Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊழல் எதிர்ப்புச்சட்டத்தை நடைமுறைப்படுத்த 300 மில்லியன் டொலர் நிதியுதவி - ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதி நிதி சபாநாயகரிடம் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

05 SEP, 2023 | 09:35 PM
image

(நா.தனுஜா)

ஊழல் எதிர்ப்புச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தை அமைத்தல் ஆகியவற்றுக்கு 300 மில்லியன் டொலர்களை வழங்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்ஞ் தெரிவித்துள்ளார். 


ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியாக அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மார்க்-அன்ட்ரூ பிரான்ஞ் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு முக்கிய தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருகின்றார். 
அந்தவகையில் மார்க்-அன்ட்ரூ பிரான்ஞ் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த வாரம் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.


இச்சந்திப்பின்போது இலங்கையில் ஊழல் எதிர்ப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் என்பன தொடர்பில் தனது பாராட்டை வெளிப்படுத்திய ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்ஞ், இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கு புதிய ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் 5 வருடகாலத்துக்கு 300 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். 


அதனையடுத்து நாட்டின் பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளராக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களில் ஒன்றான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு சபாநாயகர் தனது நன்றியை வெளிப்படுத்தினார். 


அதேவேளை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்குப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டுள்ளமை என்பன தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஐ.நா வதிவிடப்பிரதிநிதியிடம் எடுத்துரைத்தார். 


மேலும் இலங்கையின் சட்டவாக்க செயன்முறை, தேர்தல் முறைமை, சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/163909

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் தலையங்கத்தில் குறிப்பிட்டபடி இலங்கையில்  சட்டங்களை அமுல்படுத்தவே அடுத்தவன் பணம் கொடுக்கவேண்டியுள்ளதாக தெரிகிறது. முதலில் இந்த 300 டொலர் பணத்துக்கு என்ன உத்தரவாதம் என்று ஐ.நா அரசாங்கத்தை கேட்கணும். இலங்கையை பொறுத்தவரை இது ஒரு பெரிய தொகை ஆகவே இலஞ்சம் கொடுத்துதான் ஊழலை  ஒழிக்கணும் என்பதை ஐ.நா வே ஏற்றுக்கொள்கிறதோ?

புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி இலங்கை அரசு ஊழல் தடுப்பு சட்டத்தை அமுல்படுத்தியதற்கும் நாடாளுமன்ற பட்ஜட் அலுவலகத்தை நிறுவியதற்கும் தனது வாழ்த்துக்களை இலங்கை அரசின் பிரதி நிதிகளுக்குத் தெரிவித்துக்கொண்டாரேயன்றி  ஊழல் ஒழிப்புக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக  குறிப்பிடவில்லை.

அடுத்த 5 ஆண்டில்  சட்ட அமுலாக்கம், தேர்தல்முறைகளை மேம்படுத்தல்,  அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்புதல் ஆகிய இன்னோரன்ன விடயங்களுக்காகவே இந்த நிதி வழங்கப்படுகிறது.

http://www.colombopage.com/archive_23B/Sep04_1693840515CH.php

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம். இந்த $300 லில் ஊழல் செய்யாவிடடாலே பெரிய காரியம். இந்த ஐக்கிய நாடுகள் இன்னும் இலங்கையை நம்புதென்பேதே பெரிய ஆச்சரியமாக இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் காணிகளை பறித்த்து விகாரைகள் எழுப்ப பயன்படும். பாராட்டுவதும் நிதியளிப்பதுமே அவர்களின் பங்களிப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.