Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழருக்கு பொருட்களை அனுப்பாவிடின் உண்ணாவிரதம். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு பொருட்களை அனுப்பாவிடின் உண்ணாவிரதம். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி

Written by Pandaravanniyan - Sep 18, 2007 at 07:28 PM

ஈழத்தமிழர்களுக்கு விரைவில் உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும். இல்லையேல் நெடுமாறனுடன், இணைந்து நானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.

சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இவரை நேற்று முன்தினம் திடீரென சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவி வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் நிருபர்களிடம் உரையாற்றும்போதே முத்துலட்சுமி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

நான் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். ஈழத்தமிழர்களுக்காக போராடிவரும் அவரது பயணம் தொடர வேண்டும். அப்போது தான் ஈழ மக்களுக்கு வெற்றி கிடைக்கும். ஈழத் தமிழர்களுக்கு உணவுஇ மருந்து அளிக்கும் விஷயத்தில் மாநில அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று கருணாநிதி உறுதி அளித்துள்ளார். விரைவில் இதற்கு முடிவு கிடைக்கவில்லை என்றால் நானும் அவருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பேன்.

ஈழத் தமிழர்களுக்காக எனது பகுதி மக்களிடம் உதவிகோரி சுமார் ஒரு லட்சத்திற்கான அரிசிஇ மருந்துகள் வாங்கி வைத்துள்ளேன். என்னிடம் உள்ள பொருட்களையும்இ பழநெடுமாறனிடம் உள்ள பொருட்களுடன் சேர்ந்து அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

நன்றி

சங்கதி

Edited by Valvai Mainthan

அம்மா தாயே ..

இத சொன்னதுக்காகவே.. நாங்க கோடி நன்றி கூறக் கடமைப்படுறம் உங்களுக்கு...

பெரிய தலைவர் தமிழ் வளர்த்த அது இதுன்னு சொல்லி தமிழனை சாகவிடத்துணைபோறவங்களுக்கு இந்த வார்த்தைகள் உறைக்கட்டும்..

அம்மா தாயே....

இதை கேலிக்கூத்து அரசியலாக்காதீர்கள்.

ஜானா

எமது நலனில் அக்கறை காட்டும் கனிவான பேச்சுக்கள் அறிவிப்புக்கள் அனைத்துமே எமக்கு அவசியமானவையே. அவ்வகையில் முதற்கண் எமக்காகத் தனது கனிவான கருத்தினை முன்வைத்த முத்துலட்சுமி அவர்களிற்கு நன்றி.

இருந்தாலும், இது இந்தியாவில் நடப்பதனால், பின்வரும் கோணத்திலும் என்னால் சிந்திக்காது இருக்கமுடியவில்லை.

அதாவது, வீரப்பனிற்கு எத்தனை பக்கங்கள் பரிமாணங்கள் இருந்தன என்று பலரும் பேசினாலும் கூட, சந்தனக் கடத்தல் வீரப்பன் என்ற பாத்திரம் ஒரு வெறுக்கப்படவேண்டிய, சமூகமுரணான, மக்கள் விரோத, பயங்கரவாதக் குறியீடாகவே இந்தியாவில் பெரிதும் உள்ளது. இது தமிழ்நாடு மட்டுமன்றி அயலட்டையிலும் உள்ள ஒரு கருத்து நிலை.

மேலும், திரு.நெடுமாறன் அவர்களின் உண்ணாநோன்புப் போராட்டம் உண்மையிலேயே பலரும் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான உணர்வலைகளைத் தோற்றுவித்தது என்பது மட்டுமன்றி இவ்விடயம் இன்னமும் முற்றுப் பெற்று விடவில்லை. இந்தப் பின்னணியில், இந்தச் சந்தர்ப்பத்தில், வீரப்பனின் மனைவி தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இவ்வறிவிப்பு, ஈழத்தமிழர் மீதான கரிசனையால் வீரப்பனின் மனைவே தாமாக, உணர்வு பூர்வமாக, எதேச்சையாக எடுத்துக் கொண்ட முடிவு தானா? அல்லது வீரப்பன் என்ற குறியீட்டை இங்கு புகுத்திச் சில காரியங்களைச் சாதிக்க (நெடுமாறனின் போராட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் சில கொச்சைப் படுத்தல்களைப் புரிய) அரசியல் சக்திகள் எவையேனும் நாட்டம் கொள்கின்றனவா என்ற சந்தேகம், அனுபவத்தின் அடிப்படையில் ஒரு ஈழத்தமிழனாக எனக்குள் எழவே செய்கின்றது.

Edited by Innumoruvan

வீரப்பன் நல்லவனா கெட்டவனா என்பது எமக்கு தெரியாது. ஆனால் பத்திரிகைகளில் அவன் பொல்லாதவன் என்று சித்தரிக்கப்பட்டது. இதே பத்திரிகைகள் தான் புலிகள் மீதும் பல குற்றச்சாட்டுகள் மட்டுமன்றி தவறான பிரச்சாரத்தையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தின.

ஏன் காஸ்மீர் போராளிகளை வேறுவிதமாக சித்தரித்து இந்தியமக்கள் அவர்களை வெறுக்கும் வண்ணம் செய்தன இதே பத்திரிகைகள். ஆனால்எதற்காக அவர்கள் போராடுகிறார்கள்என்றோ இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களையோ அவை வெளியே அகொண்டுவரவில்லை.

ஆகவே நாம் பத்திரிகைகளை நம்பி யாரையும் கெட்டவர்கள் என நினைத்துவிடக்கூடாது. உண்மையான பல கெட்டவர்கள் நாட்டுக்குள்ளே (போயஸ்தோட்டத்திலும் கோபாலபுரத்திலும்) இருக்கிறார்கள்.

வீரப்பன் நல்லவனா கெட்டவனா என்பது எமக்கு தெரியாது. ஆனால் பத்திரிகைகளில் அவன் பொல்லாதவன் என்று சித்தரிக்கப்பட்டது. இதே பத்திரிகைகள் தான் புலிகள் மீதும் பல குற்றச்சாட்டுகள் மட்டுமன்றி தவறான பிரச்சாரத்தையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தின.

ஏன் காஸ்மீர் போராளிகளை வேறுவிதமாக சித்தரித்து இந்தியமக்கள் அவர்களை வெறுக்கும் வண்ணம் செய்தன இதே பத்திரிகைகள். ஆனால்எதற்காக அவர்கள் போராடுகிறார்கள்என்றோ இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களையோ அவை வெளியே அகொண்டுவரவில்லை.

ஆகவே நாம் பத்திரிகைகளை நம்பி யாரையும் கெட்டவர்கள் என நினைத்துவிடக்கூடாது. உண்மையான பல கெட்டவர்கள் நாட்டுக்குள்ளே (போயஸ்தோட்டத்திலும் கோபாலபுரத்திலும்) இருக்கிறார்கள்.

வீரப்பன் தொடர்பில், நீங்களும் ஒத்துக் கொள்வது போல், பத்திரிகைகளால் அங்கு ஒரு விம்பம் உருவாக்கப்பட்டு காக்கப்படுகின்றது. அந்த விம்பத்தைப் பொறுத்தவரை, நாங்கள் ஆராயும் அளவிற்குக் கூட தமிழ் நாட்டின் வாக்கு வங்கி அதனi ஆராயுமா, வீரப்பன் உண்மையில் நல்லவனா கெட்டவான என்று சிந்திக்குமா, என்பது பற்றி எல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

ஆனால் மேற்படி வீரப்பன் விம்பத்தை (எமது சமூகத்தில் இவள் இன்னார் மனையாள் என்று பெண்ணை அடிமைத்தனமாக அடையாளப்படுத்திப் பழகிவிட்ட துர்ப்பாக்கிய நிலையில், இங்கு வீரப்பன் விம்பத்தைத் தாண்டி முத்துலட்சுமி என்ற தனித்துவத்தின் வீச்சு கேள்விக்குறியே) நீங்கள் சுட்டிக் காட்டியதும் பிறவுமான சக்திகள் பயன்படுத்தமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த எச்சரிக்கை உணர்வு மட்டுமே நான் பதிந்தது.

வீரப்பனின் விழ்ச்சிக்கு அவரின் மனைவியை பொலிஷார் பயன் படுத்தியதாக சொன்னார்கள் அதன் உண்மை தன்மை தெரியவில்லை ஆனா நெடுமாறன் ஜயா கஷ்டப்பட்டு செய்ததத செய்ய நினைத்தையும் செய்து கொண்டு இருப்பதையும் இவர்கள் போன்றோம் பாழடிக்காம இருந்தாலே பெரிய விடயம்.

ஏற்கனவே ஒரு மினவர் கடத்தல் நாடகம் போதும் அதை வைத்து சிலர் வாயை முட முயற்சி செய்தார்கள் அதே போல முத்துலட்சிமியின் வருகை நல்லதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.