Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்திர மண்டல வாசலை பாரதம் தொடும் போது நாம் தரைக்கு கீழே தொல்பொருளை தேடுகிறோம் - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

24 AUG, 2023 | 04:47 PM
image
 

சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் பாரதம் சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக  இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் “மூன்-ப்ராஜெக்ட்” வேலைத்திட்ட பணிப்பாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞான தொழிட்நுட்ப அணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த சாதனையை எண்ணி, தென்னாசிய நாட்டவராகவும், இந்திய வம்சாவளி தமிழராகவும் பெருமையடைகிறேன். ஆனால், வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலை பாரதம் தொடும் போது, நாம் தரைக்கு கீழே தொல்பொருளை தேடுகிறோம் என்ற உண்மையை உணர்ந்து வருந்துகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

பாரதம் தந்த 13 ஆவது திருத்த மாகாணசபையும் இன்று குருந்தூர் மலையில் ஏறி விழுந்து நிற்கிறது. அது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்று இழுபறி படுகிறது. சரித்திரத்தில் இருந்து பாடம் படிப்பதற்கு பதிலாக,  எல்லா பிரச்சினைகளுக்கும் சரித்திரத்துக்குள் நுழைந்து பதில் தேடும் தோற்றுப்போன நாட்டவராக நாம் இன்று இருக்கிறோம்.  

தொல்பொருள் அகழாய்வு பிரதேசம், மதங்களுக்கும், மத நிகழ்வுகளுக்கும் இடம் தராத பாதுகாக்கபட்ட பிரதேசமாக இருக்க வேண்டும். அது தொடர்பான எல்லா வரலாறு உண்மைகளையும் ஆவணப்படுத்தி ஆர்வலர்களுக்கு எடுத்து கூறும் அரச நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற முற்போக்கான சிந்தனையறிவு எமக்கு இல்லை. ஆகவே, ஒருநாள், மாலைத்தீவும் இப்படி “மூன்-ரொக்கட்” அனுப்பும் வரை நாம் இப்படி தொல்பொருளாராட்சியில் தேடி மோதிக்கொண்டே இருப்போம்.

https://www.virakesari.lk/article/163110

  • கருத்துக்கள உறவுகள்

வைத்திய பட்டம் பெற்றவரே  தமிழர் தலையை தெற்குக்கு கொண்டு வருவோம் என இனவாதம் பேசும் போது  எப்படி ஒரு சமூகம் முன்னுக்கு வருவது?
இந்தியாவில் எத்தனை “வாதம்” இருந்தாலும் நாடு எனும் போது ஒற்றுமையாக தான் நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

வைத்திய பட்டம் பெற்றவரே  தமிழர் தலையை தெற்குக்கு கொண்டு வருவோம் என இனவாதம் பேசும் போது  எப்படி ஒரு சமூகம் முன்னுக்கு வருவது?
இந்தியாவில் எத்தனை “வாதம்” இருந்தாலும் நாடு எனும் போது ஒற்றுமையாக தான் நிற்கிறார்கள்.

மனோ கணேசன் அவர்கள் இந்தியாவில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கொட்டியதையும் மணிப்பூரில் நிர்வான ஊர்வலம் நடத்தியதையும் மறந்து சந்திரனைபற்றிக்கூறுகிறார். 

நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகரா முல்லைத்தீவு நீதவானை மனநோயாளி எனக்கூறியபோது இவர்கள் கண்டணம் தெரிவிக்கவோ அல்லது நீதித்துறையையும் நீதியாளரையும் அவமதித்ததற்கான கண்டனத்தீர்மானத்தையோ அல்லது கவன்யீர்ப்புத் தீர்மானத்தையோ கொண்டுவந்து சிறீலங்கா அரசின் அரசியலமைப்பின் நீதித்துறை சட்டங்களுக்கு அமைவாவ நியமனம் பெற்ற ஒரு நீதியாளரை அவமதித்தது அவரது உரிமையில் மீறல் செய்தது மற்றும் அவரது நீதிஅரிபாலனம் தொடர்பான தீர்ப்புகளை அவரது தனிப்பட்ட  சுய அடையாளங்களுடன் விமர்சித்து அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி தனது சுயத்தினை அழிக்க முற்பட்டது இவைகளுக்காக எந்த நாடாளுமன்ற உறுப்பினர் குரல்கொடுத்தவர். 

உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகன் பீரீசை சட்டரீதியற்று நியமனம் செய்தது பிழை என சிங்களச் சட்டவாளர்கள் வாதாடும்போது சுமந்திரனும் அவர்களுடன் சேர்ந்து போராடினாரே அப்போ முல்லைத்தீவு சிறீலங்காவின் நிர்வாக எல்லைக்குள் இல்லையா 

பாராளுமன்ற நடைமுறை எதுவுமே தெரியாத அல்லது தெரிந்தும் வாய்மூடி மெளனிகளாக இருக்கும் தமிள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் எமக்கான உரிமையை எடுத்துத் தருவார்கள் அப்படித்தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.