Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவில் புலிபாய்ந்த கல் என்ற இடத்திலும் குடியேற்ற முயற்சியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

08 AUG, 2023 | 10:36 AM
image
 

முல்லைத்தீவு  நாயற்று பகுதிக்கு  தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில்,

நாயாற்றுக்கு தெற்கே புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் குடியேறி இருக்கும் சிங்கள மீனவர்களுக்கு கடல் தொழிலுக்கான அனுமதி கடல் தொழில் திணைக்களத்தால் வழங்கப்பட போவதாகவும் சிங்கள மீனவர்கள் தொழில் செய்வதற்கான வாடிகள் அமைக்கும் பொருட்கள் குறித்த கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் தமிழ் மீனவர்களால்  முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டதுடன்,  மீனவ பிரதிநிதிகள் சிலரிடம், தொழில் செய்யும் எமது மீனவர்களுடனும் கலந்துரையாடிய போது 150 படகுகள் வரையில் குடும்பங்களாக இங்கே வந்து தொழில் செய்ய இருப்பதாகவும் வாடிகள் அமைப்பதற்கான பொருட்கள் குறித்த இடத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும்,  சில நாட்களுக்கு முன்னர்  இந்த இடங்களை பௌத்தப்பிக்கு ஒருவரும் தனது குழுவினருடனும் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் இது ஒரு குடியேற்ற முயற்சி என தெரிவித்தார்கள்

இதற்கமைய  இன்றையதினம்  முல்லைத்தீவு  மாவட்ட கடற் தொழில் நீரியல் வள உதவி பணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .

குறித்த கலந்துரையாடலின் போது  அவர் வெலிஓயாவில்  இருக்கும் மீனவர்கள் தாம் படகுமூலம் தொழில் செய்யப்போவதாகவும் நான்கு படகுகளுக்கு புலி வாய்ந்த கல் என்ற  இடத்தில் அனுமதி தரும்படி கோரியுள்ளதாகவும் அத்தோடு குறித்த விடயம் தொடர்பாக  கொழும்பில் கடற்தொழில் அமைச்சில் டிஜிஐ தாம் சந்திக்க செல்வதாகவும் வெலிஓயாவைச் சேர்ந்த மீனவர்கள் தெரிவித்ததாகவும்  தெரிவித்தார். 

இதற்கமைய குறித்த விடயத்தினால்  எமது மீனவர்களுக்கான இடங்கள் போதாத நிலை பற்றியும் இவ்வாறு குடியேற்ற வாசிகள் என்று ஒவ்வொரு இடமாக கொடுத்துக் கொண்டு போனால் எமது மீனவர்களின் நிலைமை என்ன என்பதையும் இப்படியான திணிப்பை எமது தமிழ் மீனவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் சுட்டி காட்டியதோடு வாடிகள் அமைப்பதற்கான அனுமதி என்பது பிரதேச செயலகத்தினாலேயே வழங்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/161857

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் அடித்து கலைத்தது போல் ஊரே திரண்டு (வேறு பகுதி) கலைப்பது தான் ஒரே தெரிவு. 
அரசியல்வாதிகளை நம்பினால் அதோ கதி தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

கடந்த வாரம் அடித்து கலைத்தது போல் ஊரே திரண்டு (வேறு பகுதி) கலைப்பது தான் ஒரே தெரிவு. 
அரசியல்வாதிகளை நம்பினால் அதோ கதி தான்.

கடைசிப் பந்தியை தவறாது வாசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சிங்களவர்கள் முல்லைத்தீவு பகுதியில் சில இடங்களிலும் , மன்னாரில் சவுத்பார் , தலைமன்னார் போன்ற இடங்களிலும் கால நிலையைப்பொறுத்து வந்து மீன் பிடிப்பது வழக்கம். அனால் நிரந்தரமாக தங்குவதில்லை. அதனால் மக்களும் பெரிது படுத்துவதில்லை.

இப்போது நிலைமை மாறி நிரந்தரமாகவே தங்கிவிடடார்கள்போல தெரிகின்றது. மக்களின் வாழ்க்கை இனி போராட்டமாகவே தொடப்பரப்போகின்றது. இனவாத அரசுகளின் ஆதரவுடன் நடப்பதால் போராட்டம் இலகுவாக இருக்கப்போவதில்லை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.