Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

190 போா்க் கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன்

ரஷ்யாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்டன.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.

போரை கைவிட பல நாடுகள் வலியுறுத்தியும் போர் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்தது.

இது குறித்து ரண்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷ்ய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா்” என்று தெரிவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள் மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு திரும்பினர் . ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310917

  • 2 weeks later...
  • Replies 565
  • Views 53.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எல்லாரும் தான் வரி கட்டுகிறார்கள், இதையெல்லாம் சாதனையாகச் சொல்பவர்கள் எங்கள் ஆசியக் குடிகளாக மட்டும் தான் இருப்பரென நினைக்கிறேன்😂. கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் க

  • "ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!"  என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎!  இப்படி ஊர் உலக நிலவர

  • இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣 "ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁 👇 Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict "Once again

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரெய்னின் முக்கிய இரு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல்: ஒருவர் பலி; 40 இற்கும் மேற்பட்டோர் பலி

உக்ரெய்னின் கிவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த ட்ரோன் தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்களை சேதமடைந்துள்ளதாக கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்துள்ளார்.

மேலும் 40 இற்கும் மேட்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வசேத செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் பொதுமக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கிவ் நகரத்தின் மீது இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் தொடர்மாடி குடியிருப்பு மற்றும் பல தனியார் வீடுகளை சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://thinakkural.lk/article/311448

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் குறித்த தனது இலக்குகளை அடையும் நிலையில் ரஸ்யா - புலனாய்வு பிரிவு

11 DEC, 2024 | 07:41 AM
image

ரஸ்யா உக்ரைன் குறித்த தனது இலக்குகளை  அடையும் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளிநாட்டு  புலனாய்வின் தலைவர் சேர்கேய் நரிஸ்கின் தெரிவித்துள்ளார்.

அனைத்து பகுதிகளிலும் மூலோபாயரீதியிலான முன்முயற்சி எங்களிற்கு சாதகமாக உள்ளது, எங்கள் இலக்குகளை அடையும் நிலையில் உள்ளோம் என  தெரிவித்துள்ள அவர் உக்ரைன் படையினர் வீழும் நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவை பொறுத்தவரை உக்ரைன் ஜனாதிபதி தனது நியாயபூர்வ தன்மையையும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான திறiனையும் இழந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யாவின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவின் தலைவரின் கருத்துக்கள் கிரெம்ளினின் சிந்தனைகளை வெளிப்படுத்துபவை என்பது குறிப்பிடத்தக்கது

https://www.virakesari.lk/article/200947

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் ரஸ்ய போர்முனை - வடகொரிய படையினர் உயிருடன் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக கைக்குண்டுகளை வெடிக்கவைத்து மரணிக்கின்றனர்

Published By: RAJEEBAN   29 JAN, 2025 | 02:50 PM

image

ரஸ்ய உக்ரைன் போர்முனையில் ரஸ்யாவின் சார்பில் போரிடும் வடகொரிய படைவீரர்கள் உயிருடன் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக கைக்குண்டுகளை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொள்கின்றனர் என உக்ரைனிய படையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஸ்கைநியுஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடகொரிய படையினர் பெரும் உயிரிழப்புகளை சந்தித்த பின்னர் ரஸ்ய உக்ரைன் முன்னரங்கிலிருந்து தற்காலிகமாக பின்வாங்கியுள்ளனர் என போல தோன்றுவதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் தளபதியொருவர் தெரிவித்தார்.

பல்ஸ் என்ற சங்கேத பெயரை கொண்டுள்ள அந்த தளபதி வடகொரிய போர்வீரர்கள் உக்ரைனிய படையினருடான இரத்தக்களறி மிகுந்த முதல்கட்ட மோதல்களின் போது இழைத்த தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்கின்றனர் அல்லது மேலதிக படையினரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்  என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீண்டும் விரைவில் போர்முனைக்கு திரும்புவார்கள் என இரகசிய தளமொன்றிலிருந்து உக்ரைன் தளபதி  தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் கேர்ஸ்க் போர்முனைக்கு வந்து ரஸ்ய படையினருடன் இணைந்து கொண்டது முதல் வடகொரிய படையினர் எவ்வாறு போரிடுகின்றனர் என்ற தகவல்களை உக்ரைனிய படையினர் வெளியிட்டுள்ளனர்.

உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளதாவது,

ஆளில்லா விமானங்கள் ஆட்டிலறிகளின் ஆபத்தை அறியாத வடகொரிய படையினர் இரண்டாம் உலக யுத்தம் போல சிறியசிறிய குழுக்களாக போரிட்டனர். இதனால் அவர்களை இலகுவாக இலக்குவைக்க முடிந்தது.

மூளைச்சலவைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் உக்ரைன் படையினரின் கடும் தாக்குதலின் மத்தியிலும் முன்னோக்கி நகர முயன்று பெருமளவில் உயிரிழந்தனர், காயமடைந்தனர்.

ரஸ்ய உக்ரைன் போர்முனையில் தாங்கள் போரிடுவதற்கான ஆதாரங்களை அகற்றுவதற்காக வெள்ளை தலைக்கவசம் அணிந்த வடகொரிய போர்வீரர்கள் கொல்லப்பட்ட காயமடைந்த தங்களின் சகாக்களை போர்முனையிலிருந்து அகற்ற முயன்றனர்.

உயிருடன் பிடிபட விரும்பாத வடகொரியா இராணுவத்தினர் காயமடைந்தால் கைக்குண்டுகளை வெடிக்கவைத்து உயிரிழக்கின்றனர், கைக்குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு முன்னர் வடகொரிய ஜனாதிபதியின் பெயரை அவர்கள் உச்சரிப்பதை கேட்க முடிகின்றது.

https://www.virakesari.lk/article/205227

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் போர் எதிரொலி; 3,07,900 இறப்புச் சான்றிதழ்களை தயாரிக்க ரஷ்ய அமைச்சகம் உத்தரவு

உக்ரைன் போர் எதிரொலி; 3,07,900 இறப்புச் சான்றிதழ்களை தயாரிக்க ரஷ்ய அமைச்சகம் உத்தரவு

உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு 3,07,900-க்கும் மேற்பட்ட இறப்புச் சான்றிதழ்களை தயாரிக்க ரஷ்யாவின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போருக்கு முன்னர் இதுபோன்ற ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய கொள்முதல்களின் அளவு படையெடுப்புக்கு முந்தைய நிலைகளை விட மிக அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கு முன்பு, இறந்த வீரர்களின் உறவினர்களுக்கான சான்றிதழ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது. உக்ரைனில் சேவைக்கும் பிற மோதல்களுக்கும் இடையில் பதிவுகள் வேறுபாட்டைக் காட்டவில்லை. இருப்பினும் கொள்முதலில் ஏற்பட்ட அதிகரிப்பு ரஷ்யாவின் போரில் ஏற்பட்ட பாரிய இழப்புகளுடன் ஒத்துப்போகிறது. ரஷ்யா அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும், சுயாதீன மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க இழப்புகளைக் குறிக்கின்றன.

இந்தாண்டு இதுவரை அமைச்சகம், 357,700 சான்றிதழ்களை ஆர்டர் செய்துள்ளது. 3,17,500 முன்னாள் படை வீரர்களுக்கும், 40,200 வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறப்புச் சான்றிதழை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, ஆர்டர்கள் 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன, 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, இறந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு 2,50,000-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும், போர் வீரர்களுக்கு 8,00,000 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதற்கிடையே, உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று புலனாய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனின் இராணுவம், மே 27 நிலவரப்படி படையெடுப்பிலிருந்து கொல்லப்பட்ட அல்லது தீவிரமாக காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை 9,82,840 எனக் காட்டுகிறது. இந்த புள்ளிவிவரங்களில் இறப்புகள் மட்டுமல்ல, காயம் காரணமாக போரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட துருப்புக்களும் அடங்கும்.

https://thinakkural.lk/article/318507

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்தாண்டு இதுவரை அமைச்சகம், 357,700 சான்றிதழ்களை ஆர்டர் செய்துள்ளது. 3,17,500 முன்னாள் படை வீரர்களுக்கும், 40,200 வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறப்புச் சான்றிதழை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, ஆர்டர்கள் 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன, 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, இறந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு 2,50,000-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும், போர் வீரர்களுக்கு 8,00,000 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஆக்கிரமிப்பாளரின் அதீத போர்வெறிக்குப் பலியாவது படைகள் மட்டுமல்ல. படையினரின் குடும்பங்களுமே. ஆனால், ஐந்து பத்தடுக்குப் பாதுகாப்போடு வலம் வரும் அரசுத்தலைமைகளுக்கு இந்த வலிகள் புரியாது. அவர்களுக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமே.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14000 படையினர், 100 கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் பெருமளவு வெடிபொருட்கள் - ரஸ்யாவிற்கு அனுப்பியுள்ளது வடகொரியா - ஐநா குழு

Published By: RAJEEBAN

30 MAY, 2025 | 03:24 PM

image

உக்ரைனின் நகரங்கள் மீது உக்கிர தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ரஸ்ய படையினர் வடகொரியாவின் ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா பிரிட்டன் உட்பட 11 நாடுகள் இடம்பெற்றுள்ள தடைகள் குறித்த ஐநா குழு  தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2023ற்க்கு பின்னர் வடகொரியா ரஸ்யாவிற்கு 20000 கொள்கலன் வெடிமருந்துகளை வழங்கியுள்ளது என தடைகள் குறித்த ஐநா குழு தெரிவித்துள்ளது.

north_korea_arms_russia.jpg

ஆட்டிலறிகள் ஆர்ஜிபிக்களுக்கான 9 மில்லியன் வெடிபொருட்களை வடகொரியா ரஸ்யாவிற்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள இந்த குழுவினர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி ரஸ்யாவும் வடகொரியாவும் தங்களின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கவுள்ளன என தெரிவித்துள்ளது.

உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ரஸ்யாவின் வலுவை அதிகரிப்பதற்கு வடகொரியா உதவியுள்ளது. உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா தாக்குதலை மேற்கொள்வதற்கான வலுவை வடகொரியா அதிகரித்துள்ளது என ஐநா குழு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2023 இல் ரஸ்யாவிற்கு வெடிபொருட்களை அனுப்ப ஆரம்பித்தது முதல் வடகொரியா 100 கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை அனுப்பியுள்ளது என இந்த ஐநா குழு தெரிவித்துள்ளது.

கடல்வழியாகவும் ஆகாயமாக்கமாகவும் புகையிரதத்தின் ஊடாகவும் வடகொரியா இந்த ஆயுதங்களை அனுப்புகின்றது என  ஐநா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/216089

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் தலைநகர் உட்பட பல நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா பாரிய ஆளில்லா விமான, ஏவுகணை தாக்குதல்

07 JUN, 2025 | 09:34 AM

image

உக்ரைன் தலைநகர் உட்பட பல நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமான, ஏவுகணை தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஸ்யாவின் அதிநவீன போர் விமானங்களை உக்ரைன் தாக்கியழித்தமைக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே ரஸ்யா இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

ரஷ்யா குரூஸ் ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்தியது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் தலைநகரையும் உக்ரைனின் மேற்குகில் உள்ள நகரமொன்றையும், வடமேற்கில் உள்ள நகரங்களையும் ரஸ்யா தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் பயங்கரவாத தாக்குதல்களிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள உக்ரைனின் இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டன என தெரிவித்துள்ளது.

மிகவும் துல்லியமாக தாக்ககூடிய நீண்டதூரம் செல்லும் வான் தரை கடல் ஆயுதங்களை பயன்படுத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/216836

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் மீது ரஸ்யா மிகப்பெரும் தாக்குதல்! உக்ரைன் F-16 போர் விமானி பலி

உக்ரைன் மீது 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளைக் கொண்டு ரஸ்யா இன்று மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் குறைந்தது ஆறு மாகாணங்களில் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிகப்பெரும் தாக்குதல்

இதனால் உள்கட்டமைப்புகள் மற்றும் தொழில்துறை தளங்கள் சேதமடைந்துள்ளன.

Russia launches 60 missiles, drones

லிவிவ், பொல்டாவா, மைக்கோலாய்வ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்காசி மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் ஆகிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

வீடுகள், செர்காசியில், பல மாடி கட்டடங்கள் மற்றும் ஒரு கல்லூரி சேதமடைந்ததில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் பகுதியில் ஒரு பெண் காயமடைந்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஒரு உக்ரைனிய F-16 போர் விமானி உயிரிழந்துள்ளார்.

உக்ரேனிய படைகள்

தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், ஏழு வான் இலக்குகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், கடைசி இலக்கைச் சுடும் போது அவரது விமானம் சேதமடைந்து விழுந்து நொறுங்கியதாகவும் உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஸ்யா மிகப்பெரும் தாக்குதல்! உக்ரைன் F-16 போர் விமானி பலி | Russia Launches Biggest Aerial Attack On Ukraine

உக்ரேனிய படைகள் 211 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தன.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உக்ரைனின் வான் பாதுகாப்பை பலப்படுத்த மேற்குலக நாடுகளின் கூடுதல் ஆதரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

https://tamilwin.com/article/russia-launches-biggest-aerial-attack-on-ukraine-1751203457

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேன் விடயத்தில் அமெரிக்கா அடக்கி வாசிக்கின்றது. அது இஸ்ரேல் விடயத்திலும் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது.

அடுத்த அதிர்ச்சி வைத்தியம் உக்ரேனுக்கு என நினைக்கின்றேன். பொதுவாக சொல்லப்போனால் அந்த அதிர்ச்சி வைத்தியம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பெரிய பிரித்தானியாவுக்குமானதாக இருக்கலாம்.

ஆக்கிரமிப்பும் அழிவும் மேற்குலகிற்கு கைவந்த கலை.அதன் விளைவுதான் இன்றைய உலக நிகழ்வுகள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் தலைநகரில் ரஸ்ய உளவாளிகள் இருவர் சுட்டுக்கொலை

14 JUL, 2025 | 01:28 PM

image

உக்ரைன் தலைநகரில் ரஸ்யாவின் இரண்டு உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரி கொல்லப்பட்டதை தொடர்ந்தே ரஸ்யாவின் உளவாளிகள் என கருதப்படும் ஆணும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் புலளாய்வு பிரிவை சேர்ந்த முக்கிய  அதிகாரியான இவான் வொரொனிச் கையடக்க துப்பாக்கி மூலம் பத்தாம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு காரணமான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த இருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைன் தலைநகரில் மறைந்திருந்த இருவரும் மோதல் ஒன்றின் போது கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் எஸ்பியு பாதுகாப்பு சேவையை  சேர்ந்தவர்கள் இவர்களை கைதுசெய்ய முயன்றவேளை இடம்பெற்ற மோதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரகசிய விசாரணைகள் எதிர் உளவுத்துறை நடவடிக்கைகளின் விளைவாக எதிரிகளின் குகை கண்டுபிடிக்கப்பட்டது. உக்ரைனின் பாதுகாப்பு சேவையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை கைதுசெய்யமுயன்றவேளை அவர்கள் அதனை எதிர்த்தனர், இதன் காரணமாக துப்பாக்கிமோதல் இடம்பெற்றது, வில்லன்கள்  அழிக்கப்பட்டனர், உக்ரைனில் மரணம் மாத்திரமே சாத்தியம் என எதிரிக்கு எச்சரிக்க விரும்புகின்றேன் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட உக்ரைன் அதிகாரியை கண்காணிக்குமாறும் அவரின் நாளாந்த நடவடிக்கையை கண்காணிக்குமாறும் கொல்லப்பட்ட இருவருக்கும் அவர்களை வழிநடத்துபவர் உத்தரவிட்டிருந்தார். பின்னர் சைலன்சர் பொருத்தப்பட்ட கைத்துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்தனர் என உக்ரைன் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/219960

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் விசேட படைப்பிரிவினரின் தாக்குதலில் 330 ரஸ்ய படையினர் பலி - 550க்கும் அதிகமானவர்களிற்கு காயம்

06 AUG, 2025 | 02:55 PM

image

உக்ரைனின் விசேட படைப்பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலொன்றில் 330 ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் விசேட படைப்பிரிவான டிமுர் எதிரிகளின் நிலைகளிற்குள் ஊருடுவி மேற்கொண்ட தாக்குதலில் விளாடிமிர் புட்டினின் பெருமளவு படையினரை கொன்றுள்ளனர் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இருதரப்பும் நெருக்கமான கடும்மோதலில் ஈடுபட்டனர் ஆளில்லா விமான ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெற்றன என உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சமி என்ற பகுதியை நோக்கி ரஸ்யாவின் முன்னேற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் இடம்பெற்ற திகதியை உக்ரைன் குறிப்பிடவில்லை எனினும் கடந்த சில வாரங்களாக உக்ரைனின் கடும் தாக்குதலால் ரஸ்யாவின் முன்னேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது என டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் படையினர் தாழப்பறக்கும் ஹெலிக்கொப்டரில் இலக்குகளை நோக்கி செல்வதையும்,காட்டுப்பகுதியில் மோதலில் ஈடுபடுவதையும் காண்பிக்கும் வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது.

ரஸ்ய படையினர் உக்ரைனின் நிலைகளை தாக்க மறுத்துள்ளமை அவர்கள் மத்தியிலான உரையாடல்களை இடைமறித்து கேட்டபோது தெரியவந்துள்ளதுஎன தெரிவித்துள்ள உக்ரைனின் இராணுவ புலனாய்வு பிரிவு 334 ரஸ்ய படையினர் கொல்லப்பட்டனர், 550க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/221934

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய துறைமுகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் - ஈரானிலிருந்து ஆயுதங்களுடன் வந்த கப்பலை இலக்குவைத்தது

15 AUG, 2025 | 12:36 PM

image

ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்களுடன் ரஸ்ய துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் மீதுதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

அஸ்ட் ராகன் பகுதியில் உள்ள ரஸ்ய துறைமுகமான ஒலியாவை தாக்கியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தினை இலக்கு வைத்தே  இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஈரானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்த கப்பல் மீது தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஆயுதங்கள் இராணுவ தளபாடங்கள் வெடிபொருட்கள் விநியோகத்திற்காக இந்த துறைமுகத்தினை  ரஸ்யா பயன்படுத்திவருகின்றது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/222606

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்கிரமான தாக்குதல்; ஒரே இரவில் 574 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பிய ரஷ்யா! 

22 AUG, 2025 | 01:06 PM

image

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேற்று (21) உக்கிர நிலையை அடைந்தது. நேற்றிரவு ரஷ்யா 574 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை அனுப்பி உக்ரைனில் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 15க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அண்ட்ரி சிபிஹா (Andrii Sybiha) குறிப்பிட்டுள்ளார்.  

உக்ரைனின் லிவிவ், முகாசெவோ, டிரான்ஸ்கார்பதியா ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு கட்டடங்கள், தொழிற்சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை நடத்தப்பட்ட உக்ரைன் - ரஷ்யா  தாக்குதல்களில் இதுவே பாரிய தாக்குதல் என உக்ரைன் தெரிவித்துள்ளது. 

1.jpg

உலகில் இயங்கிவரும் இராணுவக் கூட்டமைப்புகளில், மிகவும் பலம் பொருந்தியதும் பழைமையானதுமான இராணுவக் கூட்டமைப்பான “நேட்டோ”வில் இணைவதற்காக உக்ரைன் முயற்சித்து வருகிறது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இதன் விளைவாக, 2022இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் இந்த யுத்தம் தொடர்ந்து வருகிறது. 

உக்ரைன் - ரஷ்யா இடையே நிலவி வரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடனும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எனினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தினம், ஒரே இரவில் 574 டிரோன்கள், 40 ஏவுகணைகளை உக்ரைனுக்கு ரஷ்யா அனுப்பி, மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறது. 

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கும், அதனால் விளைந்த அழிவுகளுக்கும் உக்ரைன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. 

gh.jpg

gw.jpg

h.jpg

44504209-russiya33.webp

80aa5130-7e7e-11f0-9e05-3dbec5559644.jpg

https://www.virakesari.lk/article/223085

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனின் மிகப்பெரிய உளவு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

Published By: Digital Desk 3

29 Aug, 2025 | 03:18 PM

image

உக்ரேன் கடற்படையின் உளவுக் கப்பலான சிம்ஃபெரோபோல் கடற்படை கப்பல்  ட்ரோன் தாக்குதலில்  மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (29) அறிவித்தது.

ரேடியோ, எலக்ட்ரானிக், ரேடார் மற்றும் ஆப்டிகல் உளவுத்துறைக்காக வடிவமைக்கப்பட்ட லகுனா-வகுப்பு, நடுத்தர அளவிலான கப்பல், டானூப் நதியின் டெல்டாவில் தாக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி உக்ரேனின் ஒடெசா பிராந்தியத்தில் உள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை தெரிவித்துள்ளது.

உக்ரேன் அதிகாரிகளும் கப்பல் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர் என உக்ரேன் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கீவ் இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2019 இல் சிம்ஃபெரோபோல் கப்பல் தனது செயல்பாட்டை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உக்ரேன் கடற்படையில் இணைந்தது.

https://www.virakesari.lk/article/223702

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா vs யுக்ரேன்: அதிநவீன ஆயுதங்களை தேடும் போர்க்களத்தில் எதிரியை ஏமாற்றும் 'பழைய தந்திரம்'

ரேடார்கள், கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் போலியாக இருக்கலாம்.

பட மூலாதாரம், Na Chasi

படக்குறிப்பு, ரேடார்கள், கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் போலியாக இருக்கலாம்.

கட்டுரை தகவல்

  • விட்டலி ஷெவ்சென்கோ

  • பிபிசி செய்தியாளர்

  • 7 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்ய போருக்கு ஆதரவான சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவியது. அது யுக்ரேனிய டாங்கிகளை ட்ரோன் மூலம் தாக்கி வெடிக்கச் செய்யும் வீடியோதான் அது.

ஆனால் ரஷ்யா, யுக்ரேன் இடையிலான போர் நாம் காண்பதைப் போல இல்லை.

இந்த வீடியோவிற்குப் பிறகு யுக்ரேன் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் சேதமடைந்த டாங்கியை, ராணுவ வீரர் ஒருவர் சிரித்தபடி காண்பித்து " எனது மர டாங்கியை உடைத்துவிட்டனர்" எனக் கூறுகிறார்.

அங்கிருந்த டாங்கி ரஷ்யாவை குழப்புவதற்காக யுக்ரேன் படைகள் ஏற்பாடு செய்த பலகையால் ஆன ஏமாற்றுவேலை ஆகும்.

எதிரிகளை ஏமாற்றி வெடிபொருட்கள், அவர்களின் நேரம் மற்றும் முயற்சியை வீணாக்குவதற்காக யுக்ரேன் மற்றும் ரஷ்யா என இருநாடுகளும் ஆயிரக்கணக்கான போலி ராணுவ மாதிரிகளை வடிவமத்துள்ளதைப் போலவே இதுவும் ஒரு உத்தியாகும்.

சிறிய ரேடார்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் வீரர்கள் என கிட்டத்தட்ட அங்கிருக்கும் அனைத்தும் போலியாக இருக்கலாம்.

இந்த போலி மாதிரிகள் பெரும்பாலும் தட்டையான பொதிகளாகவோ, ஊதக்கூடிய பலூன் போன்றவையாகவோ, 2D அல்லது ரேடியோ அலைகளை பிரதிபலிப்பதன் மூலம் ஒரு டாங்கியின் ரேடார் மாயை என உருவாக்கப்பட்டிருக்கலாம்.

ஒருவேளை யுக்ரேனில் ஒரு ஆயுதத்தை செலுத்தினால் அதில் பாதிக்கப்படுவதில் பாதி இந்த போலி மாதிரிகளாகவே இருக்கும்.

பலூன் பீரங்கிகள்

M777 ஹோவிட்சர் பீரங்கி மிகவும் பிரபலமானதாகும்.

பட மூலாதாரம், Back and alive

படக்குறிப்பு, M777 ஹோவிட்சர் பீரங்கி மிகவும் பிரபலமானதாகும்.

யுக்ரேன் ராணுவம் பயன்படுத்துவதும் போலிகளிலேயே பிரிட்டிஷ் தயாரித்த M777 ஹோவிட்சர் பீரங்கிதான் மிகவும் பிரபலமானதாகும்.

மேற்கத்திய நட்பு நாடுகள், 150-க்கும் மேற்பட்ட எளிதில் கையாளக்கூடிய பீரங்கிகளை யுக்ரேனுக்கு வழங்கியதாக நம்பப்படுகிறது. இது யுக்ரேனிய வீரர்களால் 'மூன்று கோடாரிகள்' என அழைக்கப்படுகிறது.

யுக்ரேனிய ராணுவம் பயன்படுத்தும் பல ஆயுதங்களைப்போலவே, இந்த போலி மாதிரிகளையும் தன்னார்வலர்கள் தயாரித்துக் கொடுத்து உதவிவருகிறார்கள்.

நா சாஸி (Na Chasi) என்ற தன்னார்வ அமைப்பு மட்டும் யுக்ரேனிய ராணுவத்திற்கு சுமார் 160 மாடல் M777-களை வழங்கியுள்ளதாக ரஸ்லன் க்ளிமென்கோ கூறுகிறார். இவற்றை ஒன்றுசேர்க்க பெரிய கருவிகள் எதுவும் தேவைப்படாது. 2 பேர் சேர்ந்து மூன்றே நிமிடங்களில் இதை தயார் செய்துவிட முடியும் என்பதே இவர்களை மிகவும் பிரபலமாக காட்டுவதாக க்ளிமென்கோ தெரிவித்துள்ளார். "எத்தனை பொருட்களை வழங்குகிறோம் என்பது முக்கியமில்லை. அவையனைத்தும் நல்ல காரியத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன" என அவர் பிபிசியிடம் கூறினார்.

ரியாக்டிவ்னா போஷ்டா என்ற மற்றொரு தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பாவ்லோ நரோஷ்னி, பொதுவாக ஒரே சமயத்தில் 10 முதல் 15 M777 பீரங்கிகளை தயாரிப்போம் என தெரிவித்தார்.

ரியாக்டிவ்னா போஷ்டாவின் மாதிரிகள் பொதுவாக பலகையில் செய்யப்படுகின்றன. இவை 500 முதல் 600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000 முதல் ரூ.52,000 வரை) மதிப்பு கொண்டவை.

ரஷ்யா அடிக்கடி 35,000 டாலர் மதிப்புள்ள லான்செட் காமிகாஸ் (Lancet kamikaze) ட்ரோன்கள் மூலம்தான் குறிவைக்கும். "இப்போது நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்" என நரோஷ்னி கூறுகிறார்.

ட்லோயா என அழைக்கப்படும் அவரின் ஒரு M777 போலி பீரங்கி ஓராண்டுக்கும் மேலாக தரைப்படையில் உழைத்துள்ளது. இது 14 லான்செட் ட்ரோன்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் யுக்ரேன் படைகள் இதை டேப் போட்டு ஒட்டியோ அல்லது ஸ்க்ரூக்களை மாற்றியே மீண்டும் செயல்படுத்துவார்கள் என அவர் கூறினார்.

சக்கரங்களின் தடம் மற்றும் போலி கழிவறைகள்

ரஷ்யாவிடமும் விலையுயர்ந்த மற்றும் பல்வேறு ரகங்களில் போலி மாதிரிகள் உள்ளன.

பட மூலாதாரம், Apate

படக்குறிப்பு, ரஷ்யாவிடமும் விலையுயர்ந்த மற்றும் பல்வேறு ரகங்களில் போலி மாதிரிகள் உள்ளன.

இந்த போலி மாதிரிகள் எப்படி வரிசைப்படுத்தப்படுகின்றன என்பது மிகவும் முக்கியம். எதிரிகளை ஏமாற்றி அவர்களை தாக்குதலை தொடரத் தூண்டுவதற்கு உண்மையான ராணுவ நிலைகளைப் போலவே இருக்கவேண்டும். அதனால் வாகனங்களின் சக்கரங்களின் தடம், கழிவறைகள் போன்றவை அச்சுஅசலாக இருக்கவேண்டும். இதனால் எதிரிகள் மட்டுமல்ல அதிகாரிகளும் கூட சில சமயங்களில் ஏமாந்துவிடுவார்கள்.

இதுபோன்ற மாதிரிகளால் அதிகாரி ஒருவர் ஏமாந்ததற்கான உதாரணமும் எங்களிடம் உள்ளது. அவர் "பீரங்கிகளை வரிசைப்படுத்த யார் உத்தரவிட்டது? M777 பீரங்கிகளை எங்கிருந்து வாங்கினீர்கள்?" எனக் கேட்டதாக யுக்ரேனின் 33வது பிரிக்கப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இவர் இன்னொரு உத்தியையும் குறிப்பிடுகிறார். அது என்னவென்றால் உண்மையான போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட பிறகு உண்மையான பீரங்கிகளை உடனடியாக அகற்றிவிட்டு அதற்கு பதிலாக போலியானதை மாற்றிவிடுவார்களாம்.

"இவர்கள் எதிரிகளை ஏமாற்றி, அவர்களின் விலையுயர்ந்த உபகரணங்களை ஒன்றுமே இல்லாத போலிகளிடம் வீணடையச் செய்வதில் வல்லவர்கள். இதுபோல நமக்கு நிறைய தேவை" என்கிறார்.

ரஷ்யாவிடமும் விலையுயர்ந்த மற்றும் பல்வேறு ரகங்களில் போலி மாதிரிகள் உள்ளன.

ரஷ்யாவின் சமீபத்திய வான்வழி தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் பெரும்பாலானவை மலிவான மாதிரிகள் என யுக்ரேனிய ராணுவம் கூறுகிறது.

"இது இப்போது 50-50 என உள்ளது. 50% உண்மையான ட்ரோன்களும், 50% மாதிரிகளுமாக உள்ளன. "எங்கள் வான் பாதுகாப்புகளை முறியடித்து, விலையுயர்ந்த ஏவுகணையைப் பயன்படுத்தி மலிவான ட்ரோனை சுட்டு வீழ்த்த நம்மை ஏமாற்றுவதே அவர்களின் குறிக்கோள்" என யுக்ரேனிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறுகிறார். சில நேரங்களில், இது பள்ளி மாணவர்களால் ஒன்றாக இணைக்கப்பட்டதைப்போல தோன்றும் ஒரு பலகை மாதிரியாகவும் இருக்கும்.

போரில் போலி மாதிரிகளை வைப்பது ஒன்றும் புதிது கிடையாது.

பட மூலாதாரம், People's Front Novosibirsk

படக்குறிப்பு, போரில் போலி மாதிரிகளை வைப்பது ஒன்றும் புதிது கிடையாது.

இது வானில் இருக்கும்போது, யுக்ரேனிய ரேடார் மூலம் பார்க்கையில் உண்மையான ராணுவ ட்ரோன்களைப் போலவே இருக்கும் என கர்னர் இன்ஹாட் கூறுகிறார்.

ரஸ்பல் என்ற ரஷ்ய நிறுவனம் வான்வழி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பை ஏமாற்றும் வகையில் 2D மாதிரிகளை தயாரிக்கிறது. இது எஞ்சின் வெப்பம், ரேடியோ சிக்னல்கள், வாக்கி-டாக்கி, பிரதிபலிப்பான் என எதிரிகளை ஏமாற்ற அனைத்தையும் போலியாக வடிவமைக்கிறது.

உண்மையில் ராணுவ வீரர்களும் போலியாக வடிவமைக்கப்படுகின்றனர். நோவோசிபிர்ஸ்கில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற மக்களைக் கொண்ட தன்னார்வலர்கள், ராணுவ சீருடை அணிந்திருக்கும் போலி வீரர்களை உருவாக்குகிறார்கள். யுக்ரேனின் வெப்ப கேமராக்களை ஏமாற்ற, மனித உடலின் வெப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஜாக்கெட்டுகளுக்கு அடியில் டம்மிகளின் உடல்களைச் சுற்றி வெப்பமூட்டும் கம்பிகளைச் சுற்றி வைக்கின்றனர்.

ஆனால், போரில் இந்த போலி மாதிரிகளை வைக்கும் யோசனை ஒன்றும் புதிது கிடையாது.

டி-டே (D-Day) சமயத்தில்கூட எதிரிகளை திசைதிருப்புவதற்காக இங்கிலாந்து, ராணுவ படைகள், டாங்கிகள், விமானங்கள் என அனைத்தையும் முழுக்க முழுக்க போலியாக வடிவமைத்திருந்தது.

களத்தின் உண்மையான நிலவரத்தை மறைப்பதற்காக இந்த உத்தி கையாளப்பட்டது. மேலும் எதிரிகளை ஆச்சர்யப்படுத்த நட்பு நாடுகளை ஆயத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ராணுவ தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. உதாரணமாக போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களும் தானியங்கி கருவிகளும் பெரிய கண்டுபிடிப்புகளாக உள்ளன.

ஆனால், என்னதான் புதுப்புது ஆயுதங்களை பயன்படுத்தினாலும், இதுதான் தந்திரமாக உள்ளது. மிகச்சிறிய பொம்மை போன்ற ஒன்று கூட போரில் மிகப்பெரிய பங்காற்ற முடியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly02422gpqo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.