Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் நஸீர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள முக்கிய கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1-750x430.jpg

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­துக்­கான அதி­காரப் பகிர்வை முஸ்­லிம்கள் ஆத­ரிக்­கின்­றனர், ஆனால் குறிப்­பாக 13வது திருத்தம் வேறு வகை­யிலும் திருத்­தப்­பட வேண்டும் என சுற்­றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
 

 

 

அத்­துடன், மாகா­ணங்­களை இணைக்கும் அதி­கா­ரத்தை நீக்கி அர­சி­ய­ல­மைப்பின் 154A(3) பிரிவை ரத்துச் செய்­ய­வேண்டும் எனவும் ‘நிலம் மற்றும் குடி­யேற்றம்’ தொடர்­பான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக மத்­திய அர­சுக்கு வழங்­கப்­படல் வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 

மேலும், இலங்கை முஸ்­லிம்கள் மற்றும் சிங்­கள சமூ­கங்­களின் பங்­கேற்பு இல்­லாமல் இனப் பிரச்­சி­னைக்­கான எந்­த­வொரு தீர்வும், அது 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வதன் மூலமோ அல்­லது வேறு வழி­யிலோ அமைந்­தாலும் ஒரு­போதும் நிலை­யான தீர்­வாக இருக்க முடி­யாது

 

அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்த விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

 

அக்­க­டி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

 

 

1988 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 3 ஆம் திகதி இயற்­றப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் கருத்­துக்­களைக் கோரும் உங்­க­ளுக்கு, நாங்கள் எங்கள் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறோம்.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வான ஒரே­யொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, அதன் பிரதித் தலை­வ­ராக (1) மற்றும் கிழக்கு மாகா­ணத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நான். கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக கீழே குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களை முன்­வைக்க விரும்­பு­கின்றேன்.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் (மற்றும் சிங்­கள) மக்­க­ளுடன் வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்ட கலந்­து­ரை­யா­டலை நடத்­தாது 13ஆவது திருத்தம் தொடர்­பாக 2023 ஆகஸ்ட் 9 புதன்­கி­ழமை அன்று ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் விசேட அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டது ஏன் என்­பது தொடர்பில் மக்கள் பிர­தி­நி­தி­களால் எங்­க­ளிடம் வின­வப்­பட்­டது.

 

கிழக்கு மாகா­ணத்தில், மிகப்­பெ­ரிய இன-­மத சமூ­கத்தை முஸ்­லிம்கள் உள்­ள­டக்­கி­யுள்­ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் முஸ்லிம் மக்கள் மிகப்­பெ­ரிய ஒற்றை சமூ­க­மாக விளங்­கு­கின்­றனர், அவர்­களில் பெரும்­பாலாேனார் 1987 முதல் புலி­களால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­டனர். சில ஆயிரக் கணக்­கானோர் கொல்­லப்­பட்­டனர். பல்­லின, பல மதங்கள் கொண்ட மக்கள் வாழும் இலங்­கையில் இருந்து தனித் தமிழ்த் தேசத்தை உரு­வாக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் போராட்­டத்­துக்கு வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் ஆத­ர­வ­ளிக்­காத கார­ணத்­தினால் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் இன ரீதி­யாக சுத்­தி­க­ரிக்­கப்­பட்­டனர். அதன் தொடர்ச்­சி­யாக அவர்­க­ளது நிலங்கள் அப­க­ரிக்­கப்­பட்­டன, அவர்­க­ளது சொத்­துக்கள் சூறை­யா­டப்­பட்­டன என்­பது அனை­வரும் அறிந்­தது. இலங்கை முஸ்­லிம்கள் மற்றும் சிங்­கள சமூ­கங்­களின் சம­மான மற்றும் சமத்­து­வ­மான செயல்­மு­றைகள் மற்றும் பங்­கேற்பு இல்­லாமல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்­களின் ஆண்­டாண்டு கால­மாகத் தொடர்ந்து வரும் இனப் பிரச்­சி­னைக்­கான எந்­த­வொரு தீர்வும், அது 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வதன் மூலமோ அல்­லது வேறு வழி­யிலோ அமைந்­தாலும் ஒரு­போதும் நிலை­யான தீர்­வாக இருக்க முடி­யாது.

 

ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய விசேட உரையில் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்­பான தனது குறிப்­பு­களில் வட­ப­குதி தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து நாட்டில் தேசிய நல்­லி­ணக்­கத்தைப் பாது­காப்­பதே தமது நோக்­க­மாகும் என தெரி­வித்­தமை பலரால் எமது கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. நாடு பிள­வு­படக் கூடா­தென்­ப­தற்­காக நிலத்­தையும் உயிர்­க­ளையும் இழந்து பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்­லிம்­களைப் புறக்­க­ணித்து, ஒரு சமூ­கத்­துக்கு ஆத­ர­வாக அவ்­வாறு தெரி­வித்­த­மை­யா­னது அதிர்ச்­சி­ய­ளிக்கும், ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பார­பட்­ச­மான செயற்­பா­டாகப் பார்க்­கப்­ப­டு­கி­றது. நாட்டில் உள்ள அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் இன-­மத அடிப்­ப­டை­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வை காண்­ப­தற்கு இரண்டு மாகா­ணங்­க­ளி­லு­முள்ள மூன்று பிர­தான சமூ­கங்­க­ளுக்கும் சம அந்­தஸ்து வழங்கும் வகையில் பார­பட்­ச­மற்ற, உரிய நடை­மு­றையை கைக்­கொள்­வது ஜனா­தி­ப­தியின் கட­மை­யாகும் என மக்கள் பிர­தி­நி­திகள் கருத்­து­களை முன்­வைத்­துள்­ளனர்.

 

* வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­துக்­கான அதி­காரப் பகிர்வை முஸ்­லிம்கள் ஆத­ரிக்­கின்­றனர், ஆனால் குறிப்­பாக 13ஆவது திருத்தம் வேறு வகை­யிலும் திருத்­தப்­பட வேண்டும்.

 

* மாகா­ணங்­களை இணைக்கும் அதி­கா­ரத்தை நீக்கி அர­சி­ய­ல­மைப்பின் 154A(3) பிரிவை ரத்துச் செய்­ய­வேண்டும்.

 

* மாகாண சபையின் 2/3 பெரும்­பான்மை அங்­கீ­கா­ரத்­துடன் மட்­டுமே நிலம் மற்றும் காணி சம்­பந்­த­மான அனைத்து அதி­கா­ரங்­களும் எந்த மாகா­ணத்­திலும் பயன்­ப­டுத்­தப்­படும் என்ற விதி­க­ளுக்கு உட்­பட்டு ‘நிலம் மற்றும் குடி­யேற்றம்’ தொடர்­பான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக மத்­திய அர­சுக்கு வழங்­கப்­படல் 1981 மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­பின்­படி மாகா­ணத்தின் இன-­ மத மக்கள் தொகை விகி­தா­சாரம் மீறாத வகை­யிலும் அது அமைதல் அவ­சியம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் அனைத்து பொலிஸ் அதி­கா­ரங்­களும் பிரத்­தி­யே­க­மாக மத்­திய அர­சாங்­கத்­துக்கு மட்­டுமே வழங்­கப்­பட வேண்டும், ஆனால் எந்­த­வொரு மாகா­ணத்­திலும் சட்டம் மற்றும் ஒழுங்­குக்கு பொறுப்­பா­ன­வர்­களின் எண்­ணிக்கை, 1981 மக்கள் தொகை கணக்­கெ­டுப்­பின்­படி மாகா­ணத்தின் இன-­ மத மக்கள் தொகை விகி­தத்தை பிர­தி­ப­லிக்க வேண்டும்.

 

* யுத்­தத்தின் போது வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் காணி­க­ளையும் சொத்­துக்­க­ளையும் பரி­சீ­லித்து மீட்­டெ­டுத்து வட­மா­காண சபை நடை­பெற்­ற­போது மேற்­கொள்ளத் தவ­றிய அனைத்து முஸ்­லிம்­க­ளி­னதும் மீள்­கு­டி­யேற்­றத்தை அர­சாங்கம் உட­ன­டி­யாக ஆரம்­பிக்க வேண்டும். மேலும், எந்த கையிலும் எந்த வடி­வத்­திலும் முஸ்­லிம்­களுக்கெதி­ராக மேற்­கொள்­ளப்­படும் அனைத்து செயற்­பா­டு­ளையும் நிறுத்­தவும் அசா­தா­ர­ண­மான அவ­ச­ர­ நி­லையைத் தவிர்த்து, இரு மாகா­ணங்­க­ளிலும் உள்ள ஆயு­தப்­ப­டை­களின் எண்­ணிக்கை மற்றும் பங்­க­ளிப்பைக் குறைத்து, உண்­மை­யான ஆலோ­சனை செயல்­முறை மூலம் நாட்டில் உள்ள அனைத்து இன-­மத சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும் ஒற்­றுமை, அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்­டுதல்.

 

* கிழக்கில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் கிரா­ம­வா­சிகள், குறிப்­பாக சுற்­று­வட்­டாரப் பகு­தியில் உள்ள கிரா­ம­வா­சிகள் பல­வந்­த­மாக முற்­றாக வெளி­யேற்­றப்­பட்டு, மீளக் குடி­ய­மர்­வ­தி­லி­ருந்து தடுக்­கப்­ப­டு­கின்­றனர். இந்த முஸ்­லிம்கள் முழு­மை­யாக அவர்­க­ளது சொந்த கிரா­மங்­களில் குடி­ய­மர்த்­தப்­பட வேண்டும்.

 

* பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக விதிகள்) சட்டம் நமது நாட்டில் வெற்­றி­பெ­ற­வில்லை என்­பதை நாம் ஏலவே அறிவோம். பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் இதேபோன்ற சட்டங்கள் வெற்றி பெறுவதில்லை என்பதால், முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவது முற்றிலும் தேவையற்றது. நீதிமன்றங்கள் உட்பட அதிகாரம் பெற்ற அனைத்து நிறுவனங்களாலும் நியாயமான, மற்றும் பாரபட்சமற்ற நிர்வாகத்தின் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். உலகளாவிய பார்வை என்னவென்றால், இத்தகைய சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பதிலாக சிறுபான்மையினரை மேலும் ஒடுக்குவதோடு அதிக தீவிரவாதத்துக்கு வழிவகுக்கும் மற்றும் நல்லிணக்கத்தையும் குலைத்து விடும். பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து நாடு வெளிவர வேண்டுமானால் இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.jaffnamuslim.com/2023/08/blog-post_675.html

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­துக்­கான அதி­காரப் பகிர்வை முஸ்­லிம்கள் ஆத­ரிக்­கின்­றனர்,

 

* கிழக்கில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் கிரா­ம­வா­சிகள், குறிப்­பாக சுற்­று­வட்­டாரப் பகு­தியில் உள்ள கிரா­ம­வா­சிகள் பல­வந்­த­மாக முற்­றாக வெளி­யேற்­றப்­பட்டு, மீளக் குடி­ய­மர்­வ­தி­லி­ருந்து தடுக்­கப்­ப­டு­கின்­றனர். 

 

 

ஆமாம். ஆதரிக்கிறோம் ஆனால் ஆதரிக்கவில்லை. ஏறாவூரில் தமிழர்களை கொல்வதிலும், அங்கிருந்து வெளியேற்றுவதிலும் முக்கியமாக செய்லபடட ஒரு ஜிஹாத் பயங்கரவாதி. நிறைய தமிழ் கிராமங்கள் இப்போது முனாக்களின் கிராமங்களாக மாறி விட்ட்து. அதைப்பற்றி எல்லாம் கதைக்க மாடடார்கள். தமிழர்களுக்கு எதாவது கொடுக்கபோகிறார்கள் என்றவுடன் தொப்பியை போட்டுக்கொள்ளுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் முஸ்லிம் மக்கள் மிகப்­பெ­ரிய ஒற்றை சமூ­க­மாக விளங்­கு­கின்­றனர்,

ம்ம்..... சிங்களம் யோசிக்க வேண்டிய ஒன்று, தமிழர், புட்டும் தேங்காய்ப்பூவும் என்று சேர்த்துக் கொள்ளலாமா இவர்களை?

8 hours ago, colomban said:

இலங்­கையில் இருந்து தனித் தமிழ்த் தேசத்தை உரு­வாக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் போராட்­டத்­துக்கு வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் ஆத­ர­வ­ளிக்­காத கார­ணத்­தினால் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் இன ரீதி­யாக சுத்­தி­க­ரிக்­கப்­பட்­டனர்

 

8 hours ago, colomban said:

இலங்கை முஸ்­லிம்கள் மற்றும் சிங்­கள சமூ­கங்­களின் சம­மான மற்றும் சமத்­து­வ­மான செயல்­மு­றைகள் மற்றும் பங்­கேற்பு இல்­லாமல்

 

8 hours ago, colomban said:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்­களின் ஆண்­டாண்டு கால­மாகத் தொடர்ந்து வரும் இனப் பிரச்­சி­னைக்­கான எந்­த­வொரு தீர்வும்,

 தமிழருக்கு இந்த நாட்டில் பிரச்சனைகள் இருக்கின்றன, அதனாலேயே பதின்மூன்றாம் சட்டம் கொண்டுவரப்பட்டது. நீங்கள் அதில் இல்லை என்பதை உங்கள் சொல் செயல் நிரூபித்திருக்கின்றன. பிரச்னைக்குரிய இரு பகுதியினர் நாங்கள் போராடும்போது நீங்கள் அவர்களுடன் செயற்பட்டுள்ளீர்கள். இப்போ பதின்மூன்றிலும் வேண்டாம் என்று தனித்தே நிற்கிறீர்கள். உங்களுக்கு பிரச்சனையிருந்தால், மிகப்பெரிய ஒற்றைச்சமூகமான நீங்கள் அவர்களுடன் சேர்ந்திருந்து எங்களை ஓரங்கட்டியதுபோல் அவர்களுடன் பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள். எங்களுடன் நீங்கள் சேர்ந்து போராடவுமில்லை சேரப்போவதுமில்லை. எங்கள் பிரச்சனைகளில் உங்களை சேர்த்து எல்லோரையும் குழப்பாதீர்கள். இது தமிழர் பிரச்சனை. நீங்கள் யார், எந்த சமூகம், உங்கள் பிரச்னை என்ன என்பதை உரியவர்களுடன் உரிய முறையில் பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள். இரு சமூகத்துக்கு மத்தியில் நாம் அகப்பட்டு, எங்களை வைத்து நீங்கள் பிழைத்துக்கொள்கிறீர்கள்,பறித்ததை பங்கு போட்டுக்கொள்கிறீர்கள். நாங்கள் பிரிந்து சென்றால், நீங்கள் யாரும் பிழைக்க முடியாது என்பது உங்கள் இருவரினதும் தவிப்பு, அப்பப்போ எழும்பி கூவுவீர்கள். ஒரு காலத்திலும் இந்த இரு இனமும் கஸ்ரப்பட்டு முன்னேறாது. அடித்து, பறித்து, கொன்றே வாழப்பழகிக்கொண்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசன்...சும்மா எதுவும் நோண்டும்...அதுவும் தமிழருக்கு எதிராக....ரணிலு வந்தவுடன் ...எரிபொருள் தட்டுப்பாடு....அப்ப பாக்கையும் தூக்கிக் கொண்டு சவுதிக்குப் ப்போனவர்...தன்னுடைய வகுப்புத்தோழன்தான்..பெற்றோல் மந்திரி ...போய் நாலு கப்பலிலை பெற்றோல் கொண்டுவாறன் எண்டு போனவர் ...ஒன்றரை வருசமாச்சு என்னம் பெறோல் கப்பல் வரவில்லை...பொறுமைகாத்த  ரணில் பயணக்காசையாவது தா ஏன்று கேட்டிருப்பார்...விட்டால் பிழைச்சுப்போடும் என்று பிளேட்டை மாத்தி கடிதம் எழுதி இருப்பார்....அதுவும்  13க்கு எதிரா எழுதினால் நரியும் அடங்கிவிடும்..

  • கருத்துக்கள உறவுகள்

நரி, எல்லாப்பக்கமும் ஆட்டிப்பாக்குது, தன்பக்கம் தப்பில்லை என்று தப்புவதற்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.