Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பௌத்த பிக்கு தலைமையில் வவுனியாவில் தமிழர்களின் விவசாய நிலத்தை மயானமாக்க முயற்சி : அளவீட்டு பணிக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

15 SEP, 2023 | 04:24 PM
image
 

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க வழங்குவதற்கு, அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.

IMG_20230915_090507.jpg

வெள்ளிக்கிழமை (15) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

IMG_20230915_090537.jpg

வவுனியா பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமம் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் கிராமம் ஆகும். குறித்த கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்து சென்றதுடன், யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் வருகை தந்து தமது காணிகளில் குடியேறி, விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.  

IMG_20230915_090712.jpg

இந்நிலையில் குறித்த கிராமத்தில் தமது மயானம் இருந்ததாக தெரிவித்து அருகில் உள்ள கொக்குவெளி சிங்கள கிராம மக்கள் இரு பிக்குகளின் தலைமையில் குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய காணி ஒன்றினை உரிமை கோரி வந்ததுடன், தற்போது அதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்து வந்தனர்.

IMG_20230915_091134.jpg

இது தொடர்பில் குறித்த காணியினை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் கருப்பனிச்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்கையில்,

IMG_20230915_092721.jpg

இது எனது பரம்பரை வழியான காணி. இங்கு எனது மூதாதையர்கள் முதல் நாங்கள் வரை நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றோம். பின்னர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் வருகை தந்து காணியில் விவசாய செய்கையினை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது எமது காணியில் காய்க்கும் நிலையில் பெரிய தென்னை மரங்களும் நிற்கின்றன.

IMG_20230915_092826.jpg

இந்நிலையில் எனது காணியில் சிங்கள மக்களுக்கான மயானம் இருந்ததாக கூறி, அதனை மீள அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, எனது காணிக்கான அனுமதி பத்திரத்தை கூட பிரதேச செயலகத்தால் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர்.

Videoframe_20230915_132116_com.huawei.hi

எனது காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. அல்லது சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கூட இல்லை. குறித்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் மூன்று மயானங்கள் உள்ளது. அவர்கள் அங்கு சடலங்களை புதைக்க முடியும். தற்போது எனது காணியை சுற்றி தமிழ் மக்கள் குடியமர்ந்துள்ளனர். எனவே இங்கு மயானம் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது நீதியான செயற்ப்பாடாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

IMG_20230915_094711.jpg

இதேவேளை, குறித்த பகுதிக்கு பிக்கு இருவரின் தலைமையில் வருகை தந்த சிங்கள மக்கள் குறித்த காணியில் தங்களது மூதாதையர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காணியில் மயானம் அமைப்பதற்காக அதனை மீட்டுத்தருமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் பொலிசார் இரு தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த காணி 1967 ஆம் ஆண்டில் மயானமாக இருந்ததாக நில அளவைத்திணைக்களத்தின் கள ஆய்வு குறிப்பில் இருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், நில அளவைத் திணைக்களத்தின் 2019 அறிக்கையின் படி அது வன இலாகாவிற்குரிய காணியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மயானம் இருந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என தமிழ் மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் முரண்பட்ட தமிழ் மக்கள், இப்படி ஒரு மயானம் இருப்பதாக பிரதேச சபையின் அறிக்கையில் கூட இல்லை.

நாம் இந்த காணியை அளவீடு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். மயானம் அமைப்பதற்கு சிங்கள கிராமத்திலேயே பல அரச காணிகள் இருக்கின்றது. அங்கு அதனை அமைக்க முடியும்  என தெரிவித்ததுடன், நீண்டகாலமாக குடியிருக்கும் நிலையில் நீதிமன்றம் ஊடாக இதற்கு தீர்வைக் காணுமாறும் தெரிவித்தனர்.

எனினும், குறித்த காணியை நில அளவீடுசெய்து சிங்கள மக்களின் மயானத்திற்காக ஒதுக்குமாறு பௌத்த மதகுரு வருகை தந்த அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச செயலாளர் இருதரப்புக்கும் தெரிவித்ததுடன், அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிலமை சீராகியது.

குழப்ப நிலையால் அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த நில அளவைத்திணைக்களத்தின் அலுவலர்கள் காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றிருந்தனர்.

https://www.virakesari.lk/article/164658

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைபார்த்தால் நல்லூர் கோவிலும் ஒருநள்  மயானமாக பிரகடனப் படுத்தப்படும்...பாவம் புலம் பெயர்ஸ்  ... 

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் உள்ள சிங்களவர்கள் குடியிருப்பதே தமிழர் நிலத்தில்தான். எனவே இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. அவர்களை குடியேத்தினவர்களே தமிழ் அரசியல்வாதிகள். சொல்வதட்கு வேறொன்றுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

போற போக்கைபார்த்தால் நல்லூர் கோவிலும் ஒருநள்  மயானமாக பிரகடனப் படுத்தப்படும்...பாவம் புலம் பெயர்ஸ்  ... 

அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? மலசல கூடம் முதலில், மயானம் பிறகு! அதுதான் சச்சியர், சைவர் வழிபடுவதற்கு கட்டிடங்கள் தேவையில்லை என்று அறிக்கை விட்டு, விகாரைக்கு வழிபட போய்விட்டாரே.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? மலசல கூடம் முதலில், மயானம் பிறகு! அதுதான் சச்சியர், சைவர் வழிபடுவதற்கு கட்டிடங்கள் தேவையில்லை என்று அறிக்கை விட்டு, விகாரைக்கு வழிபட போய்விட்டாரே.

சனல் 4 காணொளிக்குபின்பு உசாரடைந்த ஒரு இனம் இருக்கல்லே..அவைக்கு இப்ப குளிர் விட்டுப்போச்சு..அவையின்ரை சமாதியும் உள்ளே கிடக்கென்று நம்ம சனமே கதைவிடுகுது.....அவையும் தங்கடை பங்குகுக்கு வெள்ளிக்கிழமைகளில் உசுப்புத்துவினம்....நம்ம புலம்பெயர்ஸ்க்கு ..கொலிடே போறதுக்கு இடமில்லமல் போயிடும் ...பாவம்தானே

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

அவையும் தங்கடை பங்குகுக்கு வெள்ளிக்கிழமைகளில் உசுப்புத்துவினம்.

முதலில் விகாரை, அடுத்து பள்ளிவாசல். காணிபிடிப்பில் முதலிடம் விகாரைக்கு அதற்கடுத்தே  பங்காளிகள். இது காலங்காலமாக நடக்கும்ஒன்று.  ஆனால் பங்காளிப் பிரச்சனையை வைத்திருப்பது தமிழரோடு மட்டுந்தான். தமிழர் முன்னேறக்கூடாது அவ்வளவே. பாருங்கள்! ஈஸ்ரர் குண்டுவெடிப்பில், சிங்களம் அவர்களை பாவித்து தன் திட்டத்தை நிறைவேற்றியதோடு அவர்களை தாக்கவும் செய்தது இருந்தும் அவர்களை காப்பது இந்த சோனகர். நரி, சிங்கத்துக்கு பின்னால் அலைவது, சிங்கத்தின் மேலுள்ள பாசத்தாலா என்று ஆராய்ந்தால் விளங்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.