Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதற்கு தீர்மானம் : மோடி உறுதி!

இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வலியுறுத்தியமையை தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.

சட்ட விரோதமான முறையில் அமுல்படுத்தாமல் வைத்திருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை நடத்தவும் இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை ஓரளவுக்கு வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான நகர்வு என தமிழ் தேசிய மக்கள் முன்னையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 13ஆவது திருத்தத்துடன் தொடர்புபடாத வகையில் இந்திய பிரதமர் மோடி முன்வைத்திருப்பாரேயானால் அது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பிரதமர் மோடியின் வலியுறுத்தல் தொடர்பில் திருப்தியடைவில்லை என்றும், மாறாக அவர் தனது கடமையை செய்திருக்கின்றார் என்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் சார்பில் இந்தியாவே கையெழுத்திட்டது என்றும் எனவே, அவை சார்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் தரப்பாக இல்லாமல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா ஆவண செய்ய வேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் இம்முறை வழங்கப்பட்ட வலியுறுத்தல்கள் வெறும் பத்திரிகை செய்திகளாக நின்றுவிடாமல், அவை உரியவாறு நிறைவேற்றப்படுவதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார். நன்றி கேசரி

https://athavannews.com/2023/1341120

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

வெறும் பத்திரிகை செய்திகளாக நின்றுவிடாமல்

இவ்வளவு காலமும் இது தான். இனியும் இது தான். ரனிலின் நடவடிக்கைகள் இவற்றையே காட்டுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

இவ்வளவு காலமும் இது தான். இனியும் இது தான். ரனிலின் நடவடிக்கைகள் இவற்றையே காட்டுகின்றன.

யாழில் பெருமளவிலான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு. 

https://athavannews.com/2023/1341154

#############    ################    #############

எப்போதெல்லாம்... தமிழர்களுக்கு தீர்வு கொடுக்கின்றார்களோ இல்லையோ...
அப்படியான செய்திகள் வரும் போதே..... "தமிழ்ப் பகுதிகளில் ஆயுதம் மீட்பு",
"விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் சிலர் கைது" ... 
போன்ற செய்திகளும், சோடி கட்டிக் கொண்டு வந்து...
சிங்கள இனவாதிகளை, உசார்படுத்த  வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இன்னும்... அரசையும், இந்தியாவையும் நம்பும் தமிழ் தலைமைகள் இருக்கும் வரை,
அவர்கள் காட்டில் மழைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமாடா இந்தியாவை நம்புறீங்க. இவனுக்கள் திருந்தவே மாடடானுகள் போல. சிங்களவனோட பேசி ஏதாவது கிடைத்தால் ஒழிய மற்றதெல்லாம் வேஸ்ட்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.