Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமுலுக்கு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

plastic.jpg

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய முள்கரண்டிகள், குழாய்கள், பிளாஸ்டிக் மாலைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள் மற்றும் உணவுக் கொள்கலன்கள் என்பன தடை விதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உள்ளடங்குகின்றன.

பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த தடைகளை மீறி பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/274998

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

நாட்டில் ஒரு முறை மற்றும் குறுங்கால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய உறிஞ்சு குழாய்கள் (ஸ்ட்ரோவ்), கத்திகள் கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள், தட்டுகள், கோப்பைகள், ப்ளாஸ்டிக் மாலைகள் மற்றும் இடியப்பத் தட்டுகள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்தல் விற்பனை செய்தல், இலவசமாக அல்லது கண்காட்சிக்காக வழங்குதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் தலைவர் சுபுன். எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், இன்று முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/275062

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2023 at 06:50, ஏராளன் said:

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவைகளை தடை செய்வது நல்ல விடயம்.

மேற்கு நாடுகளிலேயே இன்னமும் முற்றாக தடைவிதிக்க முடியவில்லை.

இவைகளை தடை செய்ய முன் மாற்று வழிகளையும் முதலில் கண்டறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

இவைகளை தடை செய்வது நல்ல விடயம்.

மேற்கு நாடுகளிலேயே இன்னமும் முற்றாக தடைவிதிக்க முடியவில்லை.

இவைகளை தடை செய்ய முன் மாற்று வழிகளையும் முதலில் கண்டறிய வேண்டும்.

  கனடாவில் சில கடைகளில் 5 சதம் 10 சதத்திற்கு விற்ற பிளாஸ்றிக் பை இப்போ புதிய நடை முறை என்ற ஒரு வகைக்குள் போன பின் துணியிலான பை கிழமைக்கு ஒரு விலையாக இருக்கிறது.வீடு முழுக்க நிறம் நிறைமாக துணிப்பை தான் சில வேலைகளில் துப்பரவு செய்யும் போதும் எரிச்சலாக இருக்கும்.அது மட்டுமல்ல ரிம்கொன்றின்ஸ் கோப்பிக்கடைகளில் சூப் வாங்கும் போது ஒரு கரண்டி தருகிறார்கள் அது சூப் குடிச்சுட்டு இருக்கும் போதே நனைஞ்சு முறிஞ்சுடும் தற்காலிக கண்டுபிடிப்புக்கள் தானே.அதன் தரம் அவ்வளவு தான்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

  கனடாவில் சில கடைகளில் 5 சதம் 10 சதத்திற்கு விற்ற பிளாஸ்றிக் பை இப்போ புதிய நடை முறை என்ற ஒரு வகைக்குள் போன பின் துணியிலான பை கிழமைக்கு ஒரு விலையாக இருக்கிறது.வீடு முழுக்க நிறம் நிறைமாக துணிப்பை தான் சில வேலைகளில் துப்பரவு செய்யும் போதும் எரிச்சலாக இருக்கும்.அது மட்டுமல்ல ரிம்கொன்றின்ஸ் கோப்பிக்கடைகளில் சூப் வாங்கும் போது ஒரு கரண்டி தருகிறார்கள் அது சூப் குடிச்சுட்டு இருக்கும் போதே நனைஞ்சு முறிஞ்சுடும் தற்காலிக கண்டுபிடிப்புக்கள் தானே.அதன் தரம் அவ்வளவு தான்..

தங்கச்சி இங்கும் போன வருடத்திலிருந்து தடை என்பதால் கொஞ்சம் சாமான்கள் போடக் கூடியதாக 20-25 சதமென்று விற்கிறார்கள்.

ஆரம்பத்தில் பழைய ஞாபகத்தில் கைவீசிக் கொண்டு போய் பணம் கொடுத்து பையை வாங்கி வீட்டிலும் நிறைய பைகள் சேர்ந்துவிட்டன.

இப்போ வீட்டிலிருந்து கொண்டு போக பழகிவிட்டோம்.

சில மாநிலங்களில் பழைய பிளாஸ்ரிக் பைகளையே பாவிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்படும்!

news-03.jpg

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் என சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டி பொருட்களுக்கு தடை விதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பூலோகத்தை அச்சுறுத்தும் பொருட்களின் சுழற்சியை முழுமையாகக் குறைத்துவிடுவோம் என நம்புகிறோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபைகளின் 5ஆவது மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் நசீர் அகமத் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசியா-பசிபிக் (APAC) பிராந்தியமானது 2021 ஆம் ஆண்டில் உலகின் மொத்த பிளாஸ்டிக் உற்பத்தியில் பாதிக்கும் அதிகமான உற்பத்தியை உற்பத்தி செய்துள்ளது என்றும், இது உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் தாயகமாகவும் உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான வட்ட பொருளாதாரத்திற்கு மாறுவதில் APAC ஒரு தலைமையாக இருக்க முடியும் என்று நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.

மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக் உள்ளிட்ட பிளாஸ்டிக்குகள் இப்போது நமது இயற்கை சூழலில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஐ.நா.சுற்றுச்சூழல் பேரவையின் (UNEA-5.2) மீண்டும் தொடங்கிய ஐந்தாவது அமர்வில், கடல் சூழல் உட்பட பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பான சர்வதேச சட்டப்பூர்வ கருவியை உருவாக்க வரலாற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் கூறினார். தீர்மானம் (5/14) ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) நிர்வாக இயக்குனரிடம் “கருவியை” உருவாக்குவதற்கு அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவை (INC) கூட்டுமாறு கோரியது, இது பிளாஸ்டிக்கின் சுழற்சி, அதன் உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் அகற்றல் உட்பட முழு வாழ்க்கை சக்கரத்தையும் குறிக்கும் ஒரு விரிவான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

கடல் சூழல் உட்பட பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பான சர்வதேச சட்டப்பூர்வக் கருவியின் பூஜ்ஜிய வரைவு உரை INC தலைவரால் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பரில் கென்யாவின் நைரோபியில் திட்டமிடப்பட்டுள்ள அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் மூன்றாவது அமர்வில் வரைவு பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/275381

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டு தட்டில் வைச்சு குடுக்கிற பிளாஸ்டிக் ஐ முதல்ல நிப்பாட்ட சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒவ்வொரு வருடமும் நடைமுறை படுத்தும் திடடம். எனக்கு தெரிந்த வரைக்கும் கடந்த ஐந்து வருடங்களாக தடை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நடைமுறையில்தான் கொண்டு வர முடியவில்லை.

இந்த அமைச்சர் இதையும் விட மோசமான முறையில் சுற்றாடலை சேதப்படுத்திக்கொண்டு இருக்கிறார். மண் அள்ளுவது, கண்ணா காடுகளை அழிப்பது போன்ற செயட்பாடுகளை நிறுத்தினாலே சுற்றாடலை பாது காக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.