Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுமியின் சடலத்தை ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியின் சடலத்தை ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம்!

September 20, 2023
 
272DBB2D-4123-4047-BE0F-F02CC996791A.jpeg

 

வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மாவான குணரட்னம் ரோகினி தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று (19.09) ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பில் துண்டு பிரசுரம் ஒன்றும் அவரால் வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 25.08.2023 ஆம் திகதியன்று வவுனியா, பாரதிபுரம் பகுதியில் 2 வயது சிறுமி நீர்த் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார். இறந்த சிறுமியின் உடல் இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த 05.09.2023 அன்று சிறுமியின் உடல் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்டபான உண்மையான தகவல் தெரிந்தவர்கள் கீழ்கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் சன்மானமாக வழங்கப்படும். சிறுமியின் சடலத்தை எடுத்தவர்கள் மீள கையளிக்கின்ற போது 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். இதனை தாழ்மையாக கேட்கின்றேன். எங்களது பிள்ளையின் அங்கம் வேண்டும் எனவும் குறித்த சிறுமியின் அம்மம்மா தெரிவித்துள்ளார்.

சிறுமியின் சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 076 - 6091158 அல்லது 075 - 4986953 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமின் சடலத்தை காணவில்லை என நெளுக்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.battinews.com/2023/09/20_20.html

 

  • கருத்துக்கள உறவுகள்

அதை எடுத்து என்ன செய்ய?

சூனியம்?

  • கருத்துக்கள உறவுகள்

புதைத்த சடலத்தைக் கூட, திருடுகின்ற நிலையில் நாடு உள்ளது.
10 நாளைக்குப் அதை திருடி என்ன செய்யப் போகிறார்கள்.
மந்திரவாதிகளின் வேலையாக இருக்குமோ….. 😮

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சடலத்தை தோண்டி எடுப்பதும் அதை பணம் கொடுத்து மீட்பதும் தவறான வழிகளை ஊக்குவித்து விடக்கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

புதைத்த சடலத்தைக் கூட, திருடுகின்ற நிலையில் நாடு உள்ளது.
10 நாளைக்குப் அதை திருடி என்ன செய்யப் போகிறார்கள்.
மந்திரவாதிகளின் வேலையாக இருக்குமோ….. 😮

 

நாங்கள் பலவிதமான ஊகங்கள் செய்யலாம். குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போலிசார் கடமை. 

நாட்டு நிலமை மோசம் என்று மட்டும் தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

புதைத்த சடலத்தைக் கூட, திருடுகின்ற நிலையில் நாடு உள்ளது.
10 நாளைக்குப் அதை திருடி என்ன செய்யப் போகிறார்கள்.
மந்திரவாதிகளின் வேலையாக இருக்குமோ….. 😮

20 லட்சம் கிடைக்கப் போகுதில்ல.

3 hours ago, goshan_che said:

அதை எடுத்து என்ன செய்ய?

சூனியம்?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

20 லட்சம் கிடைக்கப் போகுதில்ல.

 

அட கொடுமையே…ஆளை கடத்துவது போல் சடலத்தையிம் கடத்துகிறார்களா? 😳

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

அட கொடுமையே…ஆளை கடத்துவது போல் சடலத்தையிம் கடத்துகிறார்களா? 😳

20 லட்சம் எடுக்க போய் அகப்படப் போகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.