Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தைக் கட்டியெழுப்புதலும், அதிகாரப் பகிர்வும் 13ஆவது திருத்தமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தைக் கட்டியெழுப்புதலும், அதிகாரப் பகிர்வும் 13ஆவது திருத்தமும்

 

arasiyal-kalam.jpg

தெற்கில் இடம்பெற்ற இரண்டு எழுச்சிகளும், வடக்கில் மூன்று தசாப்த கால ஆயுத மோதல்களும், மக்கள் எந்தவொரு அரசியல் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்வதில் இருந்து ஒதுக்கப்பட்டால், அவை தற்போதுள்ள முறைமையின் நியாயத்தன்மைக்கு சவால் விடும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். சமஷ்டி அல்லது அதிகாரப்பகிர்வு என்பது பல்வேறு அரசியல் நிறுவனங்களிடையே அவர்களின் இன அல்லது பிராந்திய உறவுகளைப் பொருட்படுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும். வெற்றிகளையும் சுமைகளையும் நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொண்டால் ஜனநாயகம் சிறப்பாக வாழும்.

-கலாநிதி லயனல் னல் போபகே-

இலங்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசாரமென பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இவற்றை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பது நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. தோல்வியுற்ற ஒற்றையாட்சி அரசாங்கம், குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை யின் அதீத அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று, நீதித்துறை, பாராளுமன்றம், அதிகாரத்துவம் மற்றும் பிராந்தியங்களுக்கிடையில் சமமான சமநிலை என்பன நெருக்கடிகளில் இருந்து மீள வேண்டுமானால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

இந்த பாரிய விடயங்களின் அடிப்படையிலேயே இதனைப் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், இக்கட்டுரையானது தேசியப் பிரச்சினையின் அடிப்படையிலான வர்க்க அடிப்படையிலான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாது, நவ-தாராளமயத்தின் கீழ், பன்மை சமூகங்களில் உள்ள வேறுபாடுகள் நெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கும் எதேச்சாதிகார முதலாளித்துவ நிர்வாக முறைமைகளுக்கு முட்டுக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேசத்தைக் கட்டியெழுப்புதல்
தேசத்தை கட்டியெழுப்புவது என்பது ஒரு புரட்சிகர மான ஒரே நாள் செயல்முறையை விட ஒரு பரிணாம மற்றும் நீண்ட கால நடவடிக்கையாகும். அது வெளிப்புறத் தலையீட்டின் மூலமாகவோ அல்லது திணிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் மூலமாகவோ அல்ல, ஒரு உள்புற செயல்முறை மூலம் வளர்ச்சியடைந்து மேம்பட வேண்டும். இதற்கு பொருளாதார, சமூக, அரசியல் வளர்ச்சி மற்றும் மக்கள் மற்றும் சமூகங்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களும் தேவை. மேலதிகமாக , தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியானது ஏனைய விட யங்களுக்கிடையில் அனைவருக்கும் வேலைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் சமமான அணுகலை உறுதி செய்ய வேண்டும்.

நீண்டகாலஅடிப்படையில் ஜனநாயக தேசத்தைக் கட்டியெழுப்பும்நடவடிக்கை வெற்றிகரமானதாக இருக்க, ஜனநாயக விழுமியங்களின் முக்கியத்துவத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும், அதுபொருளாதார வளர்ச்சி அல்லது அரச கட்டமைப்பை மட்டும் வலியுறுத்துவதை விட சிவில் துறையில் அவற்றை வளர்த்து பராமரிக்கும். தற்போது இந்த முக்கியமான பிரச்சினையின் உண்மையான அர்த்தத்தை அரசியல் உயரடுக்கினரிடமிருந்து நாம் கேடானசொல்லாட்சி வார்த்தைகளில் மட்டுமே பெற்றுள்ளோம்.

பரவலாக்கம்
பரவலாக்கம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடாகப் பார்க்கப்படுகிறது. மக்களின் தேவைகளுக்குப் பதிலளிக்க உண்மையான அதிகாரத்தைக் கொண்ட நிறுவனங்களுக்குத் தங்கள் சொந்தத் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் தெரிவு செய்யும் திறன் நல்லாட்சி முறைமைக்கு தேவை. அடிமட்ட இயக்கங்கள் அதை வெற்றிபெறச் செய்தன. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் சான்றளிக்கப்பட்டபடி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக சக்தி வாய்ந்த மத்திய சக்தி பலமுறை தவறி வருவதால் இது ஆச்சரியமல்ல.
அரசியல் பரவலாக்கம் முடிவெடுக்கும் செயல்முறைகளில் ஈடுபடும்பொது மக்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளுக்கு அதிகாரம் அளிக்கும். அதிக பங்கேற்பு இலங்கை போன்ற பன்மை சமூகங்களுக்கு மிகவும் பொருத்தமான சிறந்த தகவலறிந்த முடிவெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. அரசியல் பரவலாக்கத்தின் மூலம், மக்கள் தங்கள் பிரதிநிதிகளை நன்கு அறிந்து கொள்வார்கள், அதையொட்டி அவர்கள் தங்கள் வாக்காளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நன்கு அறிந்திருப்பார்கள். அதிகாரப் பரவலாக்கத்திற்கு, சில பொதுக் கடமைகளைத் திட்டமிடுதல், நிதியளித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான பொறுப்பை மையத்திலிருந்தும் அதன் முகவரமைப்புகளிலிருந்தும் பிராந்திய நிறுவனங்களுக்கு மாற்றுகிறது, இதனால் அது உள்ளூர் மற்றும் பொறுப்புணர்வுடன் இருக்கும். இவை ஒவ்வொன்றும் அதன் சொந்த குணாதிசயங்களைக் கொண்ட குவிவு நீக்கம், பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு மூலம் இதை அடைய முடியும்.

மையப்படுத்தல் மற்றும் பரவலாக்கம் ஆகியவை “இரண்டில் ஒன்று-அல்லது” சூழ்நிலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகெங்கிலும் உள்ள நடைமுறை எடுத்துக்காட்டுகள், மையப்படுத்தல் மற்றும் பரவலாக்கத்தின் சரியான சமநிலையானது பயனுள்ள மற்றும் திறமையான அரசாங்க சேவை வழங்கலை உறுதி செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அதிகாரப் பரவலாக்கல் முயற்சிகளை ஊக்குவிப்பதிலும் நிலைநிறுத்துவதிலும் மையங்கள் முக்கியப் பங்காற்ற முடியும். அதிகாரப் பரவலாக்கத்திற்குத் தேவையான சரியான மற்றும் பயனுள்ள தேசியக் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்யலாம், இதனால் பிராந்திய, மாகாண மற்றும் உள்ளூர் அலகுகள் புதிய செயற் பாடுகளை மேற்கொள்வதற்கான கூடுதல் பொறுப்புகளை ஏற்க அனுமதிக்கும் தேவையான சூழல்களை உருவாக்குதற்கு அல்லது பராமரித்தலுக்குஇடமளிக்கும்.

ஒட்டுமொத்தமாக, அதிகாரப் பரவலாக்கத்தின் உண்மையான முயற்சிகள் சிக்கலான அதிகாரத்துவ கெடுபிடிகளை இல்லாமல் செய்யலாம். இது உள்ளூர் மற்றும் தேசிய பொது ஊழியர்களை உள்ளூர் நிலைமைகள் மற்றும் தேவைகளுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும். பரவலாக்கத்தை சிறப்பாகச் செய்தால், முடிவெடுக்கும் செயல்முறைகளில் பன்மை சமூகங்களில் பல்வேறு அரசியல், இன, மத மற்றும் கலாசார குழுக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அனுமதிக்கலாம். பொது மக்கள் உள்ளூர் மட்டத்தில் சிறந்த பொதுத் திட்டங்களை அணுகுவதால், சிறந்த அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கு இது பங்களிக்க முடியும். பல்வேறு இன மற்றும் பிராந்திய குழுக்களுக்கு சில சுயாட்சி மற்றும் அவர்களின் சொந்த விதியின் மீது கட்டுப்பாட்டை வழங்குவதற்கான வழிமுறையாக, நாடுகள் சம ஷ்ட்டி முறைமைகளை தழுவி, மையத்திலிருந்து உள்ளூர் அரசாங்கத்திற்கு அரசாங்க பொறுப்பின் சில கூறுகளை பரவலாக்கி வருகின்றன.

தெற்கில் இடம்பெற்ற இரண்டு எழுச்சிகளும், வடக்கில் மூன்று தசாப்த கால ஆயுத மோதல்களும், மக்கள் எந்தவொரு அரசியல் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்வதில் இருந்து ஒதுக்கப்பட்டால், அவை தற்போதுள்ள முறைமையின் நியாயத்தன்மைக்கு சவால் விடும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். சமஷ்டி அல்லது அதிகாரப்பகிர்வு என்பது பல்வேறு அரசியல் நிறுவனங்களிடையே அவர்களின் இன அல்லது பிராந்திய உறவுகளைப் பொருட்படுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும். வெற்றிகளையும் சுமைகளையும் நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொண்டால் ஜனநாயகம் சிறப்பாக வாழும்.

தற்போதைய அரசியல் அமைப்பு அனைத்து சலுகைகளையும் பொருளாதார பலன்களையும் ஒரு அரசியல் கட்சி அல்லது குழு ஏகபோகமாக வைத்திருக்கும் ‘அனைத்தையும் வெற்றியாளர்-எடுத்துக்கொள்ளும்’ முறைமையையும் அடிப்படையாகக் கொண்டது. இதற்கு நேர்மாறாக அதிகாரப் பகிர்வு வெவ்வேறு இன மற்றும் பிராந்திய குழுக்களுக்கு அவர்களின் சொந்த விவகாரங்களைத் தீர்மானிக்கும் திறனை அனுமதிக்கிறது, இதனால் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள். அவர்கள் தற்போதுள்ள முறைமையில் அதிக நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் பெறலாம், மேலும் அந்த முறைமை நியாயமானது மற்றும் உள்ளடக்கியது என்ற பொதுவான உணர்வு ஏற்படும்.

அதிகாரப் பகிர்வு
வரலாற்று ரீதியாக, இலங்கையில் உள்ள அரசாங்கங்கள் அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்த முனைகின்றன. ஆயினும்கூட, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்,தேச பிராந்திய, மாகாண மற்றும்/அல்லது உள்ளூரா ட்சி அமைப்புகள் போன்றஆளும் முறைமை களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலம், மத்திய அரசாங்க அதிகாரத்தைக் குறைக்கும் உலகளாவிய போக்கு அதிகரித்து வருகிறது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இ லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல நாடுகள் தங்கள் பன்மைச் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இது சம்பந்தமாக, 1980 களில் பிரான்ஸ் மற்றும் 1990 களின் பிற்பகுதியில் ஐக்கிய இராச்சியம் மிகவும் பொருத்தமான உதாரணங்களாகும் . பிரான்ஸ் மிகவும் மையப்படுத்தப்பட்ட அரசுகளில் ஒன்றாகும். பிராந்தியங்கள், துறைகள் மற்றும் கம்யூன்களின் வருடாந்த பட்ஜெட்டில் இருந்துவீதிகள் மற்றும் பாடசாலைகளுக்கு பெயரிடுவது வரையிலான அனைத்து முடிவுகளும் “டுடெல்லே” (மேற்பார்வை) எனப்படும் அமைப்பின் கீழ் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். மத்திய அரசுக்கு சுற்றயல்கூறு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக,மிட் டரான்ட் நிர்வாகம் (1981-95) கொள்கை உருவாக்கும் விட யங்களில் தேவையான பெரும்பாலான அங்கீகாரங்களை நீக்கியது[1].

பிரிட்டனில் 1970 களின் முற்பகுதியில் அதிகாரப் பகிர்வு ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறியது, ஏனெனில் ஸ்கொ ட்லாந்தும் வேல்ஸும் தங்கள் சொந்த விவகாரங்களில் அதிக கட்டுப்பாட்டைக் கோரின. அதிகாரப் பகிர்வுக்கான மக்களின் விருப்பத்தைத் தீர்மானிக்க 1979 இல் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐந்தில் இரண்டு பெரும்பான்மையுடன் அதை அங்கீகரிக்க வாக்காளர்கள் தேவைப்பட்டனர், ஆனால் வேல்ஸ் மற்றும் ஸ்கொ ட்லாந்தில் உள்ள வாக்காளர்கள் அதை நிராகரித்தனர். இருப்பினும், 1999 இல் டோனி பிளேயரின் ஆட்சியின் கீழ், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது, ஸ்கொ ட்லாந்தில் ஒரு பாராளுமன்றம் இருந்தது, பின்னர், வேல்ஸ் சட்டமன்றத்தைக் கொண்டிருந்தது. 1998 ஆம் ஆண்டின் பெரிய வெள்ளி ஒப்பந்தம் வடக்கு அயர்லாந்திற்கு அதன் சொந்த பாராளுமன்றத்தை வழங்கியது[2].
இலங்கையில், அதிகாரப்பகிர்வை ஆதரிப்பவர்கள் தெளிவாக வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை மாகாணங்கள் பிரயோகிக்கக் கோருகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான முன்னைய ஆட்சியின் கீழ் அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கையின் போது, ஏழு ‘தென்’ மாகாணங்களின் முதலமைச்சர்கள் 13ஆவது திருத்தத்தின் கீழ் கருதப்பட்ட முறையான அதிகாரப் பகிர்வைக் கேட்டிருந்தனர் . ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.

கொழும்பு டெலிகிராப்

https://thinakkural.lk/article/275336

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.