Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களிற்கு தீர்வை வழங்கவேண்டும் - அலிசப்ரியிடம் செஞ்சிலுவை பிரதிநிதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 JUN, 2023 | 09:00 AM
image
 

காணாமல்போனோரின் குடும்பத்தினர்  நீண்டகாலமாக அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/157380

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு கண்டனம் தெரிவித்தவர், இவர்களுக்கு என்ன பதில் சொல்லியிருப்பார்? அசடு வழிந்திருப்பாரோ அல்லது சப்பை கட்டியிருப்பாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது ? - உறவுகளிடம் உடனடியாக உண்மையை கூறவேண்டுமென இலங்கையிடம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தல்

Published By: DIGITAL DESK 3

10 JUN, 2023 | 08:10 PM
image
 

(நா.தனுஜா)

காணாமல்போனோரின் குடும்பத்தினர்  நீண்டகாலமாக அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த வார இறுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இலங்கையில் வாழும் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனோரின் குடும்பத்தினர் அனுபத்துவரும் துன்பத்துக்குத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

 காணமல்போன தமது அன்புக்குரியோருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் துயரத்தை அனுபவித்துவருவது குறித்து கிறிஸ்டின் சிபோல்லா அமைச்சர் அலி சப்ரியிடம் எடுத்துரைத்தார்.

எனவே காணாம்போனோருக்கு என்ன நேர்ந்தது, அவர்களின் விதி என்ன  என்ற பதிலை அவர்களது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தும் செயன்முறை உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

அத்தோடு இச்செயன்முறைக்கு பக்கச்சார்பற்ற நடுநிலையானதும், சுயாதீனமானதுமான மனிதாபிமானக் கட்டமைப்பு என்ற ரீதியில் செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்படக்கூடிய ஒத்துழைப்பு தொடர்பாகவும் அவர் இதன்போது பிரஸ்தாபித்தார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, இது மிகக்கடினமான நீண்ட பயணம் என்று சுட்டிக்காட்டியதுடன், இனங்களுக்கிடையிலான பாலத்தைக் கட்டியெழுப்புவதுடன் கடந்தகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் அதேவேளை அனைத்து இலங்கையர்களும் சுயகௌரவத்துடனும்  பாதுகாப்பாகவும் வாழக்கூடிய எதிர்காலத்தை முன்னிறுத்தி செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பல்லினத்தன்மை என்பது ஓர் பலம் என்றும், அது பின்னடைவாக மாறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/157392

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு இப்படிச்சொல்வது, தமிழர்க்கு எச்சரிக்கை விடுவது, மூட்டி விட்டு வேடிக்கை பாக்க காத்திருப்பது. புத்திசாலித்தனமாக காரியமாற்றுகிறோம் என நினைப்பு. யதார்த்தத்தை மறைக்கும் இவருக்கு இந்தப்பொறுப்பு தகுதியானதா? இலங்கையில் யாருக்கும் அவரவர் வகிக்கும் பதவிக்கான தகுதியோ பொறுப்போ கிடையாது. சரத் வீரசேகர, விமல் வீரவன்சாவுக்கு இது தெரியுமோ? அவர்கள் போகவிட்டு புறம்சொல்லித்திரிவார்கள் திரிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆளிடம் போய் இதைப்பற்றி கதைத்த நேரம் வேறு ஏதாவது பிரயோசமான வேலை செய்திருக்கலாம். அல்லது சரத் வீரசேகரா, விமல் வீரவன்ச போன்றவர்களிடம் பேசி இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.