Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலையகம் 200 : மன்னாரில் நினைவுத்தூபி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையகம் 200 : மன்னாரில் நினைவுத்தூபி !

 

 

news-01-20.jpg

மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக தலைமன்னாரின் நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூறும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

தலைமன்னாரில் ஆரம்பித்துள்ள 252 கிலோமீற்றர் வரையான நடைபயணம், எதிர்வரும் ஒகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையில் நிறைவு பெறவுள்ளது.

பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தமிழகத்தில் இருந்து மலையக மக்கள் அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.

தலைமன்னாரில் தரையிறங்கிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து மாத்தளை வரை கால்நடையாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இதனை நினைவுகூரும் வகையில், மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, சிவில் அமைப்பு என்பன இணைந்து மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த நடைபயணயத்தில் 11 கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 6.15 அளவில், தலைமன்னாரில் ஆரம்பமான நடைபயணம் பேசாலை வரை இன்று இடம்பெறவுள்ளது.

பேசாலை முருகன் ஆலயப் பகுதியில் வைத்து அங்குள்ள மக்களுடன் மலையகம் 200 தொடர்பான உரையாடலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

May be an image of monument and text that says "மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுத் தூபி. தலைமன்னார் 28.07.2023"

May be an image of 7 people and monument

May be an image of text that says "அறிமுகம் Introduction Arduous ArduousJourney Journey දුෂ්කර ගමන கோரமானபயணம் கோரமான பயணம் Snkt LIPTON'S FLAGAR CEYLON K"

May be an image of monument and text that says "'Plantation රාජ්‍ය' 'பெருந்தோட்ட இராஜ்ஜியம்' w)"

https://thinakkural.lk/article/265750

  • கருத்துக்கள உறவுகள்

மலையக தமிழர்கள் இலங்கை வந்து 200 வருடங்கள் பூர்த்தி ஆகிவிட்டால் நினைவு தூபி வைக்கும் அளவிற்கு அந்த நிகழ்வை இத்தருணத்தில் முக்கியத்துவப் படுத்தவேண்டிய அவசியம் என்ன? இவர்கள் கடந்துபோன 100 வருட நினைவை எப்படி முக்கியப்படுத்தினார்கள். அல்லது வரபோகும் 300 வருடங்களை எப்படி நினைவுககூரப் போகிறார்கள்? 

இந்த தூபியை நிறுவியவர்கள் அல்லது இதற்காக உழைப்பவர்கல் என கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள, இதற்கு முன் எங்குமே கேள்விப்படாத  "மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, சிவில் அமைப்பு" என்பன உண்மையாகவே மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளா?.

குறிப்பாக சொல்லப்போனால் இதுபோன்ற செயற்பாடுகள் இலங்கையில் மலையக மக்களின் எதிர்கால அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்க தமக்குத் தாமே குழிதோண்டிக்கொள்ளும் செயலாகத்தான் இருக்கும். 

இதுபோலவே இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும், சிங்கள இனத்தவர் உட்பட, எங்கெங்கு வந்து இறங்கினார்களோ அங்கங்கு தூபிகளை அமைத்து நினைவு கூர்ந்தால் எப்படி இருக்கும்?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.