Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் நடவடிக்கையால் பொலிஸாரின் துன்புறுத்தலுக்கு இலக்கான நபரின் குடும்பத்தினரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. உள்ளிட்ட குழுவினர் சந்தித்தனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

18 JUN, 2023 | 02:03 PM
image
 

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், கிழவன்குளத்தில் கடந்த புதன்கிழமை (14) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்ட நவரத்தினம் நவரூபன் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், நேற்று (17) மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன்  உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசியுள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளத்தில் வசிக்கும் நவரத்தினம் நவரூபன் என்பவரது வீட்டுக்கு கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் 4 விசேட அதிரடிப் படையினரின் துணையுடன் சென்ற 7 வனஜீவராசிகள் திணைக்களத்தினர், நவரூபனை கைதுசெய்துள்ளனர். 

அதன் பின்னர், கைதான நவரூபனை அழைத்துச் சென்று, கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.  

அத்தோடு, அவர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, நீதிமன்றத்தில் முற்படுத்தி, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும் பொலிஸார் முயன்றுள்ளனர். 

எனினும், நவரூபன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பொலிஸாரின் மோசமான சித்திரவதைகளால் படுகாயமடைந்த நவரூபன் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நவரூபனின் குடும்பத்தினரை நேற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று சந்தித்து நவரூபனின் நிலைமை குறித்து கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/157965

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளத்தில் வசிக்கும் நவரத்தினம் நவரூபன் என்பவரது வீட்டுக்கு கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் 4 விசேட அதிரடிப் படையினரின் துணையுடன் சென்ற 7 வனஜீவராசிகள் திணைக்களத்தினர், நவரூபனை கைதுசெய்துள்ளனர். 

காரணம் தெரிவிக்கப்படவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

காரணம் தெரிவிக்கப்படவில்லையே.

தமிழனை கைது செய்வதட்கு காரணம் தேவையா ? அப்படி என்றால் அரசியல் கைதியாக இருப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

அத்தோடு, அவர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, நீதிமன்றத்தில் முற்படுத்தி, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும் பொலிஸார் முயன்றுள்ளனர். 

கைதுக்கு காரணம் தேவையில்லை. நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதானால் காரணம் தேவை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.