Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவில் மீனவர்களின் படகுகள் தீக்கிரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 AUG, 2023 | 03:09 PM
image
 

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும் தண்ணிமுறிப்பு குள பகுதியில் வைத்து 6 படகுகள்  தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறு மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் எனவும் மீனவர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/162845

  • கருத்துக்கள உறவுகள்+

ஒருவேளை சிங்கள மீனவர்களை கொண்டந்து குடியேற்றப்போறாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

ஒருவேளை சிங்கள மீனவர்களை கொண்டந்து குடியேற்றப்போறாங்களோ?

கடந்தகால அனுபவம் அதுக்கு கட்டியம் சொல்லுது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

ஒருவேளை சிங்கள மீனவர்களை கொண்டந்து குடியேற்றப்போறாங்களோ?

இல்லை இல்லை. குடியேற்றம் எல்லாம் முன்னரே நடந்து முடிந்து விட்ட்து. இப்போது குளத்தை கைப்பற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்+
55 minutes ago, satan said:

கடந்தகால அனுபவம் அதுக்கு கட்டியம் சொல்லுது. 

18 minutes ago, Cruso said:

இல்லை இல்லை. குடியேற்றம் எல்லாம் முன்னரே நடந்து முடிந்து விட்ட்து. இப்போது குளத்தை கைப்பற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. 

இல்லை, உது பழிவாங்கல் என்று நினைக்கிறேன்.

உந்த வத்தைகளை எரித்து நாசம்விழுத்தினது சிங்களவன் தான். ஏனென்றால் இரண்டு கிழமைக்கு முதலில் உந்தக் குளத்திலை மீன்பிடித்துக்கொண்டிருந்த சிங்களக் குடியேற்றத்திற்குட்பட்ட மணலாற்றைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் நால்வரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், உந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள்...

எனவே தமிழர்களை மீன்பிடிக்க விடாமல் செய்யவே சிங்களவர் எம்மவர் வத்தைகளை எரித்திருக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நன்னிச் சோழன் said:

இல்லை, உது பழிவாங்கல் என்று நினைக்கிறேன்.

உந்த வத்தைகளை எரித்து நாசம்விழுத்தினது சிங்களவன் தான். ஏனென்றால் இரண்டு கிழமைக்கு முதலில் உந்தக் குளத்திலை மீன்பிடித்துக்கொண்டிருந்த சிங்களக் குடியேற்றத்திற்குட்பட்ட மணலாற்றைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் நால்வரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், உந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள்...

எனவே தமிழர்களை மீன்பிடிக்க விடாமல் செய்யவே சிங்களவர் எம்மவர் வத்தைகளை எரித்திருக்கிறாங்கள்.

காவல்துறை துறை என்றால் யார்? இப்படித்தான் தொடங்குவார்கள். கொஞ்ச காலம் சென்ற பின்னர் ஆண்டாண்டு காலமாக நாங்கள்தான் இந்த குளத்தில் மீன் பிடிக்கிறோம் எண்டு சொல்லுவார்கள். குறுந்தூர் மலையில் என்ன நடக்கிறது?  ஹொருத் ஊன் நடுத் ஊன் எண்டு சிங்களத்தில் சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, Cruso said:

காவல்துறை துறை என்றால் யார்? இப்படித்தான் தொடங்குவார்கள்.

வேறை ஆர், சிங்களவர் தான்... உதிலை சோகம் கலந்த பகிடி என்னெடால், பிடிச்சுக் கொடுத்த தமிழர்களையும் முஸ்லீம்களையும் சிங்களக் காவல்துறை பிடித்து விளக்கமறியலில் வைச்சு உசாவலுக்கு உட்படுத்தியிருக்கிறாங்கள். கொடுமை.

ஒரு உள்ளூர் வலைத்தளத்திலிருந்து...

https://www.thedipaar.com/detail.php?id=61628&cat=Srilanka#bypass-sw

 

//கொஞ்ச காலம் சென்ற பின்னர் ஆண்டாண்டு காலமாக நாங்கள்தான் இந்த குளத்தில் மீன் பிடிக்கிறோம் எண்டு சொல்லுவார்கள். குறுந்தூர் மலையில் என்ன நடக்கிறது?  //

அது வழமை தானே... ☹️
 

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.