Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த முயற்சி - நாமல் ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

19 JUN, 2023 | 06:30 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.ஆகவே குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி உண்மையை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எஹலியகொட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அரசியல் இலாபம் அடைவதை ஒரு தரப்பினர் பிரதான அரசியல் கொள்கையாக கொண்டுள்ளார்கள்.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ராஜபக்ஷர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.ஆகவே குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுப்படுத்தி நாட்டு மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்தப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.

ராஜபக்ஷர்கள் நாட்டை அழித்து ஆட்சிக்கு வரவில்லை நாட்டை பாதுகாத்து ஆட்சிக்கு வந்தார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்களால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

பொருளாதார பாதிப்பை அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள் அரசியல் நெருக்கடியாக்கினார்கள்.ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாட்டை அழிப்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினோம்.

அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம்.ஆகவே தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/158092

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

Published By: VISHNU

19 JUN, 2023 | 06:30 PM
 

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.ஆகவே குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி உண்மையை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

நீங்களும் , உங்கள் ஆட்களும் இப்படியான வேலைகளை செய்ய மாடீர்கள் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது ஒரு அப்படடமான பொய் குற்றசாட்டு. நாங்களும் அதனை நம்பப்போவதில்லை. நீங்கள் எப்படி நேர்மையான , இனவாதமற்ற அரசியல் செய்கிறீர்கள் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

யாரும் இதுவரை இவர்களை குறிப்பிடவில்லை, இவருக்கு மட்டும் அது எப்படித்தெரிந்தது? ஏன் முந்துகிறார்? எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்கிறாரா?

7 hours ago, ஏராளன் said:

ஆகவே குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி உண்மையை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்

அதை உங்கள் ஆட்சிக்காலத்தில் செய்திருக்கலாமே? எத்தனை தடவை, எத்தனை பேர் வற்புறுத்தினார்கள்? ஏன் உங்களால் அது முடியாமற் போனது?

7 hours ago, ஏராளன் said:

ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாட்டை அழிப்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினோம்.

நம்பிற்றோமில்ல! அழிக்க முடியாது என்று உலகம் சொன்ன, உலகிலேயே மோசமான பயங்கரவாதத்தை அழித்து விட்டோம் என்று கூவிய உங்களால், இதை அழிக்க(அடக்க)முடியாமல் போனதேனோ? அவ்வளவு பயங்கரமான பயங்கரவாத செயற்பாட்டை அழித்த ரணில் உங்களைவிட சிறந்தவர் எனலாமா? அல்லது உங்கள் கோர முகத்தை சிங்களவருக்கு காண்பிக்க விரும்பவில்லையோ, இல்லை புலிகளை சிங்கள இராணுவம் அழிக்கவில்லை அவர்கள் பெயரில் பல நாடுகளின்  இராணுவம் அழித்ததை ஒப்புக்கொள்கிறீர்களா? நாட்டில காசைக்கண்டால் உங்களுக்கு கை அரிக்குமென்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இனியென்ன... தொடங்குங்கள் உங்கள் குடைச்சலை! குண்டு வெடிக்குமா? போர் தொடங்குமா? விகாரைகள் இடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.