Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வேலூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

05 JUN, 2023 | 04:36 PM
image
 

 யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும்,  இந்தியாவின்  வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் கூட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (5)  காலை இடம்பெற்றது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளான ஶ்ரீ மனோஜ் குமார், ஶ்ரீ நாகராஜன் ராமஸ்சுவாமி மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன், பொறியியல் பீடாதிபதி ஏந்திரி கே. பிரபாகரன், முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஏ.அற்புதராஜா, குடிசார் பொறியியல் துறைத் தலைவர் கலாநிதி பி.கேதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1Q9A9550.jpg

வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் சார்பில், கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பாடசாலையின் (School of computer science and Engineering - SCOPE) பீடாதிபதி  கலாநிதி கே.ரமேஸ் பாபு, பேராசிரியர் பி. சுவர்ணலதா மற்றும் சர்வதேச உறவுகளுக்கான உதவிப் பணிப்பாளர் கலாநிதி ஜே.என்.வி. ரகுராம் ஆகியோர் நிகழ்நிலை வாயிலாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதன் சர்வதேச உறவுகளுக்கான அலகின் ஊடாக சர்வதேச ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இத்தகைய கூட்டு ஆய்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையில் ருகுண பல்கலைக் கழகம் வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் கூட்டு ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இன்று  கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த உடன்படிக்கைக்கமைய இரண்டு தரப்புகளில் இருந்தும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பரிமாற்றம், கல்வி, ஆய்வு நடவடிக்கைகளில் கூட்டு போன்ற விடயங்கள் கவனஞ் செலுத்தப்படவுள்ளன.

https://www.virakesari.lk/article/156992

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோன்றதொரு உடன்படிக்கை ஒன்றை கிளிநொச்சி விவசாயபீடம் சீன அரசாங்கத்துடன் செய்ய முற்பட்டபோது அதனை தடுத்து நிறுத்திய அயோக்கியத்தனமான செயலை எம்மவர்கள் மேற்கொண்டது நினைவிற்கு வருகிறது. 

இந்தியாவிற்கு மட்டும்தான் கழுவுவார்களோ? 

😡

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

இதேபோன்றதொரு உடன்படிக்கை ஒன்றை கிளிநொச்சி விவசாயபீடம் சீன அரசாங்கத்துடன் செய்ய முற்பட்டபோது அதனை தடுத்து நிறுத்திய அயோக்கியத்தனமான செயலை எம்மவர்கள் மேற்கொண்டது நினைவிற்கு வருகிறது. 

இந்தியாவிற்கு மட்டும்தான் கழுவுவார்களோ? 

😡

இந்தியாவை  நம்ப முடியாவிடடாலும், அங்கு ஒரு வெளிப்படை தன்மை காணப்படுகின்றது. அத்துடன் எமது மக்களுக்கு அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனோ  நிலைமை இருக்கின்றது. ஆனால், சீனாவை பொறுத்த வரைக்கும் வெளிப்படை தன்மையற்ற ஒரு நாடு மட்டுமல்ல தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள நாடுமல்ல. அந்த நாடு தமிழர்களுக்கு உதவி செய்யாவிடடாலும் தமிழர்களுக்கு விரோதமாக செயட்படடதயும் மக்கள் மறக்க தயாரில்லை. எனவே சீனா, பலவந்தமாக வடக்கு கிழக்கில் (நல்லதாக இருக்கலாம் ) தலையீடு செய்வதை தவிர்த்து கொண்டால் நல்லது. உலகில் எத்தனையோ மனிதாபிமான நாடுகள் இருக்கும்போது சீனாவை நாட வேண்டிய அவசியம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

இந்தியாவை  நம்ப முடியாவிடடாலும், அங்கு ஒரு வெளிப்படை தன்மை காணப்படுகின்றது. அத்துடன் எமது மக்களுக்கு அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனோ  நிலைமை இருக்கின்றது. ஆனால், சீனாவை பொறுத்த வரைக்கும் வெளிப்படை தன்மையற்ற ஒரு நாடு மட்டுமல்ல தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள நாடுமல்ல. அந்த நாடு தமிழர்களுக்கு உதவி செய்யாவிடடாலும் தமிழர்களுக்கு விரோதமாக செயட்படடதயும் மக்கள் மறக்க தயாரில்லை. எனவே சீனா, பலவந்தமாக வடக்கு கிழக்கில் (நல்லதாக இருக்கலாம் ) தலையீடு செய்வதை தவிர்த்து கொண்டால் நல்லது. உலகில் எத்தனையோ மனிதாபிமான நாடுகள் இருக்கும்போது சீனாவை நாட வேண்டிய அவசியம் இல்லை. 

எங்களை அழித்தது இந்தியாவும் மேற்குலகுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

எங்களை அழித்தது இந்தியாவும் மேற்குலகுமே. 

 

அதை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். அதைத்தான் இவர்கள் வெளிப்படையாக   சிறிதாக செய்தார்கள். சீனாக்காரர்கள் மறைமுகமாக பெரிதாக செய்தார்கள். வெளிப்படை தன்மை இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.