Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடித்த 38 பேரை பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள் ; அதில் நால்வர் தப்பியோட்டம் - மேலும் இருவர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
06 AUG, 2023 | 04:39 PM
image
 

பாலநாதன் சதீஸ்

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடித்த 38 சிங்கள மொழி பேசும் மீனவர்களையும், அவர்கள் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதனை தொடர்ந்து, 38 பேரில் நால்வர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, மேலும் இருவர் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் சார்ந்து தெரியவருவதாவது, 

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில், வெலிஓயா பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி  மீன்பிடியில் ஈடுபட்டது தொடர்பில் மீனவ சங்கத்தினருக்கும் பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

IMG-20230805-WA0028.jpg

இதனையடுத்து, குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சிங்கள மொழி பேசும் மீனவர்களையும், அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அதனையடுத்து, ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்களில் நான்கு பேர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர், பதிவு செய்யப்பட்ட கிச்சிராபுரம், தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த இருவர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

IMG-20230805-WA0012.jpg

அதனை தொடர்ந்து, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, மீனவர்களிடம் முழு விபரங்களையும் கேட்டறிந்ததோடு, சம்பவம் தொடர்பில் உடனடியாக உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தண்ணிமுறிப்பு நன்னீர் மீன்பிடியால் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை அவ்வப்போது தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20230805-WA0025.jpg

https://www.virakesari.lk/article/161728

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங்கள மீன் திருடர்களின் திருட்டு நடவடிக்கைகளை மக்கள் தான் விழிப்பு குழுக்களை அமைத்து விரட்டியடிக்கவேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர்முறிப்புக் குளமும் பறிபோய்விடும்.    இந்திய கடற்கொள்ளையர்களால் எமது மீன்வளம்  மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்படுகின்றது. அதற்கும் மேலாக இந்த உள்நாட்டுக் கொள்ளையர்களால் எமது தாயக நிலப்பிரதேசங்கள் பறிபோய்விடும் அபாயம் உள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத மீன்பிடி தொழிலாளர்களுக்கு பொலிஸார் உடந்தையா ? - முல்லைத்தீவில் போராட்டம்

07 AUG, 2023 | 02:59 PM
image
 

குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும்  இன்றையதினம்  திங்கட்கிழமை (07) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த  குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை விடுவிக்க கோரி குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று  திங்கட்கிழமை (07) காலை 10.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட குமுழமுனை தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் கஜபாகுபுர , சம்பத்நுவர, ஜனகபுர, கலியாணபுர பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி கடந்த சனிக்கிழமை  (05) அன்று மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மீனவ சங்கத்தினருக்கும், பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

20230807105355_IMG_6848.JPG

இந்நிலையில் குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சிங்கள மொழிபேசும் மீனவர்களையும் , அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்களால் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களில் ஒன்பது பேர் பொதுமக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில். பதிவு செய்யப்பட்ட  ஹிச்சிராபும், குமுழமுனை தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த 17 பேர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பொதுமக்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், அரசியல் பிரமுகர்கள் என  பலரும் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

20230807105008_IMG_6832.JPG

குறித்த போராட்டத்தில் பொலிஸாரிடம் ஒப்படைத்தவர்கள் தப்பி சென்றது எப்படி?, உயிர் போனாலும் உரிமையை விட்டு கொடுக்கோம், தமிழ் தேசத்தில் தமிழருக்கு உரிமை இல்லையா?, எமது வாழ்வாதாரத்தில் கை வைக்காதே, சட்ட பூர்வ தொழிலாளர்களை கைது செய்தது எவ்வாறு, நிறுத்து நிறுத்து பெரும்பான்மையினரின் அத்து மீறலை நிறுத்து, சட்டத்தை மீறி தொழில் செய்வோரை தண்டிக்க யாரும் இல்லையா? அரச அதிகாரிகளே,  தமிழ் பேசும் மீனவர்களின் உடமைகளை நாசமாக்காதே, சட்ட விரோத தொழிலாளருக்கு பொலிஸார் உடந்தையா? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய  பாதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தின் பின்னர் தமிழ் பேசும் மீனவ சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அடங்கிய மகஜர் வாசித்து காட்டியதன் பின்னர் அரசாங்க அதிபர் அ.உமா மகேஸ்வரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.  

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அரசாங்க அதிபர் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி பிரச்சினையை கதைத்ததன் பின்னர் நிரந்தர தீர்வினை பெற்றுத்தர முயற்சி செய்வதாகவும், கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

20230807105151_IMG_6844.JPG

https://www.virakesari.lk/article/161787

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கமே உடந்தையாக இருக்கும்போது சடடம் அங்கு ஒன்றும் செய்யாது. 

Blood is thicker than water

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடி : கைதானவர்களுக்கு விளக்கமறியல்

08 AUG, 2023 | 09:38 PM
image
 

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினத்தவர்களுக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனால் பெரும்பான்மையினத்தை சேர்ந்த 27 பேரையும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்களை விசாரணைக்கென அழைக்கப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்றையதினம் பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மீனவர்களை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

குறித்த சம்பம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

கடந்த (04.08.2023) அன்று தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட குமுழமுனை தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து வந்த  பெரும்பான்மையினர் அத்துமீறி  மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மீனவ சங்கத்தினருக்கும் பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சிங்கள மொழிபேசும் மீனவர்களையும், அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்களால் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களில் ஒன்பது பேர் பொதுமக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட  ஹிச்சிராபுரம், தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த மீனவர்களை விசாரணைக்கு என அழைக்கப்பட்ட நிலையில் 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இதனையடுத்து இன்றையதினம் (08) குறித்த வழக்கு நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்போது இன , மத கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் என பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் தடுப்புகாவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/161908

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.