Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமையாளர் இறந்தது தெரியாமல் 10 வருடமாக ரயில் நிலையத்தில் காத்திருந்த நாய் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஹச்சிகோ

பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகள் பலவும் பலரின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிடும். பலரும் தங்களின் வளர்ப்பு பிராணிகளை குழந்தைகளாக பாவித்து உணர்ச்சிப் பெருக்கோடு வளர்ப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அந்தவகையில் ஹச்சிகோ என்ற ஒரு வளர்ப்பு நாயின் நிஜக்கதை ஏராளமான புத்தகங்கள் தொடங்கி திரைப்படங்கள்-அறிவியல் புனைகதைகள் வரை அனைத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த நாயின் உருவச்சிலையை வெண்கலத்தில் செதுக்கி சிறப்பும் செய்துள்ளனர். இந்த ஹச்சிகோ நாய்க்கு பின்னால் உள்ள கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஹச்சிகோ

1923 ஆம் ஆண்டு, ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த ஹிடெசாபுரோ யுனோ என்ற பேராசிரியர் ஒருவர் `அகிடா’ வகை நாயை வளர்த்து வந்திருக்கிறார். அதற்கு ஹச்சிக்கோ என்று பெயரும் வைத்துள்ளார். பேராசிரியருடன் இந்த நாய் மிக நெருக்கமாகிவிட்டது. தினமும் வேலைக்கு ரயிலில் பயணம் செய்யும் ஹிடெசாபுரோ யுனோவுடன் ஷிபுயா ரயில் நிலையத்திற்குச் ஹச்சிக்கோ சென்று வந்திருக்கிறது. வேலை முடித்து வரும் தனது உரிமையாளரை அழைத்து வருவதற்கு மிகவும் பாசத்துடன் ரயில் நிலையத்திற்கு ஹச்சிகோ சென்று வந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகள் இந்தச் செயலையே செய்து வந்த ஹச்சிகோ வழக்கம்போல பேராசிரியர் யுனோவை வரவேற்க ரயில் நிலையத்திற்குச் சென்றிருக்கிறது. ஆனால் யுனோ வரவில்லை. பேராசிரியர் யுனோ பல்கலைக்கழகத்தில் திடீரென மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். இதை அறியாத ஹச்சிகோ ஒவ்வொரு நாளும் அவரை தேடி ரயில் நிலையத்திற்கு சென்றிருக்கிறது. ரயில் நிலைய ஊழியர்கள் அங்கு தினமும் வந்து கொண்டிருந்த ஹச்சிகோவை விரட்ட முயற்சித்தாலும், தினமும் தனது உரிமையாளரை தேடி சென்றிருக்கிறது.

இந்த பாசத்தை அறிந்த ஜப்பானிய நாளிதழான டோக்கியோ அசாஹி ஷிம்பன், 1932 ஒக்டோபரில் ஹச்சிகோவைப் பற்றி எழுதிய பின்னர் அந்த நாய் நாடு தழுவிய புகழ் பெற்றது.

இந்த பாசத்தை அறிந்த ஜப்பானிய நாளிதழான டோக்கியோ அசாஹி ஷிம்பன், 1932 அக்டோபரில் ஹச்சிகோவைப் பற்றி எழுதிய பின்னர் அந்த நாய் நாடு தழுவிய புகழ் பெற்றது.

1925 முதல் 1935 வரை ஒவ்வொரு நாளும் ஷிபுயா ரயில் நிலையத்திற்கு வந்து தனது உரிமையாளருக்காக காத்திருந்த நன்றியுள்ள இந்த நாயை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். 1923இல் பிறந்த ஹச்சிகோ நவம்பரில் அதன் 100 வயதை எட்ட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/261778

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உண்மைக் கதை திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

HACHI: A DOG'S TALE - Movieguide | Movie Reviews for Christians

  • கருத்துக்கள உறவுகள்

Hachi - சில திரைப்படங்களின் தாக்கம் எம் மனதில் நீண்ட காலத்திற்கு மறையாமல் இருக்கும். அந்த வகைக்குள் இந்தப் படம் அடங்கும். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.