Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளனர்

வியாழன் அன்று மட்டக்களப்பில் இருந்து வடக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாழைச்சேனையில் தீவிரவாத இஸ்லாமிய குழுவைச் சேர்ந்தவர்கள் என ஐப்படும் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 13 தமிழ் பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வன்முறையை அடக்குவதற்காக வியாழன் மதியம் காவல்துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பின்னர், காலையில், இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதொரு கைக்குண்டு தாக்குதலில் நான்கு தமிழர்கள் படுகாயமடைந்தனர், அவர்களில் ஒருவர் கடுமையாகவுள்ளார், அத்துடன் ஒருவரைக் கொன்றதோடு ஒன்மரைக் காயப்படுத்தினர். வாழைச்சேனைக்கு அருகிலுள்ள ஓட்டமாவடியில் 10 தமிழ் பெண்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"சமாதான முன்னெடுப்புகள் மூலம் எங்களின் நியாயமான உரிமைகளை அடைவதை தடுப்பதில் உறுதியாக இருப்பவர்கள் முறைமைப்படுத்தப்பட்ட வகையில் தமிழர்களை தாக்கி கிழக்கில் பொது வன்முறையை ஆக்க ஆயுதமேந்திய இஸ்லாமிய தீவிரவாதிகளை தூண்டுகின்றனர்" என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித்தார்.

வாழைச்சேனைக்கு அருகில் உள்ள தமிழ் சிற்றூரான கருவாக்கேணியில் பத்து வயது சிறுவன் ஒருவரை இஸ்லாமிய தீவிரவாத கும்பல் அரிவாளால் தாக்கி படுகாயமடையச் செய்தது. வாழைச்சேனை பசாருக்குப் பின்னால் உள்ள தமிழர் வீடு ஒன்று இஸ்லாமிய அமைப்பினரால் தீக்கிரையாக்கப்பட்டது. அப்பரப்பில் உள்ள ஏராளமான தமிழ் குடும்பங்கள் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க உள்பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவனை மட்டக்களப்புக்கு கொண்டு சென்ற நோயாளர் காவுவண்டி மீது ஏறாவூரில் முஸ்லிம்கள் கல்லெறிந்தனர்.

மட்டக்களப்பில் இருந்து 5 கிலோமீற்றர் தெற்கே உள்ள காத்தான்குடியில் மற்றுமொரு நோயாளர் காவுவண்டிக்கு முஸ்லிம்கள் கல்லெறிந்ததோடு, ஓட்டமாவடியில் வியாழக்கிழமை காலை தமிழர்களுக்குச் சொந்தமான மூன்று பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். வாழைச்சேனை நகர பஜாரில் 6 கடைகள் எரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முஸ்லிம் தீவிரவாதிகளின் ஆத்திரமூட்டல்களுக்கு தமிழர்கள் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் வலியுறுத்தி மட்டக்களப்பில் உள்ள விடுதலைப் புலிகள் வியாழக்கிழமை பிற்பகல் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். முஸ்லீம் பகுதிகளிலிருந்து வந்த ஆயுதமேந்திய குண்டர்களின் தாக்குதல்கள் என்றும், எனவே கிழக்கில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்க தமிழர்கள் எதனையும் செய்யக்கூடாது என்றும் விடுதலைப் புலிகளின் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை மற்றும் அதனை அண்மித்த பரப்புகளில் இன்று (வியாழன்) மாலை 6 மணி முதல் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 

"கிழக்கில் ஆயுதம் ஏந்திய இஸ்லாமிய தீவிரவாதிகள் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வு அமைப்புகளும் கடந்த காலங்களில் கிழக்கில் பல தடவைகள் இந்த பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டுள்ளன. இதன் நோக்கம் சமாதான முன்னெடுப்புகளை சீர்குலைத்து, கிழக்கு கடலோரம் நடுவண் அரசியல் சிக்கல்களை குழப்பிவிடுவதுதான்" என்று திரு. ஜோசப் பரராஜசிங்கம் கூறினார்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 168
  • Views 13.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    முன்னுரை     தமிழீழத்தின் சுதந்திரத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசின் படைத்துறை இயந்திரத்தின் கைகளால் தென் தமிழீழ தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாதவை. 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கை  முஸ்லீம்கள்… ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களை ஆவணப் படுத்தும் உங்கள் செயலுக்கு மிக்க நன்றி  நன்னிச்சோழன். 🥰 👍🏽 🙏

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    நிகழ்படங்கள் படுகொலை சாட்சிகள்    முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வீரமுனையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான கண்கண்ட மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு: இதில் தோன்றி நல்லவர் வேடமிட்டு முஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

வாழைச்சேனை வன்முறையில் காவல்துறையினரின் கைவரிசை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

 

வாழைச்சேனையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகளுக்கு காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளனர். சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், அப்பரப்பிற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் ஓரவஞ்சனையுடன் செயற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். வன்முறை குறித்து உசாவ ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் உசவல் ஆணைக்குழுவை நியமிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.ஜோசப் பரராஜசிங்கம், திரு.த.தங்கவடிவேல் மற்றும் திரு.ஜீ.கிருஷ்ணப்பிள்ளை ஆகியோர் பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் முழுவடிவம் பின்வருமாறு:-

"உங்களின் கனிவான கவனத்திற்கும் குறைதீர்விற்காகவும் பின்வரும் மெய்யுண்மைகளை நாங்கள் கொண்டு வர விரும்புகிறோம்.

"வாழைச்சேனையில் 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அழிவு நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களை நாம் கூட்டாகப் பார்வையிட்டோம்.

"இரு சமூகத்தினரையும் நேரில் கண்ட சாட்சிகளிடமும், குறிப்பாக நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடமும், நாங்கள் நடத்திய உசாவலில், இந்த நீதியற்ற இறப்புகள், ஆட்களுக்கு காயம் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கு வாழைச்சேனை காவல்துறையினர் தான் பொறுப்பென்றும் அவர்களின் விளைபயனற்ற தன்மையும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

"பெரும்பாலான நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, ஊரடங்குச் சட்டத்தின் போது கடைகள் எரிப்பு மற்றும் சூறையாடுதல் உள்ளிட்ட ஆட்களின் இறப்புகள் மற்றும் காயங்கள் நடந்துள்ளன. கடந்த 27ஆம் திகதி காலை வாழைச்சேனை பிரதேச சபை அலுவலகம் ஊரடங்குச் சட்டத்தின் போது எரிக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தை கடைப்பிடிக்கும் பொறுப்பில் உள்ள பாதுகாப்புப் படையினர் இந்த அரச சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர்.

"வாழைச்சேனை காவல்துறை பிரிவின் உதவி காவல் கண்காணிப்பாளர்  திரு.ஜமால்தீன் மற்றும் வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி திரு.பியசேன ஆகியோருக்கு எதிராக இரு சமூகங்களையும் குறிப்பாக தமிழர்களையும் சேர்ந்த பல சாட்சிகள் அன்னார்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் பக்கச்சார்பற்ற தன்மையை பேணவில்லை எனவும் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணவில்லை எனவும் முறைப்பாடு செய்துள்ளனர். 

"சிஐடி அதிகாரிகள் திரு.ஃவைஸ், திரு.மன்சூர், திரு.ரமீஷ் மற்றும் திரு.உவைஸ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீது சுட்டதாக கூறப்படுவதும் நேரில் கண்ட சாட்சிகள் சிலரால் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அத்துடன் தமிழ் இளைஞரான திரு. காண்டீபன் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததற்கு திரு.ஃவைஸ் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கதாக குறிக்கப்பட்டிருந்தது.

"வாழைச்சேனை கோட்ட செயலாளர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர் சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நடப்பு காவல் மா அதிபர் திரு.த.ஆனந்தனராஜா முன்னிலையில் இவ்விரு அலுவலர்களையும் இவ் நிலையத்திலிருந்து உடனடி நடைமுறையுடன் இடமாற்றம் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டது. 

"இந்நிலையில், இந்த நிகழ்வுகள் குறித்து உசாவவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் ஓய்வுபெற்ற மூத்த உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் உசாவல் ஆணைக்குழு ஒன்றை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

"கீழ்க்கண்டவர்களுக்குப் போதுமான சிறப்பு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

1) இந்த சம்பவத்தில் இறந்த ஆட்களின் அடுத்தவர்கள்

2) காயம் அடைந்த ஆட்கள்

3) தீயினால் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன அல்லது முற்றிலும் எரிந்தன

4) வேறு ஏதேனும் இடருதவி."

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • வலைத்தளம்: தமிழ்நெற்
  • திகதி: 30/06/2002
  • தமிழாக்கம்: நன்னிச் சோழன்

 

 

பதற்றமான கிழக்கு மாகாண நகரத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது

மட்டக்களப்பில் இருந்து 32 கிலோமீற்றர் வடக்கே வாழைச்சேனை - ஓட்டமாவடி பொதுப் பகுதியில் நான்கு நாட்களாக நடைமுறைப்படுத்தப் பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை காலை நீக்கப்பட்டது. வாழைச்சேனை பஜாரில் உள்ள தமிழ் ஏற்றுமதியாளர்களும் வணிகர்களும் தங்கள் கடைகள் மற்றும் கட்டிடங்களின் அழிக்கப்பட்ட எச்சங்களை பார்வையிட திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 28 வெள்ளிக்கிழமை முதல் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா படைமுகாமுக்கு அருகிலுள்ள கடையின் வணிகர் ஒருவர் கூறுகையில், “வடகிழக்கில் இதுபோன்ற பேரழிவுகளுக்கு காப்புறுதி நிறுவனங்கள் பணம் செலுத்தாததால் நாங்கள் மீளமுடியாமல் அழிந்துள்ளோம்.

"வாழைச்சேனை பஜாருக்குப் பின்னால் உள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் சூறையாடி எரிக்கப்பட்டிருக்கும். " என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் கிழக்கு நகரின் தமிழ் பகுதிக்கு தீ வைத்து அழிக்கும் முயற்சியில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவுவதில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டதாக தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

Ethnic Tamils' shops & things in valaichenai, Batticaloa were burnt by Sri Lankan muslim extremists in 2002 (9).jpg

வாழைச்சேனை பஜாரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்ட தமிழரின் கடைகள் மற்றும் கட்டிடங்கள் 

 

Ethnic Tamils' shops & things in valaichenai, Batticaloa were burnt by Sri Lankan muslim extremists in 2002 (8).jpg

வாழைச்சேனை பஜாரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்ட தமிழரின் கடைகள் மற்றும் கட்டிடங்கள் 

 

Ethnic Tamils' shops & things in valaichenai, Batticaloa were burnt by Sri Lankan muslim extremists in 2002 (7).jpg

வாழைச்சேனை பஜாரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்ட தமிழரின் கடைகள் மற்றும் கட்டிடங்கள் 

 

Ethnic Tamils' shops & things in valaichenai, Batticaloa were burnt by Sri Lankan muslim extremists in 2002 (6).jpg

வாழைச்சேனை பஜாரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்ட தமிழரின் கடைகள் மற்றும் கட்டிடங்கள் 

 

Ethnic Tamils' shops & things in valaichenai, Batticaloa were burnt by Sri Lankan muslim extremists in 2002 (5).jpg

வாழைச்சேனை பஜாரில் தமிழர் கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் எச்சங்களை உண்ணோட்டமிடுகின்றனர்

 

Ethnic Tamils' shops & things in valaichenai, Batticaloa were burnt by Sri Lankan muslim extremists in 2002 (4).jpg

வாழைச்சேனை பஜாரில் தமிழர் கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் எச்சங்களை உண்ணோட்டமிடுகின்றனர்

 

Ethnic Tamils' shops & things in valaichenai, Batticaloa were burnt by Sri Lankan muslim extremists in 2002 (2).jpg

ஊரடங்குச் சட்டத்தின் போது எரிக்கப்பட்ட உந்துருளி

 

Ethnic Tamils' shops & things in valaichenai, Batticaloa were burnt by Sri Lankan muslim extremists in 2002 (1).jpg

வாழைச்சேனையில் இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட தமிழ் குமுகாயத் தலைவர்கள் மற்றும் வணிகர்களுக்கிடையிலான கலந்துரையாடல் 

Ethnic Tamils' shops & things in valaichenai, Batticaloa were burnt by Sri Lankan muslim extremists in 2002 (3).jpg

இஸ்லாமிய தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்ட வாழைச்சேனை பிரதேச சபை அலுவலகம்

 


 

 

வாழைச்சேனைத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது

"ஹர்த்தால்' என்பது இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு வாழைச்சேனையில் தமிழ் மக்களின் பொருண்மியத்தை அழிப்பதற்கான ஒரு சாக்குப்போக்காக இருந்தது. அவர்கள் எங்களைத் தாக்க சுடுகலன்கள், அமுக்கவெடிகள் மற்றும் கையெறிகுண்டுகளைப் பாவித்தனர். இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த ஆயுதங்களால் எங்களைத் தாக்கியபோது காவல்துறையினர் அருகில் நின்றார்கள். இந்த ஆயுதங்களை அவர்களுக்கு வழங்கியோர் யார்? " என்று தமிழ் குமுகாயத் தலைவர்கள் மற்றும் வணிகர்களின் பேச்சாளர் திரு.எதிர்மன்னசிங்கம் கமலரஞ்சித், சிறிலங்காவின் தரைப்படைக் கட்டளையாளர் லெப்டினன்ட் ஜெனரல் பலகல்ல மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சர் திரு.மிலிந்த மொரகொட ஆகியோருடன் கிழக்கு நகரில் ஞாயிறன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது வினவினார். 

சிறிலங்கா தரைப்படைக் கட்டளையாளரும் அமைச்சரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு உண்மை கண்டறியும் பணியில் வாழைச்சேனையைப் பார்வையிட்டனர், அந்த சமயத்தில் அவர்கள் வாழைச்சேனையிலுள்ள தமிழ் குமுகாயத் தலைவர்களுடன் கலந்துரையாடினர். கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாழைச்சேனை இந்து கல்லூரியில் நடைபெற்றது.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என உள்ளூர் ஊடகவியலாளர் திரு.சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி சிறிலங்கா தரைப்படைக் கட்டளையாளர் மற்றும் அமைச்சரிடம் தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டத்தின் போது தரைப்படையினரும் காவல்துறையினரும் தங்களது கடைகளிலும் மண்டிகளிலும் உள்ள பொருட்களை அகற்ற விடாமல் தடுத்ததாகவும், தேவையான காப்பை தாம் வழங்குவதாக சொன்னதாகவும் தமிழ் வணிகர்கள் சிறிலங்கா அரசாங்க நிகராளிகளிடம் தெரிவித்தனர்.

"எவ்வாறெயினும், எங்களின் உடைமைகளையும் பொருட்களையும் ஓம்பிக் காப்பதாக (safe guard) தரைப்படையும் காவல்துறையும் கூறியதையடுத்துத்தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் வியாழக்கிழமை இரவு எங்கள் கடைகள் அனைத்தையும் எரித்தனர்" என்று வணிகர் ஒருவர் கூறினார்.

“வன்முறையின் பின்னர் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடிக்கு வருகை புரிந்த திரு. ஹக்கீம் அப்பரப்பில் உள்ள முஸ்லிம்களை மாத்திரம் சந்தித்தார். அவர்களுக்கே பாதுகாப்புக் கோரியுள்ளார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் மூத்த அமைச்சராக இருந்தாலும் ஹக்கீம் இதில் மிகவும் ஓரவஞ்சனையுடன் செயற்பட்டுள்ளார். இவ்வாறு பக்கச்சார்புடன் செயற்பட்டமைக்காக பிரதமர் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திரு.கமல்ரஞ்சித் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறீலங்கா தரைப்படை மற்றும் அமைச்சர் மொரகொடவிடம் பேசிய போது தெரிவித்தார்.

முன்னறிவிப்பின்றி இஸ்லாமிய அமைப்புகள் ஹர்த்தாலை விதித்துள்ளன என்றார். 'எனவே வியாழன் காலை இஸ்லாமிய குழு தமிழர் பகுதியில் கைக்குண்டுகளை வீசிய போது ஏராளமான தமிழர்கள் சாலைகளிலும் பஜாரிலும் இருந்தனர்' என்று மேலும் தெரிவித்தார்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

பாரிய படுகொலை, கட்டாய வெளியேற்றத்தை தாண்டி பிழைத்துள்ளது உடும்பன்குளம்

இலங்கையின் தென்கிழக்குக் கரையோரத்தில் அதிகம் அறியப்படாத உட்பரப்பில் வயல்வெளிகள் அடர்ந்து பசுமையாக காணப்படுகின்ற உடும்பன்குளம் என்னுமொரு தமிழ் சிற்றூரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 19, 1986 அன்று, சிறிலங்கா படைத்துறையினர் ஊரின் சூட்டுக்‌ களத்தில்‌ 128 கமக்காரர்களை சாகும்வரை அடித்துக் கொத்தினர். அடவியின் (jungle) பற்றிலிருந்து படிப்படியாக அப்பரப்பு மீட்கப்பட்டு வருகிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பு ஊரிற்குத் திரும்பிய வெகுசில துணிச்சலான முன்னாள் குடியிருப்பாளர்கள் ஒரு மகத்தான நெல் அறுவடையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஆயினும் பிப்ரவரி 19 அவர்களுக்கு அழியாத வடுநிறைந்த நாளாகவே எஞ்சியுள்ளது.

Twilight over the Udumbankulam Tank..jpg

அந்தி சாயும் பொழுதில் உடும்பன்குளக் குளம் | படிமப்புரவு: தமிழ்நெற்

அடிக்கடி நடப்பது போல, உடும்பன்குளத்தில் இடம்பெற்ற படுகொலைகளை உசாவ சிறிலங்கா அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.

“அன்று நான் வேலை விடையமாக வெளியூரில் இருந்ததால் படுகொலையில் இருந்து தப்பித்தேன். எல்லோரும் வெருண்டுபோயிருந்தனர். அடுத்த நாள்தான் எங்களால் இங்கு வர முடிந்தது. சூட்டுக்களம் முழுவதும் பாதி எரிந்தும் முழுது எரிந்ததுமான சடலங்கள் தான் இருந்தன. தாங்க முடியாத காட்சியாக இருந்தது. தப்பியோடி காட்டுக்குள் ஒளிந்திருந்த சிறுவன் ஒருவன், படையினர் தீயிட்டுக் கொளுத்தியபோது உயிரிழந்தவர்களில் சிலர் உயிருடன் இருந்ததாக எங்களிடம் கூறினார். சரியாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு படைத்துறை மீண்டும் இங்கு வந்து ஊரைச் சேர்ந்த இருவரை 86 ஜூலை 19 அன்று சுட்டுக் கொன்றனர்." என்று உள்ளூர் தலைவர் நாகமணி கந்தசாமி, 48, கூறினார்.

Nakamany Kandasamy, 48, on his way to Udumbankulam at dusk..jpg

நாகமணி கந்தசாமி, 48, அந்தி சாயும் நேரத்தில் உடும்பன்குளத்திற்குச் சென்று கொண்டிருந்த போது | படிமப்புரவு: தமிழ்நெற்

கொடூரமான படுகொலை நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உடும்பன்குளத்தில் இருக்கத் துணிந்த அந்த ஊர் மக்கள், சிறீலங்கா படைத்துறையின் அதிசிறப்பு கிளர்ச்சி எதிர்ப்புப் பிரிவினரான சிறப்பு அதிரடிப் படையினரால் (STF) மொத்தமாக துரத்தப்பட்டனர்.

“அதிரடிக்காரர்கள் 1990 இல் எங்கள் வீட்டையும் கடையையும் எரித்தனர். அவர்கள் ஊர் பாடசாலையையும்  கூட்டுறவு சங்க கட்டிடத்தையும் அழித்தார்கள். நாங்கள் அறுவடை செய்த நெற்பயிர்களுக்கு அதிரடிக்காரர்கள் தீ வைத்ததுடன், நாங்கள் பருவத்திற்காக பயிரிட்டிருந்த 25 ஆயிரம் மரவள்ளி செடிகளை எங்களுடைய பண்ணையில் நாசப்படுத்தினர். நானும் என் கணவரும் சாவிலிருந்து அருந்தப்பாக தப்பினோம். பல நாட்கள் அடவிக்குள் ஒளிந்திருந்தோம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கு வந்துள்ளோம். எனினும் மீண்டும் வாழ்க்கையை முதலிலிருந்து தொடங்குவதென்பது மிகவும் கடினமானது.” என்கிறார் 45 வயதான குமாரகுலசிங்கம் தங்கேஸ்வரி.

Kanapathipillai Sivanesarajah, 58, looks over his field, standing near the Udumbankulam reservoir's spill..jpg

உடும்பன்குளம் நீர்த்தேக்கத்தின் கசிவுக்கு அருகில் நின்று தனது வயலைப் பார்க்கிறார் 58 வயதான கணபதிப்பிள்ளை சிவநேசராஜா | படிமப்புரவு: தமிழ்நெற்

“ஆனால் மிக மோசமான விடையம் என்னவென்றால், அதிரடிக்காரர் இங்குள்ள நீர்த்தேக்கங்களின் அணைக்கட்டுகளை தகர்த்ததுதான். ஏறத்தாழ பத்தாண்டுகளாக நீர்த்தேக்கங்கள் பிளந்து கிடக்கின்றன. உடும்பன்குளம் நீர்த்தேக்கத்தின் கரையை சீர்செய்ய தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் (பொருண்மியம்) உதவியுள்ளது. மற்ற சிறிய தாங்கிகளின் (நீர்த்தேக்கங்கள்) பிளந்த மற்ற கரைகளும் அண்மைய மாதங்களில் சரிசெய்யப்பட்டுள்ளன” என்று அப்பரப்புக்கான ஊரக வளர்ச்சி சங்கத்தின் தலைவர் திரு. முருகேசு வரதராஜன், 33, கூறினார்.

இக்கோட்டத்தில் அதிரடிக்காரரின் 'கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில்' மனித வசிப்பிடத்தைத் தக்கவைக்கத் தேவையான அடிப்படைக்குரிய கட்டமைப்புகள் முறைமையாகவும் கொடுகாகவும் அழிக்கப்பட்டதால் குடும்பங்கள் நிரந்தரமாக மீள்குடியேறத் தயங்குகின்றன என்றார்.

“சொகுசு ஊர்திகளில் சென்று, வெளிநாட்டவர்களுடன் தாயகத்தின் புனரமைப்பு பற்றி கலந்துரையாடி செல்லும் பலருக்கு, நாங்கள் வரைபடத்தில் ஒரு கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருக்கிறோம். கர்ப்பிணிப் பெண்கள் இங்கிருந்து எட்டு கிலோமீட்டருக்கு மேல் நடந்தே திருக்கோவிலுக்கு பேருந்து செல்ல வேண்டியுள்ளது” என்று அவர் வேதனையுடன் கூறுகிறார்.

“நாங்கள் வாழ்வாதாரத்திற்காக கருங்கற்களை உடைக்க வேண்டியிருந்தது. இங்குள்ள நிலங்களில் கமம் செய்ய முடியாமல் எனது குடும்பம் இன்னும் வறுமையில் வாடுகிறது. ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்பது எனது குடும்பத்திற்கு ஒரு ஆடம்பரம்.”, என்று உடும்பங்குளத்திற்கு அருகிலுள்ள தங்கவேலாயுதபுரம் என்ற ஊரில் அறுவடை செய்யப்பட்ட வயலின் தரையில் இருந்து சேகரிக்க அனுமதிக்கப்பட்ட நெற்கதிரை குச்சியால் அடித்தபடி கூறினார், 38 வயதான கிருஷ்ணன் சிவஜோதி.

Krishnan Sivajothy beating a sheaf of paddy on the threshing floor of a field in Thangavelauthapuram..jpg

கிருஷ்ணன் சிவஜோதி தங்கவேலாயுதபுரத்தில் உள்ள சூட்டுக்களத்தில் நெல் கட்டை அடிக்கிறார். | படிமப்புரவு: தமிழ்நெற்

"கடினமான ஒரு நாள் வேலையானது குழந்தைகளுக்கு சமச்சீரான உணவைக் கொடுக்க போதுமான அரிசி தானியங்களைப் பெற்றுத்தருகிறது.", என்று அவர் கூறினார்.

சிவஜோதியும் அவரது தோழர்களும் மட்டக்களப்புக்கு தெற்கே 94 கிலோமீற்றர் தொலைவில் தீவின் தென்கிழக்கு கடற்கரையில் முதன்மை வீதியில் உள்ள தாண்டியடி என்ற ஊரைச் சேர்ந்தவர்களாவர்.

ஒரு பத்தாண்டுகளிற்கும் மேலாக இவ்வூரை அதிரடிப்படையினர் திறந்தவெளி சிறைச்சாலை போன்று வைத்திருந்ததாக மட்டக்களப்பில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கண்மூடித்தனமான கைது, தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் காணாமற்போதல் ஆகியவை இங்கு தலைவிரித்தாடுகின்றன. 18 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரடிக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் எந்த ஊடகவியலாளரும் அப்பரப்பிற்கு வரவில்லை.

குறித்த விடையத்தில் மேற்கத்திய கையேடுகளின்படி வடிவமைக்கப்பட்ட அதிரடிக்காரர்களின் கிளர்ச்சி எதிர்ப்பு கேந்திரத்தின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஒரே இரவில் வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மட்டக்களப்பில் இருந்து 76 கிலோமீட்டர் தெற்கே உள்ள திருக்கோவில் மற்றும் தம்பிலுவில் ஊர்களில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக வாழ்ந்தனர். அதிரடிக்காரர்கள் அவர்களின் வளமான நிலங்களுக்கும் கால்நடைகளுக்குமான அணுகலை தொடர்ந்து மறுத்து வந்ததால் பலர் வறுமைக்கும் நம்பிக்கையீனத்திற்கும் தள்ளப்பட்டனர்.

திரும்பிச் செல்லத் துணிந்தவர்களை அதிரடிக்காரர்களின் சுற்றுக்காவல் படையினர் பதிதாக்குதலில் (ambush) சுட்டுக் கொன்றனர்.

எவ்வாறாயினும், அதிரடிக்காரர்களின் பாத்தாண்டு கால கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளால், உலகின் பிற பகுதிகளில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டவை, விடுதலைப் புலிகளின் படைய செயற்பாடுகளை கட்டுப்படுத்தவோ அல்லது புலிகளிடமிருந்து மக்களை அச்சுறுத்துவதில் வெற்றிபெறவோ இயலவில்லை.

அதற்குப் பகரமாக, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் இக்கோட்டத்தில் மறைமுகமாக ஊக்குவிக்கப்பட்ட பொசுக்கல் கொள்கையானது, தில்லுமுல்லான வாழ்க்கையிற்கான வசதியான வழியை நீடித்திருக்கச்செய்ய அதிரடிக்காரர்களுக்கு ஒரு மறைப்பாக உருவெடுத்தது.

"நாங்கள் சில ஆட்களை இழக்க வேண்டியிருந்தது. ஆனால், போர்நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து இங்கு நடந்த பொதுமக்கள் போராட்டங்கள், அதிரடிக்காரர்களுக்கு எங்களுடைய மக்களை என்றென்றும் அடிமைகளாக நடத்த முடியாது என்பதைக் காட்டுகிறது” என்கிறார் திருக்கோவில் சமூக ஆர்வலரும் செய்தியாளருமான விவேகானந்தன்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அம்பாறையில் உள்ள தமிழர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்

மட்டக்களப்பு நகருக்கு தென்மேற்கே 38 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வீரமுனையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர், முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரால் 1990 இல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறையில் தமிழ் குமுகாயங்களால் செவ்வாய்க்கிழமை பொது கடையடைப்பு (ஹர்த்தால்) பின்பற்றப்பட்டது என்று அம்பாறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடைகள் மூடப்பட்டதுடன் பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்றுக்கான போக்குவரத்து சேவைகளும் தேங்கின. திருக்கோவிலுக்கு போக்குவரத்து சேவை முற்றாக முடங்கியது. தமிழ் பரப்பு முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டதோடு இயல்பு வாழ்க்கையும் சீர்குலைந்தது, அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை, பாடசாலைகள் திறக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் பரப்பெங்கும் கொடிகள் காணப்பட்டதுடன் மேலும் காவல்துறை ஆளணியினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் கேந்திர சந்திகளில் களமிறக்கப்பட்டுள்ளதாக அம்பாறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீரமுனை என்பது சம்மாந்துறைக்கு அருகாமையில் உள்ள ஒரு பண்டைய தமிழ் ஊர் என்பதோடு பல முஸ்லிம் ஊர்களாலும் சூழப்பட்டுள்ளது.

ஜூன் 11, 1990 இல் சிறிலங்கா படையினரிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, இவ்வூரில் முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர், சிறிலங்கா அரசாங்கத்தின் தரைப்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றால் மூன்று படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஊரில் உள்ள மனிதவுரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு அதிரடிப்படை குறிப்பாக போரின் போது தமிழ் ஊர் மக்களை பல படுகொலைகளை ஊக்குவிப்பதற்கும் நடத்துவதற்கும் பெயர் போனது என்பதோடு பல மனிதவுரிமை மீறல் முறைப்பாடுகளில் சிக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ஜூன் 20 மற்றும் 29 1990 இல், ஊர்காவல் படையினரும் சிறிலங்கா தரைப்படையினரும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை அவர்களின் வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து, அவர்களை கொண்டவெட்டுவானில் உள்ள பாதுகாப்புப் படைமுகாமுக்கும் பின்னர் அடவிகளுக்கும் அழைத்துச் சென்று கொன்றனர். படையினர் பின்னர் இறந்தவர்களின் வீடுகள் மற்றும் பிற சொத்துக்களை எரித்ததாக ஊரிலுள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆகஸ்ட் 12, 1990 அன்று அதிகாலை, சிறப்பு அதிரடிப்படையினர், சில பயங்கரவாத ('ஜிஹாத்') குழுக்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் வீரமுனை ஊர் மக்களை சுற்றி வளைத்தனர். முந்தைய இரண்டு படுகொலைகள் இன்னும் மனதைவிட்டு அகலாத நிலையில், தாங்கள் உயிருக்கு பயந்து, தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து இந்துக் கோயில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையில் சிந்தயாத்திரைப் பிள்ளையார் கோவிலில் தஞ்சம் புகுந்ததாக ஊர் மக்கள் கூறியுள்ளனர். ஆனால் சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கோவிலில் சூட்டு மழை பொழிந்து மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர், அவர்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 56 பேர் உடனடியாக கொல்லப்பட்டனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வூரில் நடந்த இந்த மூன்றாவது படுகொலையைத் தொடர்ந்து, தமிழ் ஊர் மக்கள் அங்கு வாழ முடியாது போனது. ஊர்மக்கள் காரைதீவில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்தனர். ஊர்வாசிகளில் சிலர் 1993 இல் ஊரிற்குத் திரும்பி தொடர்ந்து வாழ்கின்றனர், எனினும் சிலர் திரும்பி வரவில்லை, இன்னும் அகதி முகாம்களில் தான் வாழ்கின்றனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

திராய்க்கேணியில் மண்டை ஓடுகள், எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன

மட்டக்களப்பு - பொத்துவில் வீதியில் மட்டக்களப்பு நகருக்கு தெற்கே 57 கிலோமீற்றர் தொலைவில் உள்ள திராய்க்கேணி பெரியதம்பிரான் கோவிலின் ஆலய வளாகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவ்வூர் வாசிகள் தூய்மை செய்து கொண்டிருந்த போது அருகில் உள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Thiraykeeni massacre by muslim - remains (2).jpg

படிமப்புரவு: தமிழ்நெற்

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 48 தமிழ் பொதுமக்களின் எச்சங்கள் இருக்கலாமென குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஒலுவில் மற்றும் பாலமுனை முஸ்லிம் ஊர்கள் முறையே திராய்க்கேணிக்கு வடக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளன. இரண்டாம் ஈழப் போரின் போது, திராய்க்கேணியில் வசிக்கும் தமிழர்களுக்கு முஸ்லிம் ஊர் மக்களிடமிருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் வந்தன.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி, திராய்க்கேணிக்கு மேற்கே சில கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தீகவாவி என்ற கிராமத்தில் இருந்து, ஒலிவில் மற்றும் பாலமுனையைச் சேர்ந்த ஒன்பது முஸ்லிம் பொதுமக்கள் சிங்கள குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வதந்திகள் பரவியதாக கோட்டவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மறுநாள் முஸ்லிம் இளைஞர்கள் திரைக்கேணிக்குள் நுழைந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் தமிழர்களை தாக்க ஆரம்பித்தனர். கோயிலில் தஞ்சம் புகுந்த ஊர் மக்கள் கத்திகள் மற்றும் பொல்லுகளால் கொல்லப்பட்டனர். முஸ்லிம் இளைஞர்கள் சரோஜா என்ற 13 வயது சிறுமியை பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து அருகில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று வன்புணர்ச்சி செய்த பின்னர் வீட்டை தீ வைத்து எரித்தனர்.

Thiraykeeni massacre by muslim - remains (5).jpg

படிமப்புரவு: தமிழ்நெற்

காலை 7 மணிக்கு ஆரம்பித்து மதியம் வரை நடந்த இந்த கொலைகளில் கோவில் வளாகத்தின் சுற்றாடலில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த இருபது பேரில் நால்வர் கல்முனை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தப்பியோடிய மக்கள் சிறப்பு அதிரடிப்படையின் பாரவூர்திகளில் காரைதீவு அகதிகள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த அகதிகளில் பலர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.

46 வயதான சின்னத்தம்பி கார்த்திகேசு மற்றும் பிற குடியிருப்பாளர்கள் 1990 ஆம் ஆண்டு நிகழ்வுகளை தமிழ்நெற் செய்தியாளரிடம் விளக்கமாக விரித்ததோடு ஞாயிற்றுக்கிழமை தோண்டியெடுக்கப்பட்ட எச்சங்களையும் காண்பித்தனர்.

திராய்க்கேணி படுகொலைகள் தொடர்பில் உசாவல்களை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் ஊர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம், சத்துருகொண்டான், மகிழடித்தீவு, புல்லுமலை, வீரமுனை மற்றும் கிழக்கின் ஏனைய கோட்டங்களில் இருந்து தமிழர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் தொடர்பிலும் உசாவல் நடத்தப்பட வேண்டும் எனவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Thiraykeeni massacre by muslim - remains (1).jpg

படிமப்புரவு: தமிழ்நெற்

 

Thiraykeeni massacre by muslim - remains (3).jpg

படிமப்புரவு: தமிழ்நெற்

 

Thiraykeeni massacre by muslim - remains (4).jpg

படிமப்புரவு: தமிழ்நெற்

 

Thiraykeeni massacre by muslim - remains (6).jpg

படிமப்புரவு: தமிழ்நெற்

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

திராய்க்கேணி குமுகாய தலைவரிடம் காவல்துறையினர் உசாவினர்

பெரியதம்பிரான் கோவிலுக்கு அருகில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக திராய்க்கேணியில் இருந்து வந்த செய்திகளைத் தொடர்ந்து, கிராம அபிவிருத்தி சபையின் தலைவரான 46 வயதுடைய சின்னத்தம்பி கார்த்திகேசுவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்கரைப்பற்று காவல் நிலையத்தின் காவல்துறை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் எச்சங்கள் நாடியறியப்பட்ட இடத்திற்குச் சென்றதோடு திரு. கார்த்திகேசுவை செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் திராய்க்கேணி வாசிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமையன்று மேலும் காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை மீண்டும் பார்வையிட்டதோடு கூடுதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த மேலும் இரு திராய்க்கேணி குடியிருப்பாளர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திர நேரு, ஊர் மக்கள் மற்றும் தலைவர்களை காவல் நிலையத்திற்கு அழைப்பாணை விடுத்து வாக்குமூலம் வழங்குமாறு வற்புறுத்தி துன்புறுத்திய காவல்துறை திணைக்களத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • வலைத்தளம்: வீரகேசரி
  • திகதி: 12/03/2006
  • கொழுவிhttps://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=585
  • மீளெடுக்கப்பட்டது: யாழ் கருத்துக்களம் - 2 வழியாக

 

புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு

திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா படைப்பிரிவின் புலனாய்வு கட்டளை அதிகாரிகளின் நேரடிகண்காணிப்பின் கீழ் தனித்துவமான அணியாக ஜிகாத் குழு இயங்கி வருகின்றது என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐ.பி.ஸி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போது ஜிகாத் ஆயுதக்குழு உட்பட ஐந்து பிரதான ஸ்ரீலங்கா துணைப்படைக்குழுக்கள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகாத் குழுவில் அங்கம் பெறும் குறிப்பிடத்தக்க ஆயுததாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினர் ஆதரவுடன் இஸ்லாமிய சமயக் கல்வி என்ற போர்வையில் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜிகாத் குழு அங்கத்தவர்கள் பாகிஸ்தானின் மலையோரங்களில் உள்ள லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளின் பாசறைகளில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ராஜதந்திரியாக தற்போது கடமையாற்றும் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் ஜிகாத் ஆயுத் குழுவினருக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான இந்த ராஜதந்திரி அண்மையில் யாழ். குடாநாட்டிற்கு பாகிஸ்தான் உளவாளிகள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத இறுதியில் பாகிஸ்தான் செல்வதன் பின்னணியில் இந்த ராஜதந்திரி செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

லண்டனில் முன்னர் பணியாற்றிய இந்த ராஜதந்திரி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு காரணமாக ஸ்ரீலங்காவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவ் இணையத்தள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் 'பவ்ரல்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை

- அஜாதசத்ரு -

கிழக்கில் அண்மைய காலங்களில் மிக மோசமாக அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களும் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரதான நோக்காகக் கொண்டுள்ள முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் மிகவும் மோசமானதோர் நிலைமைக்கு வழிவகுத்து வருவதையே காணக்கூடியதாகவுள்ளது.

கடந்தமுறை ஜெனீவாவில் இடம்பெற்ற அரசு - விடுதலைப்புலிகள் சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- வரதர் அணி மற்றும் கருணா குழு என்பவற்றின் மாவட்டப் பொறுப்பாளர்கள் அவர்களுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் அவர்கள் செயற்படும் மறைவிடங்கள் என்பனவும் எழுத்துமூலம் வழங்கப்பட்டது.

இதெல்லாவற்றிற்குமப்பால் அரசுக்கு வழங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட விபரத்தில் மிகவும் கவனிக்க வேண்டியதொரு விடயம் 'கிழக்கில் ஜிகாத்' என்ற பெயரில் இயங்கும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பானதாகும்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம், நூர்தீன் ஷரோம், பஷீன் ஷரோம், குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழு- ஆயுதக்குழுவின் முழு விபரமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறான சிறுசிறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் பல்வேறு மோதல்களுக்கும் விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.

இவற்றின் பிரதான தளங்களாக கிழக்கில் மூதூர், கிண்ணியா, தோப்பூர், ஓட்டமாவடி ஏறாவூர், காத்தான்குடி, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் இயங்குவதும் கவனிக்கத்தக்கது.

கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற மார்க்கப் பிரச்சினை சம்பந்தமான இரு தரப்பினருக்குமிடையிலான மோதல்களின் போதும் கூட கைக்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் என்பனவும் இடம்பெற்றது கவனிக்கத்தக்கது.

இவை நன்கு பயிற்சியளிக்கப்பட்ட நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகும் என்று பொலிஸ் விசாரணைகள் மூலம் பின்னர் அறியவந்தது.

இதனைவிட ஓட்டமாவடி, ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் ஜிகாத் என்ற பெயரில் செயற்பட்ட ஒரு முஸ்லிம் ஆயுதக் குழு அப்பகுதியில் உள்ள வீடியோக் கடைகளை மூடுமாறும் சூதாட்டம் மதுபாவனையில் ஈடுபட வேண்டாமென்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்திருந்தது.

கடந்த வருடம் ஆரம்பத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வீடியோக்கடைகளை மூடுமாறும் அச்சுறுத்தியது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.

இதெல்லாவற்றிற்குமப்பால் கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான மோதல்களுக்கும் முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றே பின்னணியிலிருந்து செயற்பட்டதாகவும் அறியவருகிறது.

இதெல்லாவற்றிற்குமப்பால் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் பின்னணியிலேயே இந்த ஆயுதக் குழு செயற்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மேலும், கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் முக்கிய அரசியல்வாதிகளுக்கிடையேயான மோதல் சம்பவங்களின் போது கூட இவ்வாறான ஆயுதக் குழுக்களின் பின்னணியும் தொடர்புபட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்பினராலேயே குற்றஞ்சாட்டப்பட்டதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தமிழ் இளைஞர்களைப் போன்று முஸ்லிம் இளைஞர்களும் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகிய தமிழ்ப் போராட்ட அமைப்புகளில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்று தியாகம் செய்த வரலாறும் ஒன்று உள்ளது.

இதனைவிட தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்க அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவினரின் வருகை உள்வாங்கப்பட்ட போது அதற்கெதிராக கிழக்கில் வீதிகளில் இறங்கி முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் மறக்க முடியாது.

இந்த நிலைமையை மாற்றியமைக்கவே சிங்களப் பேரினவாதம் அப்போதிருந்த கிழக்கின் முஸ்லிம் தலைமைகளுடன் பேரம்பேசி முஸ்லிம் ஊர்காவல்படை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை தமிழர்களுக்கு எதிரான மோதலுக்குள் தள்ளி வீழ்த்தியது.

இந்த நடவடிக்கைகளுக்கு அப்போதிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமே பிரதான பங்காளியாக இருந்ததை எவரும் மறுத்துவிடமுடியாது.

கிழக்கில் இரண்டாவது ஈழ யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற தமிழர் அழிப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் ஊர்காவல் படையினரையேஇ அரச படையினர் பயன்படுத்தினர் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

சிங்களப் பேரினவாதத்தால் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் அதன் எதிரொலியாக முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற சம்பவங்களும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே மறக்கமுடியாத கசப்பான வரலாற்றை தோற்றுவித்தது.

இவ்வாறானதோர் நிலைமைகளுக்கு மத்தியில் தான் மீண்டும் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களை உருவாக்கும் முயற்சிகளில் அரச படையினர் மட்டுமன்றி வேறு பல அந்நிய சக்திகளும் ஈடுபட்டு வருகின்றதாகவே அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கிழக்கில் ஜிகாத் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்தவொரு பெயரிலும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் எதுவுமில்லையென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ள நிலையில் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான விபரங்கள் தம்மிடமுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.


தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான நல்லுறவை சீர்குலைப்பதற்கான பேரினவாத சக்திகளின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமையும் அதிக கரிசனை எடுப்பது இன்றைய தருணத்தில் அவசியமானதொன்றாகும்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்னி உங்கள் நேரத்துக்கும் இணைப்புக்கும் உங்கள் பதிவுகளை இந்திய தமிழ்நாட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு அனுப்பினேன் அநேகர் இலங்கை தமிழ் முஸ்லிம்களை சிங்களவர்களுக்கு எதிராக கருத்து வைப்பது போலவே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக    கருத்து வைத்தனர் .

இவங்களில் ஒரே ஒரு மனிதர் மட்டும் எப்படி தப்பி பிழைத்தார் என்று கூடவே வேறு கேட்கிறார்கள் அந்த மாமனிதன் அப்துல் கமீத் வானொலி அறிவிப்பாளர் .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 7/7/2024 at 18:37, பெருமாள் said:

நன்றி நன்னி உங்கள் நேரத்துக்கும் இணைப்புக்கும் உங்கள் பதிவுகளை இந்திய தமிழ்நாட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு அனுப்பினேன் அநேகர் இலங்கை தமிழ் முஸ்லிம்களை சிங்களவர்களுக்கு எதிராக கருத்து வைப்பது போலவே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக    கருத்து வைத்தனர் .

இவங்களில் ஒரே ஒரு மனிதர் மட்டும் எப்படி தப்பி பிழைத்தார் என்று கூடவே வேறு கேட்கிறார்கள் அந்த மாமனிதன் அப்துல் கமீத் வானொலி அறிவிப்பாளர் .

மிக்க மகிழ்ச்சி... வரலாறுகளை மறந்தால் நாம் தான் பலிகடா ஆக்கப்படுவோம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

விடுதலைப் புலிகள் கைதுசெய்த ஊர்காவல் படையினரை தமிழீழ காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உந்துருளியில் சென்ற போது மார்ச் 14ஆம் திகதி பிடிபட்ட இரண்டு ஊர்காவல் படையினரையும் தமிழீழக் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சம்பூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். வாழைச்சேனையைச் சேர்ந்த திரு.சித்திக் ரெசீன் (23) மற்றும் தோப்பூரைச் சேர்ந்த திரு.ஹனிபா அன்சார் (30) ஆகிய இரு ஊர்காவலர்களை வழமையான நடைமுறையின்படி தமிழீழ நீதிமன்றம் விடுதலை செய்ய முடியும் என விடுதலைப் புலிகளின் திருகோணமலைப் பொறுப்பளர்கள் மேலும் சந்திப்பில் தெரிவித்தனர்.

ads.jpg

கைது செய்யப்பட்ட முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் சம்பூரில் விடுதலைப் புலிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் காட்டப்பட்டனர். 
படிமப்புரவு: தமிழ்நெற்

உசாவலின் போது ஊர்க்காவல் படையினர் முக்கிய தகவல்களை வெளியிட்டதாக புலிகளின் அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

“மது போதையில் இருந்ததால் மஹிந்தபுர படை முகாமைத் தவிர்க்க விரும்பியதால், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சிலம்பற்றுப் பிரிவில் அமைந்துள்ள வீதியின் ஊடாக மட்டக்களப்பு நோக்கி உந்துருளியில் சென்றபோது மார்ச் 14ஆம் திகதி புலிகளால் கைது செய்யப்பட்டோம். மேலும் எங்களிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை" என்று இரண்டு ஊர்க்காவல் படையினரும் செய்தியாளர் சந்திப்பில் ஒரு வினாவிற்கு மறுமொழியளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயுதக் குழுக்கள் குறித்து ஊர்க்காவல் படையினரிடம் கேள்வி தொடுத்தபோது, "மூதூர், தோப்பூர் பகுதிகளில் ஜிகாத் குழு தொழிற்படுகிறது. நாசர், மஃபரிங், தௌபீக், கந்தப்போடி ராசிக், நந்து, வண்டிக்குட்டன் ஆகியோர் மூதூரில் ஜிகாத் குழுவை வழிநடத்துகின்றனர். ஹாஜா மொஹிதீன், உபைபுலா, நிஜாம்தீன், சலீம்தீன் ஆகியோர் தோப்பூரில் ஜிகாத் குழுவை வழிநடத்துகின்றனர். எவ்வாறெயினும் ஜிகாத் குழுவுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஜிகாத் குழு உறுப்பினர்களுக்கு அதிகாரிகளுடன் தொடர்புள்ளது."

adsa.jpg

படிமப்புரவு: தமிழ்நெற்

வாழைச்சேனை காவல்துறையில் பணிபுரிவதால் கருணா குழுவுடன் தொடர்பு உள்ளதா என ஊர்காவல் படையினர் இருவரிடமும் வினவிய போது, “தீவுச்சேனைக்கு உறவினரை பார்க்க சென்ற போது படைமுகாமிற்கு அருகாமையில் கருணா முகாம் அமைந்துள்ளதாக அறிந்தோம். கருணா முகாமின் உறுப்பினர்கள் படைமுகாமின் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கருணா குழு உறுப்பினர்களை அப்பகுதியில் உள்ள ஈபிடிபி முகாமில் சந்தித்து வருவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது".

விடுதலைப் புலிகள் தம்மை மிகவும் சிறப்பாக நடத்துவதாகவும், விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து அறிந்துள்ளதால் மகிழ்ச்சி அடைவதாகவும் ஊர்க்காவல் படையினர் இருவரும் தெரிவித்தனர்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 24/3/2006
  • பக்கம்: 1, 14

 

விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் ஊர்காவலரும் விடுதலை : மூதூர், சம்பூரில் வைத்து ஒப்படைப்பு

மூதூர்,மார்ச் 24 

மூதூரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இரு முஸ்லிம் ஊர்காவலர்கள் நேற்று முஸ்லிம் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மூதூர் கிழக்கு, சம்பூரிலுள்ள திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் தோப்பூர் மற்றும் மூதூர் பள்ளிவாசல் சபைகளின் தலைவர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இருவரையும் திருமலை கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார்.

கடந்த மார்ச் 14ஆம் திகதியன்று மது போதையில் இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஈச்சிலம்பற்று பகுதிக்குள் உள்நுழைந்ததையடுத்து கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம்களின் ஜிகாத் குழு, கருணா குழு ஆகியன பற்றி பல உண்மைத் தகவல்களை இந்த இரு ஊர்காவலர்கள் வெளியிட்டனர்.

இந்த நிலையில் முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையேயான நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையிலும், புரிந்துணர்வை உருவாக்கும் வகையிலும் இரண்டு ஊர்காவலர்களையும் புலிகள் விடுவித்து அவர்களை முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கையளித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. 

(க- 3)

*****

  • தொகுப்பாளர் குறிப்பு: இச்செய்தியின் ஆங்கில வடிவத்தை தமிழ்நெட்டில் வாசிக்குக (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17549)

 

The released two home guards (extreme left) are seen with Muslim religious leaders, Mr.Elilan, SLMM Trincomalee head Mr.Ove Jansen..jpg

ஒப்படைக்கப்பட்ட போது நிழற்படத்திற்கு அனைவரும் ஒன்றாக பொதிக்கின்றனர். இவர்களுடன் இ.போ.க.ச. திருமலை பொறுப்பாளர் திரு. ஓவ் ஜான்செனும் நிற்பதைக் காண்க. படிமப்புரவு: தமிழ்நெற்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • வலைத்தளம்: புதினம்
  • திகதி: 28/03/2006
  • கொழுவிhttps://www.puthinam.com/ 

 

கிழக்கில் உதயமாகிறது சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ "ஜிகாத்" குழு!

சிறிலங்கா இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணியை உருவாக்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இது தொடர்பில் கூறியதாவது:

இராணுவ முஸ்லிம் படையணியின் தேர்வுக்கான நேர்காணல் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. அம்பாறையில் எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் நாள் வரை இந்த நேர்காணல் நடைபெறும். இப்படையணியில் மொத்தம் 500 பேர் இணைக்கப்பட உள்ளனர் என்றார் சமரசிங்க.

இது தொடர்பிலான விளம்பரம், சிறிலங்கா அரச ஊடகமான கடந்த ஞாயிறன்று சண்டே ஓப்சர்வரில் வெளியாகி இருந்தது.

புதிதாகச் சேர்க்கப்பட உள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிமாகவும் 8 ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் இருக்க வேண்டும்.

ஒரு நபருக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாய். இதில் போக்குவரத்து, மருத்துவ சலுகைகள், தங்குமிடம் அனைத்தும் அடங்கும்.

கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்களின் துணை இராணுவக் குழுவான ஜிகாத் குழு இயங்கி வருகிறது என்றும் இது பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வுத்துறை உதவியுடன் இயங்குவதாகவும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பிலான ஆதாரங்கள் உள்ளன என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் "இராணுவத்தில் முஸ்லிம் படையணி" என்பதும் இந்தப் படையணி கிழக்குப் பிரதேசத்தில் மட்டுமே இயங்கும் என்பதும் ஒரு உத்தியோகபூர்வமான ஜிகாத் குழுவை உருவாக்கும் நடவடிக்கையாகவே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சிறிலங்காவின் கிழக்குப் பிரதேசத்தில் இயங்கும் இந்த முஸ்லிம்கள் குழுக்களின் நீண்டகால செயற்பாடுகள் பற்றிய ஒரு தொகுப்பு:

தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை தொடக்கத்தில் இணைத்துக் கொண்டு தமிழர்கள் மீதான பாரிய படுகொலைகளை சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டது.

இதற்கு வீரமுனை கிராமப் படுகொலையை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீரமுனை என்கிற தமிழ்க் கிரமாமமானது பல முஸ்லிம் கிராமங்களைச் சூழ்ந்து அமைந்தது. மட்டக்களப்பு நகரிலிருந்து 38 கிலோ மீற்றர் தென்மேற்கில் இக்கிராமம் உள்ளது.

1990 ஜூன் மாதம் 11 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையேயான யுத்தம் தொடங்கிய போது வீரமுனை கிராமம் 3 பாரிய படுகொலைகளைச் சந்திக்க நேர்ந்தது.

ஜிகாத் அமைப்பு, சிறிலங்காவின் "ஊர்காவல்" படையினர், சிறிலங்கா அரசாங்கத்தினது இராணுவம், சிறப்பு அதிரடிப்படை ஆகியவை இந்தப் படுகொலைகளை நடத்தின.

தமிழ்க் கிராமங்களில் யுத்த காலத்தில் படுகொலைகளையும் மனித உரிமைகளையும் மீறியதில் பாரிய பங்களிப்புச் செய்தது சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை.

1990 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று மேலே குறிப்பிட்டுள்ள குழுவினருடன் இணைந்து கொண்ட சிறிலங்கா இராணுவம் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து கொண்டுவெட்டுவான் முகாமுக்குக் கொண்டு சென்றது.

பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அனைவரையுமே படுகொலை செய்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடைமைகளையும் வீடுகளையும் எரித்து நாசப்படுத்தினர்.

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் சிறப்பு அதிரடிப்படையினர், ஜிகாத் அமைப்பில் உள்ள முஸ்லிம்கள், ஊர்க்காவல் படையினர் வீரமுனை கிராமத்தைச் சுற்றிவளைத்தனர்.

முன்னைய பாரிய படுகொலைச் சம்பவங்களால் அச்சமடைந்த அம்மக்கள் சிந்தையாதிரை பிள்ளையார் ஆலயத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் ஆலயத்துக்குள் உள்நுழைந்த முஸ்லிம் தீவிரவாத இளைஞர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் ஆலயத்திலேயே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 56 பேரை படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர்.

இந்தப் படுகொலைகளால் வீரமுனை கிராமமே ஒட்டுமொத்தமாக வெளியேறி காரைதீவு அகதி முகாமுக்கு இடம்பெயர்ந்தது. 1993 ஆம் ஆண்டு இக்கிராமத்தினர் சிலர் வீரமுனை கிராமத்துக்குத் திரும்பினர். பெருமளவானோர் இன்னமும் அகதி முகாம்களிலே வசித்து வருகின்றனர்.

1998 ஆம் ஆண்டு அம்பாறை அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.என்ற முஸ்லிம் ஆயுதக் குழு உருவானது. இக்குழுவானது முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தமிழர்கள் உள்நுழவதைத் தடை செய்வதாக அறிவித்தது. இத்தகைய பெயரில் 1985, 1990 ஆண்டுகளில் தமிழர் விரோத சக்திகள் ஒரு குழுவை உருவாக்க முனைந்துள்ளனர். அக்குழுவினர் 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5 ஆம் நாள் வெளியிட்ட துண்டறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கைகளை முஸ்லிம் பகுதிகளில் கைவிட வேண்டும் என்று எச்சரித்தது.

இருப்பினும் இக்குழுவின் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவான சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை இருப்பதாக செய்திகள் வெளியாகின.

1999 ஆம் ஆண்டு அபுசாலி ஜூலியா (வயது 34) என்ற ஏறாவூர் தாமரைக்கேணியைச் சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திருமணமான வேறு ஒரு ஆணை விரும்பியதால் இஸ்லாமிய மதச் சட்டத்தை அப்பெண் மீறியதாகக் கூறி முஸ்லிம் ஆயுதக் குழுவினர் படுகொலை செய்தனர்.

அதன் பின்னர் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறத் தொடங்கிய 2002 ஆம் ஆண்டு சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரால் பாரிய படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிற ஊர்காவல் படையில் உள்ள 23 ஆயிரம் பேரினது எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த விரிவாக்கம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

கற்பிட்டியில் ஜூன் மாதம் 21 ஆம் நாள் ஊர்காவல்படையினர் முகாமில் ஜோன் அமரதுங்க பேசியதாவது:

சிறிலங்கா காவல்துறையினரது கடமைகளை ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையினரை விட குறைவான ஊதியம் பெறுகின்றனர். நாளாந்த ஊதியமே ஊர்காவல் படையினருக்கு வழங்கப்படுகிறது.

அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஊர்காவல் படை கலைக்கப்படமாட்டாது. மாறாக அது வலுப்படுத்தப்படும் என்றார்.

இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜூன் 23 ஆம் நாள் (2002) விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கையில்,

முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை ஒப்புக் கொண்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான நல்லிணக்கச் சூழலைச் சீர்குலைக்கும் வகையில் சில சக்திகள் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அமைதியை விரும்புகிற அனைத்து முஸ்லிம்களும் இத்தீவிரவாதக் குழுக்களின் செயற்திட்டங்களுக்குப் பலியாகாமல் அமைதிக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் மீதான இத்தாக்குதலையடுத்து தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பதற்றம், மோதல் ஏற்பட்டது.

அப்போது மக்கள் நடத்திய பாரிய அளவிலான பேரணியில் "ஒசாமா" குழு எனப்படுகிற முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது.

ஒசாமா குழு என்றும் ஜிகாத் குழு என்றும் இயங்கி வந்த இக்குழுவை சிறிலங்கா இராணுவம் இயக்கியது. அதன் தலைவராக ஹக்கீம் என்பவர் செயற்பட்டு வந்தார்.

ஜூன் மாதம் 26ஆம் நாள் (2002) இல் பி.பி.சி. தமிழோசை நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த தமிழ் ஊடகவியலாளர் பி. சதாசிவானந்தத்தின் மூதூர் இல்லம் மீது மீண்டும் ஒசாமா அணி என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த ஜிகாத் குழு தாக்குதல் நடத்தியது.

சதாசிவானந்தம் நடத்திய ஆதரவற்ற சிறார் விடுதியையும் இந்த ஜிகாத் குழு தாக்கியது.

மூதூரில் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 6 பேர் பலியாயினர்.
வன்முறைப் பகுதிகளை பார்வையிடச் சென்ற சிறிலங்கா உள்விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிய கதையாக ஒரு உண்மையையும் அவர் ஒப்புக் கொண்டார். 

அமைச்சராக இருந்த ஜோன் அமரதுங்க, கடந்த வாரம் (2002 ஜூன் 23 ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை) நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பின்னால் மறைமுகமாக ஒரு சக்தி இயங்குவதாக அரசாங்கம் நம்புகிறது என்று கூறினார்.

இந்தக் காலகட்டத்தில்தான் இத்தகைய தீவிரவாதக் குழுவினரைக் கொண்டு சிறிலங்காவின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக முஸ்லிம் ஊர்க்காவல் படை வலுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் இந்த ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.

தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபக்கம் தனது துணைப் படைகளில் இணைத்துக் கொண்டிருந்த நிலையில் - சர்வதேச அளவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிற லஸ்கர் இ தொய்பா, சிறிலங்காவின் ஆசீர்வாதத்துடன் கிழக்கில் கால் பதித்தது.

சிறிலங்காவின் கிழக்கில் ஜிகாத் குழுவாக அறியப்படுகிற இந்தக் குழு பாகிஸ்தானின் உதவியுடன்தான் இயங்கி வருவதாக கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தியாவும் எச்சரித்திருந்தது.

இந்தியாவின் "அவுட்லுக்" வார ஏட்டில் இது தொடர்பான கட்டுரையும் வெளியாகி இருந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பி.ராமன், முஸ்லிம் ஜிகாத் குழு தொடர்பிலான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அப்போது சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக ஓய்வு பெற்ற இராணுவ கேணல் பசீர் வாலி நியமிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தை நிராகரிக்குமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தார்.

அவர் எழுதிய கட்டுரையின் விவரம்:

இந்தியாவுக்கு எதிராக கொழும்பை பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நேரடியாக பயன்படுத்துவது தொடர்பில் எதுவித ஆதாரமும் இல்லை. இருந்தபோதும் சிறிலங்காவின் கிழக்கில் உள்ள முஸ்லிம்களை ஜிகாத் குழுவில் சேர்ப்பது தொடர்பாக லஸ்கர் இ தொய்பா அமைப்பு ஆர்வம் காட்டுகிறது.
கிழக்கு மாகாண தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தீவிரவாத உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது.

2002 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நடந்த இன வன்முறைகளுக்கு மத்தியில் "ஒசாமா படையணி" என்பது தீவிரமாகச் செயற்பட்டது.

பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் லஸ்கர் இ தொய்பா நெருங்கிய தொடர்புகொண்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இராஜதந்திர நிலையில் தனது இரு அதிகாரிகளை நியமனம் செய்திருந்தது.

இது போன்ற செயற்பாடுகள் மூலம் கொழும்பை தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிடுவதாக தெரிகிறது.

ஏனெனில் இந்தியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் செயற்பாடுகள் பல தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இவை தொடர்பிலான தரவுகளைச் சேகரிக்க கிழக்கில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தலாம்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இந்திய உளவாளிகள் இரகசியமாக கராச்சி செல்வதற்காக கொழும்பு வழியை பயன்படுத்துகின்றனர். கொழும்பில் அத்தகைய நபர்களது கடவுச் சீட்டுகளில் சிறிலங்காவில் நுழைந்தமைக்கான பதிவுகளை சிறிலங்கா செய்வதில்லை என்றும் இராமன் தெரிவித்திருந்தார்.

"அவுட்லுக்" இதழ் வெளியிட்டிருந்த இக்கட்டுரையை 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் நாளன்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தது.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட மறுப்பறிக்கை:

இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்கிறது.

இந்திய உளவு அமைப்பான றோவின் முன்னாள் செயற்பாட்டாளரால் தவறான தகவலை பரப்பும் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எதுவித ஆபத்தான சூழ்நிலை உணரப்பட்டாலும் பாகிஸ்தான் மீது பகைமையைத் தூண்டு வகையில் ஐ.எஸ்.ஐ. மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று அந்த மறுப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானிலிருந்து இயங்குகிற காஸ்மீர் ஆயுதக் குழு லஸ்கர் இ தொய்பா. மர்கஸ் தாவா- வல்- இர்ஸாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் ஆயுதக் குழுதான் லஸ்கர் இ தொய்பா.

இச்சூழலில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொத்துவில் முஸ்லிம் பகுதியில் புத்தர் ஆலயம் அமைக்க பேரினவாத சக்திகள் முயற்சித்தன. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன.

இதைக் கண்டித்து ஏப்ரல் 12ஆம் நாள் (2005) கொழும்பில் சிங்கள பௌத்த தேசியவாதிகள், பௌத்த பிக்குகள் கண்டனப் பேரணி நடத்தினர்.

அந்தப் பேரணி முடிவில் புத்த சாசன அமைச்சுவிடம் சிங்களப் பேரினவாதிகள் கையளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

பொத்துவில் பிரதேசத்தில் சட்டபூர்வமான பௌத்த மத செயற்பாடுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், ஆயுதமேந்திய முஸ்லிம் தீவிரவாதிகளும் எதிர்க்கின்றனர். இந்த முஸ்லிம் ஆயுதக் குழுவினர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டிய போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் கல்முனையில் இரு சிறிலங்கா காவல்துறையினர் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பேரணியை ஜாதிக ஹெல உறுமய நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜிகாத் குழுவின் தலைவராக குற்றம்சாட்டு வந்த அப்துல் சமது அப்துல் ஹக்கீம் என்ற மதுகர ஹக்கீம் (வயது 42) அடையாளம் தெரியாத நபர்களால் மூதூர் பளை நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவ நாளன்று மோட்டார் சைக்கிளில் தனது ஹலால் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது. எப்போதும் அவருடன் இருக்கும் 6 பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த போது உடனிருக்கவில்லை.

கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ முகாமிலிந்து 500 மீற்றர் தொலைவில் மூதூர் பிரதான வீதியில் ஹக்கீம் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜிகாத் குழுவினரிடையிலான உள்மோதல் அல்லது வர்த்தக மோதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர்.

1985, 1990, 1995 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பாரிய அளவில் நடைபெற்ற தமிழ், முஸ்லிம் வன்முறைகளில் தொடர்புபட்டவர் இந்த ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் மீது ஜிகாத் குழு இயங்குகிறது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டன.

இந்த அறிக்கையின் விவரங்களை கொழும்பு ஆங்கில நாளேடான "சண்டே லீடர்" பகிரங்கப்படுத்தியிருந்தது.

ஜிகாத் குழுவின் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த திருகோணமலையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 22 ஆம் படையணியில் மேஜர் தரத்திலான அதிகாரி, புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.

சிறிலங்காவின் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஊடாக ஜிகாத் குழுவினருக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன என்பதையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது.

இருப்பினும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பாகிய பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி றொட்ரிக்கோ, கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளியிட்ட போது கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுதக் குழு இயங்குகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.

அவருக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் போராட்டம் நடத்திய போதும் தான் ஜிகாத் குழு என்று சொல்லவில்லை சில ஆயுதக் குழுக்கள் இயங்குகிறது என்று மீண்டும் விளக்கமளித்தார்.

அண்மையில் முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுத்த பல முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தாக்கி அச்சுறுத்தியிருந்தது.

முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக் குழுக்கள் இயங்குவது தொடர்பான செய்திகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் நேரடியாக பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர்.

இருப்பினும் முஸ்லிம் தலைவர்கள் பகிரங்கமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக்குழுவில் இணைவதற்கான சூழல் இருப்பதாக எச்சரித்து வந்தனர்.

அண்மையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் முஜிபுர் ரகுமான் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதமேந்துகிற உரிமை இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.

கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுத நடமாட்டத்தை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார்.

"அப்பிரதேசத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் நடமாடலாம் ஆனால் அவர்கள் ஆயுதக் குழுவினரா? ஜிகாத் குழுவினரா என்பது எமக்குத் தெரியாது என்று பிரசாத் சமரசிங்க கூறியிருந்தார்.

சிறிலங்கா இராணுவமானது முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரை முதலில் ஊர்காவல் படையில் இணைத்து உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக செயற்படுத்தியது.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் துணையுடன் ஜிகாத் குழுவை உருவாக்க அனுமதித்து தெற்காசிய பிராந்திய அமைதிச் சீர்குலைவுக்கு உடந்தையாக சிறிலங்கா செயற்பட்டு வருகிறது.

இதனிடையே ஜெனீவா பேச்சுக்களில் இந்தக் குழுவினரை விடுதலைப் புலிகள் பகிரங்கப்படுத்தி சர்வதேச சமூகத்தின் முன்னர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திவிட்டனர்.

இதனால் சர்வதேச சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற நடுக்கத்தில்-

உத்தியோகப்பூர்வமான ஜிகாத் குழுவாக-

"கிழக்குப் பிரதேச சிறிலங்கா இராணுவ முஸ்லிம் படையணி"யை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 04/4/2006
  • பக்கம்: 1, 14

 

இராணுவத்தில் முஸ்லிம் படையணி தேவையற்ற ஏற்பாட்டு நடவடிக்கை: அகில இலங்கை முஸ்லிம் சபை தெரிவிப்பு

"இலங்கை இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணி ஒன்றை தோற்றுவிக்க முனைவது தேவையற்ற ஒரு நடவடிக்கையாகும்." -இவ்வாறு அகில இலங்கை முஸ்லிம் சபை தெரிவித்துள்ளது என இணையத்தளம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

மேற்படி அமைப்பின் செயலர் எம்.எப். மொகைதீன் இந்தக் கருத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்தவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:- 

எமது அகில இலங்கை முஸ்லிம் சபையானது மறைந்த சேர். ராசிக் பரீத்தினால், 1921ஆம் ஆண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த அமைப்பில் முஸ்லிம் சமூகத்தின் பல்கலைக்கழக கல்விச் சமூகம், அரச மற்றும் தனியார்துறை தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள் அனைவரும் இணைந்து செயற்படுகின்றனர். எம்மைப் பொறுத்தவரை தனி முஸ்லிம் படையணி அமைக்கப்படுவது அவசியமற்ற ஒன்றெனவே கருதுகிறோம்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் படையணி அமைக்கப்படும் என்று அரசு கூறுகிறது. இது எதிர்காலத்தில் சாத்தியமான ஒருவிடயமல்ல. முஸ்லிம்கள் அனைத்து மாகாணங்களிலும் அனைத்து
மதத்தவர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்.

எங்களுக்குத் தெரிந்தவரையில் எந்தவொரு நாட்டின் இராணுவத்திலும் தனி ஒரு இனத்துக்காக அல்லது சமூகத்துக்காக ஒரு படையணி உருவாக்கப்பட்டதாக வரலாறு இல்லை. இந்நிலையில் பல்லின கலாசாரம், பல்லின மதங்கள் உள்ள எமது நாட்டில் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பானது இனங்களின் அடிப்படையில் இருக்கத்தேவையில்லை என்பதே எமது கருத்தாகும். எனவே, இவ்விடயத்தில் தாங்கள் கூடிய கவனம் செலுத்தி இந்த நடவடிக்கையை உடன் நிறுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் - எனத் தெரிவித்துள்ளார்.

(எ-க)

*****

  • தொகுப்பாளர் குறிப்பு: இக்கடிதத்தின் ஆங்கில வடிவத்தை தமிழ்நெட்டில் வாசிக்குக (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17661)

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

திராய்க்கேணி படுகொலையின் 21வது ஆண்டு நினைவு நாள்

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி ஊரில் சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையின் ஆதரவுடன் முஸ்லிம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட 47 தமிழ் பொதுமக்களின் இருபத்தியோராம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் மட்டக்களப்புக்கு தெற்கே 70 கி.மீ தொலைவில் திராய்க்கேணி ஊர் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 5, 1990 அன்று திகவாபி ஊரில் சிறப்புப் படையினரால் 13 முஸ்லிம் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்குப் பகரடியாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்குவதற்காக சிறப்பு அதிரடிப்படை முஸ்லிம் தொழிலாளர்களை படுகொலை செய்தது.

மறுநாள் சிறப்பு அதிரடிப்படை ஆளணியினரின் காப்புடன் முஸ்லிம் குற்றவாளிகள் குழுவொன்று தமிழர்களை அவர்தம் உற்றார் உறவினர் முன்னிலையில் கொன்றனர்.

முதியவர்களை அவர்தம் வீடுகளில் எரித்துக் கொன்றனர்.

350க்கும் மேற்பட்ட வீடுகள் முஸ்லிம் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகும், படுகொலைக்காக யாரும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படவில்லை.

இந்தப் படுகொலை குறித்து உசாவல் நடத்துமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுத்துவந்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் இ.மயிலப்போடி அவர்கள் 1997ஆம் ஆண்டு துணைப்படைக் குழுக்களாலும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களாலும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச கடந்த வாரம் வெளியிட்ட தனது தவறுத்தகவல் அறிக்கையில் காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டிருந்த போதிலும் கிழக்கில் நடந்த தமிழ்ப் படுகொலைகளை குறிப்பிடத் தவறியதாக அம்பாறையில் உள்ள தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

    செய்திகள்

 

 

ஆறு மாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

 

ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த என்னுடைய மனைவி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் மூலம் சுட்டும் வெட்டியும் மிகக் கோரமான முறையில் படுகொலை செய்ததுடன் அவர்களை அரைகுறையாக எரித்து மடு ஒன்றில் போட்டிருந்தனர் அவர்களின் ஆடைகளை வைத்து தான் நாம் எமது உறவினர்களின் சடலங்களை அடையாளம் கண்டோம். என தனது ஆறுமாதக் கர்ப்பிணி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை பறிகொடுத்த மரியசீலன் தெரிவித்துள்ளார்.


மொத்தமாக சவுக்கடிக் கிராமத்தைச் சேர்ந்த 26 பேரும் ஊரணி போன்ற வெளியிடங்களில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து 33 பேர் அந்த நேரத்தில் படுகொலை செய்யப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணித்தாய் உட்பட 33 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டதன் 28ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று வவுக்கடி நினைவு இல்லத்தில் நடைபெற்றது.

ஆண்டுகள் பல கடந்தும் இதுவரையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் கூறுகின்றார்கள்.


1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

கப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடை அணிந்த இராணுவத்தினரே அந்த காலப்பகுதியில் இது போன்ற படுகொலைகளில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் உண்டு.

மட்டக்களப்பில் செப்டெம்பர் படுகொலைகள் என்பது 1990 ஆண்டு நடைபெற்ற படுகொலைகளையே சொல்லப்படுகிறது.

1990 ஆண்டு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களை வெட்டுப்பாட்டி என்ற இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்த முஸ்லீம் ஊர்காவல் படையினருமே இணைந்து தமிழ் மக்களை வகை தொகை இன்றி படுகொலை செய்தமைக்கு இந்த சவுக்கடிப் படுகொலைகளும் சாட்சியாக உள்ளது.

துப்பாக்கியால் சுட்டும் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர் இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழுவினர் சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சிங்களத்திலும் தமிழிலும் பேசிக்கொண்டார்கள். அவ்வேளை நிலவிய சூழ்நிலையில் அவர்களை அருகாமையில் சென்று அடையாளம் காண முடியவில்லை என்கின்றார் மீனவரான ஜி. மரியசீலன்.

சவுக்கடி கிராமம் ஏறாவுர் முஸ்லிம் பிரதேசத்திற்கு அண்மித்த கிராமம் என்பதால் இந்த படுகொலைச் சம்பவத்துடன் முஸ்லிம்களும் தொடர்புபட்டிருப்பதாக தமிழர் தரப்பில் சந்தேகங்கள் உள்ளன.


1990ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் இன ரீதியான மோதல்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே இந்தச் சந்தேகம் இருந்தாலும் பொறுப்பானவர்கள் யார்? என்பதை தங்களால் உறுதிபடக் கூற முடியாது எனவும் மரியசீலன் குறிப்பிடுகின்றார்.

28 வருடங்களுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத படுகொலைகளில் ஒன்றாக இந்த சவுக்கடிப் படுகொலையும் கடந்து செல்கின்றது.

இலங்கை அரசு இந்தப்படுகொலைகள் குறித்து உண்மைகளை கண்டறிவதற்கோ அல்லது இது போன்ற படுகொலைகள் மீள நிகழாமல் இருப்பதற்கோ எந்தவகையான அர்ப்பணிப்பையும் செய்ததாக தெரியவில்லை.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

இராணுவம், புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை

கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்கள் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் ஆகியன பிரகடனப்படுத்தி இருந்தன.

1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களும், ஜிகாத் முஸ்லீம் பயங்கரவாத குழுக்களும் வகைதொகை இன்றி படுகொலைகளை நடத்தி வந்தன.
கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின் உச்சக்கட்ட படுகொலையாக கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலை கருதப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்த 158 இளைஞர்கள் இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டனர். இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்ற போதிலும் இவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

றிசாட் டயஸ் அல்லது கப்டன் முனாஸ் என்று அழைக்கப்படும் இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச் சேர்ந்த மஜீத் உட்பட இராணுவ குழு ஒன்றே இவர்களை 11 பேருந்தில் கொண்டு சென்றனர்.

1990ல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர் நிறுத்தம் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வாளைச்சேனை வரையான மக்கள் பாதுகாப்பு தேடி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற வேளையில் அம்முகாமில் 55ஆயிரம் பொதுமக்கள் தங்கியிருந்தனர்.

சம்பவ தினம் காலை 6மணிக்கு முன்னரே அகதி முகமை இராணுவத்தினரும் புளொட் இயக்கத்தினரும் முஸ்லீம் ஜிகாத் குழுக்களும் சுற்றிவளைத்திருந்தன.

சம்பவ தினம் கொம்மாதுறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் களுவாராச்சி தலைமையிலான இராணுவத்தினருடன் மட்டக்களப்பு நகரில் இருந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளான கப்டன் முனாஸ் என அழைக்கப்படும் றிச்சட் டயஸ் கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் வந்திருந்தனர். 

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு பொறுப்பாக பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ஜெயசிங்கம், கலாநிதி சிவலிங்கம் ஆகியோர் இருந்தனர். அகதி முகாமுக்குள் நுழைந்த இவர்கள் தம்மை யார் என அறிமுப்படுத்தி கொண்டதாக அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான கலாநிதி ஜெயசிங்கம் தெரிவித்திருந்தார்.

இவர்களுடன் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேர் இராணுவ உடையுடன் கதிரையில் அமர்த்தப்பட்டிருற்தனர். இவர்களுக்கு பின்னல் ஏறாவூரைச்சேர்ந்த 7 முஸ்லீம்கள் நின்றனர். ஆண்கள் அனைவரும் வயது அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டனர். 12வயதிருந்து 25வயதுடையவர்கள் முதலாவது வரிசையிலும் 26வயதிலிருந்து 40வயதுவரையானவர்கள் இரண்டாவது வரிசையிலும் 40வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது வரிசையிலும் நிறுத்தப்பட்டனர்.

இவர்கள் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப்பட்ட போது அவர்கள் தலைமை ஆட்டினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று தலையாட்டிகளின் பின்னால் நின்ற முஸ்லீம்களும் சிலரை காட்டினர்.

இவ்வாறு தலையாட்டிகளால் அல்லது முஸ்லீம்களால் காட்டப்பட்ட 158பேர் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும் 24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு அப்போது இராணுவ தளபதியாக இருந்த ஹரி சில்வா சென்றிருந்தார். அப்போது அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்ற 158பேரின் நிலமை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி 158பேரும் குற்றவாளிகள் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. அவர்கள் பற்றி இனி பேசக்கூடாது என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார்.

இதன் பின்னர் செப்டம்பர் 23ஆம் திகதியும் அங்கு வந்த இராணுவத்தினர் மேலும் 16 இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கி.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் உட்பட நேரில் கண்ட சாட்சிகள் 40பேர் சாட்சியமளித்தனர்.

இந்த ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே 5ஆம் திகதி 158பேரையும், 23ஆம் திகதி 16பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் புளொட் மற்றும் முஸ்லீம் ஜிகாத் குழுவும் பதில் கூற வேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமை நிர்வாகித்து வந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி சிவலிங்கம், கலாநிதி ஜெயசிங்கம் ஆகியோரில் இன்று கலாநிதி ஜெயசிங்கம் மட்டுமே வாழும் சாட்சியாக உள்ளார். தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருக்கும் ஜெயசிங்கம் இச்சம்பவம் பற்றி 1996ஆம் ஆண்டு பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் 2004ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சியமளித்தார்.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 26வருடங்கள் கடந்து விட்ட போதிலும் காணாமல் போனவர்கள் அங்கிருக்கிறார்கள், இங்கிருக்கிறார்கள் என அலைந்து திரியும் அவலமே தொடர்கிறது. உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என கலாநிதி ஜெயசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக சம்பவம் நடந்து சரியாக நான்கு தினங்களின் பின்னர் 1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது.

சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவத்திலும் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல் படை என்பனவும் சம்பந்தப்பட்டிருந்ததாக அக்கிராமமக்கள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகள் ஒருவயதிற்கு குறைந்தவர்கள். எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்ட சிவகுமார் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்;ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.

சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் பற்றி அக்கிராமத்தை சேர்ந்த ஆசிரியரான சிவக்கொழுந்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.
இக்கிராமத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து வீடு வீடாக சென்று அனைவரையும் இராணுவ முகாமுக்கு வருமாறு உத்தரவிட்டனர். இராணுவத்தினருடன் புளொட் மோகன் தலைமையில் புளொட் இயக்கத்தினரும் ஏறாவூரை சேர்ந்த முஸ்லீம் ஊர்காவல் படையினரும் ஆயுதங்களுடன் வந்திருந்தனர்.

இராணுவ சுற்றிவளைப்பிலிருந்து தப்பி காட்டிற்குள் தான் ஒளித்திருந்ததாகவும் இரவு 7மணிக்கு பின்னர் இராணுவ முகாமிலிருந்து அவலக்குரல்கள் கேட்டதாகவும் ஆசிரியர் சிவக்கொழுந்து தெரிவித்தார். இந்த அவலக்குரல்கள் இரவிரவாக கேட்டன. நள்ளிரவுக்கு பின்னர் இராணுவ முகாமுக்கு பின்பக்கத்தில் தீச்சுவாலை தெரிந்ததாகவும் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிவக்கொழுந்து தெரிவித்திருந்தார்.

இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.

சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இக்காலப்பகுதியில் சுமார் 2600பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1990ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் மட்டுமன்றி கைது செய்யப்பட்டு ரயரில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களும் அதிகமாகும். 1990ஆம் ஆண்டு யூலை மாதத்திற்கு பின்னர் மட்டக்களப்பு புதுப்பாலத்தை அண்டிய வாவிக்கரைகளில் தினமும் ரயரில் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.

மட்டக்களப்பு பற்பொடி கொம்பனி என அழைக்கப்பட்ட இராணுவ புலானாய்வு பிரிவினரின் முகாமில் கப்டன் முனாஸ், மற்றும் புளொட் மோகன் இருந்தனர். இவர்களால் கைது செய்யப்படும் அப்பாவி பொதுமக்கள் சித்திரவதையின் பின்னர் உயிருடன் கழுத்தில் ரயரை போட்டு எரிக்கும் சம்பவங்கள் தினசரி நடந்தன. சடலங்கள் எரிந்த நிலையில் அரைகுறை உயிருடனும் காணப்படும்.

மிகப்பெரிய இனப்படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும் நடந்த அக்காலத்தை மறக்க முடியாது. இக்கொலைகளை இராணுவத்தினருடன் சேர்ந்து புளொட் போன்ற தமிழ் இயக்கங்களும் செய்தன.

புளொட் போன்ற தமிழ் இயக்கங்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்றன. கிழக்கில் நடந்த படுகொலைகளில் இந்த தமிழ் இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு இராணுவம் மட்டுமன்றி இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் இயக்கங்களும் சம்பந்தப்பட்டிருந்தன என்பதை பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறிவலம் வரும் பலரின் கைகளில் இரத்தகறை படிந்திருக்கிறது என்பதை கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

– இரா.துரைரத்தினம்-

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

 

புதுக்குடியிருப்பு படுகொலை 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் 17பேர் வெட்டிப்படுகொலைசெய்யப்பட்டு 27வது ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம திகதி நள்ளிரவு புதுக்குடியிருப்பு கடற்கரையினை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்த ஊர்காவல் படையினர் விசாரணை என கூறி பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என 44பேரை கூட்டிச்சென்று கடற்கரையில் வைத்து வாள், கத்தியால் வெட்டியதுடன் துப்பாக்கிசூடு நடத்தியும் தமது கொலைவெறி தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதில் ஐந்து மாணவர்கள் உட்பட 17பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 27பேர் படுகாயமடைந்ததுடன். ஒரு இரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த இன அழிப்பினை புதுக்குடியிருப்பு மக்கள் நினைவுத்தூபி அமைத்து படுகொலை தினமாக அனுஸ்டித்துவருகின்றனர்.

இன்றைய தினம் 27வது புதுக்குடியிருப்பு படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் அனுசரணையுடன் புதுக்குடியிருப்பு கிராம மக்களினால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் உறுப்பினர் மா.நடராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், புதுக்குடியிருப்பு புதுவை அமைப்பின் தலைவர் சதாசிவம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆலய தலைவர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி ஒரு நிமிட மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நன்னிச் சோழன் said:

செய்திகள்

 

  • புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008
  • எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம்
  • பக்கம்: -
  • நூல் வெளியீட்டு ஆண்டு: 2010

 

வீரமுனைப் படுகொலைகள், 20 யூன் 1990

Veeramunai massacre by Muslims

 

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவிற்கு மேற்காக நாற்பத்தைந்து கி.மீ தூரத்தில் வீரமுனைக் கிராமம் அமைந்துள்ளது. வீரமுனைக் கிராமத்திற்கு வடக்கே சொறிக்கல் முனையும் தெற்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் செழிப்பான வயல் நிலங்களும் அமைந்துள்ளன. வீரமுனை தமிழ்மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். சம்மாந்துறைப் பிரதேசம் போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் தென் கடற்கரையோரங்களிலிருந்து போர்த்துக்கேயரால் விரட்டப்பட்ட முசுலிம்கள் இடம்பெயர்ந்து குடியேறி வாழும் பிரதேசமாகும். இவ்விரண்டு பிரதேசங்களையும் இணைத்து சம்மாந்துறை நகரசபை அமைந்துள்ளது.

1954 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர்களுக்கிடையே தகராற்றினால் சம்மாந்துறை முசுலிம்கள் ஒரு சிலரால் வீரமுனைப் பிரதேசம் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரமுனை மக்கள் இடம் பெயர்ந்து காடுகளில் கணபதிபுரம், வீரச்சோலை போன்ற புதிய கிராமங்களை உருவாக்கினார்கள்.

1990 யூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இராணுவத்தினரால் வீரமுனைப் பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டது. சுற்றி வளைத்த இராணுவத்தினர் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை அருகிலுள்ள வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லுமாறு பணித்தனர்.ஆலயத்திற்குச் செல்லாது வீடுகளிலிருந்தவர்களை இராணுவத்தினர் சுட்டுப் பின்னர் வீட்டுடன் சேர்த்து எரித்தார்கள் வீதிகளில் நடமாடிய பலரும் இராணுவதத்தினராற் சுடப்பட்டார்க்ள். 1990.06.20 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு கனரக வாகனங்களில் வீரமுனைப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து இறங்கிய இராணுவத்தினா வீரமுனைப் பிரதேசத்தில் பல பிரதேசத்திலுமிருந்து தஞ்சமடைந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சுற்றிவளைத்து பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் கோயிலின் பின் வீதியில் ஒன்று சேருமாறு பணித்தார்கள். இவர்களில் அறுபத்தொன்பது இளைஞர்களை உறவினர்களின் முன்னிலையிற் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் சம்மாந்துறையிலுள்ள மார்ஜன் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவர்களில் ஐம்பது பேர்வரை இராணுவத்தினரால் சம்மாந்துறையிலுள்ள மலைக்காட்டுக்குள் உயிருடன் எரிக்கப்பட்டனர். மிகுதிப் பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

1990.06.29ஆம் திகதி மீண்டும் மக்கள் தங்கியிருந்த கோயிலுக்கு வந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களில் பலரைக் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்து சென்றார்கள்.

இவர்களில் எவருமே திரும்பி வரவில்லை. வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் தஞ்சமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அச்சுறுத்தலிலிருந்து தப்புவதற்காக இடம் பெயர்ந்து காரைதீவு மகாவித்தியாலயத்திற் தஞ்சமடைந்தார்கள். 1990.07.03 அன்று காரைதீவு மகாவிதத்தியாலயத்தை சுற்றி வளைதத் இராணுவதத்தினர் பாடசாலையிற் தங்கியிருந்தவர்களில்பதினொரு இளைஞர்களைக் கைதுசெய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். இவர்களிலும் எவருமே திரும்பி வரவில்லை.

1990.07.05 மீண்டும் பாடசாலைக்கு வந்த அதிரடிப்படையினர் அங்கிருந்த இளைஞர்கள் பதின்மூன்று பேரைக்கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். காரைதீவு மகா வித்தியாலயத்தில் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் சித்திரவதைகளின் பின்னர் உயிருடன் ரயர் போட்டுஎரிக்கப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்டவர்களைத் தேடிச்சென்ற உறவினர்களும் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். இதனைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் வீரமுனைக்கு அருகிலுள்ள அகதிமுகாமிற்குத் திரும்பினார்கள். 1990.07.10 அன்றும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் பதினைந்து இளைஞர்களைக் கைதுசெய்து, இராணுவ முகாமிற்கு அழைத்துச்சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் அவர்களையும் உயிருடன் எரித்தார்கள்.

1990.07.16 அன்று வீரமுனை அகதி முகாமிலிருந்து தமது வீடுகளைப் பார்க்கச்சென்ற பெண்களில் எட்டு இளம்பெண்கள் மல்வத்தையிலிருந்த இராணுவ சோதனைநிலையத்தில் இராணுவத்தினராற் கைது செய்யப்பட்டு முப்பதிற்கும் மேற்பட்ட இராணுவத்தினரால் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களும் இராணுவத்தினரால் பின்னர் எரிக்கப்பட்டனர்.

1990.07.26 இல் மீண்டும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் முப்பத்திரண்டு இளைஞர்களை கைது செய்தார்கள். இவர்களில் இருபத்துமூன்று பேர் பாடசாலை மாணவர்கள். இவர்களில் எவருமே திரும்பி வரவில்லை. 1990.07.29ல் வீரமுனைப் பிரதேசத்தில் தமது குடும்பத்தினருடன் பயணம் செய்துகொண்டிருந்த எட்டுப் பாடசாலை ஆசிரியர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் எவரும் திரும்பிவரவில்லை. 


1990.08.01 ஆம் திகதி வீரமுனையிலுள்ள சவளக்கடை வீதி வழியாக நாவிதன் வெளிக்குச் சென்ற பதினெட்டு பொதுமக்கள் இராணுவம், காவற்றுறை மற்றும் ஊர்காவற்படையினராற் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் ஒரு குழந்தையும் நான்கு பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களால் துண்டுகளாக வெட்டப்பட்டு சவளக்கடை கோயிலுக்குள் போட்டு எரிக்கப்பட்டார்கள்.

1990.08.12 ஆம் திகதி வீரமுனை அகதிமுகாமிற்குக் கூரிய ஆயுதங்கள் துப்பாக்கிகளுடன் வந்த முசுலிம் குழு முகாமிலிருந்தவர்களை வெட்டியும் சுட்டும் தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் பத்துப் பேர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். உயிரிழந்தவர்களில் கோயில் அறங்காவலர் தம்பிமுத்து சின்னத்துரை, இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உள்ளடங்குவார்கள்.

1990.08.12 இல் முசுலிம்களின் தாக்குதலில் காயப்பட்டவர்கள் முதலில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்கள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில் மூன்று பேர் இராணுவத்தினராற் கடத்திச் செல்லப்பட்டார்கள்.

மிகுதி நான்கு பேர் வீரமுனைக்குத் தப்பி வந்தார்கள்.வீரமுனையில் 600 வீடுகளும் வீரமுனைக்கு அருகிலுள்ள கிராமங்களான மல்வத்தை, மல்லிகைத்தீவு, நியூ ரவுண், கணபதிபுரம், வலாத்தபிட்டி, சம்மாந்துறை ஆகிய கிராமங்களில் 1352 வீடுகளும் எரிக்கப்பட்டன.

1990.06.20 தொடக்கம் 1990.08.15 வரை வீரமுனை, காரைதீவு மற்றும் அயற்கிராமங்களிலுமாக இருநூறிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள் அல்லது காணாமற்போனார்கள். 2000 வீடுகள் வரை இராணுவத்தினரால் எரிக்கப்பட்டன.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம்:

(பெயர் - தொழில் - வயது)

 

  1. இளையதம்பி கணபதிப்பிள்ளை
  2. இளையதம்பி செல்லம்மா
  3. இளையதம்பி சின்னப்பிள்ளை
  4. இராசையா பரமேஸ்வரி
  5. இராசையா சுபாசினி - மாணவி - 16
  6. இராமநாதன் வாணிதாசன் -
  7. இராமக்குட்டி பொன்னம்மா - 65
  8. இராசலிங்கம் அழகையா
  9. இருளாண்டி அமிர்தலிங்கம் - மாணவன் - 20
  10. யு.நடராஜா - 5
  11. நாகலிங்கம் தியாகராசா - மேசன் - 31
  12. நாகலிங்கம் தவராசா
  13. நாகலிங்கம் மாரிமுத்து --
  14. நமசிவாயம் தேவராசா
  15. நடராஜா உதயகுமார் - 7
  16. நடராசா இளங்கோ
  17. நடராசா கிருபைராசா - தொழிலாளி - 39
  18. நல்லதம்பி தவராசா
  19. நல்லதம்பி கோபால்
  20. நல்லதம்பி வடிவேல்
  21. நல்லதம்பி விக்னேஸ்வரன்
  22. க.கறுவல்தம்பி
  23. க.மாரிமுத்து-
  24. க.அழகையா
  25. கனகரெட்ணம் யோகராசா --
  26. கனகசபாபதி இளங்கோ
  27. கந்தையா நவரட்ணம்
  28. கந்தையா கணேசமூர்த்தி
  29. கந்தையா கணபதிப்பிள்ளை. --
  30. கந்தையா திசாநாயக்க
  31. கந்தையா தருமலிங்கம்
  32. கந்தக்குட்டி பாக்கியராசா.
  33. கந்தக்குட்டி தருமலிங்கம் -
  34. கந்தசாமி விஜயகுமார்
  35. கந்தவனம் கந்தசாமி
  36. கந்தவனம் குமார்
  37. கந்தவனம் ஆறுமுகம்
  38. கந்தவனம் சோமசுந்தரம்
  39. காத்தமுத்து நாகேந்திரன்
  40. காத்தமுத்து சண்முகநாதன் - கமம் - 40
  41. காளிக்குட்டி உலகநாதன்
  42. கதிர்காமத்தம்பி கருணாகரன்
  43. கதிரேசப்பிள்ளை சந்திரசேகர்
  44. கதிராமத்தம்பி இராசையா
  45. கதிரவேலு இராசலிங்கம் - கமம்
  46. கதிரவேல் இராஜேந்திரன்
  47. கதிரவேல் ராதிகாகிருஸ்னன்
  48. குமாரன் சின்னத்தம்பி
  49. குலேந்திரன் அஜந்தன் - 3
  50. கிருஸ்ணபிள்ளை கனகசூரியம்
  51. கிருஸ்ணபிள்ளை மோகனராஜ்
  52. கிருஸ்ணபிள்ளை சுந்தரலிங்கம்
  53. கிருஸ்ணபிள்ளை சிதம்பரமூர்த்தி - தொழிலாளி - 21
  54. கிருஸ்ணபிள்ளை விஜயகுமாரி
  55. கிருபானந்தம் அமிர்தலிங்கம்
  56. கறுப்பையா சிவசாமி - கமம் - 40
  57. கறுவல்தம்பி திருச்செல்வம்
  58. கணபதி குகநாதன் --
  59. கணபதிப்பிள்ளை இராஜேஸ்வரி
  60. கணபதி சந்திரன்
  61. கணபதிப்பிள்ளை புஸ்பலதா
  62. கணபதிப்பிள்ளை பரசுராமன்
  63. கணபதிப்பிள்ளை தவராசா
  64. கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை
  65. கணபதிப்பிள்ளை சிவபாலன் - தொழிலாளி
  66. கணபதிப்பிள்ளை சிவலிங்கம் - சாரதி - 49
  67. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் - தொழிலாளி 35
  68. கணபதிப்பிள்ளை சண்முகம்
  69. குணரெட்ணம் சிவகௌரி
  70. பாவில் சண்முகம்
  71. பாலன் மகேந்திரன்
  72. பாலன் கேதரன்
  73. பாலசுந்தரம்.
  74. பாண்டியன் முனியாண்டி
  75. பத்மநாதன் விநாயமூர்த்தி
  76. பழனித்தம்பி மாணிக்கம் - 46
  77. பீ.ஜி.பியாந்தன்
  78. பீ.நந்தசிறி
  79. பீ.மாரியான்
  80. பீ.சுசிபன்
  81. ரீ.மாதவன்
  82. ஐயாத்துரை மகேஸ்வரன் -
  83. ஐயாத்துரை கோவிந்தன்
  84. கைலாயபிள்ளை தேவராசா - மாணவி - 8
  85. வை இராசதுரை
  86. வை.பிரான்சிஸ் --
  87. வைரமுத்து கற்பகம்
  88. வைரமுத்து கோபாலபிள்ளை -
  89. வைரமுத்து தெய்வானை
  90. வைரமுத்து சிவம்
  91. தர்மலிங்கம் பொன்னத்துரை -
  92. தம்பிப்பிள்ளை இராசலிங்கம்.
  93. தம்பிப்பிள்ளை கந்தையா
  94. தம்பிமுத்து கந்தையா - கமம் - 77
  95. தம்பிமுத்து தயாபரன்.
  96. தம்பிமுத்து சின்னத்துரை - அறங்காவலர் - 52
  97. தம்பிமுத்து சிந்தாத்துரை - கமம் - 70
  98. திருநாவுக்கரசு கணேசமூர்த்தி
  99. திருநாவுக்கரசு கருணாநிதி - கமம் - 18
  100. திருநாவுக்கரசு புஸ்பராசா
  101. தங்கநேசம் வேலுப்பிள்ளை
  102. தங்கராசா உதயசூரியன்
  103. தங்கராசா மனோகரன் - 18
  104. தங்கராசா ராகினி
  105. மார்க்கண்டு தங்கவேல்
  106. மார்க்கண்டு யோகராசா
  107. மார்க்கண்டு சிவானந்தன் - 29
  108. மாசிலாமணி தருமலிங்கம் -
  109. மாசிலாமணி செல்வரட்ணம்
  110. மாசிலாமணி விநாயகமூர்த்தி - கமம் - 26
  111. மாணிக்கம் பாலு
  112. மாணிக்கம் முருகேசப்பிள்ளை - கமம்-  21
  113. மாணிக்கம் ஜெகநாதன்
  114. முத்துலிங்கம் பாலபாஸ்கரன்
  115. முத்துலிங்கம் பரமேஸ்வரி ஆசிரியர் 32
  116. முத்துலிங்கம் செல்லையா
  117. முருகுப்பிள்ளை தங்கரெத்தினம் -
  118. முருகுப்பிள்ளை தங்கராசா
  119. முருகுப்பிள்ளை ஞானம்மா -
  120. மருதுரிஸ் செல்வராசா
  121. முருகேசு உதயகுமார் - -
  122. முருகேசு பாஸ்கரன்
  123. முருகேசப்பிள்ளை பத்மநாதன்
  124. மணியம் சோமசுந்தரம்
  125. ஆ.யோகநாதன்
  126. ஆர்.மயில்வாகனம் -50
  127. அம்பாரக்குட்டி தியாகராஜா -
  128. அழகையா இராமச்சந்திரன் --
  129. அழகையா சாமித்தம்பி
  130. அழகையா சிவா
  131. அழகையா வீரசேனன் -
  132. அழகையா ரகுநாதன்
  133. அரசரெத்தினம் கதிரமலை
  134. அரசரெட்ணம் மகேந்திரன்
  135. அரசரட்ணம் வள்ளியம்மை - 58
  136. அருளப்பா இந்துருஜன் -
  137. அருணாசலம் இராசரெட்ணம்.
  138. அருணாசலம் சின்னப்பிள்ளை - 55
  139. ஆறுமுகம் கந்தசாமி.
  140. ஆறுமுகம் கலா
  141. ஆறுமுகம் தெய்வேந்திரம் - தச்சுத்தொழில் - 34
  142. யோகராசா கிருபானந்தி
  143. கே.அழகையா
  144. கே சிவலிங்கம் - 48
  145. கே.ரவிச்சந்திரன்
  146. பொன்னம்பலம் இராஜேந்திரன் --
  147. பொன்னம்பலம் இராசமணி
  148. பொன்னுச்சாமி கந்தசாமி - தொழிலாளி - 24
  149. பொன்னுச்சாமி கணேசமூர்த்தி - ஆசிரியா - 26
  150. பொன்னையா உதயகுமார்
  151. பொன்னையா மகேஸ்வரன்
  152. பொன்னையா வள்ளியம்மை - 67
  153. தேவநாயகம் மகேந்திரன்
  154. சொலமன் சகாயநாதன் -
  155. செல்லையா கிருஸ்ணபிள்ளை --
  156. செல்லையா அசோகன் - மின்சாரசபை ஊழியர் - 24
  157. செல்லையா சோமசுந்தரம்
  158. செல்லையா வடிவேல்.
  159. செல்வன் சிவநாதன்
  160. செல்லன் அருளம்மா
  161. செல்லத்துரை தர்மலிங்கம்
  162. செல்லத்தம்பி கருணாநிதி கடதாசி - ஆலை ஊழியர் - 24
  163. வெள்ளையன் - மாணவன் - 7
  164. வேல்முருகு முத்து -
  165. வேலுப்பிள்ளை நாகேந்திரன்
  166. வேலுப்பிள்ளை காசியானந்தன்
  167. வேலுப்பிள்ளை கதிரமலை -
  168. வேலுப்பிள்ளை திருச்செல்வம் - தொழிலாளி - 22
  169. வேலுப்பிள்ளை யோகராசா
  170. வேலுப்பிள்ளை தெய்வநாயகம்
  171. வேலுப்பிள்ளை சந்திரகுமார்
  172. வேலுப்பிள்ளை சுதாகரன்
  173. ரெட்ணம் செல்வராசா - கமம் - 20
  174. சு.மனோகரன்
  175. சந்திரன் அருளப்பன்
  176. சுப்பிரமணியம் நடேஸ்வரன்
  177. சாமித்தம்பி கணபதிப்பிள்ளை
  178. சாமித்தம்பி குணசீலன்
  179. சாமித்தம்பி தங்கவேல் - மாணவன் - 17
  180. சாமித்தம்பி சுப்பிரமணியம்
  181. சதாசிவம் புவனேந்திரன்
  182. சதாசிவம் தேவராசா  -கமம் - 18
  183. சின்னத்துரை காளிக்குட்டி
  184. சின்னத்தம்பி குகதாஸ்
  185. சின்னத்தம்பி திலகேஸ்வரி -
  186. சின்னத்தம்பி அண்ணாதாசன்
  187. சின்னத்தம்பி வன்னியசிங்கம்
  188. சின்னதம்பி ரவிச்சந்திரன் - சாரதி - 22
  189. சின்னையா முத்தையா
  190. சீனி இந்திரன்
  191. சீனி தவசீலன் -
  192. சீனி ஜெயசீலன்
  193. சீனித்தம்பி மாரிமுத்து -
  194. சீனித்தம்பி வேல்முருகு
  195. சித்தாத்துரை காளிக்குட்டி கமம் 47
  196. சித்தாத்துரை செல்வராசா
  197. சித்தாத்துரை சம்பந்தன் - கமம்-  24
  198. சித்தாத்துரை தவராசா
  199. சித்தாத்துரை தேவராசா --
  200. சித்தாத்துரை வேவி
  201. சித்தாத்துரை சம்மந்தன் = கமம் - 24
  202. சித்திரவேல் பத்மநாதன்
  203. சிவனடியார் ரவிச்சந்திரன்
  204. சிவானந்தன் இந்திரன் -
  205. சிவானந்தன் பாலச்சந்திரன்
  206. சிவானந்தன் ரவிச்சந்திரன் -
  207. சிவஞானம் கணேசன
  208. சிவசம்பு தேவராசா --
  209. சங்கரப்பிள்ளை அற்புதராசா
  210. சங்கரப்பிள்ளை வில்வராசா - கமம் - 20
  211. சலமன் மோகனராஜன் சகாயநாதன் - வியாபாரம் - 22
  212. சண்முகம் இளஞ்சேகர்  -மாணவர்
  213. விநாயகமூர்த்தி பாலு
  214. வீரக்குட்டி கிட்ணன்
  215. வீரபாண்டியன் ஜமுனா
  216. வள்ளியம்மை
  217. ராமன்
  218. ரவி தில்லையம்மா
  219. ஏ.ஈ.தேவதாசன்
  220. ஏ.கனகரெத்தினம்
  221. ஏ.பரமநாதன்
  222. ஏ.முருகேசபிள்ளை --
  223. ஏ.சுபாசினி மாணவி 17
  224. ஏ.சின்னப்பிள்ளை 50
  225. ஏ.சித்திரவேல் -
  226. ஏ.சிவநேசன்
  227. ஏ.ஏ.சண்முகவேல்
  228. எஸ்.மாணிக்கம் 35
  229. என்.இராசன் --
  230. என்.சந்திரகுமார் --
  231. ஏகாம்பரம் தருமலிங்கம் - -
  232. எம்.முத்துக்குமார் - -
  233. எம்.அருள்மணி - -

 

வீரமுனையில் வேறு தினங்களில் உயிரிழந்த சிலரது விபரங்கள்

(பெயர் - தொழில் - வயது)

  1.  15.03.1985 சதாசிவம் சண்முகராஜா கமம் 23
  2. 25.10.1985 சின்னத்தம்பி நவரட்ணராசா விவசாயம் 19
  3. 08.09.1988 காளிக்குட்டி நவரெட்ணம் தொழிலாளி 23
  4. 13.01.1989 சேதுமதி குணரட்ணம் கமம் 33
  5. 11.06.1990 கணபதிப்பிள்ளை கந்தசாமி தொழிலாளி 27
  6. 15.06.1990 பாலசந்திரபோஸ் சுபாஸ்சந்திரபோஸ் தொழிலாளி 16
  7. செல்லத்துரை விக்னேஸ்வரன் கமம் 21
  8. செலடன்ஸ்பெக் பிறிங்கேஸ்பெக் தச்சுத்தொழில் 19
  9. சிவராசா சதீஸ்குமார் 19
  10. சங்கரப்பிள்ளை சிவகுருநாதன் மாணவன் 18
  11. சவரிமுத்து ரஞ்சன் கமம் 22
  12. சற்குணநாதன் ரஞ்சிதகுமார் வியாபாரம் 22

 

*****

 

நன்றி இணைப்புக்கு  நன்னி சோழன் இவ்வளவு தமிழர் களை சிங்களவனை விட கூடியளவில் கொன்று தள்ளியிருக்கிறார்கள் இதை எங்கள் அரசியல் வாதிகளும் தட்டி கேட்ட்க முது கெலும்பு கிடையாது அவர்களின் அரசியல்வாதிகளுக்கு இவ்வளவு விடயங்கள் தெரிந்தாலும் தெரியாதது போல் யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றித்தான் இன்னும் அழுகிறார்கள் .இனியாவது யாழ் வரலாம்தானே ஆனால் இன்னமும் பிச்சைகாரன் புண் சொறிவது போல் சொறிந்து கொண்டு இருக்கிறார்கள்  ஏதாவது தங்கள் பிச்சை சட்டியில் பணம் விழுமா என்று ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008
  • எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம்
  • பக்கம்: -
  • நூல் வெளியீட்டு ஆண்டு: 2010

 

சம்மாந்துறைப் படுகொலை 10 ஜூன், 1990

 

sammanthurai massacre.jpg

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேசசெயலர் பிரிவில் சம்மாந்துறைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் வயல்களைக் கொண்ட விவசாயக் கிராமம் ஆகும். இப்பிரதேசத்தில் கண்ணகி அம்மன் கோயில் காளிகோயில் போன்ற பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன.

1990.06.10 இல் முசுலிம் குழுக்கள் இராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்கள் மீது இங்கு தாக்குதல் நடத்தினார்கள். இவர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக ஓடிய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் சுட்டதில் பலர் உயிரிழந்தனர். அன்று இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் நடாத்திய தாக்குதலில் முப்பத்தேழு பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

  1. இராசரட்ணம் இராமச்சந்திரன் - கூலி - 19
  2. க.வடிவேல் - -
  3. த.தாசன் - -
  4. தம்பிராசா உருத்திரன் - மாணவன் - 16
  5. மா.கணபதிப்பிள்ளை
  6. சு.கணேசன்
  7. சின்னத்தம்பி மார்க்கண்டு

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: மௌனப் புதைகுழிக்குள்
  • எழுத்தாளர்: மணலாறு விஜயன்
  • பக்கம்: ???
  • நூல் வெளியீட்டு ஆண்டு: 2004

 

வீரமுனைப் படுகொலை

வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1954ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1954ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும், கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டிய மல்லிகைத்தீவு, மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர்.

1954ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிடவேண்டுமென்ற திடமானமுடிவுடன் செயற்பட்டனர். 1990ம் ஆண்டு ஆனி மாதமும் ஆடி மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. ஆனிமாதம் 20ம் திகதி வீரமுனை இவளத்தாப்பிட்டிய வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்துவந்த முஸ்லீம் காடையர்களும் மக்களெல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர்.

ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர். ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். மரணக் குழிநோக்கி அவர்கள் தள்ளி கொல்லப்பட்டார்கள். கட்டிய மனைவிமாரும், பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்து கும்பிட்டார்கள்.

தாலிப்பிச்சைக் கேட்டு காலடியில் விழுந்தார்கள். கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும் வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது.

சம்மாந்துறை மலைக்காட்டிற்குள் தீ பற்றி எரிந்தது. முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினை சுற்றிநின்ற முஸ்லீம் காடையர் கைதட்டி மகிழ்ந்தார்கள். எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்களுறவுகளுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை.

காலையில் கைதுசெய்து சென்றவர்களை சுட்டுப்பொசுக்கிய போதும் இராணுவத்தினரின் கொலைப்பசி மாறவில்லை. ஒரு வாரம் கூட மறையவில்லை. 29ம் திகதி மீண்டும் கைது. எச்சஞ்சொச்சமாயிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறு பேரை துப்பாக்கிமுனையில் தள்ளிச்சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவிற்குத் தப்பியோடினார்கள். காரைத்தீவுப் பாடசாலை அகதி முகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதியாக்கப்பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அகதி முகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள்.

தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக்கூடமாக்கப்பட்டது. ஆட்டுப்பண்ணைகளில் இறச்சிக்குத் தெரிவாகிய கிடாப்போல அகதிமுகாமில் வைத்துக் கொலை செய்வதற்குரிய ஆண்களை தெரிந்தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசையினைக் காட்டினார்கள். ஒரு மாதங்கூட மறையவில்லை ஆடிமாதம் 4ம் திகதி காரைதீவு அகதிமுகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல்த் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிருநாள் கழித்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. “உங்கட ஆக்கள நாங்க கொண்டு வரல்ல ஆக்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க”.

பாடசாலையிலிருந்த அகதிமுகாமுக்குள் மீண்டும் 10ம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவிட்டு எரித்தார்கள். வீரமுனைக் கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக்கொன்றொழித்து விடுவதென்று சிங்களப்படையினர் முடிவெடுத்து விட்டனர்.

1990ம் ஆண்டு ஆடிமாதம் கணவன்மாரைப் பறி கொடுத்த துயரோடு காரைதீவு அகதி முகாமிலிருந்து தமது கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப் பறிகொடுக்கக் கூடாதென்று காரைதீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைதீவில் பறிகொடுத்துவிட்டதால் இனிமேல் எது நடந்தால் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள். வரும் வழியில் மல்வத்தை இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினர் தமது கொலைப்பசியையும் தீர்க்க விரும்பினர். நடந்துவந்தவர்களில் எட்டுப்பேரைப் பிடித்திழுத்துச் சென்றனர். பசிதீரும் வரை மாறி மாறி குதறினார்கள். கடைசி மூச்சு அடங்கும் வரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். பிணமாகிப்போனதும் கிண்டிப் புதைத்தார்கள்.

26ம் திகதி கொண்டவெட்டுவான் படை முகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை, வீரமுனை, கலைதிபுரம், புதுநகர் கிராமங்களிலிருந்து எட்டுப்பேரை கைது செய்து சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதையில்லை மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர் கிராமசேவகர்களுக்கு அனுமதி வழங்கிய போதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது.

ஆனி மாதம் ஆரம்பித்த இன அழிப்பு ஆடி மாதமும் தொடர்ந்து. ஆவணிமாதத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆவணி மாதம் 8ம் திகதி சிங்களப் படையினருடன் இனைந்து வந்த சிங்கள ஊர்காவற்ப்படையினரும் முஸ்லீம் ஊர்காவற்ப்படையினரும் எங்களாலும் தமிழர்களை கொள்ள முடியுமென்பதை காட்டினார்கள். ஓடி ஒழிந்து வாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள். வீரமுனையிலோ வளத்தாப்பிட்டியிலோ அல்லது மல்வத்தையிலோ இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள் மண்டூருக்குச் சென்று வாழவிரும்பி கையில்த் தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள். 11ம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக்கொன்றார்கள். தப்பி ஓடிய மக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர். சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் தாங்களும் சளைத்தவர்களல்ல என்பதைக் காட்டினார்கள்.

'புதைகுழிகளைத் தோண்டட்டும். அதற்கு பின்னர் சிறு வயதில் நாங்கள் ஆயுதம் தூக்க வேண்டிவந்ததற்கான தீர்ப்பை சட்டப் புத்தகத்தில் தேடட்டும்.' என அந்த போராளி நீதிக்கான போரின் பக்கமொன்றை புரட்டி வைத்தான்.

அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையினர் விட்டு வைக்கவில்லை. 12ம் திகதியே இக்கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லீம் காடையர்களும் துணைக்கு வந்தனர். வீடுகள் தீயிடப்பட்டன. சொத்துக்கள் சுறையாடப்பட்டன. எரியும் நெருப்பில் உயிருடனேயே எமது உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகினர். இருபத்தைந்து பேர் இக் கொடிய கொலைவலைக்குள் சிக்கி மடிந்தனர்.

காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முப்பதுபேரைக் கூட இராணுவத்தினர் விடவில்லை. வைத்தியசாலையை 12ம் திகதி சுற்றிவளைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர். நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்துமுடிந்த வீரமுனைக் கிராமமக்களின் துயரக்கதைக்கு நீதி யார் தருவது? ஓடி ஓடி தப்பிகொண்ட பதினைந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் தர்ம யுத்தத்திற்காய் களம்புகுந்தனர்.

களத்தில் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவப் போராளி கிருஸ்ணபிள்ளை நித்தியானந்தன் தன் மனதில் உறைந்து கிடந்த பிறந்த மண்ணின் கறைபடிந்த நாட்களை பகிர்ந்து கொண்டார். “இளம் வயதில் நாங்கள் ஏன் துப்பாக்கி ஏந்தினோம் என்பது மனித உரிமை அமைப்புகளுக்கு விளங்காது. விளக்கவும் முடியாது. அவர்களுக்கு தெரிவது சிங்களவர் உயிரே ஒழிய தமிழர் உயிர்களல்ல. இவர்கள் முதலில் இந்தக் கொலைகளை ஆராயட்டும்". பதினொரு ஆண்டுகளாய் போர்க்களம் கண்டு நிற்கும் அந்த இளைஞனிடம் தனது கிராமத்தை மீற்கமுடியுமென்ற நம்பிக்கை பிரகாசமாய்த் தெரிந்தது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: 
    • தமிழினப் படுகொலைகள் 1956-2008
    • Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I
  • எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம்
  • பக்கம்: -
  • மொழிபெயர்ப்பு (சாட்சிகள் மட்டும்😞 நன்னிச்சோழன்
  • நூல் வெளியீட்டு ஆண்டு:
    • 2005
    • 2007 

 

வீரமுனைப் படுகொலைகள், 20 யூன் 1990

Veeramunai massacre by Muslims

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவிற்கு மேற்காக நாற்பத்தைந்து கி.மீ தூரத்தில் வீரமுனைக் கிராமம் அமைந்துள்ளது. வீரமுனைக் கிராமத்திற்கு வடக்கே சொறிக்கல் முனையும் தெற்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் செழிப்பான வயல் நிலங்களும் அமைந்துள்ளன. வீரமுனை தமிழ்மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். சம்மாந்துறைப் பிரதேசம் போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் தென் கடற்கரையோரங்களிலிருந்து போர்த்துக்கேயரால் விரட்டப்பட்ட முசுலிம்கள் இடம்பெயர்ந்து குடியேறி வாழும் பிரதேசமாகும். இவ்விரண்டு பிரதேசங்களையும் இணைத்து சம்மாந்துறை நகரசபை அமைந்துள்ளது.

1954 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர்களுக்கிடையே தகராற்றினால் சம்மாந்துறை முசுலிம்கள் ஒரு சிலரால் வீரமுனைப் பிரதேசம் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரமுனை மக்கள் இடம் பெயர்ந்து காடுகளில் கணபதிபுரம், வீரச்சோலை போன்ற புதிய கிராமங்களை உருவாக்கினார்கள்.

1990 யூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இராணுவத்தினரால் வீரமுனைப் பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டது. சுற்றி வளைத்த இராணுவத்தினர் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை அருகிலுள்ள வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லுமாறு பணித்தனர்.ஆலயத்திற்குச் செல்லாது வீடுகளிலிருந்தவர்களை இராணுவத்தினர் சுட்டுப் பின்னர் வீட்டுடன் சேர்த்து எரித்தார்கள் வீதிகளில் நடமாடிய பலரும் இராணுவதத்தினராற் சுடப்பட்டார்க்ள். 1990.06.20 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு கனரக வாகனங்களில் வீரமுனைப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து இறங்கிய இராணுவத்தினா வீரமுனைப் பிரதேசத்தில் பல பிரதேசத்திலுமிருந்து தஞ்சமடைந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சுற்றிவளைத்து பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் கோயிலின் பின் வீதியில் ஒன்று சேருமாறு பணித்தார்கள். இவர்களில் அறுபத்தொன்பது இளைஞர்களை உறவினர்களின் முன்னிலையிற் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் சம்மாந்துறையிலுள்ள மார்ஜன் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவர்களில் ஐம்பது பேர்வரை இராணுவத்தினரால் சம்மாந்துறையிலுள்ள மலைக்காட்டுக்குள் உயிருடன் எரிக்கப்பட்டனர். மிகுதிப் பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

1990.06.29ஆம் திகதி மீண்டும் மக்கள் தங்கியிருந்த கோயிலுக்கு வந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களில் பலரைக் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்து சென்றார்கள்.

இவர்களில் எவருமே திரும்பி வரவில்லை. வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் தஞ்சமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அச்சுறுத்தலிலிருந்து தப்புவதற்காக இடம் பெயர்ந்து காரைதீவு மகாவித்தியாலயத்திற் தஞ்சமடைந்தார்கள். 1990.07.03 அன்று காரைதீவு மகாவிதத்தியாலயத்தை சுற்றி வளைதத் இராணுவதத்தினர் பாடசாலையிற் தங்கியிருந்தவர்களில்பதினொரு இளைஞர்களைக் கைதுசெய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். இவர்களிலும் எவருமே திரும்பி வரவில்லை.

1990.07.05 மீண்டும் பாடசாலைக்கு வந்த அதிரடிப்படையினர் அங்கிருந்த இளைஞர்கள் பதின்மூன்று பேரைக்கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். காரைதீவு மகா வித்தியாலயத்தில் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் சித்திரவதைகளின் பின்னர் உயிருடன் ரயர் போட்டுஎரிக்கப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்டவர்களைத் தேடிச்சென்ற உறவினர்களும் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். இதனைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் வீரமுனைக்கு அருகிலுள்ள அகதிமுகாமிற்குத் திரும்பினார்கள். 1990.07.10 அன்றும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் பதினைந்து இளைஞர்களைக் கைதுசெய்து, இராணுவ முகாமிற்கு அழைத்துச்சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் அவர்களையும் உயிருடன் எரித்தார்கள்.

1990.07.16 அன்று வீரமுனை அகதி முகாமிலிருந்து தமது வீடுகளைப் பார்க்கச்சென்ற பெண்களில் எட்டு இளம்பெண்கள் மல்வத்தையிலிருந்த இராணுவ சோதனைநிலையத்தில் இராணுவத்தினராற் கைது செய்யப்பட்டு முப்பதிற்கும் மேற்பட்ட இராணுவத்தினரால் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களும் இராணுவத்தினரால் பின்னர் எரிக்கப்பட்டனர்.

1990.07.26 இல் மீண்டும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் முப்பத்திரண்டு இளைஞர்களை கைது செய்தார்கள். இவர்களில் இருபத்துமூன்று பேர் பாடசாலை மாணவர்கள். இவர்களில் எவருமே திரும்பி வரவில்லை. 1990.07.29ல் வீரமுனைப் பிரதேசத்தில் தமது குடும்பத்தினருடன் பயணம் செய்துகொண்டிருந்த எட்டுப் பாடசாலை ஆசிரியர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் எவரும் திரும்பிவரவில்லை. 

1990.08.01 ஆம் திகதி வீரமுனையிலுள்ள சவளக்கடை வீதி வழியாக நாவிதன் வெளிக்குச் சென்ற பதினெட்டு பொதுமக்கள் இராணுவம், காவற்றுறை மற்றும் ஊர்காவற்படையினராற் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் ஒரு குழந்தையும் நான்கு பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களால் துண்டுகளாக வெட்டப்பட்டு சவளக்கடை கோயிலுக்குள் போட்டு எரிக்கப்பட்டார்கள்.

1990.08.12 ஆம் திகதி வீரமுனை அகதிமுகாமிற்குக் கூரிய ஆயுதங்கள் துப்பாக்கிகளுடன் வந்த முசுலிம் குழு முகாமிலிருந்தவர்களை வெட்டியும் சுட்டும் தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் பத்துப் பேர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். உயிரிழந்தவர்களில் கோயில் அறங்காவலர் தம்பிமுத்து சின்னத்துரை, இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உள்ளடங்குவார்கள்.

1990.08.12 இல் முசுலிம்களின் தாக்குதலில் காயப்பட்டவர்கள் முதலில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்கள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில் மூன்று பேர் இராணுவத்தினராற் கடத்திச் செல்லப்பட்டார்கள்.

மிகுதி நான்கு பேர் வீரமுனைக்குத் தப்பி வந்தார்கள்.வீரமுனையில் 600 வீடுகளும் வீரமுனைக்கு அருகிலுள்ள கிராமங்களான மல்வத்தை, மல்லிகைத்தீவு, நியூ ரவுண், கணபதிபுரம், வலாத்தபிட்டி, சம்மாந்துறை ஆகிய கிராமங்களில் 1352 வீடுகளும் எரிக்கப்பட்டன.

1990.06.20 தொடக்கம் 1990.08.15 வரை வீரமுனை, காரைதீவு மற்றும் அயற்கிராமங்களிலுமாக இருநூறிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள் அல்லது காணாமற்போனார்கள். 2000 வீடுகள் வரை இராணுவத்தினரால் எரிக்கப்பட்டன.

இந்த சம்பவங்களின் சாட்சிகளின் சில கணக்குகள் பின்வருமாறு. சாட்சியாக இருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:

மல்வத்தை எல்லைக்குள் இராணுவம் நுழைந்தபோது, இராணுவத்தினர் மக்களை கண்ணில் பார்த்தபடி சுட்டுக் கொன்றனர், வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. நாங்கள், துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு, எரியும் வீடுகளில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதைப் பார்த்து, பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்ற குடும்பத்துடன் ஓடி வந்தோம். நடந்தே வீரமுனை கோவிலை சென்றடைந்தோம், வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் முன்னதாக கோவிலுக்கு வந்திருந்ததை கண்டோம். அதனைத் தொடர்ந்து அம்பாறை, மல்லிஹைத்தீவு, சம்மாந்துறை தமிழ்ப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எம்முடன் இணைந்தனர்.

இந்த நிகழ்வுகளின் சாட்சிகள் சிலரின் வாக்குமூலங்கள் பின்வருமாறு.

சாட்சியாக இருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:

"மல்வத்தை எல்லைக்குள் தரைப்படை நுழைந்தபோது, படையினர் கண்ணில் பட்ட மக்களையெல்லாம் சுட, அதே சமயத்தில் வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. நாங்கள், வேட்டொலி கேட்டும் எரியும் வீடுகளில் இருந்தெழும் பிழம்புகளைக் கண்டும் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற குடும்பத்துடன் ஓடி வந்தோம். நடந்தே வீரமுனை கோவிலை சென்றடைந்தோம், வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் முன்னதாக கோவிலுக்கு வந்திருந்ததை கண்டோம். அதனைத் தொடர்ந்து அம்பாறை, மல்லிகைத்தீவு, சம்மாந்துறை தமிழ்ப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எம்முடன் இணைந்தனர்." 

வீரமுனையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:

"படையினர் அச்சுறுத்தலான சூழலை ஆக்குவதைக் கண்டோம். மக்கள் தங்கள் வீடுகள், வீதி மற்றும் நெல் வயல்களில் இருந்து கொண்டுவரப்பட்டனர். சாத்தியமான கைது மற்றும் மரணத்திலிருந்து தப்பிக்க, நாங்கள் அகதிமுகாமாக மாற்றப்பட்ட கோவிலுக்குச் சென்றோம். அரசாங்கத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் வேலைக்குச் செல்லும் வழியில் கொலைசெய்யப்பட்டு ஆண்டி சந்திப்பு என்ற இடத்தில் எரிக்கப்பட்டதை நான் அறிவேன்."

வீரமுனையில் தரைப்படையினரின் செயற்பாடுகள் பற்றி ஒரு தாய் விரித்தார்:

"1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் பல படைய ஊர்திகள் ஆயிரக்கணக்கான மக்கள் (தமிழர்கள்) தஞ்சமடைந்திருந்த வீரமுனை ஆலயத்திற்குள் நுழைந்தன. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கோவில் முற்றத்தில் ஒன்று கூடும் படி கோரி ஒலிபெருக்கி மூலம் படைவீரர்கள் அறிவிப்பு விடுத்தனர். அங்கு கொலைவெறியில் ஈடுபட்ட படைவீரர்களுக்கு அஞ்சி அகதிகளாக ஏற்கனவே வீடுகளை விட்டு வெளியேறியிருந்ததால் மக்கள் கொந்தளித்தனர். ஆண்கள் ஒருவர் பின் ஒருவராக கோவிலுக்கு எதிரே உள்ள திறந்த வெளியில் சென்று நின்றனர். பெண்கள் மிகவும் குழப்பமடைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

"கோவிலுக்குள் நுழைந்த வீரர்கள் உள்ளே யாராவது பதுங்கி இருக்கிறார்களா என்பதை அறிய, உள் கருவறையை சோதித்தனர். யாரும் இல்லாததால், கோவிலுக்கு எதிரே நின்றிருந்த இளைஞர்களை உண்ணோட்டமிட தொடங்கினர். கணக்கெடுக்கப்பட்ட எண்ணிக்கையில், படைவீரர்கள் சில இளைஞர்கள் மற்றும் உடல் திறன் கொண்ட சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து, தாங்கள் கொண்டு வந்த CTB பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.

"பெண்கள் படைவீரர்களுக்கு முன்னால் சென்று என்ன செய்ய முயல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அவர்கள் உசாவலுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், உசாவலுக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார். தங்கள் குழந்தைகள் எந்த வகையிலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றும், படையினரால் பிடிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அப்பாவி இளைஞர்கள் என்றும் பெண்கள் படைவீரர்களிடம் கெஞ்சினர். பெண்களின் கண்ணீரைப் புறக்கணித்த படைவீரர்கள், இளைஞர்களுடன் கோவில் வளாகத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

"நாங்கள் ஊர்திகளுக்கு முன் விழுந்து எங்கள் பெடியங்களை விட்டுச்செல்லுமாறு படைவீரர்களை மன்றாடினோம். சோதனைக்கு தலைமை தாங்கிய அதிகாரியோ ஊர்தியை தடுக்கும் ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் சுடச்சொல்லி தனது ஆட்களுக்கு உத்தரவிடுவேன் என்று புலம்பிய பெண்களான எங்களிடம் கடுமையாக ஏசினார். மோசமான நிலைக்கு அஞ்சி பெண்கள் பின்வாங்கிட தரைப்படையினர் எங்கள் குழந்தைகளை கொண்டு சென்றனர். கடுமையான சித்திரவதையால் அடிவேண்டியும் காயமுமாக ஒரு சிலர் பின்னர் திரும்பினர்."

கைது செய்யப்பட்ட பின்னர் நிச்சயமான சாவிலிருந்து தப்பிய இளைஞர் ஒருவர் பின்வரும் கூற்றுரையை தந்தார்:

"ஜூன் 20ஆம் திகதி வீரமுனை கோவிலில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். கோவிலில் அகதிகளாக இருந்த பல இளைஞர்களை படையினர் ஏற்றிக்கொண்டு சம்மாந்துறை அல்-மட்ஜான் முஸ்லிம் பாடசாலைக்கு எங்களை கொண்டு சென்றனர். படையினர் முதலில் சுடுகல பிடங்குகளால் எங்களைத் தாக்கினர், அதன் பிறகு எங்களை உதைத்து எங்கள் முகங்களில் குத்தினார்கள். அகதிமுகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இளைஞர்கள் பின்னர் ஒரு பொதுநிறமான கொழுத்த வேற்றுவன் (தலையாட்டி) முன் அணிவகுத்துச் செல்லப்பட்டனர். என்னை அத்தலையாட்டி முன் நிறுத்திய போது, “இல்லை” என்று கூறி, என்னை ஒதுக்கி வைத்தார். அன்று மாலை அவன் முன் நிறுத்தப்பட்ட பெரும்பாலான இளைஞர்களுக்கு "ஆம்" என்று தலையாட்டுவதை நான் கண்டேன். “ஆம்” என்று அவர் தலையாட்டிய மக்கள் வேறு கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். “இல்லை” என்று தலையாட்டப்பட்டவர்கள் புறிம்பாக்கப்பட்டு மற்றொரு அதிகாரி முன் நிறுத்தப்பட அவர் தமிழில் உரையாற்றினார். அவர் சொன்னதை புரிந்துகொள்ளும் மனநிலையில் நான் இல்லை. சிறிது நேரத்திற்கு முன்பு நான் அனுபவித்த சித்திரவதை என் வலிமையையும் உயிர்ப்பையும் பறித்தது. ஒரே நேரத்தில் சுமார் 15 பேர் என்னைத் தாக்கியதால் என்னால் நிற்கவே முடியவில்லை. நாங்கள் எடுத்துவரப்பட்ட கோயிலுக்குத் திரும்பிச் செல்லும்படி அதிகாரி கூறினார். எங்களிடமிருந்து பிரிந்த மற்றவர்கள் மலைக்காடு என்ற இடத்திற்கு - புதர் அடவிகளில் உள்ள பாறைசார் இடம் - படையப் பாரவூர்திகளில் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டதாக நாங்கள் அறிந்தோம். கோவிலில் உள்ள அகதிமுகாமில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களில் 20 பேர் மட்டுமே திரும்பி சென்றனர். மலைக்காட்டில் பாதி எரிந்த சடலங்கள் அழுகிக்கொண்டிருப்பதையும் உக்கிக்கொண்டிருக்கும் சடலங்களின் நெடியை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் பல இழுபொறிப் பெட்டிகளில் உமிகளை காவிச் சென்று அழுகிய சடலங்களை மூடி எரித்ததையும் அறிந்தோம்.

Madasamy Kathirkamamoorthy, a Tamil victim of the massacre by muslims in Veeramunai.jpg

மாடசாமி கதிர்காமமூர்த்தி | படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

"நான் அம்பாறையில் உள்ள வீரமுனை என்ற கிராமத்தில் வசித்து வந்தேன். நாங்கள் மிகவும் ஏழையாக இருந்தோம். எங்களுக்கு அப்பா இல்லை. பாடசாலை போகாத சமயங்களில் வேலை நிமித்தமாக அம்பாறைக்கு செல்வது வழக்கம். ஒரு நாள் வேலைக்குச் செல்லும் வழியில் சிக்கல் என்று கேள்விப்பட்டேன். அதனால் வீடு திரும்பினேன். அனைவரையும் தாக்கத் தொடங்கியுள்ளனர், அதனால் நாங்கள் வீட்டில் இருப்பது ஓம்பமானது அல்ல என்று என் அம்மா கூறினார். 

"திருமணமான எனது சகோதரி ஒரு கிலோமீட்டர் தொலைவில் வசித்து வந்தார். அம்மாவை ஆயத்தமாகும்படி சொல்லிவிட்டு சகோதரியை அழைத்துவரச் சென்றேன். என் அக்காவும் அம்மாவுடன் கிளம்ப வேண்டும் என்றாள். என் அம்மாவை அழைத்துச் செல்லும் வழியில், அவரது வீட்டிற்கு ஐநூறு மீட்டர் முன்பு - ஒரு படைய பாரவூர்தி நின்றது. யாரும் சீருடையில் இல்லை. அவர்கள் அனைவரும் குடிமை உடையில் இருந்தனர், எனினும் அவர்கள் ஆயுதங்களை ஏந்தியிருந்தனர். நான் ஒரு சிற்றூரில் சுமார் பத்து அல்லது பதினைந்து குடும்பங்களுடன் வசித்து வந்தேன். இந்த பாரவூர்தியை பார்த்ததும் எனக்கு உடனே அச்சம் வந்தது. என் உந்துருளியை நிறுத்திவிட்டு உறவினர் வீட்டுக்குள் சென்றேன்.

இந்த ஆயுதம் ஏந்தியவர்கள் மக்களைத் தாக்கத் தொடங்கினர் - அவர்கள் சிங்களத்தில் பேசி என்னை பாரவூர்தியில் ஏறச் சொன்னார்கள். நாங்கள் 9 பேர் அடிவேண்டி பாரவூர்தியில் ஏறச் செய்யப்பட்டோம். ஒன்பது பேரில் சிலருக்கு அரத்தம் வழிந்து. எங்களில் இருவர் இளையவர்கள், மீதமுள்ளவர்கள் திருமணமான குழந்தைகளுடனுள்ள ஆண்கள். அவர்களைத் தடுக்க மனைவிமார் வந்தபோது, அவர்கள் வழியில் வந்த மனைவிகளையும் குழந்தைகளையும் தாக்கினர்.

"பாரவூர்தில் எங்களை படுக்கச் சொல்லி அம்பாறையில் உள்ள ஒரு பெரிய காட்டிற்கு அழைத்துச் சென்றனர். எங்கள் சறங்களைக் கழற்றி, கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டுவதற்குப் பயன்படுத்தினார்கள். அவர்கள் எங்களுக்கு முன்னால் நின்று, தங்கள் இயந்திர சுடுகலன்களை தாணித்து (loaded) அனைவரையும் சுட்டனர்.

"நான் என் பக்கம் திரும்பினேன் - என் காலும் கையும் சன்னங்களால் தாக்கப்பட்டிருந்தன. என் காலில் பெரிய தழும்பு உள்ளது. மக்கள் எழுந்திருக்க முயன்றபோது, அவர்கள் தரையிலேயே இறக்கும் வரை மீண்டும் சுடப்பட்டனர். அதனால் கண்களை மூடிக்கொண்டு அப்படியே படுத்திருந்தேன். என் காலில் மோசமான காயம் ஏற்பட்டது. எனக்கு ஒரு கால் இருப்பது கூட எனக்கு உறுதியாக தெரியவில்லை. என் காலை இழுத்துக்கொண்டு மெள்ளமாக நடந்து சென்றேன்."

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம்:

(பெயர் - தொழில் - வயது)

  1. இளையதம்பி கணபதிப்பிள்ளை
  2. இளையதம்பி செல்லம்மா
  3. இளையதம்பி சின்னப்பிள்ளை
  4. இராசையா பரமேஸ்வரி
  5. இராசையா சுபாசினி - மாணவி - 16
  6. இராமநாதன் வாணிதாசன் -
  7. இராமக்குட்டி பொன்னம்மா - 65
  8. இராசலிங்கம் அழகையா
  9. இருளாண்டி அமிர்தலிங்கம் - மாணவன் - 20
  10. யு.நடராஜா - 5
  11. நாகலிங்கம் தியாகராசா - மேசன் - 31
  12. நாகலிங்கம் தவராசா
  13. நாகலிங்கம் மாரிமுத்து --
  14. நமசிவாயம் தேவராசா
  15. நடராஜா உதயகுமார் - 7
  16. நடராசா இளங்கோ
  17. நடராசா கிருபைராசா - தொழிலாளி - 39
  18. நல்லதம்பி தவராசா
  19. நல்லதம்பி கோபால்
  20. நல்லதம்பி வடிவேல்
  21. நல்லதம்பி விக்னேஸ்வரன்
  22. க.கறுவல்தம்பி
  23. க.மாரிமுத்து-
  24. க.அழகையா
  25. கனகரெட்ணம் யோகராசா --
  26. கனகசபாபதி இளங்கோ
  27. கந்தையா நவரட்ணம்
  28. கந்தையா கணேசமூர்த்தி
  29. கந்தையா கணபதிப்பிள்ளை. --
  30. கந்தையா திசாநாயக்க
  31. கந்தையா தருமலிங்கம்
  32. கந்தக்குட்டி பாக்கியராசா.
  33. கந்தக்குட்டி தருமலிங்கம் -
  34. கந்தசாமி விஜயகுமார்
  35. கந்தவனம் கந்தசாமி
  36. கந்தவனம் குமார்
  37. கந்தவனம் ஆறுமுகம்
  38. கந்தவனம் சோமசுந்தரம்
  39. காத்தமுத்து நாகேந்திரன்
  40. காத்தமுத்து சண்முகநாதன் - கமம் - 40
  41. காளிக்குட்டி உலகநாதன்
  42. கதிர்காமத்தம்பி கருணாகரன்
  43. கதிரேசப்பிள்ளை சந்திரசேகர்
  44. கதிராமத்தம்பி இராசையா
  45. கதிரவேலு இராசலிங்கம் - கமம்
  46. கதிரவேல் இராஜேந்திரன்
  47. கதிரவேல் ராதிகாகிருஸ்னன்
  48. குமாரன் சின்னத்தம்பி
  49. குலேந்திரன் அஜந்தன் - 3
  50. கிருஸ்ணபிள்ளை கனகசூரியம்
  51. கிருஸ்ணபிள்ளை மோகனராஜ்
  52. கிருஸ்ணபிள்ளை சுந்தரலிங்கம்
  53. கிருஸ்ணபிள்ளை சிதம்பரமூர்த்தி - தொழிலாளி - 21
  54. கிருஸ்ணபிள்ளை விஜயகுமாரி
  55. கிருபானந்தம் அமிர்தலிங்கம்
  56. கறுப்பையா சிவசாமி - கமம் - 40
  57. கறுவல்தம்பி திருச்செல்வம்
  58. கணபதி குகநாதன் --
  59. கணபதிப்பிள்ளை இராஜேஸ்வரி
  60. கணபதி சந்திரன்
  61. கணபதிப்பிள்ளை புஸ்பலதா
  62. கணபதிப்பிள்ளை பரசுராமன்
  63. கணபதிப்பிள்ளை தவராசா
  64. கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை
  65. கணபதிப்பிள்ளை சிவபாலன் - தொழிலாளி
  66. கணபதிப்பிள்ளை சிவலிங்கம் - சாரதி - 49
  67. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் - தொழிலாளி 35
  68. கணபதிப்பிள்ளை சண்முகம்
  69. குணரெட்ணம் சிவகௌரி
  70. பாவில் சண்முகம்
  71. பாலன் மகேந்திரன்
  72. பாலன் கேதரன்
  73. பாலசுந்தரம்.
  74. பாண்டியன் முனியாண்டி
  75. பத்மநாதன் விநாயமூர்த்தி
  76. பழனித்தம்பி மாணிக்கம் - 46
  77. பீ.ஜி.பியாந்தன்
  78. பீ.நந்தசிறி
  79. பீ.மாரியான்
  80. பீ.சுசிபன்
  81. ரீ.மாதவன்
  82. ஐயாத்துரை மகேஸ்வரன் -
  83. ஐயாத்துரை கோவிந்தன்
  84. கைலாயபிள்ளை தேவராசா - மாணவி - 8
  85. வை இராசதுரை
  86. வை.பிரான்சிஸ் --
  87. வைரமுத்து கற்பகம்
  88. வைரமுத்து கோபாலபிள்ளை -
  89. வைரமுத்து தெய்வானை
  90. வைரமுத்து சிவம்
  91. தர்மலிங்கம் பொன்னத்துரை -
  92. தம்பிப்பிள்ளை இராசலிங்கம்.
  93. தம்பிப்பிள்ளை கந்தையா
  94. தம்பிமுத்து கந்தையா - கமம் - 77
  95. தம்பிமுத்து தயாபரன்.
  96. தம்பிமுத்து சின்னத்துரை - அறங்காவலர் - 52
  97. தம்பிமுத்து சிந்தாத்துரை - கமம் - 70
  98. திருநாவுக்கரசு கணேசமூர்த்தி
  99. திருநாவுக்கரசு கருணாநிதி - கமம் - 18
  100. திருநாவுக்கரசு புஸ்பராசா
  101. தங்கநேசம் வேலுப்பிள்ளை
  102. தங்கராசா உதயசூரியன்
  103. தங்கராசா மனோகரன் - 18
  104. தங்கராசா ராகினி
  105. மார்க்கண்டு தங்கவேல்
  106. மார்க்கண்டு யோகராசா
  107. மார்க்கண்டு சிவானந்தன் - 29
  108. மாசிலாமணி தருமலிங்கம் -
  109. மாசிலாமணி செல்வரட்ணம்
  110. மாசிலாமணி விநாயகமூர்த்தி - கமம் - 26
  111. மாணிக்கம் பாலு
  112. மாணிக்கம் முருகேசப்பிள்ளை - கமம்-  21
  113. மாணிக்கம் ஜெகநாதன்
  114. முத்துலிங்கம் பாலபாஸ்கரன்
  115. முத்துலிங்கம் பரமேஸ்வரி ஆசிரியர் 32
  116. முத்துலிங்கம் செல்லையா
  117. முருகுப்பிள்ளை தங்கரெத்தினம் -
  118. முருகுப்பிள்ளை தங்கராசா
  119. முருகுப்பிள்ளை ஞானம்மா -
  120. மருதுரிஸ் செல்வராசா
  121. முருகேசு உதயகுமார் - -
  122. முருகேசு பாஸ்கரன்
  123. முருகேசப்பிள்ளை பத்மநாதன்
  124. மணியம் சோமசுந்தரம்
  125. ஆ.யோகநாதன்
  126. ஆர்.மயில்வாகனம் -50
  127. அம்பாரக்குட்டி தியாகராஜா -
  128. அழகையா இராமச்சந்திரன் --
  129. அழகையா சாமித்தம்பி
  130. அழகையா சிவா
  131. அழகையா வீரசேனன் -
  132. அழகையா ரகுநாதன்
  133. அரசரெத்தினம் கதிரமலை
  134. அரசரெட்ணம் மகேந்திரன்
  135. அரசரட்ணம் வள்ளியம்மை - 58
  136. அருளப்பா இந்துருஜன் -
  137. அருணாசலம் இராசரெட்ணம்.
  138. அருணாசலம் சின்னப்பிள்ளை - 55
  139. ஆறுமுகம் கந்தசாமி.
  140. ஆறுமுகம் கலா
  141. ஆறுமுகம் தெய்வேந்திரம் - தச்சுத்தொழில் - 34
  142. யோகராசா கிருபானந்தி
  143. கே.அழகையா
  144. கே சிவலிங்கம் - 48
  145. கே.ரவிச்சந்திரன்
  146. பொன்னம்பலம் இராஜேந்திரன் --
  147. பொன்னம்பலம் இராசமணி
  148. பொன்னுச்சாமி கந்தசாமி - தொழிலாளி - 24
  149. பொன்னுச்சாமி கணேசமூர்த்தி - ஆசிரியா - 26
  150. பொன்னையா உதயகுமார்
  151. பொன்னையா மகேஸ்வரன்
  152. பொன்னையா வள்ளியம்மை - 67
  153. தேவநாயகம் மகேந்திரன்
  154. சொலமன் சகாயநாதன் -
  155. செல்லையா கிருஸ்ணபிள்ளை --
  156. செல்லையா அசோகன் - மின்சாரசபை ஊழியர் - 24
  157. செல்லையா சோமசுந்தரம்
  158. செல்லையா வடிவேல்.
  159. செல்வன் சிவநாதன்
  160. செல்லன் அருளம்மா
  161. செல்லத்துரை தர்மலிங்கம்
  162. செல்லத்தம்பி கருணாநிதி கடதாசி - ஆலை ஊழியர் - 24
  163. வெள்ளையன் - மாணவன் - 7
  164. வேல்முருகு முத்து -
  165. வேலுப்பிள்ளை நாகேந்திரன்
  166. வேலுப்பிள்ளை காசியானந்தன்
  167. வேலுப்பிள்ளை கதிரமலை -
  168. வேலுப்பிள்ளை திருச்செல்வம் - தொழிலாளி - 22
  169. வேலுப்பிள்ளை யோகராசா
  170. வேலுப்பிள்ளை தெய்வநாயகம்
  171. வேலுப்பிள்ளை சந்திரகுமார்
  172. வேலுப்பிள்ளை சுதாகரன்
  173. ரெட்ணம் செல்வராசா - கமம் - 20
  174. சு.மனோகரன்
  175. சந்திரன் அருளப்பன்
  176. சுப்பிரமணியம் நடேஸ்வரன்
  177. சாமித்தம்பி கணபதிப்பிள்ளை
  178. சாமித்தம்பி குணசீலன்
  179. சாமித்தம்பி தங்கவேல் - மாணவன் - 17
  180. சாமித்தம்பி சுப்பிரமணியம்
  181. சதாசிவம் புவனேந்திரன்
  182. சதாசிவம் தேவராசா  -கமம் - 18
  183. சின்னத்துரை காளிக்குட்டி
  184. சின்னத்தம்பி குகதாஸ்
  185. சின்னத்தம்பி திலகேஸ்வரி -
  186. சின்னத்தம்பி அண்ணாதாசன்
  187. சின்னத்தம்பி வன்னியசிங்கம்
  188. சின்னதம்பி ரவிச்சந்திரன் - சாரதி - 22
  189. சின்னையா முத்தையா
  190. சீனி இந்திரன்
  191. சீனி தவசீலன் -
  192. சீனி ஜெயசீலன்
  193. சீனித்தம்பி மாரிமுத்து -
  194. சீனித்தம்பி வேல்முருகு
  195. சித்தாத்துரை காளிக்குட்டி கமம் 47
  196. சித்தாத்துரை செல்வராசா
  197. சித்தாத்துரை சம்பந்தன் - கமம்-  24
  198. சித்தாத்துரை தவராசா
  199. சித்தாத்துரை தேவராசா --
  200. சித்தாத்துரை வேவி
  201. சித்தாத்துரை சம்மந்தன் = கமம் - 24
  202. சித்திரவேல் பத்மநாதன்
  203. சிவனடியார் ரவிச்சந்திரன்
  204. சிவானந்தன் இந்திரன் -
  205. சிவானந்தன் பாலச்சந்திரன்
  206. சிவானந்தன் ரவிச்சந்திரன் -
  207. சிவஞானம் கணேசன
  208. சிவசம்பு தேவராசா --
  209. சங்கரப்பிள்ளை அற்புதராசா
  210. சங்கரப்பிள்ளை வில்வராசா - கமம் - 20
  211. சலமன் மோகனராஜன் சகாயநாதன் - வியாபாரம் - 22
  212. சண்முகம் இளஞ்சேகர்  -மாணவர்
  213. விநாயகமூர்த்தி பாலு
  214. வீரக்குட்டி கிட்ணன்
  215. வீரபாண்டியன் ஜமுனா
  216. வள்ளியம்மை
  217. ராமன்
  218. ரவி தில்லையம்மா
  219. ஏ.ஈ.தேவதாசன்
  220. ஏ.கனகரெத்தினம்
  221. ஏ.பரமநாதன்
  222. ஏ.முருகேசபிள்ளை --
  223. ஏ.சுபாசினி மாணவி 17
  224. ஏ.சின்னப்பிள்ளை 50
  225. ஏ.சித்திரவேல் -
  226. ஏ.சிவநேசன்
  227. ஏ.ஏ.சண்முகவேல்
  228. எஸ்.மாணிக்கம் 35
  229. என்.இராசன் --
  230. என்.சந்திரகுமார் --
  231. ஏகாம்பரம் தருமலிங்கம் - -
  232. எம்.முத்துக்குமார் - -
  233. எம்.அருள்மணி - -

 

வீரமுனையில் வேறு தினங்களில் உயிரிழந்த சிலரது விபரங்கள்

(பெயர் - தொழில் - வயது)

  1.  15.03.1985 சதாசிவம் சண்முகராஜா கமம் 23
  2. 25.10.1985 சின்னத்தம்பி நவரட்ணராசா விவசாயம் 19
  3. 08.09.1988 காளிக்குட்டி நவரெட்ணம் தொழிலாளி 23
  4. 13.01.1989 சேதுமதி குணரட்ணம் கமம் 33
  5. 11.06.1990 கணபதிப்பிள்ளை கந்தசாமி தொழிலாளி 27
  6. 15.06.1990 பாலசந்திரபோஸ் சுபாஸ்சந்திரபோஸ் தொழிலாளி 16
  7. செல்லத்துரை விக்னேஸ்வரன் கமம் 21
  8. செலடன்ஸ்பெக் பிறிங்கேஸ்பெக் தச்சுத்தொழில் 19
  9. சிவராசா சதீஸ்குமார் 19
  10. சங்கரப்பிள்ளை சிவகுருநாதன் மாணவன் 18
  11. சவரிமுத்து ரஞ்சன் கமம் 22
  12. சற்குணநாதன் ரஞ்சிதகுமார் வியாபாரம் 22

 

*****

  • தொகுப்பாளர் குறிப்பு: 12.08.1990 அன்று சிந்தாயாத்திரைப் பிள்ளையார் கோவில், மற்றும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை ஆகியவற்றுக்குள் அடைக்கலம் புகுந்திருந்த தமிழர்களை தரைப்படையினரின் பாதுகாப்புடன் அத்துமீறி உள்ளே புகுந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட 97பேரை காதினர். பாடசாலையில் இருந்த சிறுவர்களைத் தூக்கி சுவரில் அடித்து படுகொலைசெய்தனர். இந்த காதத்தில் பெண் பட்டதாரியான பரமா என்ற பெயருடைய ஆசிரியர் முஸ்லிம் ஆயுததாரிகளிடம் இருந்து மக்களை காப்பதற்காக போராடி தனது உயிரைவிட்டார். இவர் வீரமுனையின் முதல் பட்டதாரி ஆவார்.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008
  • எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம்
  • பக்கம்: -
  • நூல் வெளியீட்டு ஆண்டு: 2005   

 

பொத்துவில் படுகொலை, 30 சூலை 1990

Poththuvil massacre by sri lankan muslims.jpg

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

1990ஆம் ஆண்டில் மீண்டும் யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையில் கிழக்குப் பகுதியில் இராணுவத்தினராலும் சிங்கள முசுலிம் குழுக்களாலும், ஊர்காவற்படையினராலும் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர்.

15.06.1990 பொத்துவில் கிராமத்தில் இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக பாதுகாப்புத் தேடிய மக்கள் இடம்பெயர்ந்து கோமாரி அகதி முகாமில் தஞ்சமடைந்தனர்.

இராணுவத்தினரதும் அரச அதிகாரிகளினதும் வேண்டுகோளையும் வாக்குறுதிகளையும் நம்பி 30.07.1990அன்று பொத்துவில் கிராமத்திற்கு மீண்டும் திரும்பி வந்து பார்தத் போது வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்ததுடன், வீடுகள் எரித்து அழிக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் தமது வீடுகளை விட்டுப் பொத்துவில் மெதடிஸ்த மகா வித்தியாலயத்தில் மீண்டும் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

பொத்துவில் மெதடிஸ்த மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த மக்களில் இளைஞர்கள், யுவதிகள் தமது குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் சென்றார்கள். இவர்களில் நூற்றுமுப்பத்திரண்டு பேர் இராணுவத்தினராலும் முசுலிம் குழுக்களாலும் கைதுசெய்யப்பட்டு பொத்துவில் காவற்றுறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இவர்களில் சிலர்சிலராகத் தெரிந்தெடுத்து காவற்றுறை நிலையத்திலிருந்த வெட்டவெளியில் கை கால்களைக் கட்டி உயிருடன் போட்டு எரித்தார்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர் தப்பித்துக் கொள்ள எஞ்சியோரை 02.08.1990அன்று பொழுது விடிவதற்கு முன்னர் ரயரில் உயிருடன் போட்டு எரித்தார்கள். இவ்வாறு இராணுவத்தினராலும் முசுலிம் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நூற்றுயிருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

  1. மூத்ததம்பி இராசநாயகம் - 33
  2. இளையதம்பி கிருபாகரன் தொழிலாளி 39
  3. இளையதம்பி கருணாகரன் 23
  4. இராஜதுரை கமலநாதன் குழந்தை 3
  5. இராமலிங்கம் ஈஸ்வரன் 23 -
  6. சத்தியநாதன் பத்மநாதன் - 32
  7. நாகமணி குணசீலன் 25
  8. நாமணி சிந்தாத்துரை கடற்றொழில் 45
  9. நடராசா சவுந்தரராசா 19
  10. நல்லதம்பி பாக்கியராசா. - 23
  11. சன்னாசி சுப்பிரமணியம் 34
  12. கனகசபை நவராஜா 26
  13. கனகசபை கிருபைராசா தொழிலாளி 30
  14. கனகசபை தவராசா தொழிலாளி 26
  15. கனகரத்தினம் சின்னராசா 52
  16. கனகரட்ணம் சின்னராசா 27
  17. கந்தையா நல்லதம்பி. - 33
  18. கந்தையா கணேஸ் மாணவன் 16
  19. கந்தையா தருமரத்தினம் 32
  20. கந்தையா சிவகுமார் 27
  21. கந்தையா சிவகுமரன் 22
  22. கந்தையாப்பிள்ளை சிவசுப்ரமணியம் 26
  23. கந்தையாப்பிள்ளை சிவசுந்தரன் 26
  24. கந்தன் நவரட்ணம். 21
  25. கந்தப்பன் ஆனந்தன் தொழிலாளி 26
  26. காத்தமுத்து சுனில் தொழிலாளி 35
  27. காளிக்குட்டி அமிர்தலிங்கம் - 27
  28. கணேசபிள்ளை சந்திரன் 36
  29. கிருஸ்ணன் அழகையா தொழிலாளி 24
  30. கண்ணாச்சி சுப்பிரமணியம் 34
  31. கணபதி பத்மநாதன் தொழிலாளி 25
  32. கணபதிப்பிள்ளை தருமரட்ணம் தொழிலாளி 51
  33. கணபதிப்பிள்ளை யோகநாதன் தொழிலாளி 20
  34. கணபதிப்பிள்ளை செல்வரட்ணம் தொழிலாளி 35
  35. கணபதிபிள்ளை தெய்வேந்திரன் 23
  36. பக்கிரி சிற்றம்பலம் 30 -
  37. பாலன் ஜெயானந்தம் தொழிலாளி 25
  38. பத்மநாதன் விக்னேஸ்வரன் தொழிலாளி 14
  39. பத்மநாதன் ரவீந்திரன் தொழிலாளி 40
  40. ஐயப்பன் செல்வராசா தொழிலாளி 41
  41. தர்மலிங்கம் பாஸ்கரன் 13
  42. தம்பியர் தேவசுந்தரம் பாதுகாவலர் 70
  43. தம்பிப்பிள்ளை பூபாலப்பிள்ளை தொழிலாளி 32
  44. தம்பிமுத்து கிருஸ்ணபிள்ளை - 52
  45. தம்பிராசா இராசகுமார் தொழிலாளி 18
  46. தம்பிராசா மனோகர் தொழிலாளி 38
  47. தம்பிராசா தேவசுந்தரம் தொழிலாளி 65
  48. திசாநாயக்க ஒபேசேகர தொழிலாளி 42
  49. திசாநாயக்கா சபேசர் மாணவன் 19
  50. திலகரட்ணம் பாரதி தொழிலாளி 24
  51. திலகரட்ணம் லலித் தொழிலாளி 23
  52. தங்கராசா மகேந்திரன் தொழிலாளி 17
  53. தருமலிங்கம் இராசேந்திரன் 26 -
  54. தருமலிங்கம் கணேசமூர்த்தி தொழிலாளி 23
  55. தருமலிங்கம் முத்துலிங்கம் தொழிலாளி 24
  56. தருமலிங்கம் சந்திரன் -21
  57. தருமலிங்கம் சாந்தலிங்கம் 23
  58. மாரிமுத்து மகேந்திரன் - 18
  59. மாணிக்கம் பரமசிவன் - 31
  60. மாணிக்கம் தம்பிராசா தொழிலாளி 26
  61. மாணிக்கம் செல்வராசா தொழிலாளி 27
  62. மாணிக்கம் ரவிச்சந்திரன் தொழிலாளி 32
  63. முத்தையா சத்தியநாதன் 18
  64. அந்தோனிபிள்ளை மகேந்திரகுமார் 16
  65. அழகையா சியாம்சேகர் தொழிலாளி 36
  66. அருளம்பலம் வாசு 19
  67. ஆறுமுகம் இராசரட்ணம் - தொழிலாளி 20
  68. ஆறுமுகம் கணேசமூர்த்தி மாணவன் 19
  69. ஜோசப் சிறிராமு தொழிலாளி 32
  70. கோபால் ரமேஸ் 20
  71. கோபாலகிருஸ்ணன் பத்மநாதன் - தொழிலாளி 26
  72. கெங்காதரன் ஜெயக்குமார் தொழிலாளி 22
  73. பொன்னன் மோசன் தொழிலாளி 25
  74. சோமலிங்கம் விஸ்வலிங்கம் தொழிலாளி 42
  75. செல்வராசா சுவேந்திரன் தொழிலாளி 20
  76. செல்லத்துரை கந்தசாமி 35
  77. செல்லத்துரை சந்திரன் - 20
  78. செல்லமுத்து சுப்பிரமணியம் தொழிலாளி 18
  79. வேலாயுதம் கருணாநிதி தொழிலாளி 32
  80. ஞானச்செல்வம் உதயகுமார் தொழிலாளி 18
  81. சந்திரப்பிள்ளை வினாயகமூர்த்தி தொழிலாளி 20
  82. சுந்தரராகன் தருமலிங்கம் 21
  83. சுப்பிரமணியம் இராசு - 20
  84. சுப்பையா கதிர்காமநாதன் 22
  85. சுப்பையா அர்சுனன் 26
  86. சுப்பையா ஆறுமுகம் தொழிலாளி 39
  87. சபாபதி மகேந்திரன் வியாபாரி 26
  88. சாந்தி சற்குணம் 40
  89. சத்தியநாதன் யோகநாதன் தொழிலாளி 26
  90. சதாசிவம் வேலுப்பிள்ளை தொழிலாளி 50
  91. சதாசிவம் சிவலிங்கம் தொழிலாளி 45
  92. சின்னப்பிள்ளை விஜயகுமார் 20
  93. சின்னத்துரை பத்மநாதன் - 26
  94. சின்னத்துரை யோகராசா 29
  95. சின்னத்தம்பி நடராசா 34
  96. சின்னத்தம்பி சுந்தரம் தொழிலாளி 30
  97. சின்னத்தம்பி சபானந்தம் தொழிலாளி 28
  98. சின்னராசா தெய்வேந்திரன் 23
  99. சீனித்தம்பி கந்தசாமி - 45
  100. சீனித்தம்பி சுப்பிரமணியம் தொழிலாளி 26
  101. வடிவேல் முத்துகுமார் தொழிலாளி 17
  102. வடிவேல் அழகநாயகம் தொழிலாளி 30
  103. வடிவேல் தெய்வநாயகம் தொழிலாளி 17
  104. வடிவேல் சந்திரசேகரராகன் தொழிலாளி 42
  105. வண்ணமணி மணிவண்ணன் 20
  106. வீரன் இராசையா 35
  107. வீரன் புஸ்பராசா 32
  108. வீரன் செல்வராசா 29
  109. ரட்ணம் ஜெயசீலன் - 24
  110. லலித் துரைராசா தொழிலாளி 49

 

*****

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.