ஆய்வாளர்களின் அதிர்ச்சி கணிப்பு

இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றமை மற்றும் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களாலே இம் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 290 ரூபாயாகக் காணப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி டிசெம்பர் மாத இறுதிக்குள் 350 ரூபாயாக உயர்ந்து இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதாலும், பிணை முறிச் சந்தையின் வரத்து ஆகியவற்றாலும் இலங்கை நாணயத்தின் ஆதாயம் உலகளவில் வருமானத்தைக் கண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட 2 பில்லியன் டொலர் நிதி வசதி காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதாரம் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் மோசமான நெருக்கடியிலிருந்து மெதுவாக வெளிவருகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://jvpnews.com/article/tough-times-ahead-for-the-sri-lankan-rupee-1685586712

IMF  இன் இறுதியான அறிக்கையின்படி 2028 ஆம் ஆண்டளவில்  இலங்கையின்  ரூபாவின் பெறுமதி ஒரு டொலருக்கு 550 ரூபாயாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

IMF  இன் இறுதியான அறிக்கையின்படி 2028 ஆம் ஆண்டளவில்  இலங்கையின்  ரூபாவின் பெறுமதி ஒரு டொலருக்கு 550 ரூபாயாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. 

இப்பவே… மக்கள் திண்டாடுகிறார்கள்.
2028’ ல் நிலைமை எப்படி இருக்கப் போகுதோ…
சிங்கள மக்கள் இன்னும் ஒரு “அரகலய” போராட்டம் செய்வதற்கும் வாய்ப்புகள் இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

இப்பவே… மக்கள் திண்டாடுகிறார்கள்.
2028’ ல் நிலைமை எப்படி இருக்கப் போகுதோ…
சிங்கள மக்கள் இன்னும் ஒரு “அரகலய” போராட்டம் செய்வதற்கும் வாய்ப்புகள் இல்லையே.

உள்நாட்டு நெருக்கடி உள்நாட்டு கடன் மறு சீரமைப்பின் பின்னர்தான் தெரிய வரும். இப்பவே மக்கள் திடட தொடங்கிவிடடார்கள். வரி செலுத்துவதட்கான கோப்புகளை திறக்கும்படி  கோரியவுடனேயே மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

வெளி நாடுகளில் சம்பளம் கொடுக்குகிறார்கள் வரி செலுத்துகிறார்கள். இங்கு கொடுப்பதோ பிச்சை சம்பளம் அதட்குள் ஒரு வரி எண்டு புலம்பல் தொடக்கி இருக்கிறது.

ஒட்டு கேட்டு வந்தால் செருப்பால அடிப்போம் என்று பேட்டியில் கூறுவதை காண முடிகின்றது. ஆனால் தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறியே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறியே

மஹிந்தவின் ஒரு திட்டம், இனிமேல் நாட்டில் தேர்தல் ஒன்று இல்லாமல் செய்வதாக இருந்தது. ஆனால் ஜோசியத்தை நம்பி கவுண்டு போனார். இவர் அதை நடைமுறைப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எந்த ஆதரவுமில்லாமல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நுழைந்தவர், பலமுறை அவரது காலம் நிறைவேறாமலே வெளியேறியவர், இப்போ நாடு இரு க்கும் நிலையில் இவர் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று  சொல்ல முடியாது. ஆகவே இராணுவ படைகளின் உதவியோடு தேர்தல் இல்லாமல் ஆட்சியை தொடர்ந்தாலும் யார் கேக்கபோறார்கள்? முன்பென்றாலும் ராஜபக்ச கோஷ்ட்டி மக்களை உசுப்பி, குண்டுகளை வெடிக்கச்செய்து கவிழ்ப்பார்கள். இப்போ அப்படி வெளிக்கிட்டால் தாங்களே வலியப்போய் பொறியில் தலையை கொடுத்த மாதிரி ஆகிவிடும்.       

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.